search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செடி"

    • தமிழகம் முழுவதும் தற்போது தக்காளி பழத்தின் விலை பெருமளவு அதிகரித்து உள்ளது.
    • தக்காளி பழங்களும் செடியில் இருந்து உதிர்ந்து கீழே விழுந்து அழுகி நாசமாகி வருகின்றன.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகாவில் உள்ள விவசாயிகள் தென்னைக்கு அடுத்தபடியாக காய்கறி சாகுபடியில் அதிகமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    அதிலும் குறிப்பாக வடக்கிபாளையம், புரவிபாளையம், ஜமீன்காளியாபுரம், பெரும்பதி, கோவிந்தனூர், மாப்பிள்ளைகவுண்டன்புதூர், சூலக்கல், நெகமம், கோமங்கலம், தேவனூார்புதூர் ஆகிய பகுதிகளில் தக்காளி செடிகள் பெருமளவில் பயிரிடப்பட்டு உள்ளது.

    தமிழகம் முழுவதும் தற்போது தக்காளி பழத்தின் விலை பெருமளவு அதிகரித்து உள்ளது. எனவே பொள்ளாச்சி தாலுகா விவசாயிகள் தக்காளி சாகுபடியில் கூடுதலாக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    கோவை மாவட்டத்தில் கோடை மழை தொடங்கியதை முன்னிட்டு விவசாயிகள் கடந்த மே மாதம் முதல் தக்காளியை பயிரிட்டு வருகின்றனர். அவை தற்போது விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன.

    இந்நிலையில் தமிழகத்தில் பலத்த காற்றுடன் கூடிய தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதன்காரணமாக அங்கு பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

    பொள்ளாச்சி பகுதியில் பருவமழை பெய்து வருவதால் அங்கு உள்ள தோட்டங்களில் தக்காளி செடிகள் மழைக்கு தாக்குபிடிக்க முடியாமல் கீழே சாய்ந்து வருகின்றன. தக்காளி பழங்களும் செடியில் இருந்து உதிர்ந்து கீழே விழுந்து அழுகி நாசமாகி வருகின்றன.

    எனவே பொள்ளாச்சி தோட்டங்களில் விளையும் தக்காளி பயிர்களை பாது காப்பது என்று விவசாயிகள் முடிவு செய்தனர். அதன்படி அங்கு உள்ள தோட்ட ங்களில் செடிகளு க்கு இடையே நீண்ட கம்பிகள் கட்டப்பட்டு வருகின்றன.

    இதன்மூலம் அங்கு வளரும் செடிகள் மழையில் சரிந்து விழுவதை தடுக்க முடியும். தக்காளி பழங்கள் உதிர்ந்து கீழே விழுந்து அழுகி வீணாவதையும் தடுக்க இயலும்.

    பொள்ளாச்சி தாலுகாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள தக்காளி தோட்டங்களில் செடிக ளுக்கு கம்பி கட்டும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    கோவை மாவட்டத்தில் தற்போது நாட்டு தக்காளி சாகுபடி தொடங்கி நடந்து வருகிறது. இதனால் அங்கு செடிகள் முளைத்து காய் காய்க்க தொடங்கி உள்ளன. அவை பழங்களாக கனிவதற்கு சிறிது காலம் பிடிக்கும்.

    எனவே பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு நாட்டு தக்காளிவரத்து மிகவும் குறைவாக இருந்து வருகிறது. இதனால் அங்கு உள்ள காய்கறி சந்தைகளில் தற்போது தக்காளி விலை கிலோவுக்கு ரூ.100 ஆக அதிகரித்து உள்ளது. அங்கு 14 கிலோ அடங்கிய பெட்டி, ரூ.1400-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    பொள்ளாச்சியில் தக்காளி சாகுபடி பெரியளவில் தொடங்கவில்லை. எனவே மார்க்கெட்டுக்கு வரத்து மிகவும் குறைவாக உள்ளது. இதனால் காய்கறி சந்தைகளில் நாட்டு தக்காளியின் விலை அதிகரித்து வருகிறது.

    பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி அறுவடை பணிகள் தொடங்கினால் மார்க்கெட்டுக்கு வரத்து கூடுதலாக இருக்கும். அப்போது தக்காளியின் விலை குறைய வாய்ப்பு உள்ளது என்று காய்கறி சந்தை வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

    • கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
    • 4 மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது.

    உடுமலை :

    பி.ஏ.பி., 4வது சுற்று பாசன பகுதியில் தண்ணீர் விரைவில் திறக்கப்பட உள்ளதால் கிளை பகிர்மான வாய்க்கால்களில் செடி கொடிகளை அகற்றும் பணி தீவிரமாக நடக்கிறது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி அணை மூலம் பிஏபி. பாசனத்தில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மொத்தம் சுமார் 4 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. 4 மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது.

