search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்லோகம்"

    • அம்மனை ஆடி மாதம் விரதம் இருந்து வழிபட்டால் துன்பங்கள் பறந்தோடும்.
    • ஆடி மாதம் இந்த போற்றியை சொன்னால் திருமண தடைகள் விலகி சுபம் உண்டாகும்.

    ஓம் அன்னையே போற்றி

    ஓம் அன்னை மாரியே போற்றி

    ஓம் அக்கினி சட்டி வளர்ந்தாய் போற்றி

    ஓம் அகிலம் ஆண்ட ஈஸ்வரியே போற்றி

    ஓம் அம்மை முத்தின் மூலமே போற்றி

    ஓம் அபிராமி அன்னையே போற்றி

    ஓம் அஷ்டலட்சுமியும் நீயே போற்றி

    ஓம் ஆயிரம் கண்ணுடை போற்றி

    ஓம் ஆதியின் பாதியே போற்றி

    ஓம் ஆதிபராசக்தியே போற்றி

    ஓம் ஆறுமுகன் அன்னையே போற்றி

    ஓம் இமயத்தரசியே போற்றி

    ஓம் இளநீர்ப் பிரியை போற்றி

    ஓம் ஈஸ்வரன் துணைவி போற்றி

    ஓம் ஊஞ்சல் விழா உமையே போற்றி

    ஓம் ஊத்துக்காடு அன்னையே போற்றி

    ஓம் ஊழ்வினை ஒழிப்பாய் போற்றி

    ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி

    ஓம் ஐயப்பன் மாதா போற்றி

    ஓம் ஓங்காரப்பெருமாளே போற்றி

    ஓம் கனக துர்க்கா போற்றி

    ஓம் கன்னி வல்லித்தாயே போற்றி

    ஓம் கன்னிகா பரமேஸ்வரி போற்றி

    ஓம் கருமாரித்தாயே போற்றி

    ஓம் கங்கா தேவி தாயே போற்றி

    ஓம் கன்னியாகுமரியே போற்றி

    ஓம் கற்பூர நாயகியே போற்றி

    ஓம் கண்ணின் மணியே போற்றி

    ஓம் கன்னபுரத்தாளே போற்றி

    ஓம் கலைமகளும் நீயே போற்றி

    ஓம் கரகத்தழகியே போற்றி

    ஓம் காத்யாயன்யளே போற்றி

    ஓம் காயத்திரி தேவி நீ போற்றி

    ஓம் காசி விசாலாட்சி போற்றி

    ஓம் காவல் தெய்வமே போற்றி

    ஓம் குங்கும அர்ச்சனை பிரியை போற்றி

    ஓம் கூஷ்மாண்டினி தேவியே போற்றி

    ஓம் காஞ்சி காமாட்சி போற்றி

    ஓம் கோட்டை மாரி போற்றி

    ஓம் கோபிநாதன் தங்காய் போற்றி

    ஓம் கவுமாரி கவுரி போற்றி

    ஓம் சமயபுர சக்தி போற்றி

    ஓம் சங்கரன் துணைவி போற்றி

    ஓம் சர்வேஸ்வரி போற்றி

    ஓம் சந்திரகண்டினி போற்றி

    ஓம் சாம்பிராணி வாசகி போற்றி

    ஓம் சாமுண்டீஸ்வரி போற்றி

    ஓம் சிவகாம சுந்தரி போற்றி

    ஓம் சவுபாக்கியம் அருள்வாய் போற்றி

    ஓம் கொடியேற்றம் விழைவாய் போற்றி

    ஓம் ஞானப் பிரசன்னாம்பிகை போற்றி

    ஓம் தட்சிணி தேவி போற்றி

    ஓம் தண்டினி தேவி போற்றி

    ஓம் தாழங்குறைக்கூடை தழைப்பாய் போற்றி

    ஓம் திண்டி நகருறை தேவி போற்றி

    ஓம் திருவிளக்கின் ஒளியே போற்றி

    ஓம் திரிபுர சுந்தரியே போற்றி

    ஓம் திருமகள் உருவே போற்றி

    ஓம் திருமாலழகன் தங்காய் போற்றி

    ஓம் துர்க்கையும் நீயே போற்றி

    ஓம் துலக்கணத்தீஸ்வரி போற்றி

    ஓம் தெப்போற்சவம் விழைந்தனை போற்றி

    ஓம் நல்லமுத்துமாரி போற்றி

    ஓம் நவகாளி அம்மா போற்றி

    ஓம் நவதுர்க்கா தேவியே போற்றி

    ஓம் நாரணார் தங்காய் போற்றி

    ஓம் நாககுடைக்கொள் நாயகியே போற்றி

    ஓம் நான்முகி போற்றி

    ஓம் நாராயிணி போற்றி

    ஓம் நீலிகபாலி போற்றி

