என் மலர்
நீங்கள் தேடியது "dry skin"
- வயதானவர்கள் மற்றும் பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது.
- தொற்றுக்கள் ஏற்பட வழிவகுக்கிறது.
சர்க்கரை நோயாளிகளில் மூன்றில் ஒருவருக்கு தோல் சார்ந்த பிரச்சனை ஏற்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தோல் வறட்சி குறிப்பாக வயதானவர்கள் மற்றும் பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது.
பெரும்பாலும் பெரிபெரல் வாஸ்குலர் நோய் உள்ள சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்த நாளங்களில் உண்டாகும் மாற்றங்கள், குருதியோட்டத்தை குறைத்து, வறட்சியை உண்டாக்கி, சரும கொலோஜெனை சேதமடைய செய்து தொற்றுக்கள் ஏற்பட வழிவகுக்கிறது.
மேலும் ஆட்டோனாமிக் (தன்னியக்க) நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்ட சர்க்கரை நோயாளிகளுக்கு வியர்வை சுரப்பது தடைப்பட்டு தோல் வறட்சியை ஏற்படுத்துகிறது.
சர்க்கரை நோயாளிகளுக்கு வறண்ட சருமம் ஏற்பட முக்கிய காரணங்கள்:
கட்டுப்பாடற்ற அதிக ரத்த சர்க்கரை அளவு, குளிர்காலங்களில் காணப்படும் குளிர்ந்த வறண்ட காற்று மற்றும் குறைந்த ஈரப்பதம், புகை, மதுப்பழக்கம், மன அழுத்தம், ஹைப்போ தைராய்டிசம், ஊட்டச்சத்து குறைபாடு, ஹார்மோன் சமநிலையின்மை. சர்க்கரை நோயாளிகளுக்கு தோல் வறட்சி ஏற்படாமல் தடுக்கும் வழிமுறைகள்:
சருமத்தை தினமும் ஈரப்பதத்துடன் வைத்திருங்கள். செராமைடுகளைக் கொண்ட வாசனை இல்லாத கிரீம் அல்லது களிம்பை பயன்படுத்த வேண்டும். வெதுவெதுப்பான தண்ணீரை குளிப்பதற்கு பயன்படுத்த வேண்டும்.
குளிக்கும்போது ஈரப்பதமூட்டும் சோப்பை பயன்படுத்தவும். டியோடரண்ட் சோப்புகள் மற்றும் வலுவான பாடி வாஷ்களை தவிர்ப்பது நல்லது. குளித்த பின்னர் தோல் ஈரமாக இருக்கும் போதே மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தினால் அது நன்றாக உறிஞ்சப்பட்டு சருமம் நீரேற்றமாக இருக்க உதவுகிறது.
முகத்தை ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை கழுவினால் போதும். போதுமான அளவு தண்ணீர் மற்றும் வெள்ளரிக்காய், தர்பூசணி, ஆரஞ்சு, முலாம்பழம் போன்ற நீர்சத்து நிறைந்த பழங்களை அதிகம் உட்கொள்வது நல்லது.
- குளியல் போடுவதும் மன ஆரோக்கியத்துடன் தொடர்புடையதுதான்.
- ஈரப்பதத்தை தக்கவைக்கும் தன்மை கொண்ட சோப்புகளை பயன்படுத்துவது நல்லது.
குளிர் காலத்தில் அதிகாலை பொழுதில் நிலவும் குளிர்ச்சியான காலநிலையும், குளிர்ந்த நீரும் உடலையும், உள்ளத்தையும் உறைய வைத்துவிடும். அதனால் சிலர் குளிப்பதற்கு தயங்குவார்கள். தினமும் தலைக்கு குளிக்கும் வழக்கத்தை மாற்றி ஓரிரு நாட்கள் குளியலுக்கு ஓய்வு கொடுத்துவிடுபவர்களும் இருக்கிறார்கள்.
அப்படி குளிர் காலத்தில் குளியலை தவிர்ப்பது நல்லதல்ல. குளிர் காலத்திலும் ஏன் தவறாமல் குளிக்க வேண்டும்? அதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? என்பது பற்றி பார்க்கலாம்.
உடல் சுகாதாரம்
தனிப்பட்ட முறையில் உடல் சுகாதாரத்தை பேணுவதற்கு தவறாமல் குளிப்பது முக்கியமானது. கோடை காலத்தை ஒப்பிடும்போது குளிர் காலத்தில் அதிகமாக வியர்க்காமல் இருக்கலாம். ஆனாலும் உடல் தொடர்ச்சியாக எண்ணெய்யை உற்பத்தி செய்து கொண்டே இருக்கும். இறந்த சரும செல்களை உடலில் இருந்து அப்புறப்படுத்தும் செயல்முறையும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்.
வழக்கமாக குளிக்கும் செயல்முறையை தொடர்வது இந்த அசுத்தங்களை நீக்க உதவும். உடல் துர்நாற்றம், சருமத் தொற்றுகள் உள்ளிட்ட சுகாதாரம் தொடர்பான பிரச்சனைகளை குறைக்க உதவும். பொதுவாக குளிர் காலத்தில் சருமம் வறட்சி அடையும், சரும எரிச்சலும் ஏற்படும். குளியல் மூலம் உடலை சுத்தமாக வைத்துக்கொள்வது இந்த பிரச்சனைகளை கட்டுப்படுத்த துணைபுரியும்.
நோய் எதிர்ப்பு சக்தி
குளிர் காலத்தில் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும். அந்த நீரில் கலந்திருக்கும் மிதமான வெப்பம் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். அது உடல் முழுவதும் நோய் எதிர்ப்பு செல்களை துரிதமாக கொண்டு செல்ல உதவிடும்.
சளி, காய்ச்சல் போன்ற குளிர்கால நோய்களை உடல் திறம்பட எதிர்த்து போராடவும் உதவிடும். அத்துடன் சுடு நீர் குளியல் மூக்கடைப்பை தடுக்கவும், நாசி துவாரங்களை திறக்கவும் வழிவகை செய்யும்.
மன ஆரோக்கியம்
குளியல் போடுவதும் மன ஆரோக்கியத்துடன் தொடர்புடையதுதான். குறைவான சூரிய வெளிச்சம் மற்றும் பருவ கால நோய்த்தொற்றுகள் காரணமாக குளிர் காலம் மன ஆரோக்கியத்துக்கு சவாலாக இருக்கும். இதனை எதிர்த்து போராட சூடான குளியல் பயனுள்ளதாக அமையும்.
