search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முகப்பரு"

    • எண்ணெய் சருமத்தை போக்க சூப்பரான வழிமுறைகளை பார்க்கலாம்.
    • தினமும் கேரட் சாப்பிட்டு வந்தால் முகத்தில் எண்ணெய் பசை குறையும்.

    இப்பொழுது உள்ள காலகட்டத்தில் பெண்களின் அதிகப்படியான பிரச்சனை முகத்தில் எண்ணெய் வடிவது தான். எதாவது நிகழ்ச்சிக்கு செல்லும்போது சிறிது நேரத்திலேயே முகத்தில் என்னை வலிந்து பொலிவற்று போகிறது. இதனை சரி செய்ய சில வழிமுறைகள் உள்ளன. இப்பிரச்சனையில் இருந்து தப்பிக்க வீட்டு வைத்தியங்களை தொடர்ந்து பின்பற்றினாலே போதும்.

    இதன் மூலம் அழகான, பளிச் என்ற சருமத்தை பெற முடியும். அந்த வகையில் தற்போது எண்ணெய் சருமத்தை போக்க சூப்பரான வழிமுறை ஒன்றை இங்கே பார்ப்போம்.

    * அடிக்கடி முகத்தை கழுவி கொண்டே இருக்க வேண்டும். மேலும் முகத்தில் எண்ணெய் வழியும் போதெல்லாம் துணியை கொண்டு துடைக்கவும். முகத்திற்கு சோப்புக்கு பதிலாக கடலை மாவு, பாசிப்பயறுதமாவு போட்டு கழுவி வந்தால் முகம் பொலிவு பெறும்.

    * தினமும் ஒரு கேரட் சாப்பிட்டு வந்தால் முகத்தில் எண்ணெய் பசை குறையும். அடிக்கடி பீட்ரூட் தக்காளி சாறு குடித்து வந்தால் சருமத்திற்கு நல்லது. முதலில் எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடுவதை தவிருங்கள்.

    * தக்காளியை இரண்டாக நறுக்கி ஒரு பகுதியை சர்க்கரையில் தேய்த்து முகத்தில் தடவுங்கள். பின்பு இன்னொரு பகுதியில் கஸ்தூரி மஞ்சளில் தேய்த்து அதையும் முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதனை 3 முறை செய்து வர வேண்டும்.

    * துளசி, வேப்பிலை, புதினா மூன்று இலைகளையும் சமஅளவு எடுத்துக்கொண்டு மிக்சி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இப்போது இந்த மிருதுவான பேஸ்ட்டில் 1 ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும். ஃபேஸ் பேக் ரெடி. முகத்தை சோப்பு கழுவிவிட்டு, அதன்பின் இந்த பேக்கை முகத்தில் தடவி அரை மணி நேரம் அப்படியே விட்டு குளிர்ந்த நீரில் கழுவி விடுங்கள்.

    இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வர கடுமையான முகப்பருக் கூட மறையத் தொடங்கும். அதுமட்டுமல்லாமல், எண்ணெய் பசை சருமும் குறைந்து பளிச்சென்று காணப்படும்.

    • கரும்புள்ளிகளை நீக்க எலுமிச்சை சர்க்கரை ஸ்கரப் சிறந்ததாக இருக்கும்.
    • ஜாதிக்காய் அரைத்து போட்டு வர கரும்புள்ளிகள் இல்லாது போய்விடும்.

    அனைவருக்குமே எலுமிச்சை எவ்வளவு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பொருள் என்பது நன்கு தெரியும். அதிலும் இவை சருமத்திற்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இவை சருமத்தில் இருக்கும் அனைத்து கிருமிகளையும் எளிதில் நீக்கவல்லது. இதற்கு காரணம் இதில் உள்ள சிட்ரஸ் அமிலம் தான்.

    ஆகவே அவ்வளவு நன்மையைத் தரும் எலுமிச்சையைப் பயன்படுத்தி பல அழகுப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. அதிலும் இந்த எலுமிச்சையால் தயாரிக்கப்படும் ப்ளீச் அல்லது ஸ்கரப் போன்றவற்றை செய்தால், சருமத்தில் அழுக்குகளால் உருவாகும் கரும்புள்ளிகள், முகப்பருக்கள் போன்றவற்றை நீக்கிவிடலாம்.

    இன்றைய தலைமுறையினர் பெரும்பாலும் கரும்புள்ளிகள், முகப்பரு ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப் படுகின்றனர். அதனால் அவர்கள், அழகு நிலையங்களுக்குச் சென்று ஃபேஷியல் செய்து கரும்புள்ளிகளை நீக்குகின்றனர். என்ன தான் அழகு நிலையங்களுக்குச் சென்று முகத்தை அழகுபடுத்தினாலும், அதில் உள்ள கெமிக்கல் கலந்துள்ள சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே எப்போதும் இயற்கைப் பொருட்களே சிறந்தது. அதிலும் எலுமிச்சை இதற்கு ஒரு சிறந்த தீர்வாக அமையும். இப்போது அந்த மாதிரியான கரும்புள்ளிகளை நீக்க எலுமிச்சையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்ப்போமா...

    எலுமிச்சை ஸ்கரப்

    இந்த ஸ்கரப் செய்வதற்கு முன் முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவிட வேண்டும். பின்னர் ஒரு துண்டு எலுமிச்சையை முகம் மற்றும் மூக்கின் பக்கவாட்டிலும் நன்கு தேய்க்க வேண்டும். ஏனெனில் பொதுவாக கரும்புள்ளிகளானது முக்கின் பக்கவாட்டில் தான் தங்கியிருக்கும். ஆகவே குறைந்தது 3-4 நிமிடமாவது தேய்த்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை அதிக அளவில் கரும்புள்ளிகள் உள்ளவர்கள், ஒரு நாளைக்கு 2 முறை செய்வது நல்லது.

