search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கரும்புள்ளிகள் நீங்க"

    • உருளைக்கிழங்கு சாறை தடவி சிறிது நேரம் கழித்து கழுவலாம்.
    • வாழைப்பழத்தை மசித்து பால் கலந்து முகத்தில் பூசினால் கரும்புள்ளிகள் மறையும்.

    * வாழைப்பழத்தை மசித்து பால் கலந்து முகத்தில் பூசி, சில நிமிடங்கள் கழித்து தண்ணீரால் கழுவினால், முகம் பொலிவுடன் காணப்படும்.

    * பாதாம் பருப்பு, தேன் மற்றும் தயிர் ஆகியவற்றை சம அளவு எடுத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், முகத்தின் பொலிவு அதிகரிக்கும்.

    * தேன் மற்றும் பால் கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினாலும், முகம் பொலிவுடன் காணப்படும்.

    * கோதுமை தவிடுடன் பால் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வர சிறிது நாட்களில் கரும்புள்ளிகள் மறைந்து விடும்.

    * தேன் மூன்று டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொண்டு அத்துடன், ஒரு டீஸ்பூன் லவங்கப்பட்டை தூள் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவினால் கரும்புள்ளிகள் மறையும்.

    * முருங்கை இலைச்சாறு, எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து தடவினால், கரும்புள்ளிகள் நீங்கும். அதேபோல் பப்பாளி பழத்தை மசித்து தேன் கலந்து முகத்தில் தடவினாலும், நல்ல பலன் கிடைக்கும்.

    * முல்தானி மட்டியுடன் வெள்ளரிச் சாறு கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் தடவி காய்ந்த பின் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வர நாளடைவில் கரும்புள்ளிகள் மறையும்.

    * ரோஜா இதழ் மற்றும் பாதாம் பருப்பை அரைத்து முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவி வர, கரும்புள்ளிகள் மறையும்.

    * கடலை எண்ணெய் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு சம அளவு கலந்து அவற்றை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து கழுவலாம்.

    * உருளைக்கிழங்கு சாறை தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், கரும்புள்ளிகள் மறையும்.

    * எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவி வர, அவை நாளடைவில் மறைந்து விடும்.

    * வெள்ளரிச்சாறு, புதினா சாறு, எலுமிச்சை பழச்சாறு ஆகியவைகளை சம அளவில் கலந்து முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மீது தேய்த்து வந்தால் கரும்புள்ளிகள் போய்விடும்.

    * முட்டையின் வெள்ளைக் கருவை நன்றாக அடித்து, முகத்தில் தேய்த்து காய்ந்ததும், அவற்றின் மீது தண்ணீர் தடவி தேய்த்தால், கரும்புள்ளிகள் நீங்கும்.

    * முட்டைகோசுடன் பன்னீர் ரோஜாவை மசித்து அதில் பால் மற்றும் தேனை கலந்து முகத்தில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்தால், கரும்புள்ளிகள் நீங்கும்.

    * வெந்தயக்கீரையை அரைத்து முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் நாளடைவில் பிளாக்ஹெட்ஸ் எனப்படும் கரும்புள்ளிகள் நீங்கும்.

     * சந்தனத் தூள் மற்றும் மஞ்சள் தூள் சம அளவுடன், பால் கலந்து பேஸ்ட் போல் குழைத்து கரும்புள்ளிகள் உள்ள பகுதிகளில் தடவி, காய்ந்த பின் தண்ணீரால் கழுவ வேண்டும்.

    * தக்காளி மற்றும் வெள்ளரிக்காயை நன்கு நைசாக அரைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால், கரும்புள்ளிகள் ஏற்படுவது தடுக்கப்படும்.

    • முகத்தில் பருக்கள் வருவது இயற்கை தான்.
    • பருக்கள் கரும்புள்ளிகளாக மாறி முக அழகையே கெடுத்து விடுகிறது.

    பெரும்பாலும் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே முகத்தில் பருக்கள் வருவது இயற்கை தான். ஆனால் அந்த பருக்கள் நாளடைவில் கரும்புள்ளிகளாக மாறி முக அழகையே கெடுத்து விடுகிறது. அதுபோல் பருக்கள் வருவதற்கு நாமும் ஒரு காரணமாக இருக்கிறோம். அதாவது முக அழகை மேம்படுத்துவதற்காக கண்ட கிரீம்களை வாங்கி பயன்படுத்துவது, சோப்புகளை மாற்றி மாற்றி பயன்படுத்துவது போன்ற செயல்களால் தான் சருமத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் வருகிறது.

    உருளைக்கிழங்கு –1

    அரிசிமாவு – 2 டேபிள் ஸ்பூன்

    தேன் – 1 டேபிள் ஸ்பூன்

    முதலில் உங்கள் முகத்திற்கு தேவையான அளவு உருளைக்கிழங்கை எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் அதை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். அதை ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். அடுத்து அதை வடிகட்டி சாறை மட்டும் தனியாக எடுத்து கொள்ள வேண்டும்.

    உருளைக்கிழங்கில் இருக்கும் சத்துக்கள் கரும்புள்ளிகளை மாயமாய் மறைய செய்ய உதவுகிறது. மேலும் முக கருமையை நீக்கி முகத்தை எப்பொழுதும் பொலிவுடன் வைத்து கொள்கிறது.

    அடுத்து ஒரு கிண்ணத்தை எடுத்து அரிசிமாவு 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு எடுத்து அதில் நாம் வடிகட்டி எடுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கு சாறை ஊற்றிக் கொள்ள வேண்டும். அதில் தேன் ஒரு ஸ்பூன் அளவிற்கு ஊற்றி பேஸ்ட் போல நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அவ்வளவு தான் கரும்புள்ளிகளை நீக்கும் ஃபேஸ் பேக் ரெடி.

     முதலில் முகத்தை நன்றாக சுத்தம் செய்துவிட்டு இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். குறைந்தது 15 நிமிடம் வரை அப்படியே இருக்கட்டும். பின்னர் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவிக் கொள்ளவும். இதுபோல வாரத்திற்கு 3 முறை அல்லது தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் இருந்த இடம் தெரியாமல் மாயமாய் மறைந்தும் விடும்.


    ×