இந்த குளியல் உடலை தளர்வடையச் செய்து உடல் ஓய்வுக்கு வித்திடும். மன அழுத்தத்தை குறைத்து நல்ல உணர்வுகளை கொண்ட ஹார்மோன்களான எண்டோர்பின்களின் வெளியீட்டை தூண்டி மன நிலையை மேம்படுத்தும்.
சரும ஆரோக்கியம்
குளிர் காலத்தில் நிலவும் குளிர்ச்சியான காலநிலை மற்றும் உட்புற வெப்பம் சருமத்தில் இருக்கும் ஈரப்பதத்தை அகற்றி சரும வறட்சி மற்றும் சரும எரிச்சலுக்கு வழிவகுக்கும். அந்த சமயத்தில் குளிக்கும் வழக்கத்தை தொடர்வது சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவும்.
ஈரப்பதத்தை தக்கவைக்கும் தன்மை கொண்ட சோப்புகளை பயன்படுத்துவது, குளியல் எண்ணெய்களை உபயோகிப்பது போன்றவை சருமத்திற்கு நன்மை பயக்கும்.
சருமத்தை மென்மையாக்கவும் உதவும். லோஷன்கள் மற்றும் கிரீம்களை பயன்படுத்துவதும் குளிர்கால சரும வறட்சியை எதிர்த்து போராட உதவிடும்.
தூக்கம்
வெதுவெதுப்பான நீரில் குளியல் போடுவது தசைகளை தளர்த்தவும், மனதை அமைதிப்படுத்தவும் உதவும். ஆழ்ந்த மற்றும் அமைதியான தூக்கத்திற்கும் வித்திடும். ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் தூக்கம் அவசியம்.
குறிப்பாக குளிர்ந்த கால நிலை மற்றும் அழுத்தங்களில் இருந்து உடல் மீள்வதற்கு தூக்கம் அவசியமானது. அதற்கு குளியல் போடுவது முக்கியமானது.
- சரும அரிப்புக்கு தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம்.
- நீரிழப்பைக் கட்டுப்படுத்த சருமத்தை ஈரப்பதமாக்குவது அவசியமாகும்.
தேங்காய் எண்ணெய்
குளிர்ந்த காலநிலையின் போது சரும அரிப்புக்கு தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம். இது ஒரு இயற்கையான மென்மையாக்கலாக அமைகிறது. இது வறண்ட சருமத்தை ஈரப்பதமாக்க உதவுகிறது.
மேலும், இது பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. குளிர்ந்த காலநிலையில் உணர்திறன் வாய்ந்த சருமம் உட்பட அனைத்து தோல் வகைகளுக்கும் ஏற்றதாக தேங்காய் எண்ணெய் அமைகிறது.
அடிக்கடி ஈரப்பதமாக்குவது
குளிர்ந்த காலநிலையில் ஏற்படும் நீரிழப்பைக் கட்டுப்படுத்த சருமத்தை ஈரப்பதமாக்குவது அவசியமாகும். இதற்கு குளித்த உடனேயே நறுமணம் இல்லாத மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் ஈரப்பதத்தை அடைக்கலாம். இவை சருமத்தை நீரேற்றமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
அதன்படி, ஹைலூரோனிக் அமிலம், செராமைடுகள் அல்லது கிளிசரின் போன்ற உட்பொருட்களைக் கொண்ட மறைவான மாய்ஸ்சரைசர்களைப் பயன்படுத்தலாம். மாய்ஸ்சரைசர்களை பயன்படுத்துவது, சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவுகிறது.
ஈரப்பதமூட்டிகளைப் பயன்படுத்துவது
வீட்டிற்குள் காற்றின் ஈரப்பதத்தை அதிகரிக்க, ஈரப்பதமூட்டியைப் பயன்படுத்தலாம். மேலும், இது சரும வறட்சியைத் தடுக்க உதவுகிறது. எனவே, படுக்கையறை அல்லது வசிக்கும் இடத்தில் ஈரப்பதமூட்டியை இணைப்பது, உட்புற வெப்பத்தை பயன்படுத்தினாலும், சருமத்தின் இயற்கையான ஈரப்பதத்தை பராமரிக்க உதவுகிறது.
ஓட்ஸ் குளியல்
ஓட்ஸ் குளியல் இயற்கையான அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டதாகும். இது சரும எரிச்சலைத் தணிக்க உதவுகிறது. மேலும், ஓட்மீல் குளியல் சருமத்தில் அரிப்புகளை நீக்குவது மட்டுமல்லாமல், ஈரப்பத இழப்பைத் தடுக்க ஒரு பாதுகாப்பு தடையை வழங்குகிறது.
ஆய்வு ஒன்றில், ஓட்மீல் சாறுகள் அழற்சி எதிர்ப்பு செயல்பாடுகள் மற்றும் ஆக்சிஜனேற்ற எதிர்ப்புப் பண்புகள் நிறைந்ததாகும். இது லேசான, மிதமான அரிப்பு மற்றும் வறண்ட சருமம் உள்ள பெண்களுக்கு உதவுவதாகக் கூறப்படுகிறது.
கற்றாழை ஜெல்
கற்றாழை ஜெல்லில் உள்ள சருமத்தை ஆற்றும் பண்புகள் வீக்கமடைந்த சருமத்தை அமைதிப்படுத்தவும், அரிப்பைக் குறைக்கவும் உதவுகிறது. ஆய்வில், கற்றாழை ஜெல்லில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளது. இது வீக்கமடைந்த அரிக்கும் தோலழற்சியை அமைதிப்படுத்துகிறது. இது அரிப்பிலிருந்து நிவாரணம் தருகிறது.
நீரேற்றமாக இருப்பது
குளிர்காலத்தில் சரும அரிப்புக்கான மேற்பூச்சு சிகிச்சைகள் போலவே உள்ளிருந்தும் நீரேற்றமாக இருப்பது அவசியமாகும். உடலை நீரேற்றமாக வைத்திருப்பதன் மூலம் சருமத்தின் ஈரப்பதத்தை பராமரிக்க முடியும். மேலும், இது சருமத்தின் ஒட்டுமொத்த நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துகிறது. கூடுதலாக, இது வறட்சி மற்றும் அரிப்புகளை குறைக்க உதவுவதாகக் கூறப்படுகிறது.
- தாகம் நீரிழப்பின் முதல் அறிகுறியாகும்.
- நீரிழப்புடன் இருக்கும்போது ரத்த ஓட்டத்தின் அளவு குறையும்.
