search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வரும்"

    • வேப்பமூட்டில் பாதயாத்திரை நிறைவு
    • பாரதிய கட்சியினுடைய இரும்பு தூண்களாக நீங்கள் விளங்குகிறீர்கள்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் தொகுதிக் குட்பட்ட பகுதியில் அண்ணாமலை இன்று பாதயாத்திரை மேற்கொண்டார். வேப்பமூட்டில் பாதயாத்திரை நிறைவு செய்து அண்ணாமலை பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:- பாரதிய கட்சியினுடைய இரும்பு தூண்களாக நீங்கள் விளங்குகிறீர்கள்பாரதிய கட்சியினுடைய இரும்பு தூண்களாக நீங்கள் விளங்குகிறீர்கள். தமிழ்நாடு ஸ்தம்பிக்கும் அளவிற்கு கடந்த மாதம் 2-ந்தேதி குமரி மாவட்டத்தில் குமரி சங்கமம் நிகழ்ச்சி நடந்தது. ஒரு மாதத்தில் என் மண் என் மக்கள் இந்த நிகழ்ச்சியின் மூலம் உங்களை தற்போது சந்தித்துள்ளேன். மூன்று நாட்களாக குமரி மாவட்டத்தில் மக்களை சந்தித்து வருகிறேன்.

    பாரதத்திற்கு துணை நிற்கும் மண் நமது மண். கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை செய்துதம்பி பாவலர், ஜீவானந்தம் அய்யா வைகுண்டர் பிறந்த மண்ணாகும். காமராஜர் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டபோது அவரை தோற்கடிக்க தி.மு.க. பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. மதத்தை பிடித்து தி.மு.க. அரசியல் செய்தது.

    இந்து நாடார் கிறிஸ்தவ நாடார் என இரண்டாக பிரித்து தி.மு.க. அரசியல் செய்தது. தி.மு.க.வின் அதிகார துஷ்பிரயோகத்தை தாண்டி காமராஜரை வெற்றி பெற வைத்த மண்ணாகும். நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் எம்.ஆர்.காந்திக்கு வாக்களித்து அவரையும் சட்டமன்றத்திற்கு அனுப்பி உள்ளீர்கள். தி.மு.க. ஆட்சிக்கு வரும்போது குமரி மாவட்டத்தின் வளர்ச்சி குறைவாகத்தான் இருக்கும்.காமராஜர் ஆட்சியில் கட்டப்பட்ட நெய்யாறு அணையில் தண்ணீர் வரவில்லை. நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்திற்கு கலைவாணர் பெயரை மாற்றி விட்டு கருணாநிதி பெயரை வைக்க வேண்டும் என துடித்தார்கள். இதை தடுக்க பாரதிய ஜனதாவினர் கடுமையாக போராடினார்கள். இதன்விளைவாக மீண்டும் கலைவாணர் பெயர் மாநகராட்சிக்கு சூட்டப்பட்டுள்ளது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரத்தில் பேசும்போது தமிழக பாரதிய ஜனதா கட்சி வேறு வேறு கட்சியிலிருந்து தலைவர்களை கடன் வாங்குகிறார்கள் என்று பேசியுள்ளார். வேறு வேறு கட்சியிலிருந்து தலைவர்களை வாங்கும் அளவிற்கு பாரதிய ஜனதா இல்லை. இந்திரா காந்தி தமிழகத்திற்கு வரும்போது தி.மு.க. அரசு அவரை கேவலப்படுத்தியது.

    3 ஆண்டுகள் கழித்து இந்திரா காந்தி தமிழகத்திற்கு வரும்போது நேருவின் மகளே வா என்று வரவேற்றது. குமரி மாவட்ட தலைவர்களின் வரலாறு பாட புத்தகத்தில் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி தி.மு.க.விற்கு அடிமையாக உள்ளது. தேசியமும் தெய்வீகமும் இரண்டு கண்களாக பார்க்கிறோம். ராமேஸ்வரத்திற்கும் தனுஷ்கோடிக்கும் இடையே 208 கோடி ரூபாய் செலவில் பாலம்அமைக்க அடிக்கல் நாட்டி பணிகள் நடைபெற்று வருகிறது. 1964-ல்தனுஷ்கோடியில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. அதன் பிறகு தனுஷ்கோடி யாரும் கண்டு கொள்ளவில்லை.