    ஓம் பர்வதபுத்திரி போற்றி

    ஓம் நீலாம்பிகை போற்றி

    ஓம் பவானி தேவி போற்றி

    ஓம் பாகம் பிரியா பராபரை போற்றி

    ஓம் பவளவாய் கிளியே போற்றி

    ஓம் பல்லுயிரின் தாயே போற்றி

    ஓம் பாம்புரு ஆனாய் போற்றி

    ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி

    ஓம் பிரம்மராம்பிகை போற்றி

    ஓம் புவனேஸ்வரி போற்றி

    ஓம் பூச்சொறிதல் பெற்றனை போற்றி

    ஓம் பெரியபாளையத்தம்மை போற்றி

    ஓம் மணிமந்தர சேகரி போற்றி

    ஓம் மஹேஸ்வரி போற்றி

    ஓம் மங்கள ரூபணி போற்றி

    ஓம் மஞ்சள் நீராடல் மகிழ்ந்தனை போற்றி

    ஓம் மகிஷா சூரமர்த்தினி போற்றி

    ஓம் மஞ்சள் மாதா போற்றி

    ஓம் மாளி மகமாயி போற்றி

    ஓம் மாங்கல்யம் காப்பாய் போற்றி

    ஓம் மாங்காடு போற்றி

    ஓம் மாசி விழா மாதா போற்றி

    ஓம் மாவிளக்குப் பிரியை போற்றி

    ஓம் மீனாட்சித் தாயே போற்றி

    ஓம் முண்டினி தேவி போற்றி

    ஓம் முனையொளி சூலி போற்றி

    ஓம் முக்கண்ணி போற்றி

    ஓம் முக்கோண சக்கர மூலமே போற்றி

    ஓம் மூகாம்பிகையே போற்றி

    ஓம் ராஜராஜேஸ்வரி போற்றி

    ஓம் லலிதாம்பிகை போற்றி

    ஓம் வஜ்ரமணித்தேராள் போற்றி

    ஓம் வளம் சேர்க்கும் தாயே போற்றி

    ஓம் விராட் புரவி மலி போற்றி

    ஓம் விஷ்ணு துர்க்கா போற்றி

    ஓம் வேப்பம்பால் உண்டவளே போற்றி

    ஓம் வேப்பிலைக்காரியே போற்றி

    ஓம் வேலவனுக்கு வேல் தந்த வித்தகி போற்றி.

    • அருணகிரி நாதரின் இந்த இரண்டு பாடல்களை நாள்தோறும் பாராயணம் செய்யுங்கள்
    • அருணகிரிநாதரின் அந்தப் பாடல்கள்:-

    திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் சொன்னது; அவர் தினந்தோறும் பூஜையில் சொன்னது; "அருணகிரி நாதரின் இந்த இரண்டு பாடல்களை நாள்தோறும் பாராயணம் செய்யுங்கள்! மன சஞ்சலம் தீரும்! அமைதியை அருள்வார் ஆறுமுகன்" என்பார். அருணகிரிநாதரின் அந்தப் பாடல்கள்:-

    1)எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ!

    சிந்தாகுலம் ஆனவை தீர்த்தெனையாள்!

    கந்தா! கதிர் வேலவனே! உமையாள்

    மைந்தா! குமரா! மறை நாயகனே! (கந்தர் அனுபூதி)

    2)அதிருங்கழல் பணிந்துன் அடியேனும்

    அபயம் புகுவதென்று நிலை காண

    இதயந் தனிலிருந்து க்ருபையாகி

    இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே!

    எதிரங்கொருவர் இன்றி நடமாடும்

    இறைவன் தனது பங்கின் உமை பாலா!

    பதியெங்கிலும் இருந்து விளையாடி

    பல குன்றிலும் அமர்ந்த பெருமாளே - திருப்புகழ்

    (இதயந்தனில் இருந்து கிருபையாகி இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே-என்று நிறைவு செய்யவும்)

    • மலைமகளான பார்வதி தேவியை போற்றி இயற்றப்பட்ட துதி இது.
    • அம்மன் கோவிலுக்கு சென்று இந்த திதியை பாடி வழிபட வேண்டும்.

    அம்மனுக்கு உகந்த இந்த துதியை தினமும் காலையில் பாடி வந்தால் குடும்பத்தில் இருப்பவர்களிடம் ஏற்பட்டிருக்கும் கருத்துவேறுபாடுகள் மற்றும் மனக்கசப்புகள் நீங்கும்.