கோடை காலத்தில் சுட்டெரித்த வெயிலால் ஏற்பட்ட நீரிழப்பை ஈடுசெய்ய அடிக்கடி தண்ணீர் பருகியவர்கள் மழைக்காலம் தொடங்கியதும் தண்ணீர் குடிக்க மறந்துவிடுவார்கள். பருவநிலை மாறினாலும் போதுமான அளவு தண்ணீர் பருகாவிட்டால் நீரிழப்பு ஏற்பட்டு பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். ஒருசில அறிகுறிகள் உடலில் நீரிழப்பு ஏற்பட்டிருப்பதை உணர்த்தும். அவை...
தாகம்
இதுதான் நீரிழப்பின் முதல் அறிகுறியாகும். நீரிழப்புடன் இருக்கும்போது, தாகம் ஏற்படுவதை உணர்த்த உடல் மூளைக்கு சமிக்ஞைகளை அனுப்பும். அதிக தாகமாக இருப்பதை நீங்கள் உணர்வதற்குள் ஓளரவு உடலில் நீரிழப்பு ஏற்பட்டிருக்கும். அதற்கு இடம் கொடுக்காமல் அடிக்கடி சிறிதளவாவது தண்ணீர் பருக வேண்டும்.
சிறுநீர் கழித்தல்
உடல் நீரிழப்புக்கு ஆளாகும்போது, திரவங்களை சேமிக்க முயற்சிக்கும். அதனால் சிறுநீர் வெளியேறுவது தாமதமாகும். அல்லது குறைவாகவே சிறுநீர் வெளியேறும். நீண்ட நேரமாக சிறுநீர் கழிக்காமல் இருந்தால் உடல் நீரிழப்புக்கு உள்ளாகி இருப்பதை உணர்த்தும். வெளியேறும் சிறுநீரின் நிறமும் மாறி இருக்கும்.
வாய் வறட்சி
நீரிழப்பு ஏற்பட்டிருந்தால் வாய் மற்றும் உதடுகள் வறண்டு போய்விடும். உதட்டில் ஆங்காங்கே சிறு சிறு வெடிப்புகளும் ஏற்படக்கூடும். உதடு நன்றாக உலர்ந்த நிலையில் காணப்படும். வாய் துர்நாற்றமும் ஏற்படக்கூடும்.
சோர்வு - மயக்கம்
நீரிழப்புடன் இருக்கும்போது ரத்த ஓட்டத்தின் அளவு குறையும். அதன் செயல்பாட்டில் சுணக்கம் ஏற்படும். அதனால் சோர்வு மற்றும் தலைச்சுற்றல் உண்டாகக்கூடும். சிலருக்கு மயக்கமும் ஏற்படும்.
தலைவலி
நீரிழப்பு அதிகரித்துவிட்டால் தலைவலியை ஏற்படுத்தும்.ஏனெனில் திரவங்களின் பற்றாக்குறை காரணமாக மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டமும் பாதிப்படையும். அதன் வெளிப்பாடாக தலைவலியால் அவதிப்பட வேண்டியிருக்கும்.
உலர்ந்த சருமம்
நீரிழப்பு உதட்டை மட்டுமல்ல சருமத்தை வறண்டுபோக செய்துவிடும். சருமத்தின் மென்மைத்தன்மை மாறிவிடும். சிலருக்கு அரிப்பு ஏற்படக்கூடும்.
கண்கள்
நீரிழப்பு கண்களையும் பாதிப்படையச் செய்துவிடும். நீரிழப்பை ஈடு செய்ய கண்களைச் சுற்றியுள்ள எல்லா இடங்களில் இருந்தும் திரவங்களை இழுக்கும். அதனால் கண்களை சுற்றி வறண்டு, குழி விழுந்தது போல் காட்சி அளிக்கும்.
தசைப்பிடிப்பு
நீரிழப்பு உடலில் எலக்ட்ரோலைட்டுகளின் சமநிலையின்மைக்கும் வழிவகுக்கும். அதன் காரணமாக தசைப்பிடிப்பு உண்டாகும். குறிப்பாக உடற்பயிற்சி செய்யும்போதோ அல்லது அதற்குப் பிறகோ தசைப்பிடிப்பால் அவதிப்பட வேண்டியிருக்கும். இதனை தவிர்க்க போதிய அளவு தண்ணீர் பருகுவதை உறுதி செய்ய வேண்டும்.
- மூலிகை குளியல் பொடி உங்களை புத்துணர்வாகவும் வைக்க உதவும்.
- மனதிற்கும் சருமத்திற்கும் குளிர்ச்சி தரும்.
இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் மூலிகை குளியல் பொடியை தினமும் தேய்த்துக் குளிக்கும்போது உடல் பளிச்சென மின்னும், முகமும் உடலும் பொலிவு பெறுவதோடு மனமும் உற்சாகமடையும். மனதிற்கும் சருமத்திற்கும் குளிர்ச்சி தரும் வகையில் மூலிகைகளால் செய்யப்பட்ட `மூலிகை குளியல் பொடி' உங்களை புத்துணர்வாகவும் வைக்க உதவும்.
சரும பிரச்சனைகள்:
நாம் வாழும் இந்த அவசர உலகத்தில் யாருக்கும் தன்னுடைய உடல் நலனை பற்றியும் உடல் அழகு பற்றியும் சிறிது கூட கவலை கிடையாது. குறிப்பாக பெண்கள் அனுபவிக்கும் மிகப்பெரிய பிரச்சனை சருமப்பிரச்சனை. சரும தொந்தரவுகள், சரும வறட்சி என்று பல பிரச்சனைகள் எழுகிறது. இதற்கு காரணம் நாம் அதிகமாக பயன்படுத்தும் செயற்கை சாதனங்கள் தான். அதனை தவிர்த்து நம் முன்னோர்கள் அளித்துள்ள இயற்கையான மூலிகைகளை கொண்டு ஒரு அருமையான `மூலிகை குளியல் பொடி' தயார் செய்து பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்:
கஸ்தூரி மஞ்சள் -100 கிராம்
விரலி மஞ்சள் – 100 கிராம்
சந்தானம் – 100 கிராம்
கோரைக்கிழங்கு பொடி -100 கிராம்
பாசிப்பயிறு -100 கிராம்
இவை அனைத்தையும் ஒரு நாள் நிழலில் காயவைத்து அரைத்துக் கொள்ளுங்கள். இதனை தினம் சோப்பு மற்றும் லோஷன் பயன்படுத்துவதற்கு பதில் இந்த மூலிகை பொடியை பயன்படுத்தலாம். இது உடலுக்கு புத்துணர்ச்சியாகவும், நறுமணம் தரக்கூடியதாகவும் இருக்கும்.
பயன்கள்:
இதன் மூலமாக சொறி, சிரங்கு, தேமல் போன்ற பல சருமப் பிரச்சனைகளில் இருந்து மீளலாம். இந்த பொடி எந்த ஒரு அலர்ஜியையும் ஏற்படுத்தாது. பிறந்த குழந்தை முதல் அனைவரும் கூட இதனை பயன்படுத்தலாம்.
