search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஷ்ணு"

    • 2013 ஆம் ஆண்டு விஜய் டி.வியில் ஒளிப்பரப்பான ஆஃபிஸ் தொடரில் அறிமுகமானார் விஷ்ணு.
    • பிக் பாஸ் சீசன் 7- நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    2013 ஆம் ஆண்டு விஜய் டி.வியில் ஒளிப்பரப்பான ஆஃபிஸ் தொடரில் அறிமுகமானார் விஷ்ணு. Zee தமிழின் சத்யா தொடரில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை வென்றார்.

    2017 ஆம் ஆண்டு 'இவன் யார் என்று தெரிகிறதா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதநாயகனாக அறிமுகமானார். பின்னர், பிக் பாஸ் சீசன் 7- நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு 4-வது ரன்னரப்பாக வந்தார்.

    இந்நிலையில் அடுத்ததாக படத்தில் நாயகனாக நடிக்கவிருக்கிறார். 2018 ஆம் ஆண்டு ராகுல் ரவீந்தரன் இயக்கத்தில் வெளிவந்த சி லா சோவ் என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் விஷ்ணு முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

    சி லா சோவ் திரைப்படம் தெலுங்கு மொழியில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சென்னை மீஞ்சூர் அருகே தேவதானம் என்ற கிராமத்தில் வடஸ்ரீரங்கம் என்று ஒரு ஆலயம் உள்ளது.
    • இங்கும் ரங்கநாத பெருமாள் சயன கோலத்தில் காட்சியளிக்கிறார்.

    பஞ்சரங்கம் என்று கூட 5 தலங்களை நமது முன்னோர்கள் வரையறை செய்துள்ளனர்.

    ஸ்ரீரங்க பட்டினத்தில் உள்ள ஆலயம் ஆதிரங்கம் என்றும், திருப்பேர் நகரில் உள்ள ஆலயம் அப்பால ரங்கம் என்றும்

    ஸ்ரீரங்கத்தில் உள்ள ஆலயம் மத்திய ரங்கம் என்றும், கும்பகோணத்தில் உள்ள ஆலயம் சதுர்த்த ரங்கம் என்றும்,

    மயிலாடுதுறையில் உள்ள ஆலயம் பஞ்ச ரங்கம் என்றும் வகைப்படுத்தப்பட்டு உள்ளது.

    ஆனால் இந்த பஞ்சரங்க ஆலயங்களை தவிர மேலும் சில ரங்க ஆலயங்கள் ரங்கநாதருடன் தொடர்புடையதாக கூறப்படுகின்றன.

    சீர்காழி தாலுகாவில் மாதானைக்கு அருகே வடரங்கம் ஸ்ரீரங்கநாதர் பெருமாள் ஆலயம் உள்ளது.

    நாகை மாவட்டம் கீழையூரில் கீழரங்கம் ஸ்ரீரங்கநாதர் ஆலயம் உள்ளது.

    இந்த ஆலயம் ஸ்ரீரங்கத்துக்கு அபிமான தலமாக விளங்கும் தலமாகும்.

    திருத்துறைப்பூண்டி அருகேயும் ஆதிரங்கம் என்று ஒரு ஆலயம் உள்ளது.

    சென்னை மீஞ்சூர் அருகே தேவதானம் என்ற கிராமத்தில் வடஸ்ரீரங்கம் என்று ஒரு ஆலயம் உள்ளது.

    இங்கும் ரங்கநாத பெருமாள் சயன கோலத்தில் காட்சியளிக்கிறார்.

    • சயன கோலத்தில் பெருமாள் காட்சியளிக்கும் தலங்களில் ஸ்ரீரங்கம் ஆலயம் மிகவும் புகழ் பெற்றது.
    • இந்த ஆலயத்தை வைணவத்தின் முதல் கோவில் என்று சொல்வார்கள்.

    பொதுவாக திருமால் தமிழகம் முழுவதும் மூன்று விதமான கோலங்களில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    ஒன்று நின்ற கோலம், 2வது சயன கோலம், 3வது அமர்ந்த கோலம்.

    அவர் எடுத்த அவதாரங்கள் கணக்கிட இயலாதவை.

    அதனால் 25வது அவதாரங்கள் முக்கியமானவை என்று நமது முன்னோர்கள் வரையறுத்துள்ளனர்.

    அதிலும் தசாவதாரம் மட்டுமே தற்போது நடைமுறையில் பேசப்படுவதாக உள்ளது.

    அதிகம் தேடிச்சென்று வழிபடக் கூடியவையாகவும் அவை இருக்கின்றன.

    மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனம், பரசுராமர், ராமர், பலராமர், கிருஷ்ணர், கல்கி என்று 10 அவதாரங்களை பெருமாளின் தசாவதாரமாக சொல்கிறார்கள்.

    இந்த 10 அவதாரங்களும் நிகழ்ந்த தலங்கள் தமிழகம் முழுவதும் உள்ளன.

    இந்த அவதாரங்களுடன் தொடர்புடைய தலங்களும் நாடு முழுவதும் பரவி கிடக்கின்றன.

    இந்த தலங்களில் ஆழ்வார்களால் பாடல் பெற்று மங்களாசாசனம் செய்யப்பட்ட தலங்கள் மிக சிறப்பானதாக கருத்து உண்டு.

    அப்படி மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 தலங்கள் திவ்யதேசங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

    இந்த 108 திவ்யதேசங்களில் திருமால் 67 ஆலயங்களில் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார்.

    சயன கோலத்தில் 24 தலங்களிலும், அமர்ந்த கோலத்தில் 17 தலங்களிலும் அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்.

    சயன கோலத்தில் காட்சி அளிக்கும் 24 தலங்களில் அவர் கிழக்கு முகமாக 18 தலங்களில் உள்ளார்.

    மேற்கு முகமாக 3 தலங்களிலும், வடக்கு முகமாக 3 தலங்களிலும் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.

    இப்படி சயன கோலத்தில் பெருமாள் காட்சியளிக்கும் தலங்களில் ஸ்ரீரங்கம் ஆலயம் மிகவும் புகழ் பெற்றது.

    இந்த ஆலயத்தை வைணவத்தின் முதல் கோவில் என்று சொல்வார்கள்.

    இங்கு ரங்கநாதர் சயன கோலத்தில் இருக்கிறார்.

    இதே போன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரங்கநாதர் சயன கோலத்தில் இருக்கிறார்.

    • நாராயணா என்றால் மங்களம் தருபவர், சுபம் செய்பவர் என்று பொருள்.
    • ஓம் நமே நாராயணா என்று சொல்லிக் கொண்டே இருங்கள். நல்லது நடக்கும்.

    விஷ்ணு பிரபுவே, என் அகந்தை அழிந்து மனதில் உள்ள தீய அழுக்குகளை விரட்டுங்கள்.

    என் மீது கருணை காட்டுங்கள்.

    எப்போதும் உமையே சரண் அடையும் பாக்கியத்தை தாருங்கள் என்று தினந்தோறும் திருமாலை நினைத்து மனம் உருக வழிபட வேண்டும்.

    இந்த புத்தாண்டு, பொங்கல் திருநாளில் மகாவிஷ்ணுவை நெருங்குவதற்கான சபதத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

    விஷ்ணு என்றால் "எங்கும் நிறைந்தவர்" என்று பொருள். எனவே விஷ்ணுவை வழிபட எல்லா இடத்திலும் வாய்ப்புகள் உண்டு.

    நாம்தான் அதை பயன்படுத்திக் கொள்ளாமல் இருக்கிறோம்.

    நாராயணா என்றால் மங்களம் தருபவர், சுபம் செய்பவர் என்று பொருள்.

    ஓம் நமே நாராயணா என்று சொல்லிக் கொண்டே இருங்கள். நல்லது நடக்கும்.

    கேசவா, மாதவா, கோவிந்தா, மதுசூதனா, பத்மநாபா, தாமோதரா என்று திருமாலின் திருநாமங்களை சொல்லிக் கொண்டே போகலாம். 

    • வடக்குப் பக்கம் தாழ்வாக இருந்து, அங்கே துளசி மாடத்தை வைத்தாலும் நல்ல பலன்களே கிடைக்கும்.
    • ஒவ்வொரு வீட்டிலும் முற்றத்தில் துளசி மாடம் இருந்தால் நல்லது.

    ஒவ்வொரு வீட்டிலும் முற்றத்தில் துளசி மாடம் இருந்தால் நல்லது.

    ஆனால், பெரும்பாலும் புறா கூண்டுகளைப் போல அபார்ட்மெண்ட் வாழ்க்கையாகி விட்ட மாநகரத்தில்

    முற்றங்களை எல்லாம் கனவுகளிலும் யோசித்துக் கொண்டிருக்க முடியாது.

    அப்படிப்பட்டவர்கள் முற்றங்கள் இல்லையென்றாலும், துளசி செடியை கிழக்கு திசையில்,

    தரைமட்டத்தில் வைத்தால் நல்லது.

    இப்படி கிழக்கு திசையில் துளசி செடியை வைத்து வழிபட்டு வணங்கி வருவது

    பெண்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது.