    எலுமிச்சை- சர்க்கரை ஸ்க்ரப்

    கரும்புள்ளிகளை நீக்க சிறந்த முறைகளில் எலுமிச்சை சர்க்கரை ஸ்கரப் சிறந்ததாக இருக்கும். இவ்வாறு சர்க்கரையுடன் கலந்து ஸ்க்ரப் செய்து வந்தால், கரும்புள்ளிகள் நீங்குவதோடு, முகப்பருக்களும் நீங்கிவிடும்.

    எலுமிச்சை-முட்டையின் வெள்ளைக் கரு

    இது ஒரு பொதுவான கரும்புள்ளிகளை நீக்க செய்யப்படும் இயற்கையான ஸ்கரப் மற்றும் மாஸ்க். இதற்கு எலுமிச்சை சாற்றுடன், முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து, நன்கு கலந்து கொண்டு, பின் அதனை முகத்திற்கு தடவி, காய வைத்து, பின் மாஸ்க் செய்தால் எப்படி உரித்து எடுப்போமா, அப்படி உரித்து எடுத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

    எலுமிச்சை-ரோஸ் வாட்டர்

    ரோஸ் வாட்டரை எலுமிச்சை சாற்றுடன் கலந்து, காட்டனில் நனைத்து, பின் முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி, 3-4 நிமிடம் ஊற வைத்து, பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால், கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.

    மேற்கூறியவாறு எலுமிச்சையின் சாற்றை பயன்படுத்தினால், கரும்புள்ளிகளை நீக்குவதோடு, வெள்ளை புள்ளிகளையும் நீக்கிவிடும். அதிலும் இதனை ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல பலனை பெறலாம். முக்கியமாக எலுமிச்சை சாறு சருமத்தை வறட்சியடையச் செய்யும். ஆகவே எலுமிச்சை சாற்றைப் பயன்படுத்தியப் பின்னர் மறக்காமல் மாய்ச்சுரைசரை பயன்படுத்த வேண்டும். முகத்தில் கரும்புள்ளிகளை இல்லாமல் செய்வதற்கு மேலும் பல வழிகள் உள்ளன.

    * ரோஜா இதழ்களுடன், பாதாம் பருப்பை ஊற வைத்து, அரைத்து முகத்தில் தடவி வர வேண்டும்.

    * வாழைப்பழம் அல்லது பப்பாளி பழத்துடன், சிறிது தேன் கலந்து குழைத்து, முகத்தில் பூசி வரலாம்.

    * வெள்ளரிச் சாறு, புதினாச் சாறு, எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றை, சம அளவில் கலந்து, முகத்திலுள்ள கரும் புள்ளிகள் மீது தேய்த்து வந்தால், கரும் புள்ளிகள் போய்விடும்.

    * உருளைக்கிழங்கை ரெண்டாக வெட்டி, தடவவும்.

    * ஜாதிக்காய் அரைத்துப் போட்டு வரவும் கரும்புள்ளிகள் இல்லாது போய்விடும்.

    * முகத்தில் வெண்ணெய் தடவி, எலும்பிச்சைச் சாறு கலந்த வெந்நீரால் ஆவி பிடித்து, துண்டால் முகத்தை அழுந்தத் துடையுங்கள். தொடர்ந்து இப்படி செய்து வர, கரும்புள்ளி மறையும்.

    * பன்னீர், விளக்கெண்ணெய் தலா ஒரு தேக்கரண்டி கலந்து, கரும்புள்ளி உள்ள இடங்களில் தடவவும். பின், டவலை சூடான நீரில் நனைத்து பிழிந்து, முகத்தில் வைத்து பஞ்சினால் துடைத்து எடுத்து விடவும்.

    * வெள்ளரிச்சாறு, போரிக் பவுடர், தலா ஒரு தேக்கரண்டி கலந்து, கரும்புள்ளிகளில் தடவி, ஐந்து நிமிடம் ஊறவிடவும். பின், லேசாக மசாஜ் செய்து துடைத்தால், உள்ளிருக்கும் அழுக்குகள் நீங்கும்.

    * கோதுமை தவிடு, பால் இரண்டும் தலா ஒரு மேஜைக்கரண்டி கலந்து, கரும் புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வர வேண்டும். கொஞ்ச நாட்களில் கரும் புள்ளிகள் வலுவிழந்து உதிர்ந்து விடும்.

    இவ்வாறு நீங்கள் தொடர்ச்சியாக செய்து வந்தால் உங்கள் முகத்தில் கரும்புள்ளிகள் நீங்கி, முகம் பொலிவுடன் அழகாகவும் காணப்படும்.

    • முகப்பருக்கள் வராமல் தடுப்பதற்கு உணவுக்கட்டுப்பாடு அவசியம்.
    • வேப்பிலை கிருமி நாசினியாக செயல்படுகிறது.

    இன்றைய காலக்கட்டத்தில் பிம்பிள்ஸ், கரும் புள்ளிகள், தழும்புகள் என அனைத்தும் அவர்களது அழகான கன்னங்களுக்கு அச்சுறுத்தலாகத் உள்ளது.

    பருக்கள் வராமல் இருக்க வேண்டும் என்றால் மலச்சிக்கல் வராத அளவுக்கு வயிற்றைப் பராமரிக்க வேண்டும். பொடுகுத் தொல்லை, ஹார்மோன் பிரச்சினை, நகத்தினை வளர்த்தல், முறையற்ற உணவுப்பழக்கம், உணவில் அதிக அளவு எண்ணெய் பயன்படுத்துதல் போன்றவை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    வெளிப்படையான பயன்பாடுகளை பொருத்த வரையில் தலையணை உறை, சோப், டவல் போன்றவைகளை தனித்தனியாக ஒவ்வொருவரும் வைத்து தங்களுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முகப்பரு இருக்கும் ஒருவர் பயன்படுத்தும் பொருட்களை இன்னொருவர் பயன்படுத்தும் போது அவருக்கும் பரவக்கூடும்.