மற்றொரு மூலிகை பொடி
மூலிகை குளியல் பொடி தயாரிக்க சந்தனம், அகில், அதிமதுரம், மரிக்கொழுந்து, துளசி, கஸ்தூரி மஞ்சள், ரோஜா இதழ்கள், வெட்டி வேர், ஜாதிக்காய், திரவியப்பட்டை, மகிழம் பூ, ஆவரம் பூ, வேம்பு, செம்பருத்தி பூ, பூலான் கிழங்கு, கோரைக்கிழங்கு, கார்போகரசி, விளாமிச்சை, ஆரஞ்சு பழத்தோல், பச்சை பயறு மற்றும் கடலை பருப்பு ஆகிய பொருட்களை நன்கு வெயிலில் காயவைத்து அரைத்துக்கொள்ளவேண்டும்.
இயற்கை மூலிகை குளியல் பொடியை தினமும் தேய்த்துக் குளித்துவந்தால் முகப்பருக்கள் மற்றும் முகப்பருவினால் ஏற்படும் கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகள் மறைந்து முகம் மென்மையாக மாறும்.
தோல் நோய்கள், தேமல், வியர்வை நாற்றம், தேவையற்ற முடிகள் போன்றவற்றை நீக்கும். அதுமட்டுமின்றி சில ஆண்களுக்கும், பெண்களுக்கும் உடலில் வரி வரியாக இருக்கும், சிலருக்கு தோள்பட்டையிலும் முதுகுப் புறங்களிலும் பரு போன்ற சிறு கட்டிகள் இருக்கும்.
தினமும் இதனை உபயோகித்து குளித்து வர சிறு கட்டிகளும், வரிகளும் மறைந்து போகும். வெயில் காலங்களில் வியர்வையினால் உண்டாகும் வியர்வை நாற்றத்தைப் போக்கி நல்ல நறுமணத்தையும், உற்சாகத்தையும் தரக்கூடியது. மேலும் வெயிலினால் உண்டாகும் உடல் வெப்பத்தை குறைத்து உடலுக்கு குளிர்ச்சியைத் தருகிறுது.
- சரும வறட்சி அனைத்து வயதினரும் எதிர்கொள்ளும் பிரச்சினையாகும்.
- சீமை சாமந்திப்பூ இயற்கையான மாய்ஸ்சரைசராக செயல்படும்.
சரும வறட்சி அனைத்து வயதினரும் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினையாகும். வறட்சியை தவிர்த்து சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைப்பதற்கு பல்வேறு இயற்கையான வழிகள் உள்ளன. அவற்றில் இந்தியாவின் பழமையான மருத்துவ முறைகளில் ஒன்றான ஆயுர்வேதத்தில் கூறப்பட்டிருக்கும் அழகு குறிப்புகள் பற்றி பார்ப்போம்...
மஞ்சள் சாமந்திப்பூ:
சாமந்திப்பூவில் இயற்கையான பிளேவனாய்டுகள் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய எண்ணெய்கள் உள்ளன. சாமந்திப்பூவின் இதழ்களை சிறிதளவு தண்ணீர் ஊற்றி பசைபோல அரைத்துக்கொள்ளவும். அதை சருமத்தில் பூசவும். அது நன்றாக உலர்ந்தவுடன் வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தைக் கழுவவும். இவ்வாறு தொடர்ச்சியாக செய்துவந்தால் சருமம் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.
சீமை சாமந்திப்பூ:
சீமை சாமந்திப்பூ இயற்கையான மாய்ஸ்சரைசராக செயல்படும். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் பல்வேறு சருமப்பிரச்சினைகளுக்கு தீர்வாக இருக்கின்றன. சீமை சாமந்திப்பூவை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். அந்த தண்ணீரை வடிகட்டி, குளிக்கும் தண்ணீரில் கலந்து பயன்படுத்தவும். சீமை சாமந்திப்பூ உங்கள் சருமத்தை மென்மையாகவும், பொலிவாகவும் மாற்றும்.
பப்பாளி:
பப்பாளியில் வைட்டமின் 'ஏ' சத்து அதிக அளவில் உள்ளது. இது சருமத்தை வறட்சி அடையாமல் பாதுகாக்கும். நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தை ஸ்கிரப்பராக சருமத்துக்கு பயன்படுத்தலாம். பப்பாளிப் பழத்தை கூழாக அரைத்து சருமத்தில் பூசி வட்ட இயக்கத்தில் மென்மையாக தேய்த்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி சருமம் பளிச்சிடும்.
கற்றாழை:
சருமம் மற்றும் தலைமுடி தொடர்பான பிரச்சினைகளுக்கு கற்றாழை சிறந்த தீர்வாக இருக்கும். இதில் உள்ள ஈரப்பதமூட்டும் பண்புகள் சரும வறட்சியைத் தடுத்து இயற்கையான ஈரப்பதத்தை அளிக்கும். தூங்கச் செல்வதற்கு முன்பு கற்றாழை ஜெல்லை சருமத்தில் பூசிக்கொள்வது சருமப் பொலிவை மேம்படுத்தும்.
வாழைப்பழம் மற்றும் தேன்:
வாழைப்பழத்துடன் தேன் சேர்த்து பசை போல கலந்து சருமத்தில் பூசவும். அது நன்றாக உலர்ந்தவுடன் வெதுவெதுப்பான தண்ணில் கழுவவும். இந்த சிகிச்சை முறை பல நூற்றாண்டுகளாக வழக்கத்தில் உள்ளது.
பார்லி:
பார்லி மாவுடன் மஞ்சள்தூள் மற்றும் கடுகு எண்ணெய் கலந்து சருமத்தில் பூசவும். இது சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் வறட்சியை நீக்கி சருமத்தை பொலிவோடும், மென்மையாகவும் மாற்றும்.
சந்தனம்:
சந்தனம் இயற்கையாகவே எண்ணெய்ப்பசை கொண்டது. இதை ரோஜா பன்னீருடன் சேர்த்து பசை போல தயாரித்து சருமத்தில் பூசினால் சரும வறட்சி நீங்கும். சருமம் பளபளப்பாகும்.
மூலிகைத் தேநீர்:
சீரகம், தனியா விதைகள் மற்றும் சோம்பு இவை மூன்றையும் சமஅளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும். பின்னர் அதை வடிகட்டி ஆறவைத்து அந்த தண்ணீரை சருமத்தில் பூசவும். இது சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கி ஈரப்பதத்தை தக்கவைக்கும்.