    வடக்குப் பக்கம் தாழ்வாக இருந்து, அங்கே துளசி மாடத்தை வைத்தாலும் நல்ல பலன்களே கிடைக்கும்.

    அதே சமயம் துளசி மாடம் வீட்டு வாசலுக்குக் குத்தலாக அமையக் கூடாது.

    ஆண்டு முழுவ தும் பசுமையாக இருக்கும் மரங்களை வைத்து, வீட்டினுள் வளர்த்தால் ஆயுள் நீடிக்கும்.

    இலை உதிர்க்கும் மரங்கள் ஓரளவு தான் நற்பலனை கொடுக்கும்.

    சில மாதங்கள் மட்டுமே வாழக்கூடிய மரங்களை வளர்க்காமல் இருப்பது நல்லது.

    பொதுவாக மற்ற அனைத்து செடிகளையும்விட துளசி, அதிகளவில் ஆக்சிஜனை வெளியேற்றும் சக்தி கொண்டது.

    அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் குளித்து முடித்து, துளசியை வழிபட்டு வந்தால்,

    ஆரோக்கியமும் அதிர்ஷ்டமும் தானாய் வந்து சேரும்.

    உங்களால் வலம் வர முடியாவிட்டாலும், அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் துளசி செடியின் அருகே அமருங்கள்.

    • பெருமாள் எப்போதும் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கிறார்.
    • எனவே அவர் குளிர்ந்த தன்மையுடைவராகக் கருதப்படுகிறார்.

    பெருமாள் எப்போதும் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கிறார்.

    எனவே அவர் குளிர்ந்த தன்மையுடைவராகக் கருதப்படுகிறார்.

    அவரது உடலுக்கு உஷ்ணம் தர வேண்டும் என்ற அக்கறையில், அவரது பக்தர்கள் உடலுக்கு

    வெப்பம் தரும் துளசி மாலை அணிவிக்கிறார்கள்.

    துளசியால் அர்ச்சனை செய்கிறார்கள்.

    குளிர்ச்சியால் மனிதனுக்கு இருமல், சளி ஏற்படுகிறது.

    இதைக் குணமாக்க துளசியை சாப்பிட்டு வெப்பத்தைக் கொடுக்கிறார்கள்.

    • வீட்டில் பூஜிக்கும் சாளக்கிராமம் இருந்தால் அதையும் சேர்த்து பூஜிக்கலாம்.
    • இந்த பூஜையின் போது பால் பாயாச நைவேத்தியம் செய்வது விசேஷமானது.

    வீடுகளில் துளசி மாடம் வைத் துள்ளவர்கள் துளசி பூஜையை தினமும் அல்லது செவ்வாய், வெள்ளிகளில் செய்வதுண்டு.

    ஆனாலும், கார்த்திகை மாதம் சுக்லபட்ச துவாதசியில் விசேஷ பூஜையாக துளசி பூஜையைச் செய்வார்கள்.

    துளசிக்கு அன்று விவாகம் நடந்த நாளாகவும் கூறுவார்கள்.

    துளசியின் விசேஷ பூஜை ஐப்பசி அல்லது கார்த்திகை மாதம் சுக்லபட்ச துவாதசியன்று பிருந்தாவன பூஜையாக விமரிசையாக செய்யப்படுகிறது.

    துளசி மாடத்தில் நெல்லி மரக்குச்சியை நட்டு, மகா விஷ்ணுவை ஆவாகனம் செய்து ஷோட சோபசாரங்கள் செய்ய வேண்டும்.

    வீட்டில் பூஜிக்கும் சாளக்கிராமம் இருந்தால் அதையும் சேர்த்து பூஜிக்கலாம்.

    இந்த பூஜையின் போது பால் பாயாச நைவேத்தியம் செய்வது விசேஷமானது.

    • கோவில்களிலும், நீர் நிலத்தின் கரைகளிலும், பாறை இடுக்குகளிலும் துளசி முளைத்திருக்கும்.
    • துளசியை விஷ்ணுவின் மனைவி என்பார்கள்.

    கோவில்களிலும், நீர் நிலத்தின் கரைகளிலும், பாறை இடுக்குகளிலும் துளசி முளைத்திருக்கும்.

    துளசியை விஷ்ணுவின் மனைவி என்பார்கள்.

    ஏனெனில் அவனது மார்பில் என்றும் நீங்கா இடம் பெற்றிருப்பது துளசி மாலை. துளசியை

    பூமாதேவியின் வேதாரமாகக் கருதி பறிக்க வேண்டும்.