     முகப்பருக்கள் வராமல் தடுப்பதற்கு உணவுக்கட்டுப்பாடு மிகவும் அவசியம். எளிதில் செரிமானம் ஆகக்கூடிய மென்மையான உணவுகளை உண்ண வேண்டும். பழங்கள், காய்கறிகள், கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். தண்ணீர் நிறைய பருக வேண்டும். முகத்தில் எண்ணெய் வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பொடுகுத் தொல்லை இருந்தால் முறையான சிகிச்சை எடுத்து அதனைக் கட்டுப்படுத்த வேண்டும். அவ்வப்போது வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவி சுத்தப்படுத்த வேண்டும். இதை எல்லாம் தொடர்ந்து செய்து வந்தால் பிம்பிள்ஸ் பிரச்சனை இருக்காது.

     கரும்புள்ளிகள் மறைய:

    வேப்பிலை கிருமி நாசினியாக செயல்படுகிறது. கொழுந்து வேப்பிலையை தண்ணீரில் அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவிவிட வேண்டும். முகத்திற்கு மஞ்சள் பூசுவதை முடிந்த வரை தவிர்த்து விடுங்கள். இப்போதைய மஞ்சளில் அதிக அளவு ரசாயணத் தன்மை இருக்கிறது. அது பலரது முகத்திற்கும் ஒத்துக்கொள்ளாததாக இருக்கிறது. அதுபோல எலுமிச்சை சாறையும் தனியாக முகத்தில் தேய்த்துவிட வேண்டாம்.

     முகத்தில் உள்ள வடுக்கள் நீங்க:

    முகத்தில் பல்வேறு விதமான வடுக்கள் ஏற்படுகின்றன. முகப்பரு வடு, அம்மைத் தழும்பு, விபத்துக்களால் ஏற்படும் வடு போன்றவை. தொடக்கத்திலேயே இதற்கு அழகு சிகிச்சை கொடுத்தால் நிரந்தரமாக மாற்றிவிடலாம். இல்லாவிட்டால் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம்தான் இதனை குணப்படுத்த வேண்டும். அதேநேரத்தில் வடுக்கள் எவ்வாறாக இருந்தாலும் அதனை மேக்கப் மூலம் தற்காலிகமாக மறைத்துவிடலாம்.

    இயற்கை அழகு சிகிச்கை:

    ஐம்பது சதவீத அளவிலான பெண்களுக்கு அதிகமான அளவு தொந்தரவு தந்து கொண்டிருப்பது முகத்தில் வளரும் ரோமங்கள்தான். இதற்கு பாரம்பரியம் ஒரு முக்கியக் காரணம். ஹார்மோனில் ஏற்படும் மாற்றங்களும் தேவையற்ற ரோமங்களை வளரச் செய்கிறது.

    வீட்டிலேயே இதற்கான இயற்கையான அழகு சிகிச்சைகளை மேற்கொள்ளலாம். பூலான் கிழங்கு, மஞ்சள், பாசிப்பயிறு, போன்றவைகளை அரைத்து தண்ணீர் கலந்து உடல் முழுக்கத் தேய்க்க வேண்டும். பத்து வயதில் இருந்து சிறுமிகளுக்கு இதனைதேய்து குளிப்பாட்டினால் தேவையற்ற ரோமங்கள் வளருவதை முதலில் இருந்தே தவிர்த்துவிடலாம்.

    • பாலில் ரெட்டினோல் உள்ளது.
    • பால் பொருட்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும்.

    பாலில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை எலும்புகள் மற்றும் பற்களுக்கு வலுசேர்க்கும் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் பால் சருமத்திற்கும் நன்மை பயக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? இதனை ஆய்வுகளும் உறுதிபடுத்தி உள்ளன.

    * கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவை சருமத்திற்கு அழகூட்டும் இரண்டு முக்கியமான ஊட்டச்சத்துக்கள். இவை இரண்டுமே பாலில் உள்ளன. இவை சருமத்திற்கு மட்டும் நன்மை செய்யாமல் மற்ற ஊட்டச்சத்துக்களுடன் சேர்ந்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாக்க உதவுகின்றன.

    * பாலில் ரெட்டினோல் உள்ளது. இது வைட்டமின் ஏ-ன் வடிவமாகும். விரைவில் வயதாகும் அறிகுறிகள் வெளிப்படுவதை தடுக்கும் எதிர்ப்பு பண்புகளை கொண்டது. அத்துடன் முகப்பருவை தடுத்து சருமத்திற்கு பொலிவு சேர்க்கக்கூடியது.

    * பாலில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள் சரும செல்கள் சேதம் அடைவதை தடுக்கின்றன. சருமத்தை அழகாக்கவும், இயற்கையான பிரகாசத்தை மீட்டெடுக்கவும் துணைபுரிகின்றன. சருமத்திற்கு கூடுதல் பளபளப்பு சேர்க்கவும் உதவுகின்றன.

    * சருமத்திற்கு நன்மை அளிக்கக்கூடிய பண்புகளைக் கொண்டிருந்தாலும் ஒரு சிலருக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும். பாலுக்கும், முகப்பருவுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    * முகப்பரு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் பால் அதிகம் பருகும்போது பாதிப்பு அதிகரிக்கக்கூடும். ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்கள்தான் அதற்கு காரணமாகும்.

    * பால், பாலாடைக்கட்டி, வெண்ணெய் போன்ற பால் பொருட்களை உட்கொள்வது முகப்பருவை ஏற்படுத்தும் ஆண்ட்ரோஜன்கள் போன்ற ஹார்மோன்களின் செயல்பாடுகளை தூண்டிவிடும்.

    * தயிர் போன்ற புளிக்கவைக்கப்படும் பால் பொருட்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், தோல் அழற்சி போன்ற தோல் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் அதில் இருக்கும் புரோபயாட்டிக்குகள் உதவும். ஆனால் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும்.

