search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Patugayam"

    • வேதாரண்யம் -கரியாப்பட்டினம் சாலையில் கருங்கல் ஏற்றிய லாரி வந்து கொண்டிருந்தது.
    • அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்தரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுக்காட்டுதுறை மீனவ கிராமத்தில் ரூ.150 கோடி செலவில் படகு நிறுத்த தூண்டில் முள் வளைவு கட்டும் பணி கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகிறது .

    இதற்காக புதுக்கோ ட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து நாள்தோறும் 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் கருங்கல் ஏற்றி வந்து ஆறுகாட்டுதுறை கடலில் கொட்டி துண்டு முள் வளைவு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை மணக்காடு பகுதியில் வேதாரண்யம் -கரியாப்பட்டினம் சாலையில் திருச்சியில் இருந்து கருங்கல் ஏற்றி லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக கார் வந்தது.

    திடீரென எதிர்பா ராதவிதமாக லாரி- கார் நேருக்கு நேர் மோதி கொண்டன.

    இதில் லாரி தலைகுப்புற கவிழ்ந்து அதில் இருந்த கருங்கற்கள் சாலையில் சிதறின. விபத்தில் டிரைவர் முத்து பலத்த காயம் அடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்க ப்பட்டது. இமு பற்றி கரியா பட்டி னம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.

    • நூற்பாலை தொழிலாளர்கள் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
    • இந்த விபத்து பற்றிய புகாரின் பேரில் கீழ ராஜகுல ராமன் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஒரு தனியார் நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இங்கு வேலை செய்யும் தொழி லாளர்களை வேன் மூலம் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒருவேனை தென்காசி அருகே உள்ள மலையன்குளத்தைச் சேர்ந்த சங்கர்மணி(வயது 35) என்பவர் ஓட்டி வருகிறார்.

    அவர் நேற்று மாலை வேலை முடிந்து வீடு திரும்பும் தொழிலா ளர்களை வேனில் அழைத்து சென்றார்.

    அந்த வேன் வன்னி யம்பட்டி-ஆலங்குளம் இடையே வந்த போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள், வேன் மீது மோதியது. அப்போது வேன் டிரைவர் பிரேக் போட்டார். இதில் வேனுக்குள் இருந்த தொழிலாளர்கள் ஒருவர் மீது ஒருவர் மோதி படுகாயம் அடைந்தனர்.

    பலவேசம் என்பவர் மனைவி வேலுத்தாய் (50), மாரீஸ்வரி(39), மணி(55), காளியம்மாள் (40), கலாராணி (32) ஆகியோர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் வேலுத்தாய் கவலைக்கிடமாக உள்ளதால் அவர் மேல் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    வேன் டிரைவர் சங்கர் மணி, கற்பகராஜ் மற்றும் 8 பெண் தொழிலாளர்கள் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் மொத்தம் 15 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து பற்றிய புகாரின் பேரில் கீழ ராஜகுல ராமன் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கோவையில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார்.
    • பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் படுகாயம்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி ரெயில்வே சாலை பகுதியை சேர்ந்தவர் வீரமணி. இவரது மகன் ஷியாம் சுந்தர் (வயது 23). இவர் கோவையில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில் நேற்று திருத்துறைப்பூண்டி ரெயில்வே கேட் அருகில் புதிய பஸ் நிலையத்துக்கு செல்வதற்காக அரசு பஸ்சில் ஏற முயன்றபோது கீழே தவறி விழுந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் படுகாயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குபதிவு செய்து அரசு பஸ் டிரைவர் கார்த்திகேயனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×