- உருளைக்கிழங்கு சாறை தடவி சிறிது நேரம் கழித்து கழுவலாம்.
- வாழைப்பழத்தை மசித்து பால் கலந்து முகத்தில் பூசினால் கரும்புள்ளிகள் மறையும்.
* வாழைப்பழத்தை மசித்து பால் கலந்து முகத்தில் பூசி, சில நிமிடங்கள் கழித்து தண்ணீரால் கழுவினால், முகம் பொலிவுடன் காணப்படும்.
* பாதாம் பருப்பு, தேன் மற்றும் தயிர் ஆகியவற்றை சம அளவு எடுத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், முகத்தின் பொலிவு அதிகரிக்கும்.
* தேன் மற்றும் பால் கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினாலும், முகம் பொலிவுடன் காணப்படும்.
* கோதுமை தவிடுடன் பால் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வர சிறிது நாட்களில் கரும்புள்ளிகள் மறைந்து விடும்.
* தேன் மூன்று டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொண்டு அத்துடன், ஒரு டீஸ்பூன் லவங்கப்பட்டை தூள் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவினால் கரும்புள்ளிகள் மறையும்.
* முருங்கை இலைச்சாறு, எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து தடவினால், கரும்புள்ளிகள் நீங்கும். அதேபோல் பப்பாளி பழத்தை மசித்து தேன் கலந்து முகத்தில் தடவினாலும், நல்ல பலன் கிடைக்கும்.
* முல்தானி மட்டியுடன் வெள்ளரிச் சாறு கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் தடவி காய்ந்த பின் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வர நாளடைவில் கரும்புள்ளிகள் மறையும்.
* ரோஜா இதழ் மற்றும் பாதாம் பருப்பை அரைத்து முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவி வர, கரும்புள்ளிகள் மறையும்.
* கடலை எண்ணெய் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு சம அளவு கலந்து அவற்றை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து கழுவலாம்.
* உருளைக்கிழங்கு சாறை தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், கரும்புள்ளிகள் மறையும்.
* எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவி வர, அவை நாளடைவில் மறைந்து விடும்.
* வெள்ளரிச்சாறு, புதினா சாறு, எலுமிச்சை பழச்சாறு ஆகியவைகளை சம அளவில் கலந்து முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மீது தேய்த்து வந்தால் கரும்புள்ளிகள் போய்விடும்.
* முட்டையின் வெள்ளைக் கருவை நன்றாக அடித்து, முகத்தில் தேய்த்து காய்ந்ததும், அவற்றின் மீது தண்ணீர் தடவி தேய்த்தால், கரும்புள்ளிகள் நீங்கும்.
* முட்டைகோசுடன் பன்னீர் ரோஜாவை மசித்து அதில் பால் மற்றும் தேனை கலந்து முகத்தில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்தால், கரும்புள்ளிகள் நீங்கும்.
* வெந்தயக்கீரையை அரைத்து முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் நாளடைவில் பிளாக்ஹெட்ஸ் எனப்படும் கரும்புள்ளிகள் நீங்கும்.
* சந்தனத் தூள் மற்றும் மஞ்சள் தூள் சம அளவுடன், பால் கலந்து பேஸ்ட் போல் குழைத்து கரும்புள்ளிகள் உள்ள பகுதிகளில் தடவி, காய்ந்த பின் தண்ணீரால் கழுவ வேண்டும்.
* தக்காளி மற்றும் வெள்ளரிக்காயை நன்கு நைசாக அரைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால், கரும்புள்ளிகள் ஏற்படுவது தடுக்கப்படும்.
- சோப்பில்லாமல் குளித்தால், குளித்தது போன்ற உணர்வே இல்லை.
- பாடிவாஷில் பி.ஹெச் அளவு மிதமானதாக இருக்கும்.
தினமும் எல்லோரும் பயன்படுத்தும், இன்றியமையாத ஒன்றாக ஆகிவிட்டது சோப். சோப்பில்லாமல் குளித்தால், குளித்தது போன்ற உணர்வே ஏற்படுவது இல்லை. அந்த அளவுக்கு சோப் நம் அன்றாட வாழ்வில் பழகிவிட்டது. தற்போது இதைப் பயன்படுத்துவதிலும், சில நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. இது அனைவருக்கும் ஏற்றுக்கொள்வது இல்லை. அதனால்தான் இப்போதெல்லாம் பாடிவாஷ் பயன்படுத்தச் சொல்லி அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள்.
பாடிவாஷ் ஏன் சிறந்தது?
பாடிவாஷில் உள்ள பி.ஹெச் அளவைவிட, சோப்பில் உள்ள பி.ஹெச் அளவு அதிகம். இது சிலரது சருமத்துக்கு ஒத்துக்கொள்ளாது. சருமத்தில் உள்ள இயற்கையான ஈரப்பதத்தை, அதிதீவிர ரசாயனங்கள் கலந்த சோப் நீக்கிவிடும். அதுபோல, இயற்கையாகவே சருமத்தில் சுரக்கும் எண்ணெயும் சோப் பயன்படுத்துவதால் நீங்கிவிடும். இதனால் சருமம் வறட்சியாகிவிடும்.
பாடிவாஷிலோ, பி.ஹெச் அளவு மிதமானதாக இருக்கும். சருமத்தைப் பெரிதாக பாதிக்காது; ஈரப்பதத்தை நீக்காது; சருமம், மென்மையாகவும் மிருதுவாகவும் இருக்க பாடிவாஷ் உதவும்.
எக்ஸிமா, சொரியாசிஸ், வறட்சியான சருமம் போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் சோப் பயன்படுத்தாமல், பாடிவாஷ் பயன்படுத்துவதே நல்லது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றோம். ஏனெனில், பாடிவாஷில் உள்ள மாய்ஸ்சரைசர், சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை மீட்டெடுத்துவிடும்.
பாடிவாஷ் பயன்படுத்துவதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. அதாவது, நிறைய பிராண்டுகள் பாடிவாஷுடன் லூஃபா என்கிற ஸ்க்ரப்பரைத் தருகின்றனர். இதை யாருமே பயன்படுத்தக் கூடாது. இந்த ஸ்க்ரப்பரைத் தேய்க்கத் தேய்க்க, சருமம் வெள்ளையாக மாறுவதுபோல தோன்றலாம்.
ஆனால், சருமத்தின் மேற்பரப்பில் உள்ள படிமங்களை உரித்துவிடும். சருமத்தைப் பாதுகாக்கும் படிமங்கள் நீக்கப்பட்டால், சூரியஒளி நேரடியாக சருமத்தில் படும். எனவே, ஸ்க்ரப்பரை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. இந்த நிலையில் சருமத்துக்கு நிரந்தரமான கறுப்பு படிமம் ஏற்பட்டுவிடலாம். அதை நீக்குவதும் கடினம்.
