search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடற்கரையில் மெகா தூய்மை பணி
    X

    அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    கடற்கரையில் மெகா தூய்மை பணி

    • குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளை நகராட்சி பணியாளர்கள் சேகரித்து குப்பை கிடங்குக்கு அனுப்பி வைத்தனர்.
    • சுற்றுலா பயணிகளிடம் பொது இடங்களில் குப்பைகள் கொட்டக்கூடாது என விழிப்புணர்வு.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சி சார்பில் சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா மற்றும் தஞ்சாவூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் சரஸ்வதி ஆகியோரின் உத்தரவுபடி வேதாரண்யம் நகராட்சி பகுதியில் மக்கள் தூய்மை இயக்கம் ஓராண்டு நிறைவு பெற்றது,

    உலக பெருங்கடல் தினத்தை முன்னிட்டு வேதாரண்யம் சன்னதி கடல் பகுதியில் மெகா தூய்மை பணி நடைபெற்றது.

    கடற்கரை மற்றும் கடற்க ரைக்கு செல்லும் சாலைகள் உள்ளிட்ட இடங்களில் உள்ள குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளை நகராட்சி பணியாளர்கள் சேகரித்து குப்பை கிடங்குக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர், நகர்மன்ற தலைவர் புகழேந்தி, நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராஹிம் மற்றும் நகராட்சி பணியாளர்கள் தூய்மை பணி உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் நகர்மன்ற துணை தலைவர் மங்கள நாயகி, உறுப்பி னர்கள், தன்னார்வலர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து, கடற்க ரைக்கு வந்த சுற்றுலா பயணிகளிடம் பொது இடங்களில் குப்பைகள் கொட்டக்கூடாது என விழிப்புணர்வு ஏற்ப டுத்தப்பட்டு துண்டு பிரசு ரங்கள் வழங்கப்பட்டது.

    Next Story
    ×