search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழிபாடு"

    • நல்ல காரியங்களை செய்யும்போது காலண்டரில் மேல்நோக்கு நாளா, கீழ்நோக்கு நாளா, சமநோக்கு நாளா என்று பார்ப்போம்.
    • மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் இவை மூன்றும் அன்றைய தின நட்சத்திரத்தின் அடிப்படையில் அமைகின்றன.

    தினசரி நாள்காட்டியை நாம் தினமும் பயன்படுத்தினாலும், அதில் உள்ள ஒரு சில விஷயங்கள் நாம் தெரிந்து கொள்ளாமலேயே இருக்கிறோம்.

    நல்ல காரியங்களை நாம் செய்யும்போது தினசரி காலண்டரில் மேல்நோக்கு நாளா, கீழ்நோக்கு நாளா, சமநோக்கு நாளா என்று பார்ப்போம். மேல்நோக்கு நாளில் சுபகாரியங்களை செய்வோம். ஆனால் மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் என்றால் என்ன என்று தெரியுமா...?

    அந்த வகையில் தினசரி நாள்காட்டியில் உள்ள ஒரு விஷயம்தான் மேல் நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் போன்ற நாட்கள். இந்த நாட்கள் அனைத்து நாள்காட்டியிலும் இருக்கும். ஆனால் நாம் அதை பொதுவாக, "மேல்நோக்கு" என்றால் "நல்ல நாள்" என்றும், "சமநோக்கு" என்றால் "சுமாரான நாள்" எனவும், "கீழ்நோக்கு நாள்" என்றால் "கெடுதலான" நாளாகவும் எண்ணி அந்த நாட்களில் தவறான காரியங்களில் ஈடுபடுகிறோம்.

    மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் இவை மூன்றும் அன்றைய தின நட்சத்திரத்தின் அடிப்படையில் அமைகின்றன.

    நட்சத்திரங்கள் மொத்தம் 27 இவைகளை நம் முன்னோர்கள் ராசிமண்டல அடிப்படையில் மூன்றாக பிரித்தனர்.

    1. "ஊர்த்துவமுக" நட்சத்திரம்

    2. "அதோமுக" நட்சத்திரம்

    3. "த்ரியமுக" நட்சத்திரம்.

    1. ரோகிணி,

    2. திருவாதிரை,

    3. பூசம்,

    4. உத்திரம்,

    5. உத்திராடம்,

    6. திருவோணம்,

    7. அவிட்டம்,

    8. சதயம்,

    9. உத்திரட்டாதி ஆகிய ஒன்பதும் "ஊர்த்துவமுக" நட்சத்திரங்கள்.

    இந்த நட்சத்திரங்களைக் கொண்ட நாட்கள் "மேல்நோக்கு நாட்கள்" எனப்படும்.

    இன்னாட்களில்… "மேல்நோக்கி" வளர்கின்ற பயிர்களுக்காக விதை விதைத்தல், மரங்களை நடுதல், மேல்நோக்கி எழும் கட்டிடங்கள்(வீடு), உயரமான மதில் போன்றவற்றைக் கட்ட ஆரம்பிக்க உரிய நாட்கள் ஆகும்.

    இரண்டாவதாக,

    1. பரணி,

    2. கிருத்திகை,

    3. ஆயில்யம்,

    4. மகம்,

    5. பூரம்,

    6. விசாகம்,

    7. மூலம்,

    8. பூராடம்,

    9. பூரட்டாதி

    ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் "அதோமுக" நட்சத்திரங்கள் எனப்படும். அதாவது… இந்த நட்சத்திரம் கொண்ட நாட்கள் "கீழ்நோக்கு நாள்" எனப்படுகிறது.

    இந்த நாட்களில்… கிணறு வெட்டுதல், புதையல் தேடுதல், சுரங்கப் பணிகளை மேற்கொள்ளுதல், பூமிக்கடியில் வளரும் கிழங்கு வகைச் செடிகளைப் பயிரிடுதல் முதலான பணிகளைச் செய்வது நல்லது.

    மூன்றாவது வரும் 9 நட்சத்திரங்கள்:

    1. அஸ்வினி,

    2. மிருகசீரிஷம்,

    3. புனர்பூசம்,

    4. ஹஸ்தம்,

    5. சித்திரை,

    6. சுவாதி,

    7. அனுஷம்,

    8. கேட்டை,

    9. ரேவதி

    ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் "த்ரியமுக" நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்கள் கொண்ட நாட்கள் "சமநோக்கு" நாட்கள் எனப்படும் இந்த நாட்களில்… வாகனங்கள், கார், பைக் வாங்குதல், செல்லப்பிராணிகள், ஆடு, மாடு, காளை வாங்குதல், சாலை அமைத்தல், வாசக்கால் வைத்தல், வயல்(ஏறு) உழுதல் ஆகிய பணிகளைச் செய்வது உத்தமம்.

    மேற்கண்ட நாட்களை நினைவில் வைத்துக்கொண்டால், எந்த நாளில் என்ன காரியங்கள் செய்தால் பலன் கிடைக்கும் என்பதை, எளிதாக அறிந்து கொள்ளலாம்.

    இதுபோன்ற எளிமையான விஷயங்களை நாமே அறிந்துகொண்டு அந்த அந்த நாட்களுக்குரிய பணிகளில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

    நமது முன்னோர் பல விஷயங்களை மிக நுணுக்கமாக அலசி ஆராய்ந்து அனுபவப்பூர்வமாக விளக்கியும் வைத்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாண்டவர்கள் வனவாசம் செய்யும்போது கடவுள் அவர்களுக்கு அள்ள அள்ள உணவு குறையாத அட்சயபாத்திரம் அளித்தார்.
    • இந்துக்களும் ஜைனர்களும் இந்த நாளை மிக புனிதமான நாளாக கொண்டாடுகின்றனர்.