வேண்டவே வேண்டாம் ஸ்க்ரப்பர்
கடைகளில் ஆயுர்வேதிக், ஆர்கானிக் எனப் பல வகைகளில் ஸ்க்ரப்பர்கள் கிடைக்கின்றன. எந்த வகை ஸ்க்ரப்பராக இருந்தாலும், அவற்றைப் பயன்படுத்த வேண்டாம். கைகளால் தேய்த்துக் குளிக்கும் முறையையே மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றோம்.
பாடிவாஷ்… எப்படி பயன்படுத்துவது?
பிறந்த குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரும் பாடிவாஷ் பயன்படுத்தலாம். தேவையான அளவு பாடிவாஷை கப்பிலோ, கையிலோ ஊற்றிக்கொண்டு, தன் கைகளாலேயே உடல் முழுவதும் பூசி, தேய்த்து குளிக்கலாம்.
சில பாடிவாஷ்களில் சின்னச் சின்ன உருண்டைகள் போன்று சேர்ந்து வரும். அது சருமத்துக்கும் கேடு, சூழலுக்கும் கேடு. இதை அவசியம் தவிர்க்க வேண்டும். மாய்ஸ்சரைசர் அளவு அதிகமாக இருக்கும் பாடிவாஷ், வாசனை குறைவான பாடிவாஷ் ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கலாம்.
உலர் சருமப் பிரச்னை உள்ளவர்களுக்கு, மாய்ஸ்சரைசர் அளவு அதிகமாக இருக்க வேண்டும். அதேசமயம் வாசனை இல்லாத பாடிவாஷாகவும் இருக்க வேண்டும். 0-6 வயதுள்ள குழந்தைகளுக்கென பிரத்தியேகமாக நறுமணம் சேர்க்காத பாடிவாஷ் கிடைக்கிறது. அவற்றைப் பயன்படுத்தலாம்.
தேங்காய்ப்பால், பட்டர், ஆலிவ், கற்றாழை போன்றவை கலந்த பாடிவாஷ் சிறந்தவை.
பாடிவாஷை முகத்துக்குப் பயன்படுத்தலாமா?
சருமம், எண்ணெய் பசையானது, வறண்டது, இரண்டும் கலந்தது (காம்பினேஷன்), நார்மலானது என நான்கு வகைப்படும். முகத்தில் எண்ணெய் வழியும் பிரச்சினை இருப்போர், எண்ணெய்ப் பசை நீக்கும் ஃபேஸ் வாஷ் மற்றும் உடலுக்கு பாடிவாஷ் பயன்படுத்தலாம்.
வறண்ட சருமம், காம்பினேஷன் சருமம் இருப்பவர்கள் அவர்களது சருமத்துக்கேற்ற ஃபேஸ்வாஷ் அல்லது பாடிவாஷையேகூட முகத்துக்கும் பயன்படுத்தலாம்.
நார்மல் சருமம் கொண்டவர்கள், பாடிவாஷ் மட்டும் பயன்படுத்தினாலே போதும். விருப்பப்பட்டால் மட்டும், முகத்துக்கு ஃபேஸ்வாஷ் பயன்படுத்துங்கள்.
சோப் யார் பயன்படுத்தலாம்?
ஒரே சோப்பை குடும்பத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்துவது சரியல்ல. ஒருவரிடம் இருக்கும் சருமப் பிரச்னை மற்றொருவருக்குப் பரவும் வாய்ப்பை சோப் ஏற்படுத்திவிடும். ஒரே சோப்பை அனைவரும் பயன்படுத்துவது சுகாதாரமானது கிடையாது.
ஒவ்வொருவரின் சருமம், வெவ்வேறு வகையைச் சார்ந்ததாக இருக்கும். தன்னுடைய சருமத்துக்கு எது பொருந்தும் என்பதை சரும மருத்துவரிடம் கேட்ட பிறகு சோப்பை தேர்ந்தெடுக்கலாம். சிலருக்கு முகத்தில் அதிகமாக எண்ணெய் வழியும். இவர்கள் சோப் பயன்படுத்தலாம். ஆனால், அதுவும் பி.ஹெச் அளவு 5.5 இருக்கிற சோப்பாகத் தேர்ந்தெடுப்பது நல்லது. மேலும், மருத்துவர் பரிந்துரைக்கும் சோப்பை பயன்படுத்துவது பாதுகாப்பானது.
கட்டுப்படுத்த முடியாத எண்ணெய்ப் பசை சருமத்துக்கு அதற்கேற்ற பிரத்தியேக சோப் பயன்படுத்தலாம். ஆனால், அதையும் ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு மேல் பயன்படுத்த வேண்டாம்.
- பனிக்காலத்தில் சருமம் வறண்டு போகும்.
- உதடுகள் வெடிக்கும். கை, கால்களில் நிறம் மாறும்.
பெண்களின் சருமம் பனிக்காலத்தில் வறண்டு போகும். உதடுகள் வெடிக்கும். கை, கால்களில் நிறம் மாறும். அதற்கு காரணம்…?
சருமத்திற்கு தேவையான ஈரத்தன்மை, எண்ணைத் தன்மை போன்றவற்றை வழங்கி, சருமத்தை மினுமினுப்பாக வைத்திருக்கும் சில வகை சுரப்பிகளின் செயல்பாடுகள் பனிக்காலத்தில் மட்டும் படுமந்தமாகிவிடும். மேலும் மயிர்க்கால்களும் அடைத்துக் கொள்ளும்.
இதனால் சுரப்பிகள் தரும் ஈரத்தன்மையும், எண்ணைய் தன்மையும் சருமத்திற்கு கிடைக்காமல் போய்விடும். இதனால் சருமம் வறண்டு தோலில் சுருக்கங்களும், மாற்றங்களும் ஏற்படுகின்றன.
பனிக்காலத்தில் குளிர்காற்று அதிகமாக வீசுவதால், சருமத்தின் மென்மை குறையும். இதனால் எளிதாக சருமம் வறண்டு விடும். எண்ணைய் தன்மை உடைய சருமமும் பாதிக்கப்படும்.
உதடுகளில் சுரபிகள் எதுவும் இல்லாததால், குளிர்காலத்தில் அதிகமாக பாதிக்கப்படுகிறது. மனித உடலிலே மென்மையானது உதட்டுப் பகுதி. அதனால் பனிக்காலத்தில் அதிகமாக பாதிப்புகள் ஏற்படும்.
