search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனக்கவலை தீரும்"

    • குழந்தைகள் செய்யும் சேட்டைகளை அறியாமலேயே ரசித்துக் கொண்டு இருப்போம்.
    • குடும்ப உறவுகளுக்கு இடையே உள்ள பிணைப்பு வலுப்படும்.

    குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவது நம்முடைய உளவியல், நல்வாழ்வு மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியில் ஆழமான, நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என பல்வேறு உளவியல் ஆராய்ச்சிகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

    குழந்தைகள் செய்யும் சேட்டைகள், குறும்புத்தனம், சிரிப்பு, அழுகை என அவர்களின் செயல்பாடுகள் அனைத்தையும் நம்மை அறியாமலேயே ரசித்துக் கொண்டு இருப்போம். இந்த ரசனையே நமக்குள்ளும், நம்மைச் சுற்றியும் நேர்மறையான எண்ணங்களை தோற்றுவிக்கும். இது புதிதாக ஒரு இடத்திற்கு மேற்கொள்ளும் பயணத்தின்போது நமக்கு கிடைக்கும் அனுபவத்துக்கு இணையாக இருக்கும்.

    குழந்தைகளுடன் நேரத்தை செலவிடும்போது குடும்ப உறவுகளுக்கு இடையே உள்ள பிணைப்பு வலுப்படும். இது நீடித்த இனிமையான நினைவுகளை உருவாக்கும்.

    * பொறுமை, நன்றி உணர்வு, மகிழ்ச்சி என குழந்தைகளுடன் நேரத்தை செலவிடும்போது நமக்குள் பல நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும்.

    * குழந்தைகளுடன் விளையாடும்போது நம்முடைய பொறுப்புகளையும், கவலைகளையும் பற்றி சிந்திப்பதை தற்காலிகமாக ஒதுக்கி வைப்போம். இதன் மூலம் மன அழுத்தம் குறையும்.

    * குழந்தைகளிடம் பழகுவதற்கு பொறுமை அவசியமானது. தொடர்ந்து அவர்களிடம் பழகும்போது. காலப்போக்கில் நமக்குள் பொறுமை மற்றும் சகிப்புத் தன்மை தானாகவே உருவாகி விடும்.

    * குழந்தைகளின் உலகம் பெரும்பாலும் கற்பனை விளையாட்டு அல்லது புதிய படைப்புகளையே உள்ளடக்கி இருக்கும். அவர்களுடன் பழகுவது உங்களின் படைப்பாற்றல் மற்றும் கற்பனைத் திறனை மேம்படுத்திக் கொள்ள வழிவகுக்கும்.

    * குழந்தைகளுடன் தொடர்புகொள்வது, நம் முடைய தகவல்தொடர்பு திறன்களை மேம்படுத்தும். அதன்மூலம் மற்றவர்கள் கூறுவதை சரியாக புரிந்து கொள்ளவும், உங்களுடைய கருத்துக்களை மற்றவர்களுக்கு தெளிவாக விளக்கவும். மற்றவர்கள் பேசுவதை கவனமாக கேட்கவும் முடியும்.

    * குழந்தைகளுடன் பழகி அவர்களின் உணர்ச்சிகள் மற்றும் தேவைகளை புரிந்துகொள்வது, உங்களுடைய இரக்க குணத்தை மேம்படுத்தும்.

    * படம் வரைவது. இசைக்கருவிகளை வாசிப்பது. விளையாடுவது என குழந்தைகளுடன் பலவிதமான செயல்பாடுகளில் ஈடுபடலாம். இது நமக்கான புதிய பொழுதுபோக்கை கண்டறியவும், நம்முடைய பழைய திறன்களையும், ஆர்வத்தையும் புதுப்பிக்கவும் உதவும்.

    * குழந்தைகளுக்கான தேவைகள் மற்றும் அவர் கள் எதிர்கொள்ளும் சவால்களை கையாள்வதன் மூலம். நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் சிக்கலை தீர்க்கும் திறனை மேம்படுத்த முடியும். எந்த ஒரு சூழ்நிலையிலும் மாற்றி யோசித்து தீர்வு காணும் திறன் உருவாகும்.

    * வாழ்வில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று குழந்தைகளுக்கு நாம் வழிகாட்டுவதன் மூலம். நம்முடைய தலைமைத் திறனை மேம்படுத்திக்கொள்ள முடியும்.

    * தற்போதைய தொழில்நுட்பக் கருவிகளை கையாள்வதில் பெரும்பாலான குழந்தைகள் பெரியவர்களை விட சிறந்து விளங்குகிறார்கள். அவர்களுடன் நேரத்தை செலவிடுவதன் மூலம், பல புதிய விஷயங்களை அறிந்துகொள்ள முடியும்.

    * குழந்தைகள் இந்த உலகை புதிய கண்ணோட்டத்துடன் பார்ப்பார்கள். அவர்களுடன் பழகும்போது நமக்கும் அனைத்து விஷயங்களையும் வேறுபட்ட கண்ணோட்டத்தில் அணுகக்கூடிய திறன் உண்டாகும்

    • துளசி திருமாலுக்கு மிகவும் உகந்த ஒருவகைச் செடியின் இலையாகும்.
    • துளசி ஊறிய புனித நீரும் நல்ல மருந்தாகிறது.

