என் மலர்
நீங்கள் தேடியது "சக்கரம்"
- அமிர்தம் கிடைப்பதற்காக அசுரர்களும், தேவர்களும் இணைந்து, திருப்பாற்கடலைக் கடைந்தனர்.
- கயிலாயம் சென்ற சலந்தரன், சிவபெருமானை யுத்தத்திற்கு அழைத்தான்.
மகாவிஷ்ணுவின் கையில் பல ஆயுதங்கள் உண்டு. அவற்றில் முக்கியமானவை, சங்கு- சக்கரம். இவை இரண்டும் கொண்டிருப்பதால் விஷ்ணுவை, 'சங்கு சக்கரதாரி' என்றும் அழைப்பார்கள். காக்கும் கடவுளான விஷ்ணு, சிவபெருமானை நினைத்து வழிபாடு செய்ததன் பலனாக, இந்த சங்கு - சக்கரத்தைப் பெற்றார். அது பற்றி இங்கே பார்க்கலாம்.
சங்கு பெற்ற கதை
அமிர்தம் கிடைப்பதற்காக அசுரர்களும், தேவர்களும் இணைந்து, திருப்பாற்கடலைக் கடைந்தனர். அப்போது கடலுக்குள் இருந்து முதலில் ஆலகால விஷமும், அதன் பின்னர் பல்வேறு தெய்வீக பொருட்களும், தெய்வ கன்னிகளும், தேவதைகளும், சில உப தெய்வங்களும் கூட வெளிவந்தனர். அப்படி கடலில் இருந்து தோன்றிய அற்புதப் பொருட்களில் ஒன்றுதான், சங்கு. பாற்கடலில் தோன்றிய இந்தச் சங்கு 'நமசிவாய' என்ற பஞ்சவனான (ஐந்தெழுத்தன்) பரம்பொருளை அடைந்ததால், 'பாஞ்ச ஜன்யம்' எனப்பெயர் பெற்றது.
ஈசனின் திருக்கரத்தில் இருந்த அந்த சங்கினைப் பெற, விஷ்ணு விருப்பம் கொண்டார். அதற்காக சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து, காலம் தவறாமல் சிவ பூஜை செய்தார். பல காலம் செய்த பூஜையின் பலனாக, விஷ்ணுவுக்கு ஈசனால் சங்கு வழங்கப்பட்டது. இப்படி ஈசனிடம் இருந்து விஷ்ணு சங்கை பெற்ற தலம், 'திருசங்கை மங்கை' என்று வழங்கப்படுகிறது. இந்த ஆலயத்தில் எழுந்தருளியுள்ள ஈசனுக்கு சங்கநாதர், சங்கேசுவரர் ஆகிய பெயர்கள் உள்ளன.
சக்கரம் பெற்ற கதை
சமுத்திர ராஜனுக்கும், கங்காதேவிக்கும் பிறந்தவன், சலந்தரன். இவன் தன் செய்கையின் காரணமாக அசுரனாக வளர்ந்தான். தன் தவ வலிமையால் தேவர்களை துன்புறுத்தி வந்தான். இந்திரனை ஓடஓட விரட்டிய சலந்தரன், படைப்புக் கடவுளான பிரம்மனையும் தாக்க முற்பட்டான். அவனிடம் இருந்து தப்பிய பிரம்மன், விஷ்ணுவிடம் சரணடைந்தார். இதையடுத்து சலந்தரனுடன் விஷ்ணு போரிட்டார். இருவராலும் ஒருவரை ஒருவர் வெல்லவும் முடியவில்லை, கொல்லவும் முடியவில்லை. இருவரும் களைப்படைந்தனர்.
பின்னொரு நாளில் கயிலாயம் சென்ற சலந்தரன், சிவபெருமானையும் யுத்தத்திற்கு அழைத்தான். அப்போது ஈசன், "உனக்கு ஒரு சோதனை வைக்கிறேன். அதில் வென்றால் உன்னுடைய போரிடுகிறேன்" என்றார். சலந்தரனும் ஒப்புக்கொண்டான். உடனே சிவபெருமான், தரையில் தன் கால் கட்டை விரலால் ஒரு வட்டம் வரைந்தார். பின்னர் "இந்த வட்டத்தை தூக்கு பார்க்கலாம்" என்றார். சலந்தரனும் அந்த வட்டத்தை பெயர்த்து எடுத்து, தன் தலை மீது வைத்தான். அப்போது அந்த வட்டம், சக்கரமாக மாறி சுழலத் தொடங்கியது. அது சலந்தரனின் உடலை துண்டு துண்டாக வெட்டி வீசியது.