    விவசாய நாடான இந்தியாவில் குறிப்பாக கிழக்கு இந்தியாவில் அட்சய திருதியை நன்னாளை முதல் உழவு நாளாக தொடங்குகின்றனர். அட்சய திருதியை நன்னாளில்தான் கடவுளர்களின் பொருளாளர் பதவியை ஏற்று குபேரர் லட்சுமி தேவியை வணங்கி போற்றினார்.

    புதிய தொழில் தொடங்குவதற்கும் வீட்டின் கட்டுமான பணியை ஆரம்பிப்பதற்கும் மிகவும் சிறப்பான நாளாக அட்சய திருதியை நன்னாள் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாள் மிகவும் அதிர்ஷ்டம் தரக்கூடிய நாள் இந்த தினத்தில் தங்கம் வாங்கினால் அதிக அளவிற்கு பொருள் சேரும் என இந்த குறிப்பிட்ட நாளில் தங்க ஆபரணங்களை வாங்க மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். இந்த நாளின் சிறப்பு என்னவென்றால் விநாயகர் மகாபாரதம் எழுதத் தொடங்கிய நாள். பரசுராமர் அவதரித்த தினம்.

    பாண்டவர்கள் வனவாசம் செய்யும்போது கடவுள் அவர்களுக்கு அள்ள அள்ள உணவு குறையாத அட்சயபாத்திரம் அளித்தார். அன்னபூரணி தேவி பிறந்த நாளும் இதுவே. என இந்த நாளுக்கும் அட்சய என்கின்ற பதத்திற்கும் சிறப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம்

    தமிழ் மாதமான சித்திரை மாதத்தின் சுக்கிர பட்சத்தில் மூன்றாவது நாளில் அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. இந்துக்களும் ஜைனர்களும் இந்த நாளை மிக புனிதமான நாளாக கொண்டாடுகின்றனர் பலர் திருமணங்களை இந்த நாளில் முடிவு செய்கின்றனர்.

    இந்த நன்னாளில் நாம் செய்கின்ற நற்காரியங்களும் நமக்கு பல மடங்கு வாழ்வில் நன்மை பயக்கும் மேலும் தொடர்ந்து நல்ல செயல்கள் பல செய்யக்கூடிய சூழலை நம் வாழ்வில் ஏற்படுத்தி எல்லா வளங்களையும் இறைவன் நமக்கு அருள்வார். எனவே தான் இந்நன்னாளில் மக்கள் ஏழை எளிய மக்களுக்கு தேவையான உதவிகளை அளித்து மகிழ்கின்றனர் குறிப்பாக அட்சய திருதியை கடும் கோடையில் வருவதால் பலர் நன்னாளில் தங்களால் முடிந்த அளவிற்கு பொதுமக்களுக்கு பானகம் மோர் விநியோகிக்கின்றனர். தண்ணீர் பந்தல் அமைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அக்ஷய்ய திருதீயா புண்ய காலே
    • பரதாநாத் ஸகலா: மம ஸந்து மனோரதா:

    தானம் அளிக்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்...

    அக்ஷய்ய திருதீயா புண்ய காலே அக்ஷய்ய புண்ய ஸம்பாதனார்த்தம் (பித்ரு ப்ரீத்யர்த்தம்) தர்மகடாக்ய உதகும்ப தானமஹம் கரிஷ்யே..

    ஏஷ தர்மகடோ தத்தோ ப்ரும்ஹ விஷ்ணு சிவாத்மக: அஸ்ய) பரதாநாத் ஸகலா: மம ஸந்து மனோரதா:

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 'அட்சயம்' என்றால் 'குறைவில்லாதது' என்று பொருள்.
    • பசு, பட்சிகளுக்கு உணவளிப்பதும், தண்ணீர் அளிப்பதும் அளவற்ற புண்ணியத்தை தேடித்தரும்.

    மகாத்மாவான தருமரை, துரியோதனன் தன் தாய்மாமன் சகுனியின் உதவி கொண்டு சூழ்ச்சி செய்து சூதாட்டத்தில் தோற்கடித்தான். இதனால் பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் மேற்கொள்ள நேர்ந்தது. அவர்கள் அஸ்தினாபுரத்தில் இருந்து திரவுபதியோடு வடக்கு நோக்கி யாத்திரையை தொடங்கினார்கள். அப்போது இந்திராதி தேவர்களும், வேதம் ஓதும் அந்தணர்களும் மற்றும் மிகுந்த பற்றுள்ள மக்களும் பாண்டவர்களின் பின் சென்றனர்.

    பஞ்சபாண்டவர்கள் அவர்களை நோக்கி, "உங்கள் அனைவருக்கும் நன்மை உண்டாகட்டும். எனது அருமை மக்களே நீங்கள் திரும்பிச் செல்லுங்கள்" என்று வேண்டிக்கொண்டனர்.

    ஆனால் மக்களோ, பாண்டவர்களை நோக்கி பலவிதமாக புகழ்ந்தனர். அப்போது தருமர் அவர்களிடம், "நீங்கள் அன்பால் என்னை இவ்வாறு புகழ்கிறீர்கள். எங்களிடம் இல்லாத உயர்ந்த குணங்களை கூட எங்களிடம் உள்ளது போல் சொல்கிறீர்கள். உங்கள் அன்புக்கு நான் கட்டுப்படுகிறேன். இருப்பினும் நீங்கள் திரும்பி செல்லுங்கள்" என்று கூறினார். பின்பு பஞ்ச பாண்டவர்கள், கங்கை கரையில் இருந்த பிரமாணக்கோடி என்னும் ஆலமரத்திற்கு அருகில் சென்று, அன்று இரவை அங்கேயே கழித்தனர்.