    * முகப்பரு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள், முகப்பரு ஏற்பட வாய்ப்புள்ளவர்கள் பால் அருந்துவதை கூடுமானவரை தவிர்க்கவும். சரும நிபுணரிடம் ஆலோசனை பெற்று அதன்படி செயல்படுவது சிறந்தது.

    • முதலில் முகப்பருவை தொட்டுப் பார்க்கவே கூடாது.
    • வறண்ட சுருக்கமான சருமம்தான் மிஞ்சும்.

    சரும அழகை கூட்ட என்னென்ன செய்யலாம் என்பதைத்தான் எல்லோரும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். சில நேரங்களில் சிலவற்றைத் தவிர்த்தாலே நம் சருமத்தை ஆரோக்கியமாகவும் அழகாகவும் பேணிக்காக்க முடியும்.

    முகப்பரு, கரும்புள்ளியை கண்டதும் முகம் பார்க்கும் கண்ணாடியும் கையுமாக மாறிவிடுவோம். முதலில் முகப்பருவை தொட்டுப் பார்க்கவே கூடாது. அதிலும் முகப்பருவை போக்க பக்கத்து வீட்டார் கொடுத்த அறிவுரை, நண்பர்களின் டிப்ஸ், கேள்விப்பட்டது கேள்விப்படாதது என எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்தால் நீங்காத தழும்பு முகத்தில் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

    முகத்தை பிரகாசமாக வைத்துக்கொள்ள அடிக்கடி முகம் கழுவுவது எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும். சொல்லப்போனால் முகப்பொலிவை பாதுகாக்க இயற்கையில் சருமத்தில் இருந்து எண்ணெய் சுரக்கும். அடிக்கடி முகம் கழுவுவதால் இந்த எண்ணெய் நீக்கப்பட்டு தோலின் ஈரப்பதம் குறைந்து, வறண்ட சுருக்கமான சருமம்தான் மிஞ்சும்.

    இதேபோல் சரும கிரீம்களை பயன்படுத்துபவர்கள் பலர். சருமத்தின் அழகு, ஆரோக்கியம் மீது அக்கறை கொண்டவர்கள்கூட கழுத்து பகுதிக்கு முக்கியத்துவம் தருவதில்லை. தினமும் காலையும் இரவும் முகத்தில் கிரீம்களை பூசிவிட்டு கையில் இருக்கும் மிச்சம் மீதியை கழுத்தில் தேய்ப்பவர்கள்தான் பெரும்பாலானோர். எதையும் அதிகப்படியாக உபயோகிப்பது கேடு விளைவிக்கும்.

    • வேப்ப மரத்தின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு பலனைத் தரும்.
    • வேம்புவை சருமத்தில் எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

    நாம் ஒவ்வொருவரும் அழகாக இருக்க பல்வேறு முயற்சிகளை செய்கிறோம். அந்த வகையில், இயற்கை நமக்கு பல்வேறு தீர்வுகளையும் வழிகளையும் கொடுக்கிறது. அத்தகைய ஒரு தீர்வு வேம்பு. வேப்ப மரத்தின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு பலனைத் தரும். வேம்பு உங்கள் முகப்பரு பிரச்சனைக்கு தீர்வு வழங்குவதோடு, தெளிவான மற்றும் பொலிவான சருமத்தையும் உங்களுக்கு கொடுக்கிறது. வேம்புவை சருமத்தில் எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

    முகப்பரு பாதிப்புள்ள சருமத்திற்கு வேம்பு ஃபேஸ்பேக் பயன்படுத்துவது இயற்கையான சிறந்த வழியாகும். வேப்பம்பூ ஃபேஸ்பேக்கை வழக்கமாகப் பயன்படுத்துவது சரும வீக்கத்தைக் குறைக்கவும், அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்தவும், முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடவும் உதவும்.

    வேப்பம்பூ அல்லது வேப்பம் இலைகளை தண்ணீர் அல்லது தேங்காய் எண்ணெய் அல்லது தேன் போன்ற கேரியர் எண்ணெயுடன் கலந்து மென்மையான பேஸ்ட்டாகவும் தயாரித்து முகப்பரு உள்ள இடத்தில் இந்த பேஸ்ட்டை போட்டு 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். இதை அடிக்கடி போட்டு வந்தால் விரைவில் நல்ல பலனை நீங்கள் பார்ப்பீர்கள்.

    வேப்பிலையை கொதிக்கும் தண்ணீரில் போட்டு, தண்ணீரின் நிறம் மாறும் வரை ஊற வைத்து, நீரை வடித்து ஒரு பாட்டிலில் ஊற்றி, தினமும் குளிக்கும் போது, குளிக்கும் நீரில் சிறிது ஊற்றி, குளித்தால், சருமத்தில் ஏற்படும் முகப்பரு மற்றும் வெள்ளை புள்ளிகள் நீங்கிவிடும்.

    ஸ்கின் டோனராகவும் பயன்படுத்தலாம். அதற்கு அந்த வேப்பிலை நீரை, காட்டனில் நனைத்து, தினமும் இரவில் படுக்கும் போது, துடைத்து வந்தால், முகப்பரு, கரும்புள்ளிகள் போன்றவை போய்விடும். அதேப்போன்று, அந்த நீரை தலைக்கு ஊற்றினால், தலையில் இருக்கும் பொடுகு மற்றும் அதிகமான கூந்தல் உதிர்தல் சரியாகிவிடும்.

    வேப்பிலையை நன்கு பேஸ்ட் போல் அரைத்து, அதில் சிறிது தேன் கலந்து, தலைக்கு தடவி, ஷாம்பு போட்டு குளித்தால், பொடுகு நீங்கி, கூந்தல் பட்டுப் போன்று மின்னும். இந்த முறை ஹேர் கண்டிஷனர் போன்றது.

    வேப்ப மரத்தின் வேர்களில் நிறைய மருத்துவ பொருள் நிறைந்துள்ளது. இதன் வேரை பொடி செய்து பேன், பொடுகுத் தொல்லை போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம். அதுமட்டுமின்றி, இது சொரியாசிஸ், பருக்கள், சொறி சிரங்கு, படை மற்றும் பல தோல் நோய்களை தடுக்கும்.