சிவபெருமானால் உருவான அந்த சக்கரம் எதிர்காலத்தில் பயன்படும் என்று கருதிய விஷ்ணு, அதனைப் பெறுவதற்காக பூலோகத்தில் வீழிச்செடிகள் நிறைந்த ஒரு இடத்தில் (திருவீழிமிழலை) லிங்க வடிவில் இருந்த சிவபெருமானை பூஜித்தார். தினமும் ஆயிரம் தாமரை மலர்களால் பூஜை செய்தார். ஒரு நாள், ஆயிரம் பூவில் ஒரு பூ குறைந்தது. உடனே விஷ்ணு சற்றும் யோசிக்காமல் தன்னுடைய கண்களில் ஒன்றை தோண்டி எடுத்து, அதனை மலராக கருதி, சிவனுக்கு பூஜை செய்தார். அந்த பக்தியால் மகிழ்ந்த சிவபெருமான், உலகிலேயே அதிக சக்தி வாய்ந்த சக்கரத்தை, விஷ்ணுவுக்கு வழங்கினார்.
- கோவையில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார்.
- பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் படுகாயம்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி ரெயில்வே சாலை பகுதியை சேர்ந்தவர் வீரமணி. இவரது மகன் ஷியாம் சுந்தர் (வயது 23). இவர் கோவையில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் நேற்று திருத்துறைப்பூண்டி ரெயில்வே கேட் அருகில் புதிய பஸ் நிலையத்துக்கு செல்வதற்காக அரசு பஸ்சில் ஏற முயன்றபோது கீழே தவறி விழுந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் படுகாயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குபதிவு செய்து அரசு பஸ் டிரைவர் கார்த்திகேயனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தேரின் சக்கரங்களில் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.
- தியாகராஜர், அம்பாள், முருகன், விநாயகர், சண்டிகேஸ்வரர் தேர்கள் என மொத்தம் 5 தேர்கள் வடம் பிடிக்கப்படும்.
திருவாரூர்:
சைவ சமய தலங்களில் முதன்மை தலமாகவும் சர்வதோச பரிகார தலமாகவும் விளங்குவது புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயில்.
இந்த கோவிலின் பங்குனி உத்திர திருவிழா கடந்த மார்ச் 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
இந்த பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழித் தேரோட்டம் வரும் நாளை ஏப்ரல் 1ஆம் தேதி நடை பெற உள்ளது.
பிரசித்தி பெற்ற இந்த திருவாரூர் தேர் ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேராகும்.
சாதாரணமாக இந்த தேர் 36 அடி உயரமும் 36 அடி அகலமும் கொண்டது. நான்கு ராட்சச இரும்பு சக்கரங்களுடன் சேர்த்து இதன் எடை சுமார் 220 டன்னாக இருக்கிறது.
இந்த தேரின் சக்கரங்களில் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த தேரின் மேல் கட்டுமானம் மூங்கில்கள் மற்றும் பனஞ்சப்பைகள் கொண்டு 48 அடி உயரத்திற்கு கட்டுமான பணி நடைபெற்றுள்ளது.
அதற்கு மேல் 12 அடி உயரத்திற்கு சிகரம்.
அதற்கு மேல் 6 அடி உயரத்திற்கு தேர் கலசம் என மொத்தம் 96 அடி உயரத்தில் இந்த தேர் கட்டப்பட்டுள்ளது. அலங்கரிக்கப்பட்ட பின் தேரின் எடை சுமார் 300 டன் ஆகும்.
முன்பகுதியில் 33 அடி நீளமும் 11 அடி உயரமும் கொண்ட நான்கு மர குதிரைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பெரிய தேர் எனப்படும் தியாகராஜ சுவாமி தேர், அம்பாள் தேர், முருகர் தேர், விநாயகர் தேர், சண்டிகேஸ்வரர் தேர் என மொத்தம் ஐந்து தேர்கள் உள்ளது.
இந்த தேரோட்டத்தின் போது தேரை நிறுத்துவதற்காக 600 முட்டுக்கட்டைகள் பயன்படுத்தப்படுகிறது.
இந்த முட்டுக்கட்டைகள் புளிய மரக்கட்டையால் ஆனவை.
நாளை காலை 5.30 மணிக்கு முருகர், விநாயகர் தேர்கள் இழுக்கப்படுகிறது.
