என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கீழக்கரை நகராட்சிக்கு குடிநீர் திட்டபணிக்கு ரூ.211.32 கோடி ஒதுக்கீடு
- கீழக்கரை நகராட்சிக்கு குடிநீர் திட்டபணிக்கு ரூ.211.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- இந்த தகவலை நகர்மன்ற தலைவர் தெரிவித்துள்ளார்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 21 வார்டுகளில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு குடிதண்ணீர் பிரச்சனை என்பது நீண்ட காலமாக இருந்து வருகிறது. மக்களுக்கு தேவையான அளவு குடிநீர் கிடைக்காமல் லாரியில் விற்பனை செய்யப்படும் குடிநீரை விலை கொடுத்து வாங்கி வருகின்றனர்.
குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணுமாறு பொதுமக்கள் தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதை தொடர்ந்து ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தீவிர முயற்சியால், குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா நிருபர் களிடம் கூறியதாவது:-
கீழக்கரை நகராட்சியில் நாள்தோறும் 53.20 லட்சம் லிட்டர் குடிநீர் தேவைப் படுகிற சூழ்நிலையில் தற்போது 8 லட்சம் லிட்டர் அளவுக்கு காவிரி குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் குடிநீருக்கு அவதிப்படுகின்றனர். தமிழக மக்களின் குடி தண்ணீர் பிரச்சனையை தீர்ப்பதில் தன்னிகரற்று விளங்கும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீருக்காக ரூபாய் 2883 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டு குடிநீர் திட்டத்தி னை செயல்படுத்த ஆணை யிட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலா ளரும், சட்டமன்ற உறுப்பினரு மான காதர் பாட்ஷா முத்து ராமலிங்கம் மேற்கொண்ட தீவிர முயற்சியால் கீழக்கரை நகராட்சிக்கு குடிநீர் திட்ட பணிக்காக 211. 32 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி மூலம் 12,10,5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 3 மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்படு கிறது.
கீழக்கரை நகரில் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு கூடுதலாக குடிநீர் பைப்லைன் வசதி செய்யப்படுகிறது. இந்தத் திட்டம் செயல்பட தொடங்கினால் மக்களுக்கு தேவையான அளவை விட கூடுதலாக குடிநீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது, இதற்கான திட்ட மதிப்பீடுகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு விட்டது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கீழக்கரையில் குடிநீர் குழாய் பதிப்பதில் ஏற்பட்ட முறைகேடுகள் குறித்து ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு பிரிவு இன்ஸ்பெ க்டர் முத்துலட்சுமி தலைமையில் ஆய்வு நடந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது நகராட்சி பொறியாளர் அருள், நகர்மன்ற கவுன்சிலர்கள் ஷேக் உசேன், நசுருதீன், எஸ்.கே.வி.சுகைபு தி.மு.க. மாணவர் அணி அமைப்பாளர் இப்திகார் ஹசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்