search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vaikunta ekadasi"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரெங்கநாச்சியாருக்கு வைகுண்ட ஏகாதசி விழா வருகிற 22-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
    • ரெங்கநாச்சியார் திருவாபரணங்கள் அணிந்து திருவாய்மொழி மண்டபத்தில் எழுந்தருளினார்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பெருமாளுக்கு நடத்தப்படும் விழாக்கள் அனைத்தும் தாயாருக்கும் நடத்தப்படும். அதன்படி உற்சவர் நம்பெருமாள் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவுபெற்றதை தொடர்ந்து கடந்த 13-ந் தேதி முதல் உற்சவர் ரெங்கநாச்சியாருக்கு வைகுண்ட ஏகாதசி விழா, பகல் பத்து உற்சவ முதல் நாள் நிகழ்ச்சியுடன் தொடங்கி வருகிற 22-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. இதில் பகல் பத்து உற்சவம் 5 நாட்கள் நடைபெற்றது. பகல் பத்து உற்சவ நாட்களில் ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்தவாறே இரண்டாயிரம் திருவாய்மொழி பாசுரங்களை தினமும் மாலையில் கேட்டருளினார்.

    இதைத்தொடர்ந்து ராப்பத்து உற்சவம் எனப்படும் திருவாய்மொழித்திருநாள் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று ரெங்கநாச்சியார் சவுரிக்கொண்டை, அர்த்த சந்திரா, நெற்றிச்சரம், வைரத்தோடு, வைர அபய ஹஸ்தம், பருத்திக்காய் காப்பு மாலை, 6 வடம் முத்துச்சரம், பங்குனி உத்திரப்பதக்கம், அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து திருவாய்மொழி மண்டபத்தில் எழுந்தருளினார்.

    முன்னதாக மூலஸ்தானத்தில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு திருவாய்மொழி மண்டபத்தை வந்தடைந்தார். அங்கு அலங்காரம், கோஷ்டி வகையறா கண்டருளி திருவாய்மொழி பாசுரங்களை கேட்டருளினார். பின்னர் அங்கிருந்து ரெங்கநாச்சியார் இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்த விழா வருகிற 22-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
    • பகல் பத்து உற்சவம் 5 நாட்களும், ராப்பத்து உற்சவம் 5 நாட்களும் நடைபெறும்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பெருமாளுக்கு நடத்தப்படும் விழாக்கள் அனைத்தும் தாயாருக்கும் நடத்தப்படும். அதன்படி உற்சவர் நம்பெருமாள் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெற்றதை தொடர்ந்து இன்று முதல் உற்சவர் ரெங்கநாச்சியாருக்கு வைகுண்ட ஏகாதசி விழா, பகல் பத்து உற்சவம் முதல் நாள் நிகழ்ச்சியுடன் தொடங்கி, வருகிற 22-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.

    பகல் பத்து உற்சவம் 5 நாட்களும், ராப்பத்து உற்சவம் 5 நாட்களும் நடைபெறும். இன்று முதல் ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்தவாறே பகல் பத்து உற்சவமான இரண்டாயிரம் திருமொழி பாசுரங்களை 5 நாட்கள் தினமும் மாலையில் கேட்டருளுவார்.

    ராப்பத்து உற்சவம் எனப்படும் திருவாய்மொழி திருநாள் வருகிற 18-ந் தேதி தொடங்கி 22-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த 2-ந் தேதி மட்டும் 2 லட்சத்து 16 ஆயிரத்து 39 பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    • தினமும் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த மாதம் 22-ந் தேதி தொடங்கிய வைகுண்ட ஏகாதசி விழா நேற்று காலை நம்மாழ்வார் மோட்சத்துடன் நிறைவு பெற்றது.

    வைகுண்ட ஏகாதசி விழா தொடக்க நாள் முதல் நேற்று வரை 20 நாட்களில் 14 லட்சத்து 45 ஆயிரத்து 289 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதில் சொர்க்கவாசல் திறக்கப்பட்ட கடந்த 2-ந் தேதி மட்டும் 2 லட்சத்து 16 ஆயிரத்து 39 பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடந்த மாதம் 23-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை மூலவர் ரெங்கநாதர் முத்தங்கியில் சேவை சாதித்தார். இதை காண தினமும் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மேலும் சிறப்பு கட்டண சீட்டு முறையும் அமல்படுத்தப்பட்டு இருந்தது.

    மூலவரை தரிசிக்க நடப்பு ஆண்டு ரூ.1 கோடியே 92 லட்சத்து 93 ஆயிரத்து 600-க்கு கட்டண சீட்டு விற்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வைகுண்ட ஏகாதசி விழா கடந்த மாதம் 22-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது.
    • இன்று அதிகாலை 4 மணி முதல் காலை 5 மணி வரை சாற்றுமறையும் நடைபெற்றது.

    பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த மாதம் 22-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் கடந்த 2-ந் தேதி நடைபெற்றது. ராப்பத்து உற்சவத்தின் 7-ம் நாளன்று திருக்கைத்தல சேவையும், 8-ம் நாளன்று திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    10-ம் நாளான நேற்று முன்தினம் நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து நம்பெருமாள் நேற்று முன்தினம் இரவு முழுவதும் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி ஆழ்வார்கள், ஆச்சார்யர்களுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    இதைத்தொடர்ந்து நேற்று நம்பெருமாள், நம்மாழ்வாருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    இதைத்தொடர்ந்து மூலஸ்தானத்தில் இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை இயற்பா பிரபந்தம் தொடங்கியது.

    அதன் தொடர்ச்சியாக இரவு 9 மணி முதல் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2 மணி வரை சந்தனு மண்டபத்தில் இயற்பா பிரபந்த சேவை நடைபெற்றது. மேலும் அதிகாலை 2 மணி முதல் அதிகாலை 4 மணி வரை திருவாராதனம் வகையறாவும், அதிகாலை 4 மணி முதல் காலை 5 மணி வரை சாற்றுமறையும் நடைபெற்றது. அத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெற்றது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் பெருமாள் புறப்பாடு நடந்தது.
    • தீவட்டி பரிவாரங்களுடன் சுவாமி புறப்பாடு தினமும் நடந்தது.

    மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில்,மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலிலும், கடந்த மாதம் 23-ந் தேதி பகல் பத்து உற்சவம் தொடங்கியது. இதில் இரண்டு கோவில்களிலும் மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் சுவாமி புறப்பாடு தினமும் நடந்தது.

    இதில் கடந்த 2-ந் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறக்கும் விழா நடந்தது. பின்னர் 9-ந் தேதி திருவேடர் பரிவிழா நடந்தது. இதில் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் பெருமாள் புறப்பாடு நடந்தது. இந்த விழா 10 நாட்கள் நடந்து முடிந்தது, பின்னர் ராப்பத்து திருவிழா நேற்று 11-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெற்றது.

    இத்துடன் இந்த மார்கழி மாத திருவிழா இரு கோவில்களிலும் நிறைவு பெற்றது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    மேலும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் ராப்பத்து நிகழ்ச்சி 10-ம் நாளான நேற்று சிறப்பு அலங்காரத்தில் கூடழலகர் பெருமாள் கோவிலில் வியூக சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 6 லட்சத்து 9 ஆயிரத்து 219 பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
    • ரூ.39.40 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 2-ந் தேதி அதிகாலை வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

    தொடர்ந்து 10 நாட்கள் பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக அனுமதிக்கப்பட்டனர்.

    வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் தரிசனம் நேற்று இரவு நிறைவடைந்தது. இதையடுத்து அர்ச்சகர்கள் சாஸ்திரப்படி வைகுண்ட வாசலை அடைத்தனர்.

    வைகுண்ட ஏகாதசி நாட்களான 2-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் ரூ 300 ஆன்லைன் டிக்கெட்டில் 25 ஆயிரம் பேரும், இலவச தரிசனத்தில் 50 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன.

    வைகுண்ட ஏகாதசி முதல் நாள் அன்று முன்னாள் முதலமைச்சர்கள், அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள், நீதிபதிகள் உட்பட ஏராளமானோர் தரிசனம் செய்தனர். இதனால் அன்று ஒரே நாளில் ரூ.7.68 கோடி உண்டியல் வருவாய் கிடைத்தது.

    இலவச தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்களில் 2.50 லட்சம் பேர் தரிசனத்திற்கு வரவில்லை. இதனால் வைகுண்ட ஏகாதசி நாட்களில் தரிசனத்திற்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது.

    வைகுண்ட ஏகாதசி 10 நாட்களில் 6 லட்சத்து 9 ஆயிரத்து 219 பக்தர்கள் தரிசனம் செய்தனர். ரூ.39.40 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    திருப்பதியில் நேற்று 68,855 பேர் தரிசனம் செய்தனர். 21,280 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.61 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சொர்க்க வாசல் திறப்பு அன்று மட்டும் 2 லட்சத்து 16 ஆயிரத்து 39 பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    • கடந்த 7 நாட்களில் ராப்பத்து உற்சவத்தில் 7.35 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

    பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த டிசம்பர் மாதம் 22-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. 23-ந்தேதியிலிருந்து பகல் பத்து உற்சவம் தொடங்கி நடந்தது. பகல் பத்து உற்சவத்தின்போது ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து வெவ்வேறு அலங்காரங்களில் புறப்பாடாகி அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். ஒவ்வொரு நாளும் அரையர்கள் சேவையுடன் நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    பகல் பத்து உற்சவத்தின் 10 நாட்களில் மொத்தம் 4 லட்சத்து 99 ஆயிரத்து 87 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 10-ம் நாள் மோகினி அலங்காரத்தில் நம்பெருமாளை தரிசிக்க 81 ஆயிரத்து 754 பக்தர்கள் குவிந்தனர். இதைத்தொடர்ந்து வைகுண்ட ஏகாதசி ராப்பத்து உற்சவம் கடந்த 2-ந்தேதி தொடங்கியது. 7-ம் திருநாளான நேற்று திருக்கைத்தல சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 7 நாட்களில் ராப்பத்து உற்சவத்தை 7 லட்சத்து 34 ஆயிரத்து 955 பேர் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்துள்ளனர்.