    அழகிய மதுரையில் மீனாட்சி

    அகிலம்போற்றும் அன்னை அரசாட்சி

    நான்மாடக் கூடலிலே அருளாட்சி

    தேன்மொழி தேவியின் தேனாட்சி

    சங்கம் முழங்கிடும் நகரிலே

    சங்கரி மீனாளின் கருணையிலே

    மீன்கொடி பறக்கும் மதுரையிலே

    வான்புகழ் கொண்டாள் தாயவளே

    அன்பர்கள் மனமெல்லாம் நிறைந்திருப்பாள்

    ஆதிசிவன் அருகில் அமர்ந்திருப்பாள்

    வைரமணி மகுடம் அணிந்திருப்பாள்

    கருணையுடன் நம்மை காத்து நிற்பாள்

    முத்து பவளம் மரகத மாணிக்கம்

    பொன் ஆபரணம் பூண்டாள்

    சக்தி மனோகரி சந்தர கலாதரி

    தென் மதுராபுரி ஆண்டாள்

    சித்திரை மாதம் தேவி மீனாட்சி

    சொக்க நாதரை மணந்தாள்

    பக்தர்கள் மனமும் பரவசம் பொங்கிட

    அற்புத லீலைகள் புரிந்தாள்

    மலைமகளான பார்வதி தேவியை போற்றி இயற்றப்பட்ட துதி இது. இந்த பாடலை அனைத்து நாட்களிலும் பாடி வழிபடலாம் என்றாலும் வெள்ளிக்கிழமைகளில் காலையில் குளித்து முடித்தவுடன், அருகிலிருக்கும் ஏதேனும் அம்மன் கோவிலுக்கு சென்று இந்த திதியை பாடி வழிபட வேண்டும். இதனால் குடும்பத்தில் இருப்பவர்களிடம் ஏற்பட்டிருக்கும் கருத்துவேறுபாடுகள் மற்றும் மனக்கசப்புகள் நீங்கும். அதிலும் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட அனைத்து விதமான பிரச்சனைகள் நீங்கும். பிரிந்திருந்த தம்பதிகளும் ஒன்று சேருவார்கள்.

    இந்த பாடலை தினமும் சொல்லி அம்மனை வழிபாடு செய்து வந்தால் அனைத்து பிரச்சனைகளும் படிப்படியாக தீரும்.

    • திருக்கடையூர் என்றதும் நம் நினைவுக்கு வருபவள் ஸ்ரீஅபிராமி அன்னை.
    • அபிராமி அந்தாதியை முழுவதுமாகச் சொல்ல இயலாத நிலையில் இந்த பாடலை பாடலாம்

    அபிராமி அதிருக்கடையூர் என்றதும் நம் நினைவுக்கு வருபவள் ஸ்ரீஅபிராமி அன்னை. ந்தாதியை முழுவதுமாகச் சொல்ல இயலாத நிலையில், அப்படியான தருணத்தில், அபிராமி பட்டர் அருளிய இந்தப் பாடலை அபிராமி அந்தாதி சொன்ன பலன்களைப் பெறலாம் என்று தெரிவிக்கிறார்கள் சிவாச்சார்யர்கள்.

    கருணையும் கனிவுமாக ஆட்சி நடத்தும் அபிராமி அம்பாளை நினைக்கும் போதே, அபிராமி அந்தாதியையும் அந்தாதியைத் தந்த அபிராமிபட்டரையும் நினைத்துப் பூரிப்போம்.

    மயிலாடுதுறைக்கு அருகில், பூம்புகாருக்கு அருகில் அமைந்துள்ளது திருக்கடையூர். இந்தத் தலத்தின் இறைவன் ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர். மார்க்கண்டேயனுக்கு ஆயுள் பலம் தந்த ஒப்பற்ற திருத்தலம். எமனின் பாசக்கயிறையே வென்றெடுத்த புண்ணிய க்ஷேத்திரம்.

    அதனால்தான் திருக்கடையூர் தலத்துக்கு வந்து, அமிர்தகடேஸ்வரரையும் அபிராமி அன்னையையும் மனதார வணங்கிச் சென்றால் ஆயுள் பலம் கூடும் என்பது ஐதீகம்.

    அதுமட்டுமா? திருக்கடையூர் திருத்தலத்தில் சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் முதலான வைபவங்களை, ஆலயத்தில் செய்துகொள்வது ரொம்பவே விசேஷமானது. இப்படி அறுபதாம் கல்யாணம், பீமரதசாந்தி, சதாபிஷேகம் என விசேஷங்களைச் செய்யும் ஆலயங்கள் மிக மிகக் குறைவு. அப்படியான தலங்களில் ஒன்றானதும் மிக முக்கியமானதுமான திருத்தலம் திருக்கடையூர் என்று போற்றப்படுகிறது.