    6 முறை தி.மு.க. ஆட்சி செய்த பிறகு கூட தனுஷ்கோடிக்கு என்ன செய்தார்கள். ஆனால் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு ராமேஸ்வரத்திற்கும் தனுஷ்கோடிக்கும் இடையே ரூ.208 கோடியில் பாலம் அமைக்க நடவடிக்கை எடுத்தார். ரூ.78 கோடியில் சாலை அமைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டார். 1964-க்கு பிறகு தனுஷ்கோடிக்கும எதையும் தி.மு.க. செய்யவில்லை. ஆனால் பாரதிய ஜனதா அரசு தான் செய்துள்ளது. முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் துண்டு சீட்டில் எழுதிக் கொடுப்பதை படித்து வருகிறார். 2004 முதல் 2014வரை 85 மீனவர்கள் இலங்கை படையால் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு மீனவர்களின் பாதுகாவலனாக பாரதிய ஜனதா அரசு விளங்குகிறது. ஆனால் ராமநாதபுரத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீனவர்களுக்கு பிரதமர் எதுவும் செய்யவில்லை என்று பேசியுள்ளார்.

    நடிகர் வடிவேல் காமெடி விட இந்தியா கூட்டணியில் திமுக இருப்பது மிகப்பெரிய காமெடியாகும். மீனவர்களுக்கென்று தனி அமைச்சரவை உருவாக்கியது பாரதியஜனதா அரசு தான்.அதில் இணை அமைச்சராக தமிழகத்தைச் சேர்ந்த முருகன் அவர்களை அமர வைத்து அழகு பார்த்து உள்ளார். மீனவர்களின் நண்பனாக பிரதமர் மோடி உள்ளார். படகுகளுக்கு இரண்டு லட்சத்திலிருந்து ரூ80 லட்சம் வரை மானியம் வழங்கி வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு கிசான் கார்டு வழங்குவது போன்று மீனவர்களுக்கு மீன் விவசாயி என்று அனைத்து சலுகைகளையும் வழங்கி வருகிறார் .

    கடன் வாங்குவதில் நம்பர் ஒன் ஆக தி.மு.க. அரசு விளங்குகிறது. கடன் வாங்குவதில் தமிழக மூன்றாவது இடத்தில் இருந்தது. தமிழக முதலமைச்சராக மு க ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கடன் வாங்கியதில் தமிழகம் நம்பர் ஒன்னாக உள்ளது .இதை தான் திமுக சாதனையாக உள்ளது.

    ஆனால் பிரதமர் மோடி நாட்டினுடைய வளர்ச்சியை கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறார். தற்பொழுது பொருளாதார வளர்ச்சியல் இந்திய 5-வது இடத்தில் உள்ளது. அடுத்த முறை ஆட்சிக்கு வந்து மூன்றாவது இடத்திற்கு கொண்டு வருவோம். தமிழகம் குடிப்பதில் முதல் மாநிலமாக விளங்கி உள்ளது. 22 சதவீதம் டாஸ்மார்க் வருவாய் உயர்ந்துள்ளது. 18 வயது முதல் 60 வயது வரை உள்ள ஆண்கள் 18 சதவீதம் பேர் மதுவிற்கு அடிமையாக இருப்பதாக ஆய்வு சொல்கிறது.

    இரண்டு லட்சம் மீனவர்களுக்கு வீடு கட்டி கொடுப்போம் என்று சொன்ன தி.மு.க. ஒரு செங்கலை கூட வைக்கவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என்று கூறினீர்கள்.அதற்கு கூட ஒரு செங்கல் வைக்க வில்லை.