    • பருக்களை விரல்களால் கிள்ளுவதை முதலில் கைவிடவேண்டும்.
    • கொழுப்பு உணவுகளைக் குறைத்துக் கொண்டால், பருக்கள் சீக்கிரத்தில் குணமாகும்.

    இன்றைய இளைஞர்கள் பலரும் சந்திக்கும் பெரும் பிரச்னை முகப்பரு. பொதுவாக, 13 வயதில் முகப்பரு தொடங்கி 35 வயதுவரை இது நீ்டிக்கும். சிலருக்கு, இளமைப் பருவம் கடந்த பிறகும் நீடிக்கலாம். குடும்பத்தில் யாருக்கேனும் இருந்திருந்தால், வாரிசுகளுக்கு வர அதிக வாய்ப்புண்டு. சில பெண்களுக்கு மாதவிலக்கின்போது, மாறும் ஹார்மோன்களின் அளவினாலும் அந்த சமயங்களில் மட்டும் முகப்பரு ஏற்படும். அதுபோன்று, சினைப்பையில் நீர்க்கட்டி இருக்கும் பெண்களுக்கு முகப்பரு வருவது வழக்கம்.

    ஆல்பா ரெடக்டேஸ் எனும் என்சைம் அதிகமாக இருப்பவர்களுக்கு முகத்தில் பருக்கள் ஏற்படலாம். இந்த என்சைம் ஆண்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பை அதிகப்படுத்தி, பருக்கள் வர வழிவகுக்கிறது.

    முகத்தில் எந்தக் களிம்பைப் பூசினாலும், 20 நிமிடங்களுக்கு மேல் அதை வைத்திருக்கக் கூடாது. காரணம், அதற்கு மேல் களிம்பு தங்கினால், அதில் தூசு சுலபமாக ஒட்டிக் கொள்ள, எண்ணெய்ச் சுரப்பிகள் அடைபட்டு முகப்பருவுக்கு வழி அமைத்துவிடும். தினமும் குறைந்தது மூன்று முறை முகத்தைச் சோப்புப் போட்டு இளஞ்சூடான தண்ணீரில் கழுவிச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். சந்தனச் சோப்பு நல்லது. அடிக்கடி சோப்பை மாற்றக்கூடாது. சுத்தமான பருத்தித் துண்டால் முகத்தைத் துடைக்க வேண்டும். முகத்தைத் துடைப்பதற்கென்று தனியாகத் துண்டு வைத்துக் கொள்வது இன்னமும் நல்லது. முகத்தை ரொம்பவும் அழுத்தித் துடைக்கவும் கூடாது. வாரத்திற்கு இருமுறை வெந்நீரில் ஆவி பிடிப்பது நல்லது. முகப்பரு உள்ளவர்கள் முகத்தில் பவுடர் பூசுவதை தவிர்ப்பது நல்லது.

    முகப்பரு உள்ளவர்கள் கொழுப்பு உணவுகளைக் குறைத்துக் கொண்டால், பருக்கள் சீக்கிரத்தில் குணமாகும். உடலில் கொழுப்பின் அளவு கூடும்போதும், எண்ணெய்ச் சுரப்பிகளின் துவாரம் மூடிக்கொள்ள வாய்ப்புண்டு.

    எந்நேரமும் பருக்களை விரல்களால் கிள்ளுவதை முதலில் கைவிடவேண்டும். பருக்களிலிருந்து வெள்ளைநிறக் குருணைகளை வெளியேற்ற பருக்களைக் கிள்ளாதீர்கள், பிதுக்காதீர்கள் மிகவும் தேவைப்பட்டால் மட்டும் இதற்கென்றே இருக்கிற இடுக்கியைப் பயன்படுத்துங்கள்.

    நார்ச்சத்து நிறைந்த கீரைகள், காய்கறிகள், பழங்களை அதிகம் உட்கொள்ளுவது நல்லது. தினசரி 3 லிட்டர் அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். கொழுப்பு மிகுந்த இறைச்சி, நெய், வெண்ணெய், வனஸ்பதி, பாலாடை, முட்டை, கேக், ஐஸ்க்ரீம், சாக்லேட், ஃபுட்டிங், பீட்சா, பர்கர், தந்தூரி, பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள், எண்ணெய் பலகாரம் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது.

    • முகப்பரு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன.
    • முகப்பரு வந்தால் அதை கிள்ள கூடாது.

    உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தால் இளம் வயதினருக்கு அடிக்கடி முகத்தில் பருக்கள் தோன்றும். இதற்கு அதிகமாக நீரை குடிப்பது, சீரான உணவு பழக்கம் போன்றவற்றால் குணப்படுத்தலாம். மேலும் ஒரு பரு வந்தாலும் அதை கிள்ளி விட்டால் அது மேலும் மோசமாகி அதிக பருக்கள் தோன்றும். அதனால் முகப்பரு வந்தால் அதை கிள்ள கூடாது. சிலருக்கு மாத விடாய் காலத்தில் பரு வந்து, அது முடிந்ததும் மறைந்து விடும். ஆனால் சிலருக்கு அந்த தழும்புகள் முகத்தில் தோன்ற காரணம் அதை கிள்ளி விடுவதுதான். தவறான உணவு பழக்கவழக்கங்கள், அதிகப்படியான மன அழுத்தம், மாசுபட்ட சூழலில் வாழ்வது, மற்றும் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் என முகப்பரு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன.

    அனைவரும் மிக வேகமாக இயங்கி வரும் இந்த வாழ்க்கை முறையில் முகப்பரு வராமல் பாதுகாத்துக் கொள்ள அதுக்கென தனி நேரம் ஒதுக்கி நம் சருமத்தை பராமரிப்பது அனைவருக்கும் முடியாத செயல். இதனால் முகப்பரு ஏற்பட்டு மறைந்தாலும் கூட அந்த தழும்பு அப்படியே இருக்கும். இது போன்ற காரணங்களினால் முகப்பரு வராமல் தடுப்பது சிறந்த நடவடிக்கையாக இருக்கும்.