    அபிராமி பட்டர் அவதரித்த பூமி இது. இவர் அருளிய அபிராமி அந்தாதியை பாராயணம் செய்வதும் பாராயணம் செய்து சிவ வழிபாடு செய்வதும் தம்பதி இடையே ஒற்றுமையை பலப்படுத்தும். குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் நிலைக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

    அதேசமயம், அபிராமி அந்தாதியை முழுவதுமாகச் சொல்ல இயலாத நிலையில், அப்படியான தருணத்தில், அபிராமி பட்டர் அருளிய இந்தப் பாடலை அபிராமி அந்தாதி சொன்ன பலன்களைப் பெறலாம் என்று தெரிவிக்கிறார்கள் சிவாச்சார்யர்கள்.

    அபிராமி அந்தாதிக்கு இணையான அந்தப் பாடல்...

    சகல செல்வங்களும் தரும் இமய கிரி ராச தனயை

    மா தேவி நின்னை சத்தியமாய் நித்தியம் உள்ளத்தில்

    துதிக்கும் உத்தமருக்கு இரங்கி மிகவும்

    அகிலமதில் நோயின்மை கல்வி, தன தானியம்

    அழகு, புகழ் பெருமை, இளமை, அறிவு, சந்தானம், வலி

    துணிவு , வாழ்நாள், வெற்றி ஆகு நல்லூழ், நுகர்ச்சி

    தொகை தரும் பதினாறு பேறும் தந்தருளி, நீ சுக ஆனந்த

    வாழ்வு அளிப்பாய்; சுகிர்த குணசாலி, பரிபாலி அநுகூலி

    திரிசூலி, மங்கல விசாலி

    மகவு நான் நீ தாய் அளிக்க ஓணாதோ? மகிமை வளர் திருக்

    கடவூரில் வாழ் வாமி சுப நேமி புகழ் நாமி

    சிவ சாமிமகிழ் வாமி அபிராமி உமையே!

    எனும் பாடலை 11 முறை சொல்லுங்கள்.

    வீட்டில் விளக்கேற்றி தம்பதியாகவோ தனியாகவோ அமர்ந்தும் இந்தப் பாடலைச் சொல்லி வழிபடலாம். அல்லது அருகில் உள்ள சிவ ஸ்தலத்துக்குச் சென்று சிவனாரையும் அம்மையையும் தரிசிக்கும் போதும் சொல்லி வழிபடலாம்.

    • சூரிய நமஸ்காரத்துடன் ஒவ்வொரு நாளையும் தொடங்குவோம்.
    • சூரியனை நினைத்து விளக்கேற்றுவோம்.

    பிரபஞ்சத்தில் சூரிய சக்தி அளப்பரியது. இயற்கையான சூரியனை வணங்குவதும் வழிபடுவதும் சாலச்சிறந்தது என்கிறார்கள் முன்னோர்கள்.

    வருடந்தோறும் பொங்கல் பண்டிகை கொண்டாடுகிறோம். கிட்டத்தட்ட அது சூரியனுக்கு நாம் செலுத்தும் வணக்கம். அதேபோல, வருடம் 365 நாளும் சூரிய வணக்கம் செய்வதும் சூரிய பகவானை வணங்குவதும் நம்மையும் நம் இல்லத்தையும் செழிப்பாக்கவல்லது.

    எந்த பூஜை செய்வதாக இருந்தாலும் முதலில் பிள்ளையாரை வணங்குகிறோம்தானே. அதேபோல, ஒவ்வொருநாளும் சூரியனைப் பார்த்து நமஸ்கரிக்கவேண்டும் என்கிறது சாஸ்திரம்.

    இந்த ஞாயிறு நாளில், நம் முதல் வணக்கம், சூரிய பகவானுக்கு என இருக்கட்டும். சூரிய பகவானை கிழக்கு நோக்கி தரிசிப்போம். இந்த உலகத்துக்காகவும் உலக மக்களுக்காகவும் பிரார்த்திப்போம்.

    கிழக்கு நோக்கி நிற்பதும் அமர்வதும் அமர்ந்து சாப்பிடுவதும் உன்னதமான விஷயங்கள். கிழக்கு என்பது விடியலின் குறியீடாகியிருக்கிறது. கிழக்கில் உதிக்கும் சூரிய பகவானும் நம் வாழ்வின் விடியலுக்கான வரப்பிரசாதி.

