search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உருளைக்கிழங்கு ஃபேஸ் பேக்"

    • முகத்தில் பருக்கள் வருவது இயற்கை தான்.
    • பருக்கள் கரும்புள்ளிகளாக மாறி முக அழகையே கெடுத்து விடுகிறது.

    பெரும்பாலும் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே முகத்தில் பருக்கள் வருவது இயற்கை தான். ஆனால் அந்த பருக்கள் நாளடைவில் கரும்புள்ளிகளாக மாறி முக அழகையே கெடுத்து விடுகிறது. அதுபோல் பருக்கள் வருவதற்கு நாமும் ஒரு காரணமாக இருக்கிறோம். அதாவது முக அழகை மேம்படுத்துவதற்காக கண்ட கிரீம்களை வாங்கி பயன்படுத்துவது, சோப்புகளை மாற்றி மாற்றி பயன்படுத்துவது போன்ற செயல்களால் தான் சருமத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் வருகிறது.

    உருளைக்கிழங்கு –1

    அரிசிமாவு – 2 டேபிள் ஸ்பூன்

    தேன் – 1 டேபிள் ஸ்பூன்

    முதலில் உங்கள் முகத்திற்கு தேவையான அளவு உருளைக்கிழங்கை எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் அதை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். அதை ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். அடுத்து அதை வடிகட்டி சாறை மட்டும் தனியாக எடுத்து கொள்ள வேண்டும்.

    உருளைக்கிழங்கில் இருக்கும் சத்துக்கள் கரும்புள்ளிகளை மாயமாய் மறைய செய்ய உதவுகிறது. மேலும் முக கருமையை நீக்கி முகத்தை எப்பொழுதும் பொலிவுடன் வைத்து கொள்கிறது.

    அடுத்து ஒரு கிண்ணத்தை எடுத்து அரிசிமாவு 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு எடுத்து அதில் நாம் வடிகட்டி எடுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கு சாறை ஊற்றிக் கொள்ள வேண்டும். அதில் தேன் ஒரு ஸ்பூன் அளவிற்கு ஊற்றி பேஸ்ட் போல நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அவ்வளவு தான் கரும்புள்ளிகளை நீக்கும் ஃபேஸ் பேக் ரெடி.

     முதலில் முகத்தை நன்றாக சுத்தம் செய்துவிட்டு இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். குறைந்தது 15 நிமிடம் வரை அப்படியே இருக்கட்டும். பின்னர் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவிக் கொள்ளவும். இதுபோல வாரத்திற்கு 3 முறை அல்லது தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் இருந்த இடம் தெரியாமல் மாயமாய் மறைந்தும் விடும்.


    ×