search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தக்காளி பழங்கள் வீணாவதை தடுக்க செடிகளுக்கு கொடிகட்டும் விவசாயிகள்
    X

    தக்காளி பழங்கள் வீணாவதை தடுக்க செடிகளுக்கு கொடிகட்டும் விவசாயிகள்

    • தமிழகம் முழுவதும் தற்போது தக்காளி பழத்தின் விலை பெருமளவு அதிகரித்து உள்ளது.
    • தக்காளி பழங்களும் செடியில் இருந்து உதிர்ந்து கீழே விழுந்து அழுகி நாசமாகி வருகின்றன.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகாவில் உள்ள விவசாயிகள் தென்னைக்கு அடுத்தபடியாக காய்கறி சாகுபடியில் அதிகமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    அதிலும் குறிப்பாக வடக்கிபாளையம், புரவிபாளையம், ஜமீன்காளியாபுரம், பெரும்பதி, கோவிந்தனூர், மாப்பிள்ளைகவுண்டன்புதூர், சூலக்கல், நெகமம், கோமங்கலம், தேவனூார்புதூர் ஆகிய பகுதிகளில் தக்காளி செடிகள் பெருமளவில் பயிரிடப்பட்டு உள்ளது.

    தமிழகம் முழுவதும் தற்போது தக்காளி பழத்தின் விலை பெருமளவு அதிகரித்து உள்ளது. எனவே பொள்ளாச்சி தாலுகா விவசாயிகள் தக்காளி சாகுபடியில் கூடுதலாக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    கோவை மாவட்டத்தில் கோடை மழை தொடங்கியதை முன்னிட்டு விவசாயிகள் கடந்த மே மாதம் முதல் தக்காளியை பயிரிட்டு வருகின்றனர். அவை தற்போது விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன.

    இந்நிலையில் தமிழகத்தில் பலத்த காற்றுடன் கூடிய தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதன்காரணமாக அங்கு பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

    பொள்ளாச்சி பகுதியில் பருவமழை பெய்து வருவதால் அங்கு உள்ள தோட்டங்களில் தக்காளி செடிகள் மழைக்கு தாக்குபிடிக்க முடியாமல் கீழே சாய்ந்து வருகின்றன. தக்காளி பழங்களும் செடியில் இருந்து உதிர்ந்து கீழே விழுந்து அழுகி நாசமாகி வருகின்றன.

    எனவே பொள்ளாச்சி தோட்டங்களில் விளையும் தக்காளி பயிர்களை பாது காப்பது என்று விவசாயிகள் முடிவு செய்தனர். அதன்படி அங்கு உள்ள தோட்ட ங்களில் செடிகளு க்கு இடையே நீண்ட கம்பிகள் கட்டப்பட்டு வருகின்றன.

    இதன்மூலம் அங்கு வளரும் செடிகள் மழையில் சரிந்து விழுவதை தடுக்க முடியும். தக்காளி பழங்கள் உதிர்ந்து கீழே விழுந்து அழுகி வீணாவதையும் தடுக்க இயலும்.

    பொள்ளாச்சி தாலுகாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள தக்காளி தோட்டங்களில் செடிக ளுக்கு கம்பி கட்டும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    கோவை மாவட்டத்தில் தற்போது நாட்டு தக்காளி சாகுபடி தொடங்கி நடந்து வருகிறது. இதனால் அங்கு செடிகள் முளைத்து காய் காய்க்க தொடங்கி உள்ளன. அவை பழங்களாக கனிவதற்கு சிறிது காலம் பிடிக்கும்.

    எனவே பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு நாட்டு தக்காளிவரத்து மிகவும் குறைவாக இருந்து வருகிறது. இதனால் அங்கு உள்ள காய்கறி சந்தைகளில் தற்போது தக்காளி விலை கிலோவுக்கு ரூ.100 ஆக அதிகரித்து உள்ளது. அங்கு 14 கிலோ அடங்கிய பெட்டி, ரூ.1400-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    பொள்ளாச்சியில் தக்காளி சாகுபடி பெரியளவில் தொடங்கவில்லை. எனவே மார்க்கெட்டுக்கு வரத்து மிகவும் குறைவாக உள்ளது. இதனால் காய்கறி சந்தைகளில் நாட்டு தக்காளியின் விலை அதிகரித்து வருகிறது.

    பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி அறுவடை பணிகள் தொடங்கினால் மார்க்கெட்டுக்கு வரத்து கூடுதலாக இருக்கும். அப்போது தக்காளியின் விலை குறைய வாய்ப்பு உள்ளது என்று காய்கறி சந்தை வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×