    எனவே, சூரிய நமஸ்காரத்துடன் ஒவ்வொரு நாளையும் தொடங்குவோம். ஞாயிறு நாளில், சூரிய நமஸ்காரம் செய்வோம். சூரியனை நினைத்து விளக்கேற்றுவோம். ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகங்களைப் பாராயணம் செய்வோம்.

    இயலாதவர்கள், ஆதித்ய ஹ்ருதயத்தை காதாரக் கேட்பதே பலம் சேர்க்கும். வலு கொடுக்கும். வளமாக்கும்.

    ஆதித்ய ஹ்ருதயம் சொல்லச் சொல்ல, கேட்கக் கேட்க, தீய சக்திகளின் தாக்கம் குறையும். நல்ல நல்ல கதிர்வீச்சுகள் நம்மைச் சூழும். அரணெனக் காக்கும். ஆயுள் பலம் தந்தருளும். செய்யும் காரியங்கள் யாவும் வீரியமாகும்.

    • தினமும் மகாலக்ஷ்மியின் மூல மந்திரத்தை சொல்லி வழிபடலாம்.
    • தினமும் 11 முறை அல்லது 16 முறை சொல்லலாம்.

    வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு உரிய நாள். விரதம் இருந்து சக்தியை வணங்க வேண்டிய அற்புதமான நாள். அதனால்தான் வெள்ளிக்கிழமையை, மங்கலகரமான செயல்களில் ஈடுபடுத்திக் கொண்டு அம்பிகையைக் கொண்டாடுகிறோம்.

    வெள்ளிக்கிழமை என்றில்லாமல், தினமும் மகாலக்ஷ்மியின் மூல மந்திரத்தை சொல்லி வழிபடலாம்.

    வீட்டில் விளக்கேற்றுங்கள். அம்பாளுக்கு செந்நிற மலர்கள் சூட்டி அலங்காரம் செய்யுங்கள்.

    ஓம் ஸ்ரீம் க்லீம் மஹாலக்ஷ்மி

    மஹாலக்ஷ்மி ஏய்யேஹி

    ஏய்யேஹி சர்வ

    ஸௌபாக்யம் மே தேஹி ஸ்வாஹா

    எனும் மந்திரத்தைச் சொல்லுங்கள்.

    இதேபோல்,

    ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் கமலே

    கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத

    ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்

    ஓம் மஹாலக்ஷ்ம்யை நம;

    என்கிற மந்திரத்தைச் சொல்லுங்கள்.

    அம்பாள் படத்துக்கு சந்தனம் குங்குமம் இட்டுக் கொள்ளுங்கள். கோலமிடுங்கள். நெய் தீபமேற்றுங்கள்.

    அம்பாள் படத்துக்கு முன்னே, கண்கள் மூடி அமர்ந்து, இந்த மந்திரங்களைச் சொல்லுங்கள். தினமும் 11 முறை அல்லது 16 முறை சொல்லலாம். 108 முறையும் சொல்லலாம். அப்போது குங்குமம் கொண்டும் அர்ச்சிக்கலாம். இன்னும் விசேஷம். மாங்கல்ய பலம் கிடைக்கப் பெறுவீர்கள்.

    • ஜாதகத்தில் நான்கு திசைகள் நடக்கின்ற பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
    • பொன், பொருள் இவற்றிற்கு அதிபதியாக இருப்பவர்கள் சுக்கிரன் மற்றும் குரு.

    மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து அந்த காசை சிறுக சிறுக சேமித்து வைத்து, அதிலிருந்து சிறு தொகையை எடுத்து ஒரு பொருளை வாங்கி வைத்திருப்போம். ஆனால் அதையும் அடகு வைக்கும் நிலைமை வரும் பொழுது நமது மனதிற்குள் ஏற்படும் மனக் குமுறல்களை சொல்வதற்கு வார்த்தையே கிடையாது. இவ்வாறு ஒவ்வொரு வீட்டிலும் இருக்கின்ற பெண்கள் இந்த வேதனையை அனுபவிக்கிறார்கள்.

    நகையை அடகு வைப்பதாக இருந்தால் அதற்கான சரியான காரணம் இருந்தால் மட்டுமே அடகு வைக்க வேண்டும். ஏனென்றால் ஜோதிடத்தின் படி பொன், பொருள் இவற்றிற்கு அதிபதியாக இருப்பவர்கள் சுக்கிரன் மற்றும் குரு. இவர்களுடைய ஸ்தானம் ஜாதகத்தில் பாதகமாக இருந்தது என்றால் அந்த நேரத்தில் நகையை அடகு வைக்க வேண்டிய நிலைமை உண்டாகும். இவற்றை அறிந்து கொள்ள நம்மை நாமே சற்று கவனமாக சிந்திக்க வேண்டும். அதிகமாகக் கோபப்படுவது, குழப்பம் அடைவது, அதிக ஆசை கொள்வது, வருகின்ற கோபம் உச்சத்தை அடைவது இவ்வாறான வெளிப்பாடுகள் இருந்தது என்றால் அது நமது ஜாதகத்தில் சரியான நிலைமை இல்லை என்பதை தெரிந்து கொள்வதாக அமைகிறது.