    விஷ்ணு சேவைக் கும், குழந்தைகள், நோயாளிகளுக்கு மருந்தாகவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    இதன் ஒரு துளியைக் கூட வீணாக்கக்கூடாது. தேவையான அளவு மட்டுமே பறிக்க வேண்டும்.

    • கருந்துளசி விசேஷ குணமுடையது.
    • நாய்த்துளசி என்ற ரகமும் சளியைக் குணமாக்கும் சக்தி கொண்டது.

    கருந்துளசி விசேஷ குணமுடையது.

    இதன் சாறை இரும்புக் கரண்டியில் சுட வைத்து, தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் கபக்கட்டு, காய்ச்சல்

    முதலானவை நீங்கும்.

    நாய்த்துளசி என்ற ரகமும் சளியைக் குணமாக்கும் சக்தி கொண்டது.

    தீராத தொண்டைக்கட்டு, வலி நீங்க...

    தினமும் துளசி இலையை காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக மென்று சாறு இறக்கினால், சளி,

    தொண்டைக்கட்டு நீங்கும்.

    உடலில் உள்ள நச்சுத்தன்மையும் நீங்கும்.

    10 துளசியிலை எடுத்து அதனுடன் 5 மிளகு சேர்த்து நசுக்கி 2 டம்ளர் நீர்விட்டு அரை டம்ளராக சுண்டக்காய்ச்சி

    கஷாயம் செய்து சூடாக அருந்தி, பிறகு சிறிது எலுமிச்சை சாறு அருந்தி விட்டு நல்ல கம்பளி கொண்டு உடல்

    முழுவதும் போர்த்தி விட்டால் மலேரியா காய்ச்சல் படிப்படியாக குறையும்.

    • மேலைநாட்டு வீட்டு மருத்துவர் ஆப்பிள்...
    • தமிழ்நாட்டு வீட்டு மருத்துவர் துளசி...

    மேலைநாட்டு வீட்டு மருத்துவர் ஆப்பிள்...

    தமிழ்நாட்டு வீட்டு மருத்துவர் துளசி...

    ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.

    அது தினம் ஒரு ஆப்பிளை சாப்பிட்டு வந்தால் அவர் மருத்துவரை வாழ்நாள் முழுவதும் பார்க்க வேண்டிய நிலை வராது.

    தமிழர்களின் முதுமொழி மற்றும் தமிழர்களாகிய நாம் மறந்த பழமொழி நான்கு துளசி இலைகளை தினமும் ஒருவர்

    சாப்பிட்டு வந்தால் மருத்துவரை அவர் வாழ்நாள் முழுவதும் பார்க்க வேண்டிய அவசியம் கட்டாயம் இருக்காது.

    துளசி ஒரு சர்வரோக நிவாரணி.

    • நோயற்ற வாழ்க்கைக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் 4 துளசி இலைகளை தினம் தவறாமல் உண்ண வேண்டும்.
    • துளசி இலைகளில் நோயை எதிர்க்கும் குணம் அதிக அளவில் உள்ளது.

    துவர்ப்பு மற்றும் கசப்பு சுவை கொண்ட துளசியை ஒருவர் தினமும் தின்று வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

    துளசி இலைகளில் நோயை எதிர்க்கும் குணம் அதிக அளவில் உள்ளது.

    நோயற்ற வாழ்க்கைக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் 4 துளசி இலைகளை தினம் தவறாமல் உண்ண வேண்டும்.

    துளசி செடியில் இருந்து 4 துளசி இலைகளை இளம் கொத்தாக பறித்து தினம் நாம் சாப்பிடும்போது நம் ஆரோக்கிய வாழ்க்கைக்கு அது அடித்தளமாக அமையும்.

    • சிலர் கருந்துளசியை பயன்படுத்தக் கூடாது என்பார்கள்.
    • பச்சையும் சிறிதே வெண்மையும் கலந்த துளசியை வெண் துளசி என்பர்.

    சிலர் கருந்துளசியை பயன்படுத்தக் கூடாது என்பார்கள்.

    இது தவறான வாதம்.

    துளசி கருமையாக மாறியிருந்தால் இது கிருஷ்ண துளசி எனப்படும்.

    இந்த வகை துளசியை கிருஷ்ணணுக்கு மாலையாக அணிவிக்கலாம்.

    வீட்டில் கண்ணன் சிலை வைத்திருந்தால் அவருக்கு சூட்டலாம்.

    பச்சையும் சிறிதே வெண்மையும் கலந்த துளசியை வெண் துளசி என்பர்.

    இதை ராமபிரானுக்கு மாலையாக சூட்டவேண்டும்.

    இது தவிர செந்துளசி என்ற அரிய ரகமும் உண்டு.

    ×