என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
பிரெஞ்சுகாரன் வாய்க்காலில் தேங்கியுள்ள கழிவு நீரால் நோய் பரவும் அபாயம்
- விழுப்புரம்- நாகப்பட்டினம் 4 வழி சாலைக்காக இருபுறமும் மழை நீர் வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது.
- போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதகடிப்பட்டு பகுதியில் இருந்து திருவண்டார் கோவில் பகுதி வரை பிரெஞ்சுகாரன் மழைநீர் வடிகால் வாய்க்கால் உள்ளது. மழைக்காலங்களில் வாய்க்காலில் மழைநீர் செல்வது வழக்கம்.
இப்போது இந்த வாய்க்கால் கழிவு நீர் ஓடையாக மாறி உள்ளது. மேலும் விழுப்புரம்- நாகப்பட்டினம் 4 வழி சாலைக்காக இருபுறமும் மழை நீர் வடிகால் வாய்க்கால் அமைக்கப் பட்டுள்ளது.
அதிலிருந்த வரும் கழிவு நீரும் இந்த மழை நீர் வடிகால் வாய்க்காலில் விடப்படுகிறது. இந்த வாய்க்காலில் ஏற்கனவே பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.
எனவே தேசிய நெடுஞ்சாலை ஊழியர்கள் திறந்த வெளியாக உள்ள கழிவுநீர் வாய்க்காலை உடனடியாக சரி செய்து அங்கு கழிவுநீர் தேங்கி நிற்காமல் வாய்க்காலில் தடை இன்றி செல்வதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்