    அப்போதும் சில அந்தணர்களும் குறிப்பாக அக்னி ஹோதிரிகள் (தினமும் யாகம் செய்யக்கூடிய அந்தணர்களும்) மற்றும் அவர்களது உறவினர்களும் திரும்பி செல்லாமல் நூற்றுக்கணக்கில் பாண்டவர்களுடன் வந்தனர். அவர்களை நோக்கி தருமர், "ராட்சசர்கள் மற்றும் கொடிய மிருகங்கள் வசிக்கும் இந்த இடத்தில் எங்களுடன் ஏன் வருகிறீர்கள்" என்று கேட்டாலும், அவர்களின் அன்பான பேச்சால் மகிழ்ச்சி அடைந்தார்.

    இந்த நிலையில் ஒரு காரியம் அவர் மனதை நெருடியது. "சன்னியாசிகளும், அந்தணர்களும், உறவினர்களும் நம்முடன் வருகின்றனர். இவர்களின் பசியை போக்க வேண்டியது எனது கடமை. தர்ம சாஸ்திரத்தில் விதித்தபடி தேவர்களுக்கும், நம்மை தேடி வந்த விருந்தினர்களுக்கும், நாய்களுக்கும், காக்கைக்கும், அன்னம் இடாவிட்டால் மகா பாவம். எனவே இதற்கு என்ன செய்யலாம்" என வருத்தப்பட்டார்.

    அப்போது சவுனகர் என்ற மகா முனிவர் அங்கு வந்தார். அவர் தருமரை நோக்கி, "தவத்தின் மூலம் உன் பிரச்சனையை தீர்த்துக் கொள்ள முடியும். யோக சித்தியை அடையும் முயற்சியில் ஈடுபட வேண்டும். தவத்தின் மூலம் அடைய முடியாதது எதுவுமில்லை" என்றார்.

    இதையடுத்து தருமர் தன் புரோகிதரான தவுமியரிடம் ஆலோசனை கேட்டார். தவுமியரோ, "தர்ம ராஜாவே.. பிராணிகள் எல்லாம் ஒரு சமயம் கடும் பசியால் துன்பமடைந்த பொழுது, சூரியபகவான் அந்த ஜீவன்கள் மேல் இரக்கம் கொண்டு பூமியில் மேக ரூபமாக மாறி மழை நீரை வெளிப்படுத்தினார். அந்த மழை நீரால் பூமி செழித்து, அனைத்து ஜீவ ராசிகளின் பசியும் தீர்ந்தது. சூரியன் அன்ன ரூபம் ஆனவர். அனைத்து உயிரையும் காக்கக்கூடியவர். எனவே நீ அவரை நோக்கி தவம் செய்" என்றார்.

    தருமரும் ஒரு மனதுடன் அன்ன ஆகாரம் இன்றி சூரிய பகவானின் விசேஷமான 108 நாமத்தை கூறி தவம் இயற்றினார். பின்னர் சூரிய பகவானை நோக்கி, "12 ஆதித்யர்களும், 11 ருத்திரர்களும், அஷ்டவசுக்களும், இந்திரனும், பிரஜாபதியும், ஆகாசத்தில் சஞ்சரிக்கும் சித்தர்களும், உங்களை ஆராதித்து சித்தி அடைந்தனர். தங்களை ஆராதிப்பதால் ஏழு வகை பித்ருக்களும் திருப்தி அடைகின்றனர். தாங்கள் எனக்கு உதவ வேண்டும்" என்று தருமர் கேட்டுக் கொண்டார்.

    அதற்கு சூரிய பகவான், "தர்மராஜா.. நீ வேண்டியது அனைத்தும் உனக்கு கிடைக்கும்படி செய்கிறேன். இப்பொழுது நான் தரும் பாத்திரம் உனக்கு 12 ஆண்டு வரை சக்தி உள்ளதாக இருக்கும். இந்த பாத்திரத்தை பெற்றுக்கொள். இதில் நீ இடும் பழமோ, கிழங்கோ, கீரையோ, காய்கறிகளோ அல்லது அவற்றை கொண்டு தயார் செய்த உணவோ, தான் உண்ணாமல் திரவுபதி அந்த உணவை பரிமாறிக் கொண்டே இருக்கும் வரை, அது வளர்ந்து கொண்டே இருக்கும். இன்றைய தினத்தில் இருந்து நீ இதை பயன்படுத்தலாம்" என்றார்.

    தருமரும் ஒரு அடுப்பு மீது அந்த பாத்திரத்தை வைத்து சமையல் தயார் செய்தார். அதில் தயாரித்த உணவு சிறிய தாக தோன்றினாலும், அந்த பாத்திரத்தின் சக்தியால் அது வளர்ந்து கொண்டே இருந்தது. அங்கிருந்த அனைவருக்கும் உணவளித்த பிறகு மீதமிருந்த அன்னத்தை பிரசாதமாக தருமரும் மற்றவர்களும் சாப்பிட்டனர். இறுதியாக திரவுபதி சாப்பிட்டாள். அட்சய பாத்திர மகிமையால் அங்கிருந்த அனைவரும் பசி நீங்கி மகிழ்ந்தனர். 

    தருமர், மற்றவர்களின் பசியை தீர்க்க சூரிய பகவானிடம் இருந்து, சித்திரை மாதம் வளர்பிறை திருதியை திதி அன்று அட்சய பாத்திரம் பெற்றதால் அந்த தினம் 'அட்சய திருதியை' என அழைக்கப்பட்டது.