    தற்போது மூன்றாவது மண்டல பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. மொத்தம் 4 சுற்றுகள் தண்ணீர் விடப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி மூன்றாவது சுற்று இன்னும் ஓரிரு நாட்களில் நிறைவடைய உள்ளது. இதை தொடர்ந்து நான்காவது சுற்றுக்கு விரைவில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதனையொட்டி நான்காவது சுற்று பாசனப்பகுதி உள்ள கிளை வாய்க்கால்கள் பகிர்மான கால்வாய்களில் படர்ந்து கிடக்கும் செடி கொடிகளை அகற்றும் பணி தீவிரமாக நடக்கிறது. மேலும் வாய்க்கால் ஷட்டர்களில் கிரீஸ் தடவும் பணியும் நடக்கிறது. இதன் மூலம் கடைமடை பகுதி வரை தண்ணீர் விரைவாக சென்றடையும் என அதிகாரிகள்- விவசாயிகள் தெரிவித்தனர். இந்நிலையில் 60 அடி உயரம் கொண்ட திருமூர்த்தி அணையில் நீர்மட்டம் 41. 76 அடியாக உள்ளது. தற்போது 813 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 119 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    • 5 வகையான பழ செடிகள் அடங்கிய பழ தொகுப்பு ஆகியவை மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
    • மாடித்தோட்ட கிட் 50 சதவீதம் மானியத்தில் ரூ.750-க்கு வழங்கப்படுகிறது.

    மடத்துக்குளம் :

    வீடுகளில் மூலிகைத்தோட்டம் அமைக்க மாடித்தோட்டம் கிட் தோட்டக்கலைத்துறை சார்பில் மானிய விலையில் வழங்கப்படுகிறது. இது குறித்து மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் கூறியதாவது :- மடத்துக்குளம் வட்டாரத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் காய்கறி விதைகள் அடங்கிய விதைத்தொகுப்பு, 5 வகையான பழ செடிகள் அடங்கிய பழ தொகுப்பு ஆகியவை மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் தற்போது மூலிகை தோட்டம் அமைக்க 10 வகையான மூலிகை செடிகள் அடங்கிய மாடித்தோட்ட கிட் மானிய விலையில் வழங்கப்படுகிறது.

    தூய்மையான காற்றை சுவாசிக்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் நாட்டு மருத்துவத்தை ஊக்குவிக்கும் வகையிலும், மருத்துவ தாவரங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் அழிந்து வரும் மருத்துவ தாவரங்களை பாதுகாக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    மாநில தோட்டக்கலை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் நடப்பாண்டு வீடுகளில் மூலிகை தோட்டம் அமைக்க, தமிழக அரசு தோட்டக்கலைத்துறை வாயிலாக 10 வகையான மூலிகைச்செடிகள் அடங்கிய மாடித்தோட்ட கிட் 50 சதவீதம் மானியத்தில் ரூ.750-க்கு வழங்கப்படுகிறது.இதில் வழங்கப்படும் துளசி, இருமல், சளி, வயிற்றுப்புழு நீக்கம் உள்ளிட்ட பயன்பாட்டிற்கும், கற்பூரவல்லி, சளி, இருமல், ஆஸ்துமா, வயிற்றுப்புண், அஜீரணப் பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.திருநீற்றுப்பச்சை, வயிறு தொடர்பான நோய்களுக்கு சுவையின்மை, வாந்தி, குடல் புண் ஆகியவற்றை போக்குகிறது.ஆடாதொடை, இருமல், சளி, தொண்டைக்கட்டு, இளைப்பு, வாந்தி, விக்கல் ஆகிய நோய்களுக்கு தீர்வாகவும், வல்லாரை, நினைவாற்றலைப்பெருக்கவும், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.திப்பிலி, இருமல், இரைப்பு அனாமிகா, சுவையின்மை பொருமல், தலைவலி, நீரேற்றம், தொண்டை நோய்கள் நீங்கும்.

    அமுக்கிராக்கிழங்கு, பசியை உண்டாக்குதல், தோல் நோய்கள் ஆகியவற்றுக்கும், பிரண்டை, வயிற்றுப்புண்ணை ஆற்றும். பசியை உண்டாக்கும். எலும்புகளை வலுப்பெறச்செய்யும் திறன் உள்ளதாகும். கற்றாழை, குடல் புண்ணை ஆற்றவும், மூலம் பவுத்திரம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வாகவும், கீழாநெல்லி, சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும், நாக்கு வறட்சி, தாகம் ஆகியவற்றை போக்கும் மருந்தாக சித்தமருத்துவத்தில் பயன்படுகிறது.இவ்வாறு 10 வகையான மூலிகைத்தோட்ட தொகுப்பில் ஒவ்வொரு வகையில் தலா 2,10 செடி வளர்ப்பு பைகள், 10 தென்னை நார் கட்டிகள், மண் புழு உரம், 4 கிலோ மற்றும் தொழில் நுட்ப புத்தகம் வழங்கப்படுகிறது.நிலப்பகுதி மற்றும் வீடுகளிலுள்ள மாடிப்பகுதியில் மூலிகைத்தோட்டம் அமைக்கலாம். பையில் தென்னை நார் கட்டியை வைத்து 10 லிட்டர் நீர் ஊற்ற வேண்டும்.

