search icon
என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    முகப்பரு, தழும்பு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு தரும் வெட்டிவேர்
    X

    முகப்பரு, தழும்பு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு தரும் வெட்டிவேர்

    • வெட்டிவேர் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
    • சருமத்தின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு தருகிறது.

    பழுப்பு நிறமும், பரவசமூட்டும் நறுமணமும் கொண்ட வெட்டிவேரின் வேர்ப்பகுதி மட்டுமே மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

    கோடை காலமோ, குளிர்காலமோ ஒரு சிலருக்கு எப்போது பார்த்தாலும் வியர்த்து, எண்ணெய் வழியும். இதனால் பருக்களும் அதிகமாக இருக்கும். அவர்களுக்கு வாசனையான பேக் போடலாம். வெட்டிவேர், ரோஜா மொட்டு, மகிழம்பூ, செண்பகப்பூ, சம்பங்கி விதை.. இவற்றை சம அளவு எடுத்து மெஷினில் கொடுத்து அரைத்து சலித்து வைத்துக்கொள்ளுங்கள். இந்தப் பவுடரை தண்ணீரில் குழைத்து முகத்தில் பூசி, கழுவுங்கள். வெட்டிவேர் முகத்தில் உள்ள தேவையற்ற எண்ணெய் பசையை எடுத்துவிடும். சம்பங்கி விதை முகத்துக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். சோர்வைப் போக்கி நிறத்தைக் கொடுக்கிறது ரோஜா மொட்டு. மகிழம்பூவும், செண்பகப்பூவும் வியர்வை நாற்றத்தைப் போக்கி வாசனையை கொடுக்கிறது.

    வெட்டி வேர் (vettiver) எண்ணெய்யை கொண்டு நீண்ட நாட்களாக ஆறாமல் இருக்கும் வடுக்கள் மீது தடவி வந்தால் அவை மறைந்துவிடும். இந்த எண்ணெய்யை உடலில் தேய்த்து தினமும் குளிக்கலாம்.

    வெட்டி வேர் தூளுடன் தண்ணீர் சேர்த்து குலைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் உலரவிட வேண்டும். பிறகு குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவி மென்மையான பருத்தித் துண்டால் துடைக்க வேண்டும். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இப்படி 'பேக்' போட்டு வந்தால் பருக்கள் நீங்கி முகம் வசீகரமாகும்.

    சுத்தமான தேங்காய் எண்ணெயுடன், வெட்டி வேர் சேர்த்து ஊறவைத்து தலைமுடிக்கு தேய்த்துவர வேண்டும். தலைமுடியின் வேர்க்கால்களில் படும்படி தேய்க்க வேண்டும். இதனை வாரம் ஒரு முறை இப்படி செய்து வந்தால் முடி உதிர்வது குறைந்து கருமையாக முடி வளரும். கண்களும் குளிர்ச்சியடையும்.

    தலைக்கு தேய்த்து குளிக்கும் சீயக்காய்க்கு பதிலாக வெட்டி வேர் பவுடரை பயன்படுத்தலாம். வெட்டி வேர் தூளை தலைக்கு தேய்த்து குளிப்பதால், முகத்தில் எண்ணெய் வழியாது. முகம் கூடுதல் அழகுடன் காணப்படும்.

    வெட்டி வேரை சிறு சிறு துண்டுகளாக்கி, அதனுடன் கொட்டை நீக்கிய கடுக்காய் ஒன்றையும் முதல் நாள் இரவே கொதிநீரில் ஊறவைக்க வேண்டும். மறுநாள் அதை அரைத்து விழுதை பருக்கள் மீது தடவி வந்தால் பருக்கள் இருந்த வடுவே தெரியாமல் அழிந்து விடும்.

    பாசிப்பயறு 100 கிராம் ,வெட்டிவேர் 50 கிராம் எடுத்து அந்த இரண்டையும் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். இந்தப் பவுடரை உடலுக்கு தேய்த்துக் தினமும் குளித்து வந்தாலே உடம்பில் வரும் சிறு சிறு உஷ்ணக் கட்டிகளும் , உடல் விரிவதனால் ஏற்படும் வரிகளும் மறைந்து போகும்.

    வெட்டி வேர், ரோஜா மொட்டு, மகிழம்பூ, செண்பகப்பூ, சம்பங்கி விதை இவற்றை சம அளவு எடுத்து மெஷினில் கொடுத்து அரைத்து கொள்ளுங்கள். இந்தப் பவுடரை தண்ணீரில் குழைத்து முகத்தில் பூசி வர இயற்கையாக முகம் அழகு பெறும்.

    வெட்டிவேரினை சிறு துண்டுகளாக்கி ஒரு ஸ்பூன் அளவிற்கு எடுத்துக்கொள்ளவும். கொட்டை நீக்கிய கடுக்காய் ஒன்றை எடுத்துக்கொள்ளவும். இரண்டையும் முதல்நாள் இரவே கொதிக்கும் நீரில் ஊறவைக்கவும். மறுநாள் காலையில் நன்றாக மைய அரைத்து அந்த விழுதினை பருக்கள் மீது மறைப்பதுபோல பூசவும். ஒரு நாள் விட்டு ஒருநாள் இப்படிச் செய்து வந்தாலே பருக்கள் உதிர்ந்துவிடும். பருக்கள் இருந்த வடுவும் தெரியாது.

    பருக்கள் வந்து காய்ந்தாலும் ஒரு சிலருக்கு தழும்புகள் மட்டும் போகாது. இதனாலேயே முகம் கரடு முரடாக மாறிவிடும். அந்த தழும்புகள் மறைய ஒரு பிடி வெட்டிவேரை சிறு துண்டுகளாக்கி வெந்நீரில் போட்டு மூடுங்கள். ஒரு இரவு இது ஊறட்டும். மறுநாள் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விடுங்கள். முந்தின நாள் ஊறவைத்த வெட்டிவேரையும் தண்ணீரையும் தனியே பிரித்து வையுங்கள். இப்போது கொதிநீரில் வெட்டிவேரைப் போட்டு ஆவி பிடியுங்கள். அப்படியே முகத்தைத் துடைக்காமல், வெட்டிவேர் ஊறின தண்ணீரில் சுத்தமான வெள்ளைத் துணியை அமிழ்த்தி பிழிந்து முகத்தை ஒற்றி எடுங்கள். வாரம் இரு முறை இப்படிச் செய்து வந்தால், தழும்புகள் மறைந்துவிடும்.

    Next Story
    ×