search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tires"

    • பொதுமக்களிடம் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தினர்.
    • புகையிலை பொருட்களை விற்பனை செய்த 12 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    பாபநாசம்:

    பாபநாசம் பேரூராட்சியில் கபிஸ்தலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்லப்பா, சுகாதார ஆய்வாளர்கள் நாடிமுத்து , மருத்துவமில்லா மேற்பார்வையாளர் தியாகராஜன், பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் நித்தியானந்தம் மற்றும் டெங்கு களப்பணியாளர்கள் சேர்ந்து டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தேங்கியுள்ள டயர்களையும் தேவையற்ற பொருட்களையும் அப்புறப்படுத்தினார்கள்.

    பாபநாசம் பகுதியில் புகையிலை விழிப்புணர்வு ஏற்படுத்தி கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 12 கடைகளுக்கு ரூ.2,400 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    • வீட்டின் முன்பு காரை நிறுத்தி வைத்து கவர் கொண்டு மூடி வைத்திருந்தார்.
    • சி.சி.டி.வி.யில் வெள்ளை நிற கார் ஒன்று வந்து சென்ற காட்சி பதிவாகியுள்ளது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தேர் தெற்கு வீதி காந்தி பூங்கா எதிரே வசிப்பவர் முத்துராமன். முன்பு நகை வணிகம் செய்து வந்தார். கடந்த ஆண்டு புதுரக சொகுசு கார் வாங்கினார். இந்நிலையில் கடந்த வாரம் முத்துராமன் தனது குடும்பத்தினர் வெளியூர் சென்று விட்டு பின்னர் ஒரு சில நாட்களாக தனது வீட்டின் முன்பு காரினை நிறுத்தி வைத்து கவர் கொண்டு மூடி வைத்திருந்தார். இதனிடையே நேற்று நள்ளிரவு வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த காரின் நான்கு டயர்களையும் கல்லை வைத்து முட்டுக்கொடுத்து மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இன்று காலை முத்துராமன் எழுந்து பார்த்தபோது காரின் டயர்கள் திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து முத்துராமன் சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பே ரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி.யில் வெள்ளை நிற கார் ஒன்று இருமுறை சென்று வருவதும் பின்னர் நீண்ட நேரம் ஒரு இடத்தில் நின்று விட்டு மீண்டும் செல்வது போன்ற காட்சி பதிவாகி யுள்ளது. இதனால் மர்ம நபர்கள் காரில் வந்து டயர்களை கழட்டி திருடி சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது. சீர்காழி நகரின் மையப் பகுதியில் நடந்த இந்த திருட்டு சம்பவம் பொதுமக்க ளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • திடீரென்று தண்டவாளத்தின் நடுவில் தடுப்பு போன்ற 2 பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது.
    • விபத்து காரணமாக என்ஜினுடன் சேர்ந்த 4 பெட்டிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதோடு, ரெயிலும் நிறுத்தப்பட்டது.

    திருச்சி:

    தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு தினமும் 10-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகிறது. இதில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் சென்னை உள்ளிட்ட பிற நகரங்களுக்கு சென்று வருகிறார்கள். அதேபோல் இந்த ரெயில்களில் சரக்கு போக்குவரத்தும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் கன்னியாகுமரியில் இருந்து சென்னை எழும்பூருக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரெயில் திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த புதுக்குடி கிராமம் அருகிலுள்ள மேலவாளாடி பகுதிக்கு நள்ளிரவு சுமார் 1.05 மணிக்கு வந்தது.

    அப்போது திடீரென்று தண்டவாளத்தின் நடுவில் தடுப்பு போன்ற 2 பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது. இதனை கவனித்த என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்த முயன்றார்.

    ரெயில் அருகில் வந்தபோது தண்டவாளத்தில் நிற்க வைத்த நிலையில் ஒரு டயரும், படுக்க வைத்த நிலையில் மற்றொரு டயரும் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ஆனால் அதிக வேகத்தில் ரெயில் வந்ததால் அந்த டயர்கள் மீது மோதியது. பயங்கர சத்தம் கேட்டதுடன் ரெயிலின் வேகமும் குறைந்தது.

    இந்த விபத்து காரணமாக என்ஜினுடன் சேர்ந்த 4 பெட்டிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதோடு, ரெயிலும் நிறுத்தப்பட்டது.

