என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குப்பை கொட்டும் நிலையமாக மாறிய வைகை தென்கரை பகுதி
- குப்பை கொட்டும் நிலையமாக மாறிய வைகை தென்கரை பகுதி உள்ளது.
- கால்நடை கழிவுகள் ஆற்றில் கலக்கப்படுகிறது.
மதுரை
தமிழகம் முழுவதும் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளை பாதுகாக்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் அது காற்றில் பறக்கும் உத்தரவாகவே மாறிவிட்டது.
இதனை அதிகாரிகள் ஒருபோதும் பெரிதாக எடுத்துக்கொண்டு கண்டு–கொள்ளாததால் ஆறுகளும், குளங்களும் குப்பை கொட் டும் இடமாக மாறிவிட்டது.
அதிலும் சமீப காலமாக வீடுகளில் சேகரிக்கப்படும் கழிவுநீரை யாருக்கும் தெரி–யாமல் இரவு, பகல் என்று பாராமல் ஆறுகளிலும், ஊருக்கு ஒதுக்குப்புறமான சாக்கடைகளில் கலந்து வருவதும் வாடிக்கையாகி வருகிறது. இதனை தடுத்து சுகாதாரத்தை பேணிக்காக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டும் பல–னில்லை.
இதற்கிடையே கோவில் மாநகரமான மதுரையிலும் இதுபோன்ற கொடுமைகள் ஆங்காங்கே அரங்கேறி வரு–கிறது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநா–தபுரம் ஆகிய 6 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமா–கவும், விவசாய தேவைகளை பூர்த்தி செய்யவும் பயன்ப–டுத்தப்படுகிறது. ஆனால் இந்த ஆற்றில் அதிக அளவிலான கழிவுகள் கொட்டப்பட்டு அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. குறிப்பாக வைகை ஆற்றின் தென்கரை பகுதியில் கால் நடை வளர்ப்போர் ஏராள–மாக வசித்து வருகிறார்கள். அவர்கள் கால்நடைகளுக் கென்று தனியாக தங்களது சொந்த இடத்தில் கொட் டகை அமைத்து பராமரிக் காமல் சாலைகளில் சுற்றித் திரிய விட்டுள்ளனர்.
அவை இரவு, பகல் பாராமல் சாலைகளின் ஆங்காங்கே கிடைக்கும் உணவுகளை உண்டும், படுத்து உறங்கியும் போக்கு–வரத்துக்கு இடையூறு அளித்து வருகிறது. திடீ–ரென்று அந்த கால்நடைகள் மூர்க்கத்தனமாக சாலை–களில் ஓடுவதால் வாகன ஓட்டிகள் அச்சத்து–டனேயே அந்த பகுதியை கடந்து செல்கிறார்கள். மேலும் அவ்வப்போது விபத்துகளும் நடக்கிறது.
இவை அனைத்தையும் மீறி வைகை ஆற்றின் தென்கரை பகுதியில் மாடு–களை கட்டி வைத்து பராம–ரிக்கும் கால்நடை வளர்ப் போர் அதன் கழிவுகளை அப்பறப்படுத்தாமல் அங் ேகயே விட்டுச்செல்வ–தும், பல நேரங்களில் வைகை ஆற்றில் கொட்டி விடுவதும் வாடிக்கையாகி விட்டது. பல்வேறு வரலாற்று சிறப் புகளை கொண்ட வைகை ஆறு இன்று குப்பை கழிவு–களை கொட்டும் இடமாக மாறிவருவது பொது–மக் களை வெறுப்படைய செய் துள்ளது.
சித்திரை திருவிழா நடை–பெறும் காலங்களில் மட்டும் வைகை ஆற்றை போற்றி பாதுகாத்தால் போதாது, காலம் முழுக்க அதனை சுத்தமாகவும், சுகாதார–மாகவும் வைத்துக்ெகாள்ள முயற்சிக்க வேண்டும். ஏற்கனவே கால் நடை வளர்ப்போர் தென் கரை பகுதியில் மாடுகளை கட்டி வைக்கக்கூடாது என்றும், மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தது.
ஆனால் அதனை காதில் வாங்கிக்கொள்ளாமல் தங்களுடைய செயல்பாடு–களை கால்நடை வளர்ப் போர் தொடர்ந்து வரு–கின்றனர். அதேபோல் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளையும் பறிமுதல் செய்து, அதனை வளர்ப்போ–ருக்கு அபராதம் விதிப்பதை–யும் மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்த வேண் டும் என்பதும் ஒட்டுமொத்த மதுரை மக்களின் எதிர் பார்ப்பாக உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்