search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பஸ்சில் ஏற முயன்ற வாலிபர் தவறி விழுந்து சாவு
    X

    பலியான ஷியாம் சுந்தர்

    பஸ்சில் ஏற முயன்ற வாலிபர் தவறி விழுந்து சாவு

    • கோவையில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார்.
    • பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் படுகாயம்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி ரெயில்வே சாலை பகுதியை சேர்ந்தவர் வீரமணி. இவரது மகன் ஷியாம் சுந்தர் (வயது 23). இவர் கோவையில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில் நேற்று திருத்துறைப்பூண்டி ரெயில்வே கேட் அருகில் புதிய பஸ் நிலையத்துக்கு செல்வதற்காக அரசு பஸ்சில் ஏற முயன்றபோது கீழே தவறி விழுந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் படுகாயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குபதிவு செய்து அரசு பஸ் டிரைவர் கார்த்திகேயனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×