search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குண்டும் குழியுமான சாலையை சரிசெய்ய கோரி பொதுமக்கள் மறியல்
    X

    குண்டும் குழியுமான சாலையை சரிசெய்ய கோரி பொதுமக்கள் மறியல்

    • கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
    • சாலையை தற்காலிகமாக சரிசெய்து தருவதாக தெரிவித்தனர்.

    மேட்டுப்பாளையம்

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடையை அடுத்த ஜடையம்பாளையம் ஊராட்சியில் ஆலாங்கொம்பு, எம்.ஜி.ஆர் நகர், தென் திருப்பதி, தொட்டபாதி உள்பட கிராமம் உள்ளது.

    இந்த கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மேலும் இங்கு அரசு பள்ளி, அரசு ஆஸ்பத்திரி மற்றும் தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளது. இதனால் எப்போதும் இந்த சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகளிவில் இருங்கும்.

    தென்திருப்பதி 4 ரோடு பகுதியில் இருந்து ஆலாங்கொம்பு 3 ரோடு வரை பகுதி வரை உள்ள சாலை கடந்த 3 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளது. இந்த நிலையில் ஆலாங்கொம்பு எம்.ஜி.ஆர் சிலை அருகே உள்ள சாலையில் கழிவு நீர் ஓடுகிறது.

    இதனால் அந்த சாலை மேலும் சேதமாகி உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் இருசக்கர வாகனம், கனரக வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகிறது. இன்று காலை மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் குண்டும் குழியுமாக சாலையில் சிக்கி தடுமாறி கீழே விழுந்து விபத்துகுள்ளானார்.

    இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதுகுறித்து உடனே சிறுமுகை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராயப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

    அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். ஆனால் அவர்கள் மறியலை கைவிட மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    இதையடுத்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் காரமடை பிள்ளுகடை முக்கில் இருந்து சிறுமுகை நீலிப்பாளையம் பிரிவு வரை சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டு உள்ளதாகவும், விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்றனர்.

    ஆனாலும் அவர்கள் மறியலை கைவிட மறுத்து உடனடியாக சாலையை சரி செய்ய வேண்டும் என்றனர். இதையடுத்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சாலையை தற்காலிகமாக சரிசெய்து தருவதாக தெரிவித்தனர்.

    பின்னர் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த சாலையில் அரைமணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×