    ராப்பத்து உற்சவத்தில் முதல் நாள் நம்பெருமாள் பரமபத வாசல் வழியாக எழுத்தருளினார். நம்பெருமாளுடன் சேர்ந்து சொர்க்கவாசலை கடந்தால் சொர்க்கத்தை அடையலாம் என்ற நம்பிக்கையின் காரணமாக ஏராளமான அன்று மட்டும் 2 லட்சத்து 16 ஆயிரத்து 39 பக்தர்கள் கலந்து கொண்டனர். வைகுண்ட ஏகாதசி விழா தொடக்க நாள் முதல் நேற்று வரை 17 நாட்களில் 12 லட்சத்து 34 ஆயிரத்து 42 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்ப சுவாமிக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.
    • தூப தீப நெய்வேத்தியம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடந்து வருகிறது. வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் துவாதசி விழா நடைபெறும். அதன்படி நேற்று துவாதசியையொட்டி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. முன்னதாக கோவிலில் இருந்து ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்ப சுவாமி, சுதர்சன சக்கரத்தாழ்வார் திருமாட வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கோவில் முக மண்டபத்தில் உள்ள பூவராஹ சுவாமியை கோவிலுக்கு கொண்டு வந்தனர்.

    பின்னர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்ப சுவாமிக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பிறகு புஷ்கரணியில் தீர்த்தவாரி நடந்தது. இதில் விஸ்வக்சேனாராதனம், புண்யாஹவச்சனம், தூப தீப நெய்வேத்தியம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு புனிதநீராடினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2021-ம் ஆண்டு கார்த்திகை மாதத்தில் தான் வைகுண்ட ஏகாதசி நடைபெற்றது.
    • இது 19 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நிகழும்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலை பொறுத்தவரை ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகமம் முறைப்படி நாள், நட்சத்திரம், திருவிழாக்கள் கணிக்கப்படுகின்றன. ஸ்ரீரங்கம் கோவிலில் கார்த்திகை மாதத்தில் முன்கூட்டியே வரும் ஏகாதசி, கைசிக ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.

    மார்கழியில் வரும் ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி எனப்படுகிறது. பொதுவாக மார்கழி மாதத்திலேயே பகல் பத்து உற்சவமும், ராப்பத்து உற்சவமும் கொண்டாடப்படும். சில சமயங்களில் மார்கழி மாத கடைசியில் வைகுண்ட ஏகாதசியும், மறுநாள் தைத்திருநாளும் வந்தால், தை பிரம்மோற்சவம் கொண்டாட ஏதுவாக, வைகுண்ட ஏகாதசி உற்சவம் கார்த்திகை மாதத்துக்கு மாற்றி அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    அதன்படி கடந்த 2021-ம் ஆண்டு கார்த்திகை மாதத்தில் தான் வைகுண்ட ஏகாதசி உற்சவம் நடைபெற்றது. கார்த்திகை மாதத்தில்தான் பரமபத வாசலும் திறக்கப்பட்டது. இது 19 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நிகழும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 11-ந்தேதி வரை சொர்க்கவாசல் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதி
    • தள்ளு முள்ளு இன்றி பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதியில் நேற்று நள்ளிரவு 12.05 மணி அளவில் சிறப்பு பூஜைகள் செய்து சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

    பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், நீதிபதிகள், முதன்மைச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சொர்க்கவாசல் வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    காலை 5 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீ வாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் தரிசனம் செய்தனர்.இதையடுத்து ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் பெற்றவர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    வரும் 11-ந் தேதி வரை தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டில் 20 ஆயிரம் பேரும், இலவச தரிசன டிக்கெட்டில் 50 ஆயிரம் பேரும், ஸ்ரீவாணி அறக்கட்டளையின் சார்பில் 2 ஆயிரம் பேர் என மொத்தம் 8 லட்சம் டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் வைகுண்ட ஏகாதசி முதல் நாளான நேற்று இலவச தரிசன டிக்கெட் மற்றும் பல்வேறு சேவை டிக்கெட்களை பெற்ற 13 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு வரவில்லை. 13 ஆயிரம் பேர் தரிசனத்திற்கு வராததால் தள்ளு முள்ளு இன்றி பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    நேற்று நாடு முழுவதிலிருந்து ஏராளமான முக்கிய பிரமுகர்கள் தரிசனம் செய்ததால் முன்பு எப்போதும் இல்லாத வகையில் திருப்பதி வரலாற்றில் முதல்முறையாக ஒரே நாளில் ரூ.7.68 கோடி உண்டியல் வசூலானது. 69,414 பேர் தரிசனம் செய்தனர். 18,612 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

    இதற்கு முன்பு ஒரே நாளில் அதிகபட்சமாக ரூ.6 கோடிக்கு மேல் உண்டியல் வசூலாகியிருந்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print