    துளசி திருமாலுக்கு மிகவும் உகந்த ஒருவகைச் செடியின் இலையாகும். துள+சி எனப் பிரித்து ஒப்பில்லாத செடி என இதனைக் கூறுவர். "திருத்துழாய்" என்று அழைக்கப்படும் துளசியைத்தான் பிரசாதமாக வழங்குகிறார்கள். செம்புப் பாத்திரத்தில் நல்ல சுத்தமான நீரை ஊற்றி அதில் துளசியை இட்டு வைத்திருப்பார்கள். இதைத்தான் தீர்த்தமாக வழங்குவார்கள். துளசி ஊறிய புனித நீரும் நல்ல மருந்தாகிறது. இதனால் மனம்கூட நல்ல தூய்மை பெறும்.

    துளசியை கார்த்திகை பவுர்ணமியில் பூஜிக்க எல்லா சித்திகளும் ஏற்படும். எப்போதும் தர்மம் செய்யும்போது ஒரு துளசி இலை வைத்தே தானம் செய்ய வேண்டும் என தர்மசாஸ்திரம் கூறுகிறது. பொருளைவிட துளசி மேன்மையானதால் துளசிதானம் கொடுக்கப்படுகிறது என்றே கூறுவர்.

    துளசி தீர்த்தம் வயிறை சுத்திகரித்து ரணம் ஏற்பட வழி செய்யும். மரணப் படுக்கையில் இருப்பவர்க்கு துளசித் தீர்த்தம் கொடுக்க, விஷ்ணு லோகம் போக வாய்ப்பு கிடைக்கும் என்பர். துளசிக்கு சமஸ்கிருதத்தில் 'பிருந்தா' எனப்பெயர். காடு போல் துளசி வளர்ந்திருக்கும் தலத்திற்கு பிருந்தாவனம் எனப்பெயர். இதனால்தான் துளசிக் காடாகிய பிருந்தாவனம் ராமருக்குரிய விருப்பமான தலமானது.

    பூஜைக்குப் பூக்களை அர்ப்பணிக்கும் போது அன்று பூத்த மலர்களையே கீழே உதிர்வதற்கு முன்பிருக்கும் நிலையில் பறித்து பயன்படுத்த வேண்டும் என்பது நியதி. இதனால் பழைய பூ, புதிய பூ என்ற வேறுபாடுகள் உள்ளன. ஆனால் பூஜைக்குரிய துளசியில் இம்மாதிரியான நிலைகள் இல்லை. எப்போதும் புதிய நிலையைக் கொண்டது துளசி. எனவே பூஜைக்கு எப்போதும் உகந்ததாகத் துளசி கருதப்படுகிறது. புரட்டாசி மாதம் முழுவதும் தினமும் வழிபாட்டுக்கு துளசி பயன்படுத்துவது மிக, மிக நல்லது.

    பெண்கள் சுமங்கலிகளாக வாழ துளசி பூஜை முக்கியமாகும். வீட்டில் துளசி மாடம் அமைத்து அதற்கு விளக்கேற்றி, காலை, மாலை பூஜை செய்து மாடத்தினை வலம் வந்து வணங்க வேண்டும். துளசி மாடத்தை பூஜிக்க வேறு துளசியில் இருந்தே தழைகள் பறிக்க வேண்டும். கோவில்களில் துளசியைப் பிரசாதமாகக் கொடுத்தால் ஒரு தழையை காதில் வைத்துக் கொள்ள வேண்டும். "யார் துளசி பத்திரம் கொண்டு வருகிறானோ அவனுடன் நானும் ஓடி வருகிறேன்" என்றார் பகவான்.

    துளசிச் செடிகள் அதிகமாக இருக்கின்ற வீடு மிக புனிதம் உடையதாவதால் யமகிங்கரர்கள் அங்கு வர மாட்டார்கள். நர்மதை நதியின் தரிசனம், கங்கையில் குளியல் துளசி தள ஸ்பரிசம் இம்மூன்றும் துளசிக்கு சமமானவை.

    திருமணத் தடைகள் ஏற்பட்டு மன அமைதி இழப்போர், மன அமைதியற்றவர்கள், செல்வம் நிறைய அளவில் இருந்தும் நற்பணிகளைச் செய்ய முடியாத நிலையில் உள்ளோர், நல்ல எண்ணங்கள் கைகூட வேண்டுமென்று முயலுவோர், சமய பேதம் சிறிதுமின்றித் திங்கட்கிழமை தோறும் அதிகாலையில் நீராடி தூய ஆடை அணிந்து, தூய மனத்தினராய், தொட்டாற் சிணுங்கியையும் துளசியையும் ஒன்றாக வைத்து வளர்த்து வரும் தொட்டியைக் கொண்டு வந்து அதற்கு அலங்காரம் செய்ய வேண்டும். தூப தீபம் காட்ட வேண்டும், கற்பூரம் ஏற்றி வழிபட வேண்டும், பழம் ஏதேனும் வைத்து வழிபட வேண்டும். இவ்விதமாக வழிபடும்போது இருபத்தியொருமுறை அந்தத் தொட்டியைச் சுற்றி வந்து வணங்க வேண்டும் இவ்விதம் தொடர்ந்து வழிபட்டு வந்தால் நாலாவது வார இறுதியில் நல்ல பலன்களைப் பெற்று சிறப்படையலாம்.

    ×