    'அட்சயம்' என்றால் 'குறைவில்லாதது' என்று பொருள். சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய இந்த திருதியை மிக விசேஷமானது. அன்று தெய்வங்களுக்கு செய்யப்படும் பூஜைகளோ, அபிஷேகமோ, ஜபமோ, ஹோமமோ மற்ற நாட்களை விட பல மடங்கு உயர்ந்த பலன்களைத் தரும். அன்றைய தினம் ஏழைகளுக்கு வழங்கப்படும் அன்னதானம், நீர் மோர் போன்றவை நமக்கு குறைவற்ற செல்வத்தை பெற்றுத் தரும். சிலர் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க வேண்டும் என்று தவறாக நினைக்கின்றனர். ஆனால் அது தானத்தையும், தர்மத்தையும் தான் சிறப்பாக சொல்லியுள்ளது.

    முன்னோர்களின் (பித்ருக்களின்) பிரீதிக்காக நீர் நிறைந்த ஒரு செப்பு பாத்திரத்தை தானம் செய்வார்கள். இதற்கு 'தர்மகட தானம்' என்று பெயர். இதனால் நம் முன்னோர்கள் பித்ரு லோகத்தில் தாகமின்றி இருப்பார்கள். ஒரு செப்பு பாத்திரத்தில் அல்லது கலசத்தில் நல்ல நீரை நிரப்பி ஏலக்காய் மற்றும் வாசனை திரவியங்களை சேர்த்து அதற்கான மந்திரத்தை சொல்லி தானம் அளிப்பது மிகச் சிறப்பானது. 

    இந்த நாளில் எந்தவிதமான பாகுபாடும், ஏற்றத்தாழ்வுகளும் பார்க்காமல் அனைவருக்கும் அன்னதானம் அளிப்பது உயர்ந்த பலனை தரும். மேலும், பசு, பட்சிகளுக்கு உணவளிப்பதும், தண்ணீர் அளிப்பதும் அளவற்ற புண்ணியத்தை தேடித்தரும். இறந்த முன்னோர்களுக்கு நல்ல கதி உண்டாகும். வேதம் படித்த பெரியோர்களுக்கு குடை, விசிறி, நீர் மோர் போன்றவை அளிப்பார்கள். மேலும் அட்சய திருதியை அன்று தான் கிரத யுகம் ஆரம்பித்த நாள். எனவே அன்று கட்டாயம் தர்ப்பணம் செய்வது மிகுந்த புண்ணியத்தை தரும்.

    - 'ஜோதிட சிம்மம்' சுவாமி கண்ணன் பட்டாச்சாரியா.

    • 108 சிவ தாண்டவங்களுள் ஏழு வகைத் தாண்டவங்கள் சிறப்புடையவை.
    • சிவாய நம என்பது சூட்சம பஞ்சாட்சரம்.

    தாண்டவம் என்பதை வடமொழியில் நிருதயம் என்பர். தெய்வீக பாவனைக்கேற்ப உடலின் வெவ்வேறு உறுப்புகளும் இயங்குவது தாண்டவம். சிவன், காளி, ஸ்ரீகிருஷ்ணர் ஆகியோர் தாண்டவங்களை நிகழ்த்தி உள்ளனர் என்பதை புராணங்கள் மூலம் அறிகிறோம்.

    108 சிவ தாண்டவங்களுள் ஏழு வகைத் தாண்டவங்கள் சிறப்புடையவை எனப்படுகிறது. அவை காளிகா தாண்டவம், சந்தியா தாண்டவம், கவுரி தாண்டவம், சங்கார தாண்டவம், திரிபுர தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம், ஆனந்தத் தாண்டவம் என்பன. இவை ச, ரி, க, ம, ப, த, நி என்ற சப்த (7) சுரங்களிலிருந்து தோன்றியவை. பஞ்ச சபைகளில் ஆடியவை, சிவனது நடன சபை (அரங்குகள்) ஐந்து. திருநெல்வேலி தாமிர சபையில் ஆடியது. காளிகா தாண்டவம். மதுரை வெள்ளியம்பலத்தில் ஆடியது சந்தியா தாண்டவம்.

    பாண்டி நாட்டுத் திருப்புத்தூரில் ஆடியது (சிற் சபையில்) கவுரி தாண்டவம். இருண்ட நள்ளிரவில் சங்கார தாண்டவம், திருக்குற்றால சித்திர சபையில் திரிபுர தாண்டவம்; திருவாலங்காட்டு ரத்தின சபையில் ஊர்த்துவ தாண்டவம் (காளியுடன் போட்டியிட்ட தாண்டவம்), ஆனந்தத் தாண்டவம் தில்லை பொன்னம்பலத்தில் (சிதம்பரம்) ஆடியவை.

    சிவாய நம என்பது சூட்சம பஞ்சாட்சரம். துடியேந்திய கையில் 'சி' எழுத்தும், வீசிய கரத்தில் 'வா' என்ற எழுத்தும் அபய கரம் 'ய' என்ற எழுத்தையும் தீச்சுடர் ஏந்தியகரம் 'ந' என்ற எழுத்தையும் திருவடியின் கீழ் உள்ள முயலகன் 'ம' என்ற எழுத்தையும் பொருத்திக் காணலாம்.

