search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mettupalaym"

    • கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் திடீரென மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்குள் சென்றார்.
    • நோயாளி ஒருவருக்கு அளித்த சிகிச்சை குறித்த விபரங்களையும் ஆய்வு செய்தார்.

    மேட்டுப்பாளையம்

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் திடீரென மேட்டுப்பாளையம் அரசு மருத்துவ மனைக்குள் சென்றார்.

    அங்கு இரவு பணியில் மருத்துவர்கள் உள்ளனரா? அங்குள்ள நோயாளிகளுக்கு சிகிச்சைகள் முறையாக வழங்கப்படுகிறதா? என அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

    பொதுப்பிரிவு, பேறுகால பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு என மருத்துவமனையில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளை சந்தித்து உரிய முறையில் சிகிச்சை கிடைக்கிறதா? மருத்துவர்கள் எப்படி கவனித்து கொள்கின்றனர் என நோயாளிகளிடம் கேட்டறிந்தார்.

    மேலும் நோயாளி ஒருவருக்கு அளித்த சிகிச்சை குறித்த விபரங்களையும் ஆய்வு அறிக்கைகளை ஒப்பிட்டு சரிபார்த்த நிலையில் மருத்துவமனையில் தேவையான மருந்துகள் இருப்பு உள்ளதா? எனவும் ஆட்சியர் சமீரன் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்

    சீனாவில் இருந்து மலேசியா வழியாக கோவைக்கு வந்த நபர் ஒருவருக்கு கொரானோ கன்டறியப்பட்ட நிலையில் தற்போது மாவட்ட நிர்வாகம், மருத்துவத்துறை உஷார் படுத்தப்பட்டு விழிப்புணர்வுடன் இருக்க இந்த ஆய்வு நடந்ததாக கூறப்படுகிறது.

    • சிறுமி வீட்டின் முன்பு விளையாடி கொண்டு இருந்தார்.
    • சிறுமி மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கல்லார் புளியன் தோப்பு பகுதியை சேர்ந்தவர் செல்வன் (வயது 25). இவரது மனைவி அபிராமி (20). இவர்களது ஒரு வயது மகள் தர்ஷா.

    இவர்கள் அதே பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்கள். சம்பவத்தன்று சிறுமி தர்ஷா வீட்டின் முன்பு விளையாடி கொண்டு இருந்தார்.பின்னர் பக்கத்து வீட்டுக்கு சென்று விளையாடினார். அப்போது அவர் அங்கு இருந்த யு.பி.எஸ் வயரை திடீரென எதிர்பாராதவிதமாக தொட்டார். இதில் மின்சாரம் தாக்கி சிறுமி தூக்கி வீசப்பட்டார்.அவரின் சத்தத்தை கேட்டு சிறுமியின் தாயார் அபிராமி அங்கு ஓடி வந்தார். மகள் தர்ஷா மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே மகளை மீட்டு மேட்டுப் பாளையம் அரசு ஆஸ்பத் திரியில் சிகிச் சைக்கு சேர்த்தார்.

    ஆனால் அங்கு சிறுமி தர்ஷாவை பரிசோ தனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட் டதாக தெரிவித்தார். இதைகேட்டு அவரது தாயார் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்னர் இதுகுறித்து மேட்டுப் பாளையம் போலீ சாருக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைத்தனர். இதை யடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரு வயது சிறுமி மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்ப டுத்தி உள்ளது.

    ×