    ஜாதகத்தில் நான்கு திசைகள் நடக்கின்ற பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முதலாவதாக ராகு திசை நடக்கிற பொழுது நகையை வைத்து ஏதேனும் தொழிலில் முதலீடு செலுத்துவதாக இருந்தால் அந்தப் பணம் விரையம் தான் ஆகும். இரண்டாவதாக குரு திசை நடக்கின்ற பொழுது அடகு வைக்கின்ற நகை நூற்றுக்கு 70 சதவிகிதம் மறுபடியும் நமது கைக்கு வராமல் போய்விடும்.

    அவ்வாறு நூற்றுக்கு 70 சதவீதம் சுக்ர திசை நடப்பவர்களுக்கும், நூற்றுக்கு ஐம்பது சதவிகிதம் கேது திசை நடப்பவர்களும் பாதிப்பு ஏற்படும். எனவே மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவ்வாறு ஒரு நகை ஒரு முறை அடகிற்க்கு சென்று விட்டது என்றால் அது மீண்டும் மீண்டும் அடகு வைக்க சென்றுகொண்டே இருக்கும். இதனை தவிர்ப்பதற்காக நகையைக் முதன் முதலில் வாங்கி அணிகின்ற பொழுது ஆண், பெண் யாராக இருந்தாலும் இந்த மந்திரத்தை சொல்லி அணிய வேண்டும்.

    மந்திரம்

    "ஓம் சொர்ண காஞ்சன மாதங்கி

    வசம் வசம் வசம் வா ஸ்ரீம் மம

    தநூகரன புவாய நமோ நம".

    அதேபோல் நகையை அடகு வைத்தவர்கள் இந்த மந்திரத்தைதினமும் சொல்லி வந்தால் விரைவில் அடகு வைத்த நகையை மீட்டெடுக்கலாம்.

    • வராஹி தேவிக்கு உகந்தது பஞ்சமி திதி.
    • கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள்.

    சப்தமாதர்களில் நடுநாயகமாகத் திகழ்கிறாள் வராஹி தேவி. படைகளின் தலைவியாகத் திகழ்கிறாள் தேவி என்கிறது வராஹி புராணம். வலிமை மிக்கவள். நமக்கெல்லாம் வலிமையைக் கொடுப்பவள்.

    வராஹி தேவிக்கு உகந்தது பஞ்சமி திதி. வராஹியை வழிபடுவதும் தரிசிப்பதும் மனதாரப் பிரார்த்தனை செய்து கொள்வதும் உன்னதப் பலன்களைத் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

    வீட்டில் விளக்கேற்றி வராஹியின் மூலமந்திரத்தைச் சொல்லி, ஏதேனும் இனிப்பை நைவேத்தியம் செய்து வேண்டிக்கொண்டால் வேண்டியதையெல்லாம் தந்தருளுவாள் தேவி.

    ஓம் ஐம் க்லெளம் ஐம்

    நமோ பகவதீ வார்த் தாளி . வார்த்தளி

    வராஹி வாராஹமுகி வராஹமுகி

    அந்தே அந்தினி நம :

    ருத்தே ருந்தினி நம :

    ஜம்பே ஜம்பினி நம :

    மோஹே மோஹினி நம :

    ஸதம்பே ஸ்தம்பினி நம:

    ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம்

    ஸர்வ வாக் சித்த சதுர்முக கதி

    ஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு

    சீக்ரம் வச்யம் ஐம்க்லெளம்

    ஐம் ட:ட:ட:ட:ஹும் அஸ்த்ராயபட்

    என்று சொல்லி வழிபடலாம்.

    ஓம் வாம் வராஹி நம:

    ஓம் வ்ரூம் ஸாம் வராஹி கன்யகாயை நம:

    எனும் மந்திரத்தை 108 முறை ஜபித்து தேவியை வணங்கித் தொழுதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.

    ஓம் – ஸ்ரீம் – ஹ்ரீம் – க்லீம் – வராஹி தேவ்யை நம:

    க்லீம் வராஹிமுகி ஹ்ரீம் – ஸித்திஸ்வரூபிணி – ஸ்ரீம்

    தனவ சங்கரி தனம் வர்ஷய வர்ஷய ஸ்வாஹா.