    துடி ஏந்திய வலக்கரம் படைத்தல் தொழிலையும், அபயகரம் காத்தலையும், தீச்சுடர் ஏந்திய கரம் அழித்தலையும், மற்றொரு கரம் உயிர்களுக்கு முக்தி அருளும் திருவடியையும் காட்டுகிறது. முயலகனை மிதித்துள்ள திருவடி அருள் புரிதலையும் குறிப்பிடுவதாகும். இவ்வாறு சிவாயநம என்ற ஐந்தெழுத்தும் நடராஜர் திருஉருவத்தில் உள்ள தத்துவங்களாகும்

    • வீடுகளில் மாலை நேரங்களில் விளக்கேற்றுவதற்கு குத்துவிளக்கைப் பயன்படுத்துகிறார்கள்.
    • தொங்கும் விளக்குகளைச் சாதாரணமாக வீடுகளில் ஏற்றுவதில்லை.

    விளக்குகள் பலவிதம் உண்டு. பித்தளையில் தயாரிக்கப்படும் விளக்கு தான் மிகவும் சிறந்தது. பழைய காலத்தில் பித்தளையில் செய்த விளக்கைத்தான் அனைவரும் பயன்படுத்தினார்கள்.

    இக்காலத்தில் ஸ்டீல் விளக்கு, வெள்ளி விளக்கு முதலியவை உண்டு. மாலை வேளையில் விளக்கேற்றுவதற்கும், விசேஷ நாட்களில் விளக்கேற்றுவதற்கும், தொடக்க விழாக்களுக்கும், திருமணம் போன்ற சடங்குகளுக்கும் பித்தளையில் தயாரிக்கப்பட்ட விளக்குகளையே பயன்படுத்துகிறார்கள். 

    விளக்குகளில் குத்துவிளக்கு (சாதாரண விளக்கு, ஐந்து திரி விளக்கு, ஏழு திரி விளக்கு), தொங்கும் விளக்கு, கோல் விளக்கு, சங்கிலிவட்ட விளக்கு என்று பலவகைகள் உண்டு.

    வீடுகளில் மாலை நேரங்களில் விளக்கேற்றுவதற்கு குத்துவிளக்கைப் பயன்படுத்துகிறார்கள். சிலர் ஐந்து திரி விளக்கேற்றுவார்கள். கோல் விளக்கு, கோவில்களில் இறைவன் எழுந்தருளும் வேளைகளில் ஏற்றி வைப்பார்கள்.

    தொங்கும் விளக்குகளைச் சாதாரணமாக வீடுகளில் ஏற்றுவதில்லை. இவை பொதுவாக கோவில்களில் மட்டுமே ஏற்றப்படும். அஷ்டமங்கள காரியங்களுக்கு சங்கிலிவட்ட விளக்குகளைப் பயன்படுத்துகிறார்கள்.

    • மஞ்சள் பிள்ளையார் பிடித்து வாழை இலையில் வலதுப்பக்கமாக வையுங்கள்.
    • அட்சய திருதியை நாளில் எல்லோராலும் வாங்க முடிந்த பொருள் ஒன்று உண்டு.

    அட்சய திருதியை தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து நீராடுங்கள். பிறகு பூஜை அறையில் கோலமிடுங்கள். அதன்மேல் ஒரு மனைப் பலகையை போட்டு மேலே வாழை இலை ஒன்றினை இடுங்கள். இலையின் நடுவே கொஞ்சம் பச்சரிசியை பரப்பி அதன்மேல் ஒரு செம்பில் நீர் நிரப்பி மாவிலை, மஞ்சள் தடவிய தேங்காய் வைத்து கலசமாக்குங்கள். அதனுள் காசுகளை போடுவது காசுகளை பரப்பி அதன் நடுவே கலசத்தினை வைப்பது எல்லாம் அவரவர் வழக்கப்படி செய்யலாம்.

    கலசத்தின் அருகே ஒருபடி, ஆழாக்கு அல்லது ஒரு டம்ளரில் நெல் நிறைத்து வையுங்கள். கலசத்திற்கு பொட்டு, பூ வையுங்கள். லட்சுமி நாராயணர் படம் இருந்தால் அதனையும் வைத்து அலங்கரியுங்கள். பின்னர் குத்துவிளக்கினை ஏற்றி வையுங்கள். மஞ்சள் பிள்ளையார் பிடித்து வாழை இலையில் வலதுப்பக்கமாக வையுங்கள்.

    நீங்கள் புதிதாக வாங்கிய பொருளை கலசத்தின் முன்பாக வையுங்கள். அது விலை உயர்ந்த பொருளாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அட்சய திருதியை நாளில் எல்லோராலும் வாங்க முடிந்த பொருள் ஒன்று உண்டு. அதிக பலன் தருவதும் அதுதான். உப்பு வாங்கி வைத்தாலே போதும். அஷ்டலட்சுமி கடாட்சம் உங்கள் வீடு தேடி வந்துவிடும்.

    முதலில் விநாயகரை வேண்டிக் கொள்ளுங்கள். பின்னர் கலசத்தில் மகாலட்சுமியை எழுந்தருளும்படி பிரார்த்தியங்கள். உங்களுக்கு தெரிந்த விஷ்ணு&லட்சுமி, சிவன்&பார்வதி, குபேரன் துதிகளை சொல்லுங்கள். அல்லது கேளுங்கள்.

    குசேலரின் கதையை படிப்பது, கேட்பது, சொல்வதும் சிறந்தது. பின்னர் அவரவர் வழக்கப்படி தூப தீப ஆராதனைகள் செய்யுங்கள். இந்த பூஜையில் பாயசம் அல்லது சர்க்கரை கலந்த பால் நிவேதிப்பது சிறப்பானது.

    அன்றைய தினம் மாலையில் சிவாலயம், பெருமாள் கோயில் என்று உங்களால் இயன்ற தலத்திற்கு சென்று தரிசியுங்கள். அதன் பின்னர் மீண்டும் தூப, தீப ஆராதனையை கலசத்துக்கு செய்துவிட்டு, கலசத்தினை வடக்குப் பக்கமாக நகர்த்தி வையுங்கள்.