பனிக்காலத்தில் உடல் அழகை பராமரிப்பது, ஆரோக்கியத்தோடு தொடர்புடைய விஷயமாக இருக்கிறது. ஆதலால், பனிக்காலத்தில் பெண்கள் உணவு, உடற்பயிற்சி, உடல் பராமரிப்பு போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது.
பனிக்காலத்தில் உடல் சூடானது குறையாத அளவுக்கு பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்காக சற்று அதிக உணவு சாப்பிட வேண்டியது வரும். குளிர்காலத்தில் ஆரோக்கியமானவர்களுக்கு அடிக்கடி பசி எடுக்க, இதுவே காரணமாகும்.
உணவு சத்துடனும், சூடாகவும் இருக்க வேண்டியது அவசியம். சூப் குடிப்பது நல்லது. பாதாம் பருப்பு, வேர்க்கடலை, அரிசி, கோதுமை, முந்திரி பருப்பு ஆகிய உணவுகளை அதிகம் சாப்பிட்டால் உடல் சூடு பாதுகாக்கபடும்.
பெண்கள் உடலில் தேங்காய் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்த பின்பு குளிப்பது மிகவும் நல்லது. இதன் முலம் உடல் வறட்சி, வெடிப்பு போன்றவற்றை தடுக்கலாம். நல்லெண்ணெய், கடுகு எண்ணெய் ஆகியவை சிறந்தது.
சோப் போடுவதை தவிர்க்க வேண்டும். ஷாம்புவை தவிரப்பதும் நல்லது. கடலை மாவு, பாசிபயறு மாவு பயன்படுத்தலாம். பனிக்காலத்தில் வாரத்தில் இரண்டு முறையாவது எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். இரவில் தூங்குவதற்கு முன்பாக உதட்டில் வெண்ணை அல்லது பாலாடைக் கட்டியை தடவலாம்.
பன்னீர், கிளிசரின் இரண்டையும் கலந்து தூங்கச் செல்லும்போது கால் பாதங்களிலும், கை விரல்களிலும் தேய்த்துக் கொண்டால் சருமம் மிருதுவாகி அழகாகும்.
பனிக்காலத்தில் பெண்களுக்கு பாதங்களிலும் வெடிப்பு ஏற்படும். வெடித்த பாதத்தில் எலுமிச்சம் பழத்தை வெட்டி தேய்த்து நன்றாக சுத்தம் செய்தால் வெடிப்பு ஓரளவு கட்டுபடும். இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு, பாதங்களை பத்து நிமிடங்களுக்கு உப்பு கலந்த நீரில் மூழ்க வைத்து, பின்னர் `வாஸ்லின்' தேய்க்கலாம். இப்படி செய்தாலும் பாத வெடிப்பு மறையும்.
தேங்காய் எண்ணெய், பசு நெய், தேன், மஞ்சள்பொடி ஆகியவற்றை கலந்து காலில் வெடித்த பகுதிகளில் தேய்ப்பதும் ஓரளவு நல்ல பலனைத் தரும். பனிக்காலத்தில் நகங்களிலும், கால் பாதங்களிலும் மருதாணி தேய்ப்பது நல்லது.
பனிக்காலத்தில் தினமும் உடற்பயிற்சி செய்வது பெண்களுக்கு மிகவும் நல்லது. உடற்பயிற்சி முலம் ரத்த ஓட்டம் அதிகமாகும். மேலும் உடலின் தட்பவெப்ப நிலையும் பராமரிக்கபடும்.
முறையான உடற்பயிற்சிகளை செய்து, உடல் நன்றாக வியர்த்து விட்டால் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி அழகும் கிடைக்கும். உடற்பயிற்சி செய்வதன் முலம் சுரப்பிகள் ஓரளவு சுறுசுறுப்படையும். அதன் முலம் சருமத்திற்கு ஈரத்தன்மையும், எண்ணெய்த் தன்மையும் கிடைக்கும். இதனால் அழகும் பாதுகாக்கபடும்.
- பொதுவாகவே கிளென்சிங்கை பொருத்தவரை ஒரே புராடெக்ட்தான்.
- வறண்ட சருமத்திற்கு ஆவிப்பிடிக்கும் முறை கொடுக்கக் கூடாது.
சருமத்தில் 4 வகைகள் உள்ளன. சாதாரண சருமம், ஆயில் சருமம், வறண்ட சருமம், சென்சிட்டிவ் சருமம். ஒரு பழமொழி உண்டு `ஆல் த நேச்சுரல் புராடெக்ட்ஸ் ஆர் நாட் ஆல்வேஸ் குட்' உங்கள் சருமத்திற்கு பொருந்துகிற
இயற்கை பொருள் என்னுடைய சருமத்திற்கு விஷமாக இருக்கலாம். இயற்கையான புராடெக்ட்களிலேயே இந்த நிலை இருக்கும்பட்சத்தில் காஸ்மெட்டிக், கெமிக்கல் எனில் இன்னும் நாம் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும்.
பொதுவாகவே கிளென்சிங்கை பொருத்தவரை ஒரே புராடெக்ட்தான். இதனை எல்லா சருமத்திற்கும் பெரும்பாலான பார்லர்களிலும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் ஒவ்வொரு சருமத்திற்கும் ஒவ்வொரு கிளென்சிங் முறை உள்ளது.
உதாரணத்திற்கு ஃபேஸ் வாஷ்களே ஜெல் முறை எனில் வறண்ட சருமத்திற்கு, வேம்பு, ஆரஞ்ச் அடிப்படையாக கொண்ட ஃபேஸ் வாஷ் எனில் ஆயில் சருமத்திற்கு வேறு என பிரிப்பது போல் கிளென்சிங்கிலும் சருமத்திற்கு ஏற்ப மாறுபடும்.
ஆனால் அந்த அளவிற்கு இங்கே மெனெக்கெடுகிறார்களா? என கவனிக்கவும். மேலும் அதீத வறண்ட சருமம் கொண்ட சருமத்திற்கு பொதுவாக ஆவிப்பிடிக்கும் முறை கொடுக்கக் கூடாது. காரணம் ஏற்கனவே வறண்ட சருமத்தின் துளைகள் திறந்து தான் இருக்கும் எனும்போது அதனை சரும இறுக்கத்திற்கான ஃபேஷியல்கள் தான் கொடுக்க வேண்டும். இதனால் முகம் இளமை பெற்று, சுருக்கங்கள் மறையும்.
அதேபோல் ஆயில் சருமம் எனில் அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கி முகத்திற்கு புத்துணர்வு கொடுக்கும் ஃபேஷியல்களை கொடுக்க வேண்டும். இதனால் பருக்கள், வடுக்கள் மறையும்.
