பெட்டவாய்த்தலை அருகே ரூ.42 லட்சம் கொள்ளை: மர்ம கும்பல் கைவரிசை

லாரியில் உள்ள பெட்டியில் ரூ.42 லட்சம் வைக்கப்பட்டிருந்தது. கண் இமைக்கும் நேரத்தில் கொள்ளையடித்து சென்றனர்.
பெட்டவாய்த்தலை அருகே ரூ.42 லட்சம் கொள்ளை: மர்ம கும்பல் கைவரிசை
Published on

குளித்தலை:

திருச்சி மாவட்டம், ஊட்டி மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் லாரியில் பீட்ரூட், கேரட், பீன்ஸ், நூக்கோல், சவ் சவ் உள்ளிட்ட காய்களை தினமும் கும்பகோணம் மார்க்கெட்டுக்கு கொண்டு செல்வது வழக்கமாக உள்ளது, லாரியில் டிரைவர் மட்டுமே வருவார்.

வாரத்தில் ஒருநாள் டிரைவருடன் பணம் வசூல் செய்பவரும் சேர்ந்து வந்து காய்களை கும்பகோணம் மார்க்கெட்டில் இறக்கிவிட்டு பணம் வசூல் செய்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் நள்ளிரவு ஒரு லாரி மேட்டுப்பாளையத்தில் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு கும்பகோணத்துக்கு சென்றது. அங்கு காய்கறியை இறக்கிவிட்டு ஊரு திரும்பினர். லாரியை மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த டிரைவர் ஆனந்த் ஓட்டினார். அவருடன் பணம் வசூல் செய்பவர் லோகேஷ் வந்திருந்தார்.

லாரியில் உள்ள பெட்டியில் வசூலான பணம் ரூ.42 லட்சம் வைக்கப்பட்டிருந்தது. லாரி அதிகாலை திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை அருகே கரூர் முதல் திருச்சி செல்லும் புறவழிச்சாலையில் காவல்காரபாளையம் பெட்ரோல் பங்க் அருகில் வந்தது. அப்போது டிரைவர் ஆனந்த் லாரியை நிறுத்திவிட்டு உடன் வந்த லோகேசுடன் அங்குள்ள டீக்கடையில் டீ குடிக்க சென்றார்.

அப்போது அங்கு காரில் பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் வந்தது. திடீரென்று அவர்கள் லாரியில் ஏறி பெட்டியை உடைத்து ரூ.42 லட்சத்தை எடுத்தனர். பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் காரில் ஏறி தப்பிவிட்டனர்.

டீ குடித்து விட்டு வந்த டிரைவர் ஆனந்த், லோகேஷ் ஆகியோர் திரும்பி வந்து பார்த்தபோது பணம் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தகவல் அறிந்த ஜீயபுரம் டி.எஸ்.பி. பாலச்சந்தர், ஜீயபுரம் இன்ஸ்பெக்டர் குணசேகரன், சோமரசம்பேட்டை இன்ஸ்பெக்டர் முகமது ஜாபர் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து டிரைவர் ஆனந்த், லோகேசிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து தனிப்படைகள் அமைத்தும் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com