    1. ஒருவருக்கு அடிக்கடி நெற்றியில் பரு வந்து போகிறது என்றால் அவருக்கு ஜீரண சக்தி சீரில்லாமல் இருக்கிறது என்று அர்த்தம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்

    2. உடலில் இருக்கக்கூடிய கழிவுகள் சரியாக வெளியேற்ற படாததாலும், நெற்றியில் முகப்பரு அடிக்கடி வரும் வாய்ப்புள்ளது.

    3. பருக்கள் வராமல் தடுக்க நீங்கள் சாப்பிடக்கூடிய உணவு பண்டங்களில் அதிகமாக கவனம் செலுத்த வேண்டும்.

    4. முகத்தில் பருக்கள் வராமல் பாதுகாக்க நிறைய தண்ணீரை குடிப்பது அவசியம். குறிப்பாக நீர்ச்சத்து உள்ள காய்கறிகள் பழங்களை உட்கொள்ளலாம்.

    5. அடிக்கடி ஆரஞ்சு பழம், மாதுளை பழம், சாத்துக்குடி, போன்ற பழங்களை சாப்பிடுவோருக்கு பருக்கள் வராது.

    6. பருக்கள் வராமலிருக்க காய்கறிகளை அதிகமாக உணவோடு சேர்த்துக் கொள்ளுங்கள். குளிர்பானங்களை நீங்கள் குடிக்க கூடாது.

    நம்முடைய கைகளில் பல வித கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் தோற்றி இருக்க கூடும். அதே கையோடு நம் முகத்தை தொடும்போது அதில் உள்ள கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் முகத்தில் பரவி முகப்பருவை உண்டாக்குகின்றன.

    எண்ணெய்யில் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை உண்பதன் மூலம் அதிக அளவு எண்ணெய் மற்றும் சீபம் உற்பத்தி அதிகரிக்கிறது. இதனால் முகப்பருக்கள் தோன்றுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

    • வெட்டிவேர் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
    • சருமத்தின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு தருகிறது.

    பழுப்பு நிறமும், பரவசமூட்டும் நறுமணமும் கொண்ட வெட்டிவேரின் வேர்ப்பகுதி மட்டுமே மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

    கோடை காலமோ, குளிர்காலமோ ஒரு சிலருக்கு எப்போது பார்த்தாலும் வியர்த்து, எண்ணெய் வழியும். இதனால் பருக்களும் அதிகமாக இருக்கும். அவர்களுக்கு வாசனையான பேக் போடலாம். வெட்டிவேர், ரோஜா மொட்டு, மகிழம்பூ, செண்பகப்பூ, சம்பங்கி விதை.. இவற்றை சம அளவு எடுத்து மெஷினில் கொடுத்து அரைத்து சலித்து வைத்துக்கொள்ளுங்கள். இந்தப் பவுடரை தண்ணீரில் குழைத்து முகத்தில் பூசி, கழுவுங்கள். வெட்டிவேர் முகத்தில் உள்ள தேவையற்ற எண்ணெய் பசையை எடுத்துவிடும். சம்பங்கி விதை முகத்துக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். சோர்வைப் போக்கி நிறத்தைக் கொடுக்கிறது ரோஜா மொட்டு. மகிழம்பூவும், செண்பகப்பூவும் வியர்வை நாற்றத்தைப் போக்கி வாசனையை கொடுக்கிறது.

    வெட்டி வேர் (vettiver) எண்ணெய்யை கொண்டு நீண்ட நாட்களாக ஆறாமல் இருக்கும் வடுக்கள் மீது தடவி வந்தால் அவை மறைந்துவிடும். இந்த எண்ணெய்யை உடலில் தேய்த்து தினமும் குளிக்கலாம். 

    வெட்டி வேர் தூளுடன் தண்ணீர் சேர்த்து குலைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் உலரவிட வேண்டும். பிறகு குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவி மென்மையான பருத்தித் துண்டால் துடைக்க வேண்டும். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இப்படி 'பேக்' போட்டு வந்தால் பருக்கள் நீங்கி முகம் வசீகரமாகும்.

    சுத்தமான தேங்காய் எண்ணெயுடன், வெட்டி வேர் சேர்த்து ஊறவைத்து தலைமுடிக்கு தேய்த்துவர வேண்டும். தலைமுடியின் வேர்க்கால்களில் படும்படி தேய்க்க வேண்டும். இதனை வாரம் ஒரு முறை இப்படி செய்து வந்தால் முடி உதிர்வது குறைந்து கருமையாக முடி வளரும். கண்களும் குளிர்ச்சியடையும். 

    தலைக்கு தேய்த்து குளிக்கும் சீயக்காய்க்கு பதிலாக வெட்டி வேர் பவுடரை பயன்படுத்தலாம். வெட்டி வேர் தூளை தலைக்கு தேய்த்து குளிப்பதால், முகத்தில் எண்ணெய் வழியாது. முகம் கூடுதல் அழகுடன் காணப்படும்.

    வெட்டி வேரை சிறு சிறு துண்டுகளாக்கி, அதனுடன் கொட்டை நீக்கிய கடுக்காய் ஒன்றையும் முதல் நாள் இரவே கொதிநீரில் ஊறவைக்க வேண்டும். மறுநாள் அதை அரைத்து விழுதை பருக்கள் மீது தடவி வந்தால் பருக்கள் இருந்த வடுவே தெரியாமல் அழிந்து விடும்.

    பாசிப்பயறு 100 கிராம் ,வெட்டிவேர் 50 கிராம் எடுத்து அந்த இரண்டையும் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். இந்தப் பவுடரை உடலுக்கு தேய்த்துக் தினமும் குளித்து வந்தாலே உடம்பில் வரும் சிறு சிறு உஷ்ணக் கட்டிகளும் , உடல் விரிவதனால் ஏற்படும் வரிகளும் மறைந்து போகும்.