    உண்ணாவிரதம் இருப்பது எளிய திரவ ஆகாரம் மட்டும் உண்பது எல்லாம் அவரவர் வசதி, உடல்நலத்தை பொறுத்தது. கலசத்தினை நகர்த்துவது விரதத்தினை நிறைவு செய்துவிட்டதாக அர்த்தம். பயன்படுத்திய அரிசி, கலசத் தேங்காயை அடுத்து வெள்ளிக்கிழமை பூஜையில் உடைத்து பொங்கல் செய்யலாம். நெல்லை ஒரு முடிச்சாகக் கட்டி அரிசிவைக்கும் பாத்திரத்தில் வைத்து விடுங்கள். காசுகளை பீரோவில் வையுங்கள்.

    அட்சய திரியை நாளில் விரதம் இருப்பது. பூஜைகள் செய்வது புதிய பொருட்களை வாங்குவது எல்லாவற்றையும் விட முக்கியமானது, தானம் அளிப்பதும், முன்னோர் கடன்களை செய்வதும்தான்.

    இல்லோதருக்கு உங்களால் இயன்ற அளவுக்கு உதவுங்கள். பெற்றோர் பெரியோரிடம் ஆசி பெறுங்கள். நீத்தார் கடன்களை அவசியம் செய்யுங்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இதில் திருமணம் தடை படுபவர்கள் பங்கேற்றால் நிச்சயம் திருமணம் கை கூடும்.
    • இந்த பூஜை திருமணஞ்சேரியில் மட்டுமே நடைபெறும். அதற்கு அடுத்து இங்குதான் நடைபெறுகிறது.

    கோவையில் இருந்து வெள்ளலூர் செல்லும் சாலையில் வெள்ளிமலை தோட்டம் பகுதியில் நொய்யல் ஆற்றங்கரையில் உள்ளது சொர்ணாம்பிகை உடனமர் நவபாஷான சித்தலிங்கேஸ்வரர் கோவில்.

    சித்தர் பெருமான் ஸ்ரீ பிரமானந்த சாமிகளால் ஸ்தாபனம் செய்யப்பட்ட உலகில் முதல் நவபாஷான சிவலிங்கம் இங்குள்ளது.

    உலகிலேயே நவபாஷான சிவலிங்க கோவில் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    ஸ்ரீ சித்தர் பீடம் பிரம்மானந்த மடம் அறக்கட்டளையினர் இந்த கோவிலை நிர்வகித்து வருகிறார்கள்.

    தினமும் சாமிக்கு மூலிகை தீர்த்த அபிஷேகம் நடைபெறுகிறது.

    ஞாயிறு மாலை வேள்வி பூஜையும், இரவு சிவசக்தி யாக பூஜையும் நடைபெறுகிறது.

    இந்த பூஜையில் பங்கேற்போருக்கு திருமண தடை நீங்கும். குழந்தை செல்வம் இல்லாதவர்களுக்கு மழலை பாக்கியம் கிடைக்கும்.

    இங்குள்ள அம்மன் சன்னதி வடக்கு நோக்கி அமைந்துள்ளது சிறப்பாக கருதப்படுகிறது.

    கோவிலில் கால பைரவருக்கு தனி சன்னதி உள்ளது.

    மேலும் இந்த கோவிலில் நவகோள்களும் ஒரே நேர் கோட்டில் உள்ளது தனிச்சிறப்பு என்று கூறுகிறார்கள்.

    சித்தலிங்கேஸ்வரர் கோவில் பஞ்சபூத தத்துவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    அகிலம் போற்றும் சரபேஸ்வரருக்கும் இங்கு தனி சன்னதி உள்ளது.

    இங்கு சரபேஸ்வரர் ஐம்பொன் சிலையில் அழகு மிளிர காட்சி தருகிறார்.

    சன்னதியின் மேற்கூரை பிரமிடு வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

    சரபேஸ்வரர் சன்னதி மற்றும் சித்தலிங்கேஸ்வரர் கோவிலை வலம் வந்தால் அண்ணாமலையில் கிரிவலம் வந்த பலன் கிடைக்கும் என்று ஆன்மீக பெரியவர்கள் கூறுகிறார்கள்.

    சரபேஸ்வரர் சன்னதியில் ஜாதக ரீதியான தோஷங்களுக்கு அதற்குரிய பரிகார பூஜைகள் நடைபெறுகிறது.

    ராகு, கேது, செவ்வாய், தோஷம் உள்ளவர்கள் மற்றும் திருமணம் தடைபடுகிறதே என்று மனவேதனையில் உள்ளவர்கள் வாயு திசையில் அமைந்திருக்கும் காளத்தி நாதருக்கு அவர்கள் கைகளாலே ருத்ராபிஷேகம் செய்து பரிகார பூஜை செய்து கொள்ளலாம்.

    பரிகார பூஜை முடித்து சரபேஸ்வரரை வழிபட்டால் திருமண தடை நீங்குவதோடு, அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.

    சரபேஸ்வரருக்கு ஞாயிற்றுக்கிழமை தோஷ நிவர்த்தி பூஜை நடைபெறும்.

    இதில் திருமணம் தடை படுபவர்கள் பங்கேற்றால் நிச்சயம் திருமணம் கை கூடும்.

    இந்த பூஜை திருமணஞ்சேரியில் மட்டுமே நடைபெறும். அதற்கு அடுத்து இங்குதான் நடைபெறுகிறது.