    எனும் மந்திரத்தைச் சொல்லி வந்தால், வீட்டில் தனம் தானியம் பெருகும். சகல ஐஸ்வரியங்களும் பெருகும். கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள். அதேபோல்,

    லூம் வராஹி லூம் உன்மத்த பைரவீம்

    பாதுகாப்பாம். ஸ்வாஹா

    எனும் மந்திரத்தை தினமும் சொல்லி வரலாம்.

    வராஹி தேவியை வணங்கி வந்தால், எதிர்ப்புகள் விலகும். தடைகள் அகலும். வராஹி தேவியை போற்றுவோம். துதிப்போம். மனதாரப் பிரார்த்திப்போம். மங்கல காரியங்களைத் தருவாள். மங்காத செல்வங்களையெல்லாம் வழங்குவாள்.

    • ராசிக்கு ஏற்ற மந்திரத்தை அதற்கேற்ற கிழமைகளில் உச்சரித்தால் திருமண தடை நீங்கும்.
    • 12 ராசிகளுக்கு மந்திரத்தை இங்கு பார்ப்போம்.

    திருமண தடை பெற்றோரை மட்டுமல்லாமல், பிள்ளைகளையும் மன ரீதியாக மிகவும் பாதிக்கக்கூடியதாக இருக்கிறது. சரியான வயதில் திருமணம் நடக்காதவர்கள், சில தோஷங்களால் திருமண தடையை எதிர் கொள்ளக்கூடியவர்கள் ஒவ்வொரு ராசிக்கு ஏற்ற மந்திரத்தை உச்சரித்தால் திருமண தோஷம் நீங்கும். ராசிக்கு ஏற்ற மந்திரத்தை அதற்கேற்ற கிழமைகளில் உச்சரித்தால் திருமண தடை நீங்கும்.

    ஒருவருக்கு சரியான வயதில் திருமணம் நடந்தால் தான், அவரின் வாழ்க்கையை சரியாக வழிநடத்திச் செல்ல முடியும். திருமண தடைக்கான தோஷத்தை நீக்கக்கூடிய 12 ராசிகளுக்கு மந்திரத்தை இங்கு பார்ப்போம்.

    மேஷம் :

    தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் 'ஓம் சும் சுக்ராய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.

    ரிஷபம் :

    தினமும் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் 'ஓம் அங் அங்காரகாய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.

    மிதுனம் :

    தினமும் அல்லது வியாழக்கிழமைகளில் 'ஓம் வ்ரீம் ப்ருஹஸ்பதயே நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.

    கடகம் :

    தினமும் அல்லது சனிக்கிழமைகளில் 'ஓம் சம் சனைச்சராய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.

    சிம்மம் :

    தினமும் அல்லது சனிக்கிழமைகளில் 'ஓம் சம் சனைச்சராய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.

    கன்னி :

    தினமும் அல்லது வியாழக்கிழமைகளில் 'ஓம் வ்ரீம் ப்ருஹஸ்பதயே நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.

    துலாம் :

    தினமும் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் 'ஓம் அங் அங்காரகாய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.

    விருச்சிகம் :

    தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் 'ஓம் சும் சுக்ராய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.

    தனுசு :

    தினமும் அல்லது புதன்கிழமைகளில் 'ஓம் பும் புதாய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.

    மகரம் :

    தினமும் அல்லது திங்கட்கிழமைகளில் 'ஓம் சோம் சோமாய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.

    கும்பம் :

    தினமும் அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் 'ஓம் ஹ்ராம் சூர்யாய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.

    மீனம் :

    தினமும் அல்லது புதன்கிழமைகளில் 'ஓம் பும் புதாய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.

    • இந்த மந்திரத்தை தினமும் 11 முறை பாராயணம் செய்தால் நல்ல மாற்றம் ஏற்படும்.
    • கணவர் - மனைவி அனுமனின் அருளால் ஒன்று சேருவார்கள்.

    கணவன் - மனைவி ஒற்றுமை ஏற்பட தினமும் சுந்தர காண்டம் பாராயணம் செய்யலாம். ராமர் - சீதையை சேர்த்து வைத்தது போல் பிரிந்திருக்கும் கணவர் - மனைவி அனுமனின் அருளால் ஒன்று சேருவார்கள். கீழே உள்ள மந்திரத்தை தினமும் காலையிலும், மாலையிலும் குளித்து விட்டு 11 முறை பாராயணம் செய்தால் நல்ல மாற்றம் ஏற்படும். இந்த சக்தி வாய்ந்த மந்திரங்களை எத்தனை முறை முடியும் அத்தனை முறை சொல்வதால் வாழ்க்கையில் நல்ல பல மாற்றங்கள் ஏற்படும்