பின்னர் 7.30 மணிக்கு பெரிய தேர் எனப்படும் தியாகராஜ சுவாமி தேர் இழுக்கப்படுகிறது.
இதனை கலெக்டர் சாருஸ்ரீ தொடங்கி வைக்கிறார்.
தேர் பாதுகாப்பு பணியில் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமையில் சுமார் 1500 போலீசார் ஈடுப்பட்டு உள்ளனர்.
தேர் திருவிழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் விழா கோலம் பூண்டுள்ளது.
- கனகராஜ் திருச்சி மெயின் ரோட்டில் உள்ள கூகையூர் கிராமத்தில் டிராக்டர் ஓர்க்ஷாப் நடத்தி வருகிறார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
சேலம் மாவட்டம் கங்க வல்லி வட்டம் நடுவலூர் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் (வயது 45). டிராக்டர் மெக்கானிக். இவருக்கு திருமணமாகி ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர் திருச்சி மெயின் ரோட்டில் உள்ள கூகையூர் கிராமத்தில் டிராக்டர் ஓர்க்ஷாப் நடத்தி வருகிறார். ஓர்க்ஷாப்பின் வாசலில் டிராக்ட ரை நிறுத்திவிட்டு முன்பக்கமாக நேற்று பழுதுபார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த சாலையில் வந்த வாகனம் டிராக்டரின் பின்னால் மோதியது. இதில் டிராக்டர் சக்கரத்தில் சிக்கிய கனக ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கனகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்கு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறிது நேரத்திலேயே விமானம் அவசராக தரையிறக்கப்பட்டது.
- விமானத்தில் 249 பேர் இருந்ததாக யுனைடெட் ஏர்லைன்ஸ் தெரிவித்தது.
அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானமான போயிங் 777 ஜெட்லைனர் ஜப்பானுக்குப் புறப்பட்டது.
விமானம் டேக் ஆஃப் ஆன சில நொடிகளில் திடீரென விமானத்தின் சக்கரம் ஒன்று கழன்று கீழே விழுந்தது. இதில், விமான நிலைய ஊழியர்கள் பயன்படுத்தும் கார் பார்க்கிங்கிற்குள் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் சேதமடைந்தன.
இதுகுறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சிறிது நேரத்திலேயே விமானம் அவசராக தரையிறக்கப்பட்டது.
இந்த விமானத்தில் 249 பேர் இருந்ததாக யுனைடெட் ஏர்லைன்ஸ் தெரிவித்தது.
போயிங் 777 விமானத்தில், தரையிறங்கும் ஸ்ட்ரட்கள் ஒவ்வொன்றிலும் ஆறு சக்கரங்களைக் கொண்டுள்ளது. இதில், சக்கரம் காணாமல் போனாலோ அல்லது சேதமடைந்தாலோ பாதுகாப்பாக தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனால், பயணிகள் பாதுகாப்பாக தரையிறங்கினர்.
- போலீசார் தகராறில் ஈடுபட்ட வாலிபர் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்
- வீட்டில் இருந்து பொருட்கள் வாங்குவதற்காக குழித்துறை வந்தபோது விபத்து
நாகர்கோவில்:
குழித்துறை அருகே ஈத்தவிளை பகுதியை சேர்ந்தவர் முத்தையன் (வயது 63). இவர் நேற்று இரவு வீட்டில் இருந்து பொருட்கள் வாங்குவதற்காக குழித்துறை வந்தார்
பின்னர் பொருட்கள் வாங்கிவிட்டு முத்தையன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். கோணம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது முத்தையனை அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீஜித் (27) தடுத்து நிறுத்தி தகராறு செய்தார். அப்போது முத்தையனிடம் ஸ்ரீஜித் குடிக்க பணம் கேட்டார்.முத்தையன் பணம் கொடுக்காததால் அவரை பிடித்து ஸ்ரீஜித் கிழே தள்ளியுள்ளார்.இதில் முத்தையன் நிலை தடுமாறி சாலையில் கீழே விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் முத்தையன் மீது மோதியது.இதில் படுகாயம் அடைந்த முத்தையன் உயிருக்கு போராடினார்.இதை பார்த்த பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
முத்தையனை பரி சோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து களியக்காவிளை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் சம்பவத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி னார்கள். இதுகுறித்து முத்தையன் மகன் சுஜின் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ஸ்ரீஜித் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.






