என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
கோத்தகிரி பகுதியில் கால்வாயில் இறைச்சி கழிவுகள்
By
மாலை மலர்18 Aug 2023 2:45 PM IST

- வசிக்கும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு அடிக்கடி உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன.
- நோய்த்தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி டானிக் டன் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில் அங்கு உள்ள இறைச்சி கடைகளில் சேகரமாகும் கழிவுகள், பொதுகால்வாயில் கொட்டப்பட்டு வருகின்றன.
இதனால் அங்கு ஈக்கள் மொய்த்து துர்நாற்றம் வீசுகிறது. எனவே அங்கு வசிக்கும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு அடிக்கடி உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன.
மேலும் நோய்த்தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ப்ளூ மவுண்டன் நுகர்வோர் அமைப்பு கேட்டுக் கொண்டு உள்ளது.
Next Story
×
X