இந்த கோல்டு, டைமண்ட் ஃபேஷியல்கள் எல்லாம் எந்த அடிப்படையில் செய்கிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். தங்கம் விற்கும் விலைக்கு எப்படி சரும காஸ்மெட்டிக்குகளில் பயன்படுத்த முடியும். எனவே இப்படியான மாய விளம்பரங்களை நம்ப வேண்டாம்.
ஃபேஷியலின் சிறப்பே கொடுக்கப்படும் மசாஜ் மற்றும் க்ளீனிங் முறையில் தான் சிறப்பே உள்ளது. உங்கள் பிரச்சினை என்னவோ, சருமம் எப்படிப்பட்டதோ அதை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே ஃபேஷியல் தேர்வு இருக்க வேண்டும். எந்த கிரீம்களும் சருமத்தின் இயற்கையான மெலனினை கட்டுப்படுத்தி உங்களை வெள்ளையாக்காது, எனவே சிவப்பு நிறத்திற்கு மயங்க வேண்டாம். ஆரோக்கியமான சருமம் தான் முக்கியம். அதற்கான ஃபேஷியல் எதுவோ அதை தேர்வு செய்யுங்கள்.
- முதலில் முகப்பருவை தொட்டுப் பார்க்கவே கூடாது.
- வறண்ட சுருக்கமான சருமம்தான் மிஞ்சும்.
சரும அழகை கூட்ட என்னென்ன செய்யலாம் என்பதைத்தான் எல்லோரும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். சில நேரங்களில் சிலவற்றைத் தவிர்த்தாலே நம் சருமத்தை ஆரோக்கியமாகவும் அழகாகவும் பேணிக்காக்க முடியும்.
முகப்பரு, கரும்புள்ளியை கண்டதும் முகம் பார்க்கும் கண்ணாடியும் கையுமாக மாறிவிடுவோம். முதலில் முகப்பருவை தொட்டுப் பார்க்கவே கூடாது. அதிலும் முகப்பருவை போக்க பக்கத்து வீட்டார் கொடுத்த அறிவுரை, நண்பர்களின் டிப்ஸ், கேள்விப்பட்டது கேள்விப்படாதது என எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்தால் நீங்காத தழும்பு முகத்தில் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
முகத்தை பிரகாசமாக வைத்துக்கொள்ள அடிக்கடி முகம் கழுவுவது எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும். சொல்லப்போனால் முகப்பொலிவை பாதுகாக்க இயற்கையில் சருமத்தில் இருந்து எண்ணெய் சுரக்கும். அடிக்கடி முகம் கழுவுவதால் இந்த எண்ணெய் நீக்கப்பட்டு தோலின் ஈரப்பதம் குறைந்து, வறண்ட சுருக்கமான சருமம்தான் மிஞ்சும்.
இதேபோல் சரும கிரீம்களை பயன்படுத்துபவர்கள் பலர். சருமத்தின் அழகு, ஆரோக்கியம் மீது அக்கறை கொண்டவர்கள்கூட கழுத்து பகுதிக்கு முக்கியத்துவம் தருவதில்லை. தினமும் காலையும் இரவும் முகத்தில் கிரீம்களை பூசிவிட்டு கையில் இருக்கும் மிச்சம் மீதியை கழுத்தில் தேய்ப்பவர்கள்தான் பெரும்பாலானோர். எதையும் அதிகப்படியாக உபயோகிப்பது கேடு விளைவிக்கும்.
- நல்ல பிராண்ட் சன்ஸ்கிரீன்களையே வாங்குங்க. காலாவதி தேதி பார்க்க மறந்துடாதீங்க….
- சன்ஸ்கிரீனை தடவி 20 நிமிடங்களுக்கு பிறகு தான் நீங்க வெளியில் செல்ல வேண்டும்.
சூரியனின் புற ஊதா கதிர்களின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளில் இருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்க சன்ஸ்கிரீன் லோஷன்களை பயன்படுத்துவது மிகவும் முக்கியம். எப்போதும் புதிய சன்ஸ்கிரீன் லோஷன்களை உபயோகிப்பதே நல்லது. ஏற்கெனவே வாங்கி, சென்ற ஆண்டு பயன்படுத்தி மிச்சமான சன்ஸ்கிரீன் போடுவதை தவிர்க்கவும். முக்கியமாக, மருத்துவர் ஆலோசனைப்படி, நம் சருமத்துக்கு ஏற்ற சன்ஸ்கிரீனை தேர்ந்தெடுப்பது நல்லது.
* நல்ல பிராண்ட் சன்ஸ்கிரீன்களையே வாங்குங்க. காலாவதி தேதி பார்க்க மறந்துடாதீங்க….
* சன்ஸ்கிரீனில் குறிப்பிடப்பட்டிருக்கும் `எஸ்பிஎஃப்' 15, 30, 50 என்ற ரகங்களில் இருக்கும். இந்த எண்தான், அந்த சன்ஸ்கிரீன் எந்த அளவு வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாக்கும் என்பதற்கு அடையாளம். `எஸ்பிஎஃப்' 15 உள்ள சன்ஸ்கிரீன், வெயிலில் இருந்து ஒரு மணி நேரம் பாதுகாப்பு அளிக்கும். நம்ம ஊரு வெயிலுக்கு குறைந்தது 30 எஸ்பிஎஃப் சிறந்தது.
* முகத்துக்கு மட்டும்மல்ல வெயில்படும் எல்லா இடங்களிலும் (கழுத்து, கை, கால்) சன்ஸ்கிரீன் லோஷன் தடவலாம்.
* சன்ஸ்கிரீனை தடவி 20 நிமிடங்களுக்கு பிறகு தான் நீங்க வெளியில் செல்ல வேண்டும்.
* என்னதான் நீங்க சன்ஸ்கிரீன் பயன்படுத்தினாலும், வெயிலில் தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு மேல் செல்வதை தவிர்த்து விடுங்கள். தொடர்ந்து வெயிலில் இருந்தால், மூன்று மணி நேரம் கழித்து முகத்தை கழுவி மீண்டும் சன்ஸ்கிரீன் அப்ளை செய்து கொள்ளுங்கள்.
தரமான பிராண்டட் சன்ஸ்கிரீன் லோஷன்களை பயன்படுத்தவும். தற்போது, ஆர்கானிக் புராடக்டுகளிலும் சன்ஸ்கிரீன்கள் கிடைக்கின்றன. உங்களுக்கு ஏற்ற சன்ஸ்கிரீன்களை எத்தனை வருடங்கள் பயன்படுத்தலாம் என்று பரிசோதித்து வாங்குங்கள்.