    வெட்டி வேர், ரோஜா மொட்டு, மகிழம்பூ, செண்பகப்பூ, சம்பங்கி விதை இவற்றை சம அளவு எடுத்து மெஷினில் கொடுத்து அரைத்து கொள்ளுங்கள். இந்தப் பவுடரை தண்ணீரில் குழைத்து முகத்தில் பூசி வர இயற்கையாக முகம் அழகு பெறும். 

    வெட்டிவேரினை சிறு துண்டுகளாக்கி ஒரு ஸ்பூன் அளவிற்கு எடுத்துக்கொள்ளவும். கொட்டை நீக்கிய கடுக்காய் ஒன்றை எடுத்துக்கொள்ளவும். இரண்டையும் முதல்நாள் இரவே கொதிக்கும் நீரில் ஊறவைக்கவும். மறுநாள் காலையில் நன்றாக மைய அரைத்து அந்த விழுதினை பருக்கள் மீது மறைப்பதுபோல பூசவும். ஒரு நாள் விட்டு ஒருநாள் இப்படிச் செய்து வந்தாலே பருக்கள் உதிர்ந்துவிடும். பருக்கள் இருந்த வடுவும் தெரியாது.

    பருக்கள் வந்து காய்ந்தாலும் ஒரு சிலருக்கு தழும்புகள் மட்டும் போகாது. இதனாலேயே முகம் கரடு முரடாக மாறிவிடும். அந்த தழும்புகள் மறைய ஒரு பிடி வெட்டிவேரை சிறு துண்டுகளாக்கி வெந்நீரில் போட்டு மூடுங்கள். ஒரு இரவு இது ஊறட்டும். மறுநாள் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விடுங்கள். முந்தின நாள் ஊறவைத்த வெட்டிவேரையும் தண்ணீரையும் தனியே பிரித்து வையுங்கள். இப்போது கொதிநீரில் வெட்டிவேரைப் போட்டு ஆவி பிடியுங்கள். அப்படியே முகத்தைத் துடைக்காமல், வெட்டிவேர் ஊறின தண்ணீரில் சுத்தமான வெள்ளைத் துணியை அமிழ்த்தி பிழிந்து முகத்தை ஒற்றி எடுங்கள். வாரம் இரு முறை இப்படிச் செய்து வந்தால், தழும்புகள் மறைந்துவிடும்.

    • முகத்துக்கு மஞ்சள் பூசுவதை முடிந்தவரை தவிர்த்துவிடுங்கள்.
    • பருக்கள் ஏற்பட, மலச்சிக்கல் ஒரு முக்கிய காரணி.

    சுத்தமான காற்றும், சூரிய ஒளியும் முகத்துக்குத் தேவை. அவ்வப்போது காலையில் 7 முதல் 8 மணி வரை சன்பாத் எடுப்பது அவசியம்.

    முகப்பருக்கள் வராமல் தடுப்பதற்கு உணவுக்கட்டுப்பாடு மிகவும் அவசியம். எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவுகளையே உண்ண வேண்டும். பழங்கள்,​ காய்கறிகள்,​ கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.

    கீரைகள் மற்றும் பச்சைக் காய்கறிகளை நிறைய சாப்பிட வேண்டும். தினமும் இரண்டு லிட்டருக்குக் குறையாமல் தண்ணீர் குடிக்க வேண்டும்.

    கொழுப்பு நிறைந்த அசைவ உணவுகளையும், நெய், வெண்ணெய், கேக், ஐஸ்க்ரீம், சாக்லேட், பாலாடை போன்றவற்றையும் தவிர்ப்பது நல்லது.

    பருக்கள் ஏற்பட, மலச்சிக்கல் ஒரு முக்கிய காரணி. அன்றாட உணவுப் பழக்கத்தைச் சரிசெய்வதன் மூலமாக மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    பருக்களைக் கிள்ளவோ, அழுத்தவோ கூடாது. மருத்துவரின் பரிந்துரை இல்லாமல், கடைகளில் கிடைக்கும் எந்தவித வாசனை சோப்புகளையும் லோஷன்களையும் பயன்படுத்தக் கூடாது.

    முகத்துக்கு மஞ்சள் பூசுவதை முடிந்தவரை தவிர்த்துவிடுங்கள். இப்போதைய மஞ்சளில் அதிக அளவு ரசாயனத்தன்மை இருக்கிறது. இது சருமத்தைப் பாதிக்க வாய்ப்புள்ளது.

    பொடுகுத் தொல்லை,​ நீளமாக நகம் வளர்த்தல்,​ முறையற்ற உணவுப்பழக்கம்,​ உணவில் அதிக அளவு எண்ணெய் பயன்படுத்துதல் போன்றவை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    தலையணை உறை,​ சோப்,​ டவல் போன்றவற்றைத் தனித்தனியாக ஒவ்வொருவரும் பயன்படுத்த வேண்டும். முகப்பரு இருப்பவர் பயன்படுத்தும் பொருள்களை மற்றவர் பயன்படுத்தும்போது அவருக்கும் பரவக்கூடும்.

    குளிப்பதற்கு அமிலத்தன்மை மற்றும் அதிக உப்பு இல்லாத சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும்.

    முகத்தில் எண்ணெய் வழியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வப்போது நீரில் முகத்தைக் கழுவி, சுத்தப்படுத்த வேண்டும். ​

    தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது வெளியேறும் வியர்வையால், சருமத் துவாரங்களில் உள்ள அழுக்குகள் நீங்கி, பருக்கள் வராமல் தடுக்கும்.

    • எண்ணெய் பலகாரங்கள் சாப்பிட்டால் முகப்பரு வரும்.
    • கொழுப்பு நிறைந்த உணவுகளை அளவோடு சாப்பிடுங்கள்.

