என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மேட்டுப்பாளையம் அருகே மின்சாரம் தாக்கி 1 வயது சிறுமி பலி
- சிறுமி வீட்டின் முன்பு விளையாடி கொண்டு இருந்தார்.
- சிறுமி மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கல்லார் புளியன் தோப்பு பகுதியை சேர்ந்தவர் செல்வன் (வயது 25). இவரது மனைவி அபிராமி (20). இவர்களது ஒரு வயது மகள் தர்ஷா.
இவர்கள் அதே பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்கள். சம்பவத்தன்று சிறுமி தர்ஷா வீட்டின் முன்பு விளையாடி கொண்டு இருந்தார்.பின்னர் பக்கத்து வீட்டுக்கு சென்று விளையாடினார். அப்போது அவர் அங்கு இருந்த யு.பி.எஸ் வயரை திடீரென எதிர்பாராதவிதமாக தொட்டார். இதில் மின்சாரம் தாக்கி சிறுமி தூக்கி வீசப்பட்டார்.அவரின் சத்தத்தை கேட்டு சிறுமியின் தாயார் அபிராமி அங்கு ஓடி வந்தார். மகள் தர்ஷா மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே மகளை மீட்டு மேட்டுப் பாளையம் அரசு ஆஸ்பத் திரியில் சிகிச் சைக்கு சேர்த்தார்.
ஆனால் அங்கு சிறுமி தர்ஷாவை பரிசோ தனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட் டதாக தெரிவித்தார். இதைகேட்டு அவரது தாயார் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்னர் இதுகுறித்து மேட்டுப் பாளையம் போலீ சாருக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைத்தனர். இதை யடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரு வயது சிறுமி மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்ப டுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்