    ஓம் ஏகவீரம் மிளித்வாஸெள க்ருஹமாபீய சாதராத்

    புண்யே(அ) ஹ்நி காரயாமாஸ, விவாஹம் விதிபூர்வகம்

    பாரிபர்ஹம் ததோ தத்வா, ஸம்பூஜ்ய விதிவத்ததா

    புத்ரீம் விஸர்ஜயாமாஸ, யசோவத்யா ஸமந்விதாம்

    ஏவம் விவாஹே ஸ்ம்வ்ருத்தே, ரமாபுத்ரோ முகாந்விதஹ

    க்ருஹம் ப்ராப்ய பஹீந் போகாந், புபுஜே ப்ரியயாஸஹ

    இந்த மந்திரத்தை சொல்ல முடியாதவர்கள் 7 பேருக்கு சுந்தரகாண்ட புத்தகத்தை வாங்கி கொடுக்கவும்

    • ஒரு மண்டலம் அதாவது 48 நாள் உரு ஜெபிப்பவர்களுக்கு சித்தர்களின் தரிசனம் கிடைக்கும்.
    • தாங்கள் விரும்பிய சித்தர்களின் தரிசனம் பெறுவதற்கான உச்சாடன வழிமுறையை அறிந்து கொள்ளலாம்.

    சித்தர்கள் நமக்கு தந்த அற்புதமான பாடல்கள், மந்திரங்கள் போன்றவை அனைவராலும் எளிதில் புரிந்து கொள்ள முடியாத பரிபாசை பாடல்களாகவே இருக்கின்றன. சித்தர்கள் மீது தணியாத ஆர்வமும், அவர்களின் தரிசனம் பெறவும் பக்தர்கள் பலவாறான ஆன்மீக வழிகளில் முயற்சிகளை மேற்கொள்கிறார். சித்தர்களின் தரிசனம் மட்டும் கிடைத்தால் போதும் வேறு எதுவும் தேவையில்லை என்கின்ற மனோபாவம் கொண்ட உயரிய மனிதர்களும் நமது நாட்டில் இருக்கவே செய்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் தாங்கள் விரும்பிய சித்தர்களின் தரிசனம் பெறுவதற்கான ஒரு மந்திரம் உச்சாடன வழிமுறையை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

    உதாரணமாக நீங்கள் தரிசிக்க விரும்புகின்ற சித்தர் அகத்திய சித்தர் என்றால் "ஓம் சிங் ரங் அங் சிங் அகத்தியர் மசி வசி" என்கின்ற மந்திரத்தை தினமும் அதிகாலை வேளையில் 108 முறை உரு ஜெபித்தல் வேண்டும் இப்படி மேற்கண்ட மந்திரத்தில், நீங்கள் காண விரும்பும் என்ற சித்தர்களின் பெயரை சேர்த்து உச்சாடனம் செய்ய வேண்டும்.

    இவ்வாறாக ஒரு மண்டலம் அதாவது 48 நாள் உரு ஜெபிப்பவர்களுக்கு சித்தர்களின் தரிசனம் கிடைக்கும். இந்த 48 நாட்களும் உடல், மனம், ஆன்மா ஆகியவற்றில் தூய்மை கடைபிடித்து, திரிகரண சுத்தியோடு இந்த மந்திர உச்சாடனம் செய்தல் வேண்டும். புலால் உணவு, போதைப் பொருட்கள் உபயோகிப்பு, காம சிந்தனை மற்றும் செயல்கள் போன்றவற்றை அறவே நீக்கியவர்களுக்கு 48 நாட்களுக்கு முன்பாகவே சித்தர்களின் தரிசனம் பெறும் பாக்கியம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

    மேலும் சித்தர்களின் தரிசனம் கிடைக்க பெற்றவர்கள், அந்த சித்தர்களிடமே தீட்சை பெறும் பாக்கியமும், மெய்ஞானம் அடைவதற்கான வழியும் கிடைக்க பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

    ஸ்ரீமத் பாகவதம் சொல்லும் கண்ணனின் திருக்கதையைச் சுருக்கமாகச் சொல்லும் ஒரு சின்ன சுலோகம் இது.
    ஆதௌ தேவகீ தேவி கர்ப்ப ஜனனம்
    கோபீ க்ருஹே வர்த்தனம்
    மாயா பூதன ஜீவிதாபஹரணம்
    கோவர்த்தனோத்தாரணம்
    கம்ஸ சேதன கௌரவாதி ஹனனம்
    குந்தீ ஸுதா பாலனம்
    ஏதத் பாகவதம் புராண கதிதம்

    - ஸ்ரீ க்ருஷ்ண லீலாம்ருதம்

    ×