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட எந்த திட்டத்தையும் குமரி மாவட்ட மக்களுக்கு செய்யவில்லை. 2024 -ல் தி.மு.க. மீண்டும் உங்களை ஏமாற்ற வருவார்கள். 2024-ல் நடக்கும் தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல.142 கோடி இந்தியர்களை நம்பி மோடி தேர்தலில் நிற்கிறார். மூன்றாவது முறையாக பிரதமராக வரும்போது வல்லரசு நாடாக இந்தியாவை மாற்றி காட்டுவேன் என்று கூறியுள்ளார். சாமானிய கடை கோடி மக்களுக்காக ஆட்சி செய்வேன் என்று பிரதமர் கூறியுள்ளார். நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பாடுபட்டு வருகிறார். அடுத்த ஆண்டும் செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடி ஏற்றுவார். 400 எம்பிக்களுடன் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர்வார். பாராளுமன்ற தேர்தலில் முதல் வெற்றி கன்னியாகுமரி தொகுதியில் இருந்து இருக்க வேண்டும்.பிரதமர் மோடி கன்னியாகுமரி, ராமநாதபுரம் அல்லது தமிழகத்தில் உள்ள தொகுதிக்கு வந்துவிடுவாரோ என்ற அச்சத்தில் மு.க. ஸ்டாலின் உளறிக்கொண்டு வருகிறார். எதிரிகள் பொய்யை பேசும் போது நாம் உண்மையை சத்தமாக பேச வேண்டும். மூன்றாவது முறையாக பிரதமர் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது பற்றி அனைவரும் நாம் எடுத்துகூற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்

    • கடல் மட்டத்தில் இருந்து 1340 மீட்டர் உயரத்தில் இருப்பதாக வனத்துறை தகவல்
    • திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை வனச்சரகத்திற்குட்பட்ட அப்பர் கோதையாறு பகுதியில் விடப்பட்டது.

    கன்னியாகுமரி:

    கேரளா மற்றும் தமிழகத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த அரிசிக்கொம்பன் யானை, வனத்துறையினரின் தீவிர முயற்சிக்கு பிறகு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

    பின்னர் கும்கி யானைகள் உதவியுடன் லாரியில் ஏற்றப்பட்ட அரிசிக்கொம்பன், திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை வனச்சரகத்திற்குட்பட்ட அப்பர் கோதையாறு பகுதியில் விடப்பட்டது.

    அதன்பிறகு காட்டுக்குள் சென்ற அரிசிக்கொம்பன், குடியிருப்பு பகுதிக்கு வரக்கூடும் என திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மலைவாழ் மக்கள் அச்சம் அடைந்தனர். இதற்காக அவர்கள் பல போராட்டங்களிலும் ஈடுபட்டனர். ஆனால் அரிசிக் கொம்பன் யானை, காட்டை விட்டு வெளியே வர வாய்ப்புகள் இல்லை என வனத்துறையினர் உறுதிபட தெரிவித்தனர்.

    அதன் காதில் அணி விக்கப்பட்டுள்ள ரேடியோ காலர் தரும் சிக்னல் மூலம், யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாக வனத்துறையினர் கூறினர். அப்பர் கோதையாறு பகுதியில் அரிசிக் கொம்பன் யானைக்கு தேவையான உணவு, குடிநீர் கிடைத்து வருவதால் அந்தப் பகுதியிலேயே யானை சுற்றி வருவதாக வனத்துறை தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக வனத்துறையினர் கூறுகையில், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் விடப்பட்டுள்ள அரிசிக் கொம்பன் யானை, கடந்த 13 நாட்களாக அப்பர் கோதையாறு வனத்தில் சுமார் 5 கி.மீட்டர் சுற்றள விலேயே சுற்றி வருகிறது. அந்தப் பகுதியில் உள்ள தாவர உணவுகளை உண்டு விட்டு, நல்ல ஓய்வும் எடுத்து வருகிறது. எனவே இனி அரிசிக்கொம்பன் யானை, குடியிருப்பு பகுதிக்கு வரும் என்ற அச்சம் தேவையில்லை.

    இருப்பினும் அதன் நட மாட்டத்தை களக்காடு மற்றும் கன்னியாகுமரி கோட்டங்களுக்கு உட்பட்ட வன கால்நடை அலுவ லர்கள், வனச்சரக அலுவலர்கள், வனவர்கள் என பல்வேறு தரப்பினர் அடங்கிய குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இதில் அரிசிக்கொம்பன் யானை நல்ல ஆரோக்கி யத்துடன் இருப்பதும், காட்டுப்பகுதியில் உணவு உண்டு வருவதும் ரேடியோ காலர் சிக்னல்கள் மூலம் தெரியவந்துள்ளது. தற்போது கடல் மட்டத்தில் இருந்து 1340 கி.மீட்டர் மேல் உள்ள கோதையாறு ஆற்றின் பிறப்பிடம் அருகே உள்ள வனப்பகுதியில் தான் அரிசிக்கொம்பன் உள்ளது என்றனர்.

    • சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சாலையோரம் வரும் மான், யானைகளை போட்டோ எடுத்தால் வழக்குப்பதிவு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    • மனிதர்களின் தேவையற்ற செயல்களால் மனித-விலங்கு மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாவும் ஆபத்து நிகழும் முன் நடவடிக்கையாக வனத்தில் அத்துமீறுவோர் மீது அபராதம், வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகமானது 1435 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. இந்த புலிகள் காப்பகம் 2013-ம் ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி தமிழகத்தின் 4-வது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.

    இங்கு யானைகள் புலி,சிறுத்தை, கரடி, செந்நாய்கள், கடமான்கள், புள்ளிமான்கள், கழுதைபுலி என ஆயிரக்கணக்கான வனவிலங்குகளின் புகலிடமாக உள்ளது.

    இந்த சரணாலயத்தின் மேற்கு கிழக்கு தொடர்ச்சி மலை சந்திக்கும் தலமலை வனப்பகுதி யானைகள் இடம்பெறும் முக்கிய வழித்தடமாக உள்ளது. அண்மையில் நடந்த கணக்கெடுப்பில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 1200-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

    தற்போது ஊட்டி, கொடைக்கானல் போல இதமான கால நிலை நிலவுவதால் திம்பம், ஆசனூர் கேர்மாளம் வனச்சாலையில் ஆயிரக்கணக்கானோர் முகாமிட்டு இயற்கையின் அழகை ரசிக்கின்றனர். யானை, புள்ளிமான்கள் போன்ற விலங்குகள் சாாலையோரம் துளிர்விட்டு பச்சைபசேல் என படர்ந்திருக்கும் புற்களை சாப்பிட அடிக்கடி வருவது வழக்கம்.

    அடர்ந்த காட்டுப்பகுதியின் நடுவே தேசிய நெடுஞ்சாலை செல்வதால் இரு மாநிலங்களிடையே பயணிக்கும் வாகன ஓட்டிகள்,சுற்றுலா பயணிகள் யானை, புள்ளிமான்களை பார்த்து மெய்சிலிர்க்கின்றனர். சிலர் வாகனத்தை நிறுத்தி புகைப்படம் எடுப்பது, சப்தமிடுவதும் வனவிலங்குகளின் நேர்மறையான எண்ணங்களை உருவாக்குகின்றன.

    சில வாகன ஓட்டிகள் ஆர்வம் காரணமாக யானைகள் அருகே நின்று செல்பி எடுக்கின்றனர். இதனால் யானை அவர்களை துரத்தி தாக்க முற்படுவதும் அவர்கள் தப்பிப்பதும் வாடிக்கையாகி விட்டது. ஆபத்தை உணராத இளைஞர்கள் மலை உச்சியில் நின்று மலைகளின் பின்னணியில் செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.

    சல சலவென ஓடும் நீரோடைகளில் உள்ள பாறைகள் மீது அமர்ந்து மது அருந்துவதும் எல்லையை மீறிய செயலாககாணமுடிகிறது. இயற்கையான சூழல் கொண்ட விலங்குகள் வாழும் வாழ்விடத்தில் மனிதர்கள் அத்துமீறி நுழைந்து யானை, சிறுத்தை. புள்ளிமான்களின் வாழ்விடத்தில் இடையூறு ஏற்படுத்தும் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சத்தியமங்கலம் புலிகள் காப்பக இணை கள இயக்குநர் கிருபா சங்கர் உத்தரவிட்டுள்ளார்.

    மனிதர்களின் தேவையற்ற செயல்களால் மனித-விலங்கு மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாவும் ஆபத்து நிகழும் முன் நடவடிக்கையாக வனத்தில் அத்துமீறுவோர் மீது அபராதம், வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

    ×