    தேய்பிறை அஷ்டமியில் இங்குள்ள பைரவருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் மனதில் நினைத்தது நடக்கும்.

    இந்த கோவிலுக்கு சென்று வர கோவை காந்திபுரத்திலிருந்து 74,74ஏ மற்றும் சிங்காநல்லூரிலிருந்து மினி பஸ், ஷேர் ஆட்டோ வசதி உள்ளது. 

    • கலியுகக் கடவுளான இவளை உபாசிப்பவர்கள் கல்வி, வேள்விகளில் சிறந்து விளங்குவர்.
    • இவளை பூஜிப்பவரை, தம்மை பூஜிப்பவர்களாகவே தேவர்கள் எண்ணி அருள்பாலிப்பர்.

    கலியுகக் கடவுளான இவளை உபாசிப்பவர்கள் கல்வி, வேள்விகளில் சிறந்து விளங்குவர்.

    இவளை பூஜிப்பவரை, தம்மை பூஜிப்பவர்களாகவே தேவர்கள் எண்ணி அருள்பாலிப்பர்.

    தேவியை பூஜிப்பவர் பிரம்மன், விஷ்ணு, சிவன், கவுரி, லட்சுமி, விநாயகர் அனைவரையும் பூஜித்த பலன்களை பெறுவர்.

    உக்கிர தெய்வமாக காணப்பட்டாலும் இவளது திருவுருவத்தை வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபடலாம்.

    இவளது மூல மந்திரத்தை ஜெபித்து துவங்கி இவளது தியான மந்திரம், அஷ்டகம், பஞ்சகம் சொல்லி தினமும் வழிபட்டால் குடும்பத்தில் அமைதி நிலவும்.

    பகைவர் தொல்லைகள் அறவே தீரும். கெட்டவர்களின் சேர்க்கை இல்லாது போகும். தீவினைகள் நெருங்காது.

    அனைத்து தோஷங்களும் விலகி ஓடும். நல்ல எண்ணங்கள் பிறக்கும்.

    அஷ்ட ஐஸ்வர்யங்களும் கைகூடும். அமாவாசை, பவுர்ணமி தினங்களில் நடைபெறும் யாகத்தில் கலந்து கொள்வதும், இவளுக்கு மிகவும் பிடித்தமான மிளகாயுடன் தரிசனம் செய்வதும் மிகச் சிறந்த பலன்களை தரும்.

    உக்கிர தேவியான இவளுக்கு மிளகாய், மிளகு போன்ற காரமான பொருட்கள் மிகவும் பிடித்தமானது.

    குழந்தை வரம் தரும் பிரத்தியங்கிரா தேவி

    ராமாயண காலத்தில் அயோத்தியை ஆண்ட தசரத மகாராஜனுக்கு பல ஆண்டு காலமாக குழந்தை இல்லாமல் மனம் புழுங்கி வந்தாராம்.

    புத்திர காமேஷ்டி யாகத்தை நடத்தினால் குழந்தை செல்வம் கண்டிப்பாக கிடைத்து விடும் என ஏராளமான ரிஷிகள் கூறியதை அடுத்து நம்பிக்கையுடன் புத்திர காமேஷ்டி யாகம் நடத்தினாராம்.

    அதன்பின் 3 மனைவிகளுக்கு ராமர், லெட்சுமணன், பரதன், சத்ருகன் ஆகியோர் பிறந்தார்கள் என ராமாயண வரலாறு கூறுகிறது.

    தற்போது ஏராளமான குழந்தை இல்லாத தம்பதிகள் குழந்தை வேண்டி கோவில் மற்றும் புண்ணியதலங்களுக்காக செல்கின்றனர்.

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள ஸ்ரீமகாபஞ்சமி பிரத்தியங்கிரா தேவி கோவிலில் ஆண்டு தோறும் குழந்தை இல்லாத தம்பதிகளுக்காக ஸ்ரீமகாபுத்திர காமேஷ்டி யாகம் நடக்கிறது.

    • புத்திர காமேஷ்டி யாகம் நடத்தினால் குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம்.
    • சிவகங்கை ஸ்ரீ மகாபஞ்சமி பிரத்யங்கராதேவி கோவிலில் இந்த பூஜை நடைபெறுகிறது.

    ராமாயண காலத்தில் அயோத்தியை ஆண்ட தசரத மகாராஜனுக்கு பல ஆண்டு காலமாக குழந்தை இல்லாமல் மனம் புழுங்கி வந்தாராம்.

    புத்திய காமேஷ்டி யாகத்தை நடத்தினால் குழந்தை செல்வம் கண்டிப்பாக கிடைத்து விடும் என ஏராளமான ரிஷிகள் கூறியதை அடுத்து நம்பிக்கையுடன் புத்திர காமேஷ்டி யாகம் நடத்தினாராம்.

    அதன்பின் 3 மனைவிகளுக்கு ராமர், லெட்சுமணன், பரதன், சத்துகென் ஆகியோர் பிறந்தார்கள் என ராமாயண வரலாறு கூறுகிறது.

    தற்போது ஏராளமான குழந்தை இல்லாத தம்பதிகள் குழந்தை வேண்டி கோவில் மற்றும் புன்னியஸ்தலங்களுக்காக செல்கின்றனர்.

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள ஸ்ரீமகாபஞ்சமி பிரத்தியங்கரா தேவி கோவிலில் ஆண்டு தோறும் குழந்தை இல்லாத தம்பதிகளுக்காக ஸ்ரீமகாபுத்திர காமேஷ்டி யாகம் நடக்கிறது.