    இதையடுத்து என்ஜின் டிரைவர் உள்ளிட்டோர் இறங்கி வந்து பார்த்தபோது ரெயில் என்ஜினுக்குள் சிக்கிய நிலையில் 2 லாரி டயர்கள் கிடந்தன. அத்துடன் அவை என்ஜின் பகுதிக்கு மின்சாரம் கொண்டு செல்லும் வயர்களையும் கடுமையாக சேதப்படுத்தி இருந்தது.

    இதனால்தான் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட் டது. யாரோ மர்ம நபர்கள் சதிச்செயலில் ஈடுபடும் வகையில் தண்டவாளத்தில் லாரி டயரை வைத்துவிட்டு சென்றுள்ளதும் தெரியவந்தது.

    இதுபற்றி ரெயில்வே அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே நள்ளிரவில் நடுவழியில் ரெயில் நிறுத்தப்பட்டதால் அச்சமடைந்த பயணிகள் கீழே இறங்கி வந்து பார்த்தனர். அதற்குள் தொழில்நுட்ப குழுவினர் ரெயில் நின்ற பகுதிக்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள் சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு ரெயில் பெட்டிகளில் துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை சீரமைத்தனர். இதையடுத்து அரை மணி நேரம் தாமதமாக கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

    மேலும் விபத்து நடந்த பகுதிக்கு ரெயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாபரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த டயர்களை கைப்பற்றிய அவர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தண்டவாளத்தில் டயர் வைக்கப்பட்ட பகுதியில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்படுவதற்கான பணிகளில் ரெயில்வே நிர்வாகம் ஈடுபட்டிருந்தது.

    விவசாய நிலங்கள் அதிகம் கொண்ட அந்த பகுதியில் சுரங்கப்பாதை அமைத்தால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம் ஏற்படும் என்றும், விவசாய விளை பொருட்களை கொண்டு செல்லும் சுரங்கப்பாதையில் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி பாதிக்கும் நிலை ஏற்படும் என்று கூறி அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில்தான் ரெயில் தண்டவாளத்தில் லாரி டயர்களை வைத்து சதிச்செயல் அரங்கேறியுள்ளது.

    இதில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார், கிராமத்தை சேர்ந்தவர்களா அல்லது வெளி நபர்களா என்பது உள்ளிட்ட கோணங்களில் ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • மருத்துவ கழிவுகள், டயர்கள் போன்றவைகள் அள்ளப்படாமல் பல மாதங்களாக கொட்டப்பட்டு கிடக்கிறது.
    • தேங்காய் சிரட்டை, டயர்களில் மழைநீர் தேங்கி நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

    சீர்காழி:

    சீர்காழி அருகே கொள்ளிடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோபாலசமுத்திரம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் உள்ள அம்மா நகரில் குடியிருப்புகள் அருகே

    குப்பைகள் கொட்டப்பட்டு பல மாதங்களாக அள்ளப்படாமல் கிடந்து வருகிறது.

    சாலை ஓரத்தில் சுமார் 300 மீட்டர் நீளத்திற்கு குப்பைகள், அழுகிய காய்கறிகள், மருத்துவக் கழிவுகள், பழைய துணிமணிகள், டயர்கள் போன்றவைகள் அள்ளப்படாமல் பல மாதங்களாக கொட்டப்பட்டு கிடக்கிறது.

    மேலும் இறைச்சி கழிவுகள், சாலையில் அடிபட்டு இறந்த தெரு நாய், பூனைகள் ஆகியவையும் அவ்வபோது குப்பைகளில் வீசப்பட்டு கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. குப்பைகளின் கிடக்கும் தேங்காய் சிரட் டை, டயர்களில் மழைநீர் தேங்கி கொசுக்கள் டெங்கு போன்ற நோய்கள் பரவுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

    பல மாதங்களாக அள்ளப்படாமல் உள்ள குப்பைகள் அவ்வப்போது ஊராட்சி நிர்வாகம் சார்பில் எரித்து வருவதால் புகைமூட்டத்தாலும் குடியி ருப்பு வாசிகள் வேதனை அடைந்திருக்கின்றனர்.

    ஆகையால் குப்பைகளை முழுமையாக அகற்றி தூய்மைப்படுத்தி அந்த இடத்திற்கு குப்பை தொட்டி வைத்து சீர் செய்ய வேண்டும் என குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×