search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்தனம்"

    • சரும வறட்சி அனைத்து வயதினரும் எதிர்கொள்ளும் பிரச்சினையாகும்.
    • சீமை சாமந்திப்பூ இயற்கையான மாய்ஸ்சரைசராக செயல்படும்.

    சரும வறட்சி அனைத்து வயதினரும் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினையாகும். வறட்சியை தவிர்த்து சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைப்பதற்கு பல்வேறு இயற்கையான வழிகள் உள்ளன. அவற்றில் இந்தியாவின் பழமையான மருத்துவ முறைகளில் ஒன்றான ஆயுர்வேதத்தில் கூறப்பட்டிருக்கும் அழகு குறிப்புகள் பற்றி பார்ப்போம்...

     மஞ்சள் சாமந்திப்பூ:

    சாமந்திப்பூவில் இயற்கையான பிளேவனாய்டுகள் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய எண்ணெய்கள் உள்ளன. சாமந்திப்பூவின் இதழ்களை சிறிதளவு தண்ணீர் ஊற்றி பசைபோல அரைத்துக்கொள்ளவும். அதை சருமத்தில் பூசவும். அது நன்றாக உலர்ந்தவுடன் வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தைக் கழுவவும். இவ்வாறு தொடர்ச்சியாக செய்துவந்தால் சருமம் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

     சீமை சாமந்திப்பூ:

    சீமை சாமந்திப்பூ இயற்கையான மாய்ஸ்சரைசராக செயல்படும். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் பல்வேறு சருமப்பிரச்சினைகளுக்கு தீர்வாக இருக்கின்றன. சீமை சாமந்திப்பூவை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். அந்த தண்ணீரை வடிகட்டி, குளிக்கும் தண்ணீரில் கலந்து பயன்படுத்தவும். சீமை சாமந்திப்பூ உங்கள் சருமத்தை மென்மையாகவும், பொலிவாகவும் மாற்றும்.

     பப்பாளி:

    பப்பாளியில் வைட்டமின் 'ஏ' சத்து அதிக அளவில் உள்ளது. இது சருமத்தை வறட்சி அடையாமல் பாதுகாக்கும். நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தை ஸ்கிரப்பராக சருமத்துக்கு பயன்படுத்தலாம். பப்பாளிப் பழத்தை கூழாக அரைத்து சருமத்தில் பூசி வட்ட இயக்கத்தில் மென்மையாக தேய்த்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி சருமம் பளிச்சிடும்.

     கற்றாழை:

    சருமம் மற்றும் தலைமுடி தொடர்பான பிரச்சினைகளுக்கு கற்றாழை சிறந்த தீர்வாக இருக்கும். இதில் உள்ள ஈரப்பதமூட்டும் பண்புகள் சரும வறட்சியைத் தடுத்து இயற்கையான ஈரப்பதத்தை அளிக்கும். தூங்கச் செல்வதற்கு முன்பு கற்றாழை ஜெல்லை சருமத்தில் பூசிக்கொள்வது சருமப் பொலிவை மேம்படுத்தும்.

     வாழைப்பழம் மற்றும் தேன்:

    வாழைப்பழத்துடன் தேன் சேர்த்து பசை போல கலந்து சருமத்தில் பூசவும். அது நன்றாக உலர்ந்தவுடன் வெதுவெதுப்பான தண்ணில் கழுவவும். இந்த சிகிச்சை முறை பல நூற்றாண்டுகளாக வழக்கத்தில் உள்ளது.

     பார்லி:

    பார்லி மாவுடன் மஞ்சள்தூள் மற்றும் கடுகு எண்ணெய் கலந்து சருமத்தில் பூசவும். இது சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் வறட்சியை நீக்கி சருமத்தை பொலிவோடும், மென்மையாகவும் மாற்றும்.

     சந்தனம்:

    சந்தனம் இயற்கையாகவே எண்ணெய்ப்பசை கொண்டது. இதை ரோஜா பன்னீருடன் சேர்த்து பசை போல தயாரித்து சருமத்தில் பூசினால் சரும வறட்சி நீங்கும். சருமம் பளபளப்பாகும்.

     மூலிகைத் தேநீர்:

    சீரகம், தனியா விதைகள் மற்றும் சோம்பு இவை மூன்றையும் சமஅளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும். பின்னர் அதை வடிகட்டி ஆறவைத்து அந்த தண்ணீரை சருமத்தில் பூசவும். இது சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கி ஈரப்பதத்தை தக்கவைக்கும்.

    • கற்றாழையில் இருக்கும் சத்துக்கள் சருமத்தை ஃபிரஸ்சாக வைத்திருக்க உதவுகிறது.
    • பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.

    மஞ்சளில் இருக்கக்கூடிய ஆண்ட்டிசெப்டிக் துகள்கள் சருமத்தில் ஏற்படக்கூடிய அலர்ஜிகளில் இருந்து நம்மை காத்திடும். வெள்ளரியை பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள் அத்துடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து நன்றாக கலக்கி முகத்தில் ஃபேஸ் மாஸ்க்காக போட வேண்டும். நன்றாக காய்ந்ததும் கழுவி விடலாம்.

    கற்றாழையில் இருக்கும் சத்துக்கள் சருமத்தை ஃபிரஸ்சாக வைத்திருக்க உதவுகிறது. வெள்ளரிச்சாறுடன் கற்றாழை ஜெல் கலந்து தினமும் இரவு படுப்பதற்கு முன்னால் தடவிக் கொள்ளுங்கள். அரை மணி நேரம் கழித்து கழுவி விடலாம். இது சருமத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மட்டுமல்ல சரும சுருக்கங்கள் ஏற்படாமலும் தடுத்திடும்.

    உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும். பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.

    வேப்பிலையும், வெள்ளரியும் முதலில் ஒன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். ஓட்ஸ் தனியாக அரைத்துக் கொள்ளுங்கள். பின்னரத்துடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் இரண்டு ஸ்பூன் ஓட்ஸ் பவுடர் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். அதனை முகத்தில் தடவி ஸ்க்ரப் செய்து வந்தால், உங்கள் முகம் பளிச் பளிச்தான்.

    • வீரபத்திரர் துடிப்பான தெய்வம்.
    • இப்பூஜை முறை பல தலைமுறைகளாக தொடர்ந்து இன்றும் நடந்து வருகிறது.

    வீரபத்திரருக்கான வாய்க்கட்டு பூஜை

    வீரபத்திரரை வழிபடுவோர் அனைவரும் வழிபாட்டு நாட்களில் கடுமையான கட்டுப்பாடுகளைப்பின்பற்றுகின்றனர்.

    அதில் ஒன்று வாய்க்கட்டுப் பூஜையாகும்.

    முகம், தலைமுடி, மூக்கு வாய்ப்பகுதி என அனைத்தையும் இறுக்கமாக மூடிக்கொண்டு கண்கள் மட்டுமே தெரியும் வகையில் முகமூடி அணிவது போல் வெள்ளை நிறத்துணி கொண்டு கட்டி பூஜை செய்வதே வாய்க்கட்டுப் பூஜை ஆகும்.

    வீரபத்திரருக்கு பூஜை செய்யும்போது மூச்சுக்காற்றோ, எச்சிலோ பட்டுவிடக்கூடாது என்பதே இதற்குக் காரணமாகும்.

    வீரபத்திரர் துடிப்பான தெய்வம். சுத்தமான தெய்வம் வீரமுடைய தெய்வம் என்பதால் எவ்வகையிலும் எச்சில் படகூடாது இதை கருத்தில் கொண்டு இத்தகு வாய்க்கட்டு பூஜை செய்கின்றனர்.

    வாய்க்கட்டிச் செய்யாத பூஜையை வீரபத்திரர் ஏற்றுக் கொள்வதில்லை என்று பலரும் நம்புகின்றனர்.

    மம்சாவரம் ஆகாச கருப்பண்ணசுவாமி கோவிலில் வீரபத்திரருக்கு வாய்க்கட்டுப் பூஜையே செய்யப்படுகிறது.

    இப்பூஜை முறை பல தலைமுறைகளாக தொடர்ந்து இன்றும் நடந்து வருகிறது.

    திருக்குளம்பூர் கருப்பண்ணசுவாமி கோவிலில் உள்ள வீரப்பத்திரருக்கு நாள்தோறும் வாய்க்கட்டுப்பூஜை செய்கின்ற னர்.

    திருக்குளம்பூர் ரணவீரபத்திரர் கோவில் உள்ள வீரபத்திரருக்கு மகாசிவராத்திரியன்று மட்டும் வாய்க் கட்டுப்பூஜை செய்கின்றனர்.

    • இதுவே “வீரபத்திரர் உபாசகர்” என்ற தனித் தகுதியைக் காட்டும் அடையாளமாகும்.
    • வீரபத்திரர் சுத்தத்தை விரும்பும் தெய்வம் ஆவார்.

    வீரபத்திரருக்கு சந்தனம் அரைக்கும் முறை

    வீரபத்திரர் சுத்தத்தை விரும்பும் தெய்வம் ஆவார். எனவே அவருக்கு மூச்சுக்காற்று கூடப் படாத அளவிற்கு மிகத் தூய்மையுடன் சந்தனம் அரைக்க வேண்டும்.

    மிகக்கெட்டியாக அரைத்த சந்தனக் குழம்பினை வலது கையின் நடுவிரலால் எடுத்து வெள்ளிக் கிண்ணத்தில் சேமிக்க வேண்டும்.

    அதனை 108, 1008 என்ற எண்ணிக்கையில் சிறுசிறு உருண்டைகளாக உருவாக்க வேண்டும்.

    சந்தனத்தை அரைக்கும்போதும், உருண்டைகள் ஆக்கும்போதும் மூச்சினை இழுத்துப் பிடித்துக் கொண்டு செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அரைத்த சந்தன உருண்டைகளால் உடல் சுத்தி, கர சுத்தி, தியானம், மூலம் பூரண மந்திரங்களை கூறி அர்ச்சிக்க வேண்டும்.

    வீரபத்திரருக்குரிய யந்திரத்தின் முன்பாக சந்தன மரப்பெட்டி வைத்து, மந்திரம் கூறி, 108 சந்தன உருண்டைகளை அர்ச்சித்து முடிந்தவுடன் அவற்றை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்க வேண்டும்.

    இங்ஙனம் 1008 கிண்ணங்களில், பூசித்த சந்தன உருண்டைகளைச் சேர்த்து வைக்க வேண்டும்.

    இவ்வகையில் மூன்று லட்சம் சந்தன உருண்டைகளை மந்திர உருவேற்றி, ஓதி முடித்தவுடன் அவற்றை சந்தன மரப்பெட்டியில் மிகக் கவனமாக எடுத்து வைக்க வேண்