    முகம், நெற்றி, தோள்பட்டை மார்பு போன்ற பகுதிகளில் ஏராளமான எண்ணெய் சுரப்பிகள் உள்ளன, இவற்றிலிருந்து எண்ணெய் (சீபம்) சுரக்கிறது. இவை வெளியேறும் வழியில் ஏற்படுகின்ற தடையினால் பருக்கள், கட்டிகள் வருகிறது. ஹார்மோன் மாற்றங்கள், பாக்டீரியா தொற்றினாலும் இவை ஏற்படுகின்றன.

    இதற்கு சித்த மருந்துகளில், கடல் சங்கை தண்ணீரில் உரசி முகப்பரு, கட்டி உள்ள இடங்களில் பூசி வர வேண்டும். அடுத்து, ஏலாதி சூரணம் ஒரு கிராம், சங்கு பற்பம் 200 மி.கி. கலந்து காலை, மதியம், இரவு மூன்று வேளை சாப்பிட வேண்டும். இரவு தூங்கும் போது குங்குமாதி லேபம் களிம்பை முகத்தில் பூசவும்.

    முகப்பருக்கள் நீங்க ஐஸ் கட்டி ஒத்திடம் கொடுக்கலாம். ஒரு சிறு ஐஸ்கட்டி எடுத்து அதை ஒரு சுத்தமான துணியில் சுற்றி முகப்பரு உள்ள இடத்தில் ஒற்றி எடுக்கலாம். இப்படி செய்வதால் முகப்பருக்களால் ஏற்படும் எரிச்சல் மற்றும் வலி குறையும்.

    எலுமிச்சை சாறு எடுத்து அதனுடன் சிறிது தண்ணீர் கலந்து முகப்பருக்களின் மேல் தடவி அரை மணி நேரம் கழித்து தண்ணீரில் முகத்தை கழுவினால் முகப்பருக்கள் நீங்கும்.

    முகத்தை அடிக்கடி தண்ணீரால் கழுவ வேண்டும். எண்ணெய் பலகாரங்கள், கொழுப்பு நிறைந்த உணவுகளை அளவோடு சாப்பிடுங்கள்.

    • மலச்சிக்கல் இருந்தாலும் முகப்பரு ஏற்படும்.
    • எக்காரணம்கொண்டும் எலுமிச்சைப்பழச் சாற்றைத் தனியாக முகத்தில் தேய்க்கக் கூடாது.

    எந்த வகையினால் முகப்பரு ஏற்பட்டிருந்தாலும் எளிமையான முறையில் அதை எப்படி நீக்குவது என்பதுபற்றி இங்கே பார்க்கலாம்.

    - திருநீற்றுப்பச்சிலையை அரைத்து முகப்பரு உள்ள இடங்களில் தொடர்ந்து தடவி வந்தால் எளிதில் குணம் கிடைக்கும். திரிபலா பொடி கசாயத்தால் முகம் கழுவிவந்தாலும் பருக்கள் நீங்கும்.

    - குங்குமாதி லேபத்தைப் பருக்களின்மீது தடவி வர, பருக்கள் மறைவதோடு தழும்புகளும் விரைவில் நீங்கும்.

    - பசுஞ்சாணத்தில் செய்யப்பட்ட விபூதியை தண்ணீரில் குழைத்துத் தேய்த்துவந்தாலும் பருக்கள் மறையும்.

    - 50 மில்லி நல்லெண்ணெயுடன் மிளகை ஊற வைக்க வேண்டும். 20 நாள்கள் கழித்துப் பயன்படுத்த வேண்டும். இதை முகப்பரு உள்ள இடங்களில் தடவி வர பருக்கள் நீங்கும்.

    - அரிசி மாவில் செய்யப்பட்ட நாமக்கட்டியை உரசி தொடர்ந்து பயன்படுத்தி வந்தாலும் இது நீங்கும்.

    - வெங்காரத்தைப் பொரித்தால் (போரக்ஸ்) அது மாவாகக் கரையும். அதைத் தண்ணீருடன் கலந்து பரு பழுத்திருக்கும் இடங்களில் தடவி வந்தால் விரைவில் பழுத்து உடையும்.

    - வெள்ளரிப் பிஞ்சை தக்காளி ஜூஸில் ஊற வைத்துத் தொடர்ந்து முகம் கழுவி வர விரைவில் பரு மறையும். அத்துடன் மீண்டும் முகப்பரு வருவதைக் கட்டுப்படுத்தும்.

    - மலச்சிக்கல் இருந்தாலும் முகப்பரு ஏற்படும். வெட்பாலை தைலத்தைப் பயன்படுத்தி வர மலச்சிக்கல் நீங்குவதோடு, முகப்பருவும் மறையும்.

    - பொடுகால் ஏற்படும் முகப்பருவுக்குப் பொடுதலை இலைச்சாற்றைத் தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தேய்த்து வர பொடுகு நீங்குவதோடு, முகப்பருக்கள் சீக்கிரம் மறையும்.

    - எலுமிச்சைப்பழச் சாறு, ரோஜாவால் தயாரிக்கப்பட்ட பன்னீர் இரண்டையும் சம அளவு எடுத்துக் கலந்து முகத்தில் பூசி, அரை மணி நேரம் ஊறவைத்து, பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். வாரம் மூன்று நாள்கள் இவ்வாறு செய்துவந்தால், முகப்பரு மறைந்துவிடும். எக்காரணம்கொண்டும் எலுமிச்சைப்பழச் சாற்றைத் தனியாக முகத்தில் தேய்க்கக் கூடாது. இதில் உள்ள சிட்ரிக் அமிலம் சருமத்தைப் பாதிக்கும். பன்னீர் வாங்கும்போது, அதன் தரத்தைப் பரிசோதித்து வாங்கிப் பயன்படுத்துவது அவசியம்.

    - வேப்பிலை சிறந்த கிருமி நாசினி. கொழுந்து வேப்பிலையைத் தண்ணீரில் அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ, முகப்பருக்கள் நீங்கும்.

    ×