என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பதி கோவில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் இன்று ஒதுக்கீடு- செல்போனில் பதிவிறக்கம் செய்யலாம்
    X

    திருப்பதி கோவில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் இன்று ஒதுக்கீடு- செல்போனில் பதிவிறக்கம் செய்யலாம்

    • டோக்கன்கள் இல்லாத பக்தர்கள் மீதமுள்ள 7 நாட்களுக்கு நேரடியாக அனுமதிக்கப்படுவார்கள்.
    • டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு வருகிற 5-ந்தேதி ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் 30-ந் தேதி முதல் ஜனவரி 8-ந் தேதி வரை வைகுண்ட ஏகாதசி தரிசனம் நடைபெற உள்ளது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக முதல் 3 நாட்களுக்கு ஆன்லைனில் டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான டிக்கெட் ஆன்லைன் மூலம் வெளியிடப்பட்டது.

    கடந்த 27-ம் தேதி தொடங்கிய பதிவு நேற்று மாலை 5 மணிக்கு முடிந்தது. மொத்தம் 24,05,237 பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இன்று மதியம் 2 மணிக்கு ஆன்லைன் குலுக்கல் முறையில் பக்தர்களுக்கு தரிசன டிக்கெட ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்களுக்கு செல்போன் மூலம் ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதில் உள்ள இணைப்பைத் திறந்து இலவச டோக்கன்களை பதிவிறக்கம் செய்யலாம்.

    டிசம்பர் 30-ந் தேதிக்கு 57 ஆயிரம் டோக்கன்களும், 31-ம் தேதிக்கு 64 ஆயிரமும், ஜனவரி 1-ம் தேதிக்கு 55 ஆயிரம் பக்தர்களுக்கு டிக்கெட் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    டோக்கன்கள் இல்லாத பக்தர்கள் மீதமுள்ள 7 நாட்களுக்கு நேரடியாக அனுமதிக்கப்படுவார்கள். அதே நேரத்தில், ரூ.1,000 தரிசனம் டிக்கெட் ஒதுக்கீடு ஒரு நாளைக்கு 15,000 என்ற விகிதத்திலும், ரூ.300 சிறப்பு நுழைவு தரிசனங்களும் 1,000 ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகளும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    இந்த டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு வருகிற 5-ந்தேதி ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

    Next Story
    ×