மழைநீர் மறுசுழற்சி நிலையம் அமைப்பது குறித்து அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நகராட்சி நிர்வாகத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் மழைநீர் மறுசுழற்சி நிலையம் அமைக்கும் பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள ப்பட்டது.
ஆய்வு செய்த  போது எடுத்த படம்
ஆய்வு செய்த  போது எடுத்த படம்
Published on

திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சி காயிதே மில்லத் நகரில் சீர்மிகு நகரதிட்டத்தின் கீழ் மழைநீர் மறுசுழற்சி நிலையம் அமைப்பது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நகராட்சி நிர்வாகத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் மாநகராட்சி காயிதே மில்லத் நகரில் சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் மழைநீர் மறுசுழற்சி நிலையம் அமைக்கும் பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள ப்பட்டது. காயிதே மில்லத் நகரில் மழைநீர் மறுசுழற்சி நிலையம் அமைக்கும் திட்டத்தை பொதுமக்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு வேறு இடத்தில் அமைக்கப்படவுள்ளது என்றார்.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னைய்யா , மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் , திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் , திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் , திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியன், திருப்பூர் மாநகராட்சி மண்டல த்தலைவர்கள் பத்மநாபன் (4-ம்மண்டலம்), கோவிந்தசாமி (3-ம்மண்டலம்) ,கோவிந்தராஜ் (2-ம் மண்டலம்), தலைமைப்பொறியாளர் வெங்கடேஷ் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com