    • அதுவே சரபரின் அஷ்டோத்ர சத நாமாவலியாகத் திகழ்கிறது.
    • நரசிம்மரை சாந்தப்படுத்திய சரபேஸ்வரரே சத்ருசைகர்.

    எட்டு கால்களும் இரண்டு முகங்களும் நான்கு கைகளும் கூர்மையான நகங்களும் நான்கு கைகளும் கூர்மையான நகங்களும் இருபுறத்திலும் இறக்கைகளும், சிம்மத்தின் வால்போல் நீண்ட வாலும், கருடனைப் போன்ற மூக்கும், காளியைப் போன்ற தெத்துப் பல்லும் கொண்டு தோன்றும் சரபேஸ்வரருக்கு இரு இறக்கைகளிலும் பத்ரகாளியும் துர்க்கையும் முறையே பிரத்தியங்கிரா, சூலினி என யந்திர வடிவில் சக்தியாக விளங்குகிறார்கள்.

    நீண்ட நாட்கள் நீடித்த சண்டையை முடிவுக்கு கொண்டு வர எண்ணிய சரபர் தனது இறக்கைகளில் ஒன்றாக இருந்த காளியை உக்ர பிரத்தியங்கிரா தேவியாக அவதாரமெடுக்க செய்தார்.

    நரசிம்மத்தின் மூர்க்க குணமாக இருந்த கண்ட பெருண்டத்தை தன் வாயிலிட்டு விழுங்கினாள் பிரத்தியங்கிரா தேவி.

    அத்துடன் நரசிம்மர் சாந்தமானார். ஆனாலும், முழுவதும் நீங்கவில்லை.

    சரபத்தினை நரசிம்மம் தாக்கத் தொடங்கியது. சரபத்தின் தாக்குதல் நரசிம்மத்தினைச் சாந்தப்படுத்தவில்லை.

    முடிவில் நரசிம்மத்தின் பாதங்களை இருபுறமும் பிடித்து இரண்டாகக் கிழித்துவிட முயலுகையில் தன்னுணர்வு பெற்ற மகாவிஷ்ணு 18 சுலோகங்களால் சரபேசுவரரைத் துதிக்கிறார்.

    அதுவே சரபரின் அஷ்டோத்ர சத நாமாவலியாகத் திகழ்கிறது.

    நரசிம்மரைச் சாந்தப்படுத்திய சரபேஸ்வரரே சத்ருசைகர்.

    இவரைத் துதிப்போருக்கு எதிரான சக்தியெல்லாம் உடன் ஒழிவது மட்டுமின்றி சரணடைந்தோரின் பிறவிப் பிணியெல்லாம் கூட தீர்ந்துவிடும்.

    சரபேஸ்வரருடன் இருக்கும் பிரத்தியங்கிரா தேவியை வழிபடுவதால் பில்லி, சூனியம், ஏவல், செய்வினைகள் போன்ற அனைத்து தீயவினைகளையும் தீர்த்து கொள்ள முடியும்.

    பிரத்தியங்கிரா தேவி பிரத்தியங்கிரஸ், பால பிரத்தியங்கிரா, பிராம்பி பிரத்தியங்கிரா, ருத்திர பிரத்தியங்கிரா, உக்கிர பிரத்தியங்கிரா, அதர்வண பிரத்தியங்கிரா,பிராம்மி பிரத்தியங்கிரா, சிம்ம முகக் காளி, ஸ்ரீ மகா பிரத்யங்கிரா என ஒன்பது விதமாக வழிபடப்படுகிறாள். 

    • சரபபட்சி என்பது சிங்கங்களை கொன்று உண்ணும் பெரிய பறவையாகும். அவர் தான் ஸ்ரீ சரபேஸ்வரர்.
    • இவர் சிவபெருமானின் மறு அவதாரமாக கருதப்படுகிறார்.

    இரணியனைக் கொன்று அவனுடைய ரத்தத்தை உட்கொண்டதால் அவனுடைய ஆணவம் இவரிடம் வந்து சேர்ந்தது, அதுமட்டுமல்ல, இரணியனைக் கொன்றதால் பிரம்மஹத்தி தோஷமும் நரசிம்மத்திற்கு வந்து சேர்ந்து விட்டபடியால் கோபம் தணிவதற்குப் பதில் மேலும் கோபம் மேலிட கர்ஜனை செய்து கொண்டே அண்ட சராசரங்களையும் நடுநடுங்க வைத்தார்.

    நரசிம்மத்தின் கோபத்தைத் தணிவிக்க பிரகலாதனும் தேவர்களும் என்னென்னவோ செய்து பார்த்தார்கள்.

    ஆனால், அவரின் கோபம் தணிந்த பாடில்லை.

    இறுதியாகத் தேவர்கள் எல்லோரும் சிவபெருமானைச் சரண் அடைந்தார்கள்.

    தேவர்களின் முறையீட்டைக் கேட்ட சிவபெருமான் தன் பூதகணங்களின் தலைவனாம் தன் வடிவேயான அகோர மூர்த்தியை அனுப்பி வைக்கிறார்.

    ஆனால், நரசிம்மத்தின் ஆவேச சக்தியை அவராலும் தணிக்க முடியாமல் போக வீரபத்திர வடிவத்திலிருந்து ருத்ர மூர்த்தியாம் சிவபெருமான் சரபபட்சியும், மனித உடலும், மிருகமும் கலந்து ஒரு மகா பயங்கர வடிவெடுக்கின்றார்.

    சரபபட்சி என்பது சிங்கங்களை கொன்று உண்ணும் பெரிய பறவையாகும். அவர் தான் ஸ்ரீ சரபேஸ்வரர்.

    இவர் சிவபெருமானின் மறு அவதாரமாக கருதப்படுகிறார்.

    ×