என் மலர்
உள்ளூர் செய்திகள்

பயனாளிகளுக்கு தென்னங்கன்று வழங்கப்பட்டது.
பயனாளிகளுக்கு தென்னங்கன்று வழங்குதல்
- 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இலவச தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.
- வேளாண்மை உதவி இயக்குநர் கலைச்செல்வன் முன்னிலை வகித்தார்.
நாகப்பட்டினம்:
திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஊராட்சி பகுதியில் உள்ள சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இலவச தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு திருப்புகலூர் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.வேளாண்மை உதவி இயக்குநர் கலைச்செல்வன் முன்னிலை வகித்தார்.
இதில் துணை வேளாண்மை அலுவலர் தெய்வகுமார், வேளான் உதவி அலுவலர் பவித்ரா, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுந்தரி கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி செயலர் ஜெய்சங்கர், ஒன்றிய குழு உறுப்பினர்கள் பேபிசரளா பக்கிரிசாமி, சுஜாதா ஆசைத்தம்பி மற்றும் மூத்த விவசாய முன்னோடிகள், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






