search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Potato Face pack"

    • முகத்தில் பருக்கள் வருவது இயற்கை தான்.
    • பருக்கள் கரும்புள்ளிகளாக மாறி முக அழகையே கெடுத்து விடுகிறது.

    பெரும்பாலும் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே முகத்தில் பருக்கள் வருவது இயற்கை தான். ஆனால் அந்த பருக்கள் நாளடைவில் கரும்புள்ளிகளாக மாறி முக அழகையே கெடுத்து விடுகிறது. அதுபோல் பருக்கள் வருவதற்கு நாமும் ஒரு காரணமாக இருக்கிறோம். அதாவது முக அழகை மேம்படுத்துவதற்காக கண்ட கிரீம்களை வாங்கி பயன்படுத்துவது, சோப்புகளை மாற்றி மாற்றி பயன்படுத்துவது போன்ற செயல்களால் தான் சருமத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் வருகிறது.

    உருளைக்கிழங்கு –1

    அரிசிமாவு – 2 டேபிள் ஸ்பூன்

    தேன் – 1 டேபிள் ஸ்பூன்

    முதலில் உங்கள் முகத்திற்கு தேவையான அளவு உருளைக்கிழங்கை எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் அதை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். அதை ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். அடுத்து அதை வடிகட்டி சாறை மட்டும் தனியாக எடுத்து கொள்ள வேண்டும்.

    உருளைக்கிழங்கில் இருக்கும் சத்துக்கள் கரும்புள்ளிகளை மாயமாய் மறைய செய்ய உதவுகிறது. மேலும் முக கருமையை நீக்கி முகத்தை எப்பொழுதும் பொலிவுடன் வைத்து கொள்கிறது.

    அடுத்து ஒரு கிண்ணத்தை எடுத்து அரிசிமாவு 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு எடுத்து அதில் நாம் வடிகட்டி எடுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கு சாறை ஊற்றிக் கொள்ள வேண்டும். அதில் தேன் ஒரு ஸ்பூன் அளவிற்கு ஊற்றி பேஸ்ட் போல நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அவ்வளவு தான் கரும்புள்ளிகளை நீக்கும் ஃபேஸ் பேக் ரெடி.

     முதலில் முகத்தை நன்றாக சுத்தம் செய்துவிட்டு இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். குறைந்தது 15 நிமிடம் வரை அப்படியே இருக்கட்டும். பின்னர் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவிக் கொள்ளவும். இதுபோல வாரத்திற்கு 3 முறை அல்லது தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் இருந்த இடம் தெரியாமல் மாயமாய் மறைந்தும் விடும்.


    உருளைக்கிழங்கை சருமத்திற்கு பயன்படுத்துவதால் தெளிவான பளபளக்கும் சருமம் கிடைக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதனைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாம்.
    தினமும் அன்றாட சமையலுக்கு அதிகளவு பயன்படுத்த கூடியது தான் உருளைக்கிழங்கு. இது சரும பராமரிக்குக்கும், கூந்தல் பராமரிப்புக்கும் அதிகளவு பயன்படுகிறது. சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகள் ஆன கருவளையம், வெயிலினால் ஏற்படும் சரும பிரச்சனைகளுக்கு, வறண்ட சருமத்திற்கு, கரும்புள்ளிகளுக்கு, கண்களில் ஏற்படும் வீக்கத்திற்கு, ஆயில் சருமத்திற்கு என அனைத்து பிரச்சனைகளுக்கும் உருளைக்கிழங்கு தீர்வாகிறது.

    சிலருக்கு சருமத்தில் எப்போது எண்ணெய் வழிந்துகொண்டே இருக்கு. இதன் காரணமாக சருமம் பொலிவிழந்து காணப்படும். இனி கவலை வேண்டாம். (potato face pack) உருளைக்கிழங்கு தீர்வாகிறது.

    உருளைக்கிழங்கு சாறுடன் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளவும். பின்பு இவற்றை ஒரு காட்டன் பஞ்சியில் நனைத்து முகத்தில் தடவ வேண்டும். பிறகு 20 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ முகத்தி இருக்கும் தேவையற்ற எண்ணெய் பசை நீங்கி சருமம் பொலிவுடன் காணப்படும்.

    ஒரு பௌலில் உருளைக்கிழங்கு சாறு - 3 ஸ்பூன், தேன் - 2 ஸ்பூன் எடுத்து நன்றாக கலந்து கொள்ளவும். இதனை உங்கள் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 10 நிமிடங்கள் மசாஜ் செய்த பின்னர் 15 நிமிடங்கள் காய விடவும். முழுவதும் காய்ந்தவுடன் முகத்தைக் கழுவுங்கள். இதனை தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    ஒரு பௌலில் உருளைக்கிழங்கு சாறு - 2 ஸ்பூன், எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன், தேன் - 1/2 ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்தக் கலவையை உங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவவும். 15 நிமிடங்கள் அப்படியே விடவும். பிறகு தண்ணீரால் முகத்தைக் கழுவவும். இதனை ஒரு நாள் விட்டு ஒருநாள் செய்து வரலாம்.

    இந்த பேக் முகத்தில் உள்ள அதிக எண்ணெயைப் போக்கி, அடைப்பட்ட துளைகளைத் திறந்து சருமத்தை பளிச்சிட வைக்கிறது. மேலும் சருமத்திற்கு ஈரப்பதத்தைத் தருகிறது.
    ×