    ஒரு பைக்கு 400 கிராம் மண்புழு உரம் கலந்து, தென்னை நார் கழிவுடன் கலந்த உரத்தை செடிகள் வளர்ப்பதற்கான பைகளில் நிரப்பி 7 முதல் 8 நாட்கள் வைத்திருந்து ஒரு பையில் ஒரே வகையான இரண்டு மூலிகைச்செடிகள் நட வேண்டும்.பிறகு பூ வாளி கொண்டு நீர் ஊற்ற வேண்டும். கோடை காலத்தில் ஒரு நாளைக்கு இருமுறை நீரூற்ற வேண்டும்.மூலிகை தோட்ட தொகுப்பு பெற மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

    மேலும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் தாமோதரன் 96598 38787 என்ற எண்ணிலும், நித்யராஜ் 84890 95995 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்றனர். 

    • கஞ்சநாயக்கன்பட்டி பகுதி பள்ளர் காலனியை சேர்ந்தவர் இவர் வீட்டின் அருகில் கஞ்சா செடியை வளர்த்து, பராமரித்து வந்து உள்ளார்.
    • இதில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த சண்முகம் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி பகுதி பள்ளர் காலனியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 41). இவர் வீட்டின் அருகில் கஞ்சா செடியை வளர்த்து, பராமரித்து வந்து உள்ளார்.

    இதுகுறித்து கிடைத்த ரகசிய தகவலின்பேரில், தீவட்டிபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். இதில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த சண்முகம் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். 

    • சந்தைகளில் 14 கிலோ கொண்ட ஒரு கூடை தக்காளி 100 ரூபாய்க்கு கீழ் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • 1 ஏக்கர் தக்காளி சாகுபடி செய்ய ரூ.20 ஆயிரம் வரை செலவாகிறது.

    பல்லடம் :

    பல்லடம் மற்றும் பொங்கலூர் சுற்றுவட்டார பகுதிகளில் சின்ன வெங்காயத்திற்கு அடுத்தபடியாக தக்காளி விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. கடந்த சீசனில் சாகுபடி செய்யப்பட்ட தக்காளி தற்போது அறுவடைக்கு வந்துள்ள நிலையில் தக்காளிக்கு உரிய விலை கிடைக்காமல் விலை சரிந்து வந்தது. சந்தைகளில் 14 கிலோ கொண்ட ஒரு கூடை தக்காளி 100 ரூபாய்க்கு கீழ் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    சாகுபடி செலவு செய்த பணத்தை எடுக்க முடியாமலும், பறிப்புக்கூலிக்கும் வண்டி வாடகைக்கு ம்கூட கட்டுப்படியாகாத விலை கிடைத்து வருவதால், தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் அவற்றை அறுவடை செய்யாமல் செடிகளிலேயே விட்டு விடுகின்றனர். இதனால் அவை செடியிலேயே பழுத்து வீணாகி வருகிறது. இதுகுறித்து தக்காளி விவசாயிகள் கூறியதாவது: -1 ஏக்கர் தக்காளி சாகுபடி செய்ய ரூ.20 ஆயிரம் வரை செலவாகிறது. ஏக்கருக்கு 300 கிலோ மகசூல் கிடைக்கும். 1 கிலோ தக்காளி ரூ.40க்கு விற்றால் தான் விவசாயிக்கு விலை கட்டுபடியாகும். ஆனால் தற்போது தற்போது 1 கிலோ தக்காளி விவசாயிகளிடம் இருந்து ரூ.7க்கு வாங்கப்படுகிறது. டிப்பர் (14 கிலோ) ரூ.100க்கு கொள்முதலாகிறது. இந்த சூழ்நிலையில் தக்காளி வரத்தும் அதிகமாகியுள்ளது. இதனால் தக்காளி விற்பனை விலை மிகவும் சரிந்து பறிப்பு கூலி கூட கிடைக்காத நிலை உள்ளது.

    1 டிப்பர் தக்காளிக்கு அறுவடைக் கூலி ரூ. 20, வண்டி வாடகை மற்றும் சுங்கம் ரூ. 30 என ரூ .50 க்கு மேல் செலவாகிறது .இந்த நிலையில்1 டிப்பர் ரூ.90, ரூ.100க்கு தக்காளி விற்றால் எப்படி கட்டுபடியாகும். எனவே அரசு தக்காளி விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தக்காளி போன்ற காய்கறிகள் அதிக விளைச்சலின் போது உரிய பாதுகாப்பு இல்லாததால் வீணாகி வருகிறது. எனவே ஆங்காங்கே குளிர்பதனக் கிடங்குகள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பல்லடம் பகுதியில் தக்காளி ஜாம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும். இவ்வாறு தக்காளி விவசாயிகள் தெரிவித்தனர்.

    ×