search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீலகிரியில் 1000 மரக்கன்றுகள் நடவு
    X

    நீலகிரியில் 1000 மரக்கன்றுகள் நடவு

    • மரக்கன்று நடும் பணியை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்
    • மரம் நாட்டுக்கும், வீட்டுக்கும் ஒரு முக்கியமான ஒன்றாகும்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், தும்ம னட்டி ஊராட்சிக்குட்பட்ட புதுவீடு கிராமத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, நெடுஞ்சாலைத்துறை சார்பில், 1000 மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியினை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத் தார்.

    பின்னர் கலெக்டர் அம்ரித் கூறியதாவது:-

    மரத்தை நாம் வளர்த்தால் மரம் நம்மை வளர்க்கும்' என்ற கலைஞரின் சொல் லிற்கிணங்க, தமிழக முதல்-அமைச்சர், கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்து மாநில நெடுஞ்சாலைகளிலும் 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்றார். இதனால் மாநில நெடுஞ்சா லைகளில் இடைவெளி இல்லாமல் மரங்கள் வளர்க்கப்படும் என்ற இலக்கு எட்டப்படும் என்றும் 2023-2024-ம் ஆண்டு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கலைஞர் நூற்றாண்டு விழா தொடக்க நாளான அன்று தமிழக முதல்-அமைச்சர் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

    அதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்டத்தில், நெடுஞ்சாலைத்துறையின் சார்பில், மரக்கன்றுகள் நடும் பணியானது ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்திகிரி மற்றும் குந்தா ஆகிய பகுதிகளில் மகாகனி மரக்கன்றுகள், நாவல் மரக்கன்றுகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் வளரக்கூடிய மரக்கன்றுகள் என மொத்தம் 1,000 மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. மேலும் மரங்களை வளர்ப்பதின் மூலம் தேவையான காற்று கிடைக்கிறது. காற்று கிடைப்பதன் மூலம் நாம் சுவாசிப்பதற்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கிறது. மரம் நாட்டுக்கும், வீட்டுக்கும் ஒரு முக்கியமான ஒன்றாகும். ஆகையால் கண்டிப்பாக ஒவ்வொரு வரும் மரத்தினை வளர்க்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் குழந்தைராஜூ, உதவி பொறியாளர் ஸ்டாலின், ஊட்டி வட்டாட்சியர் ராஜ சேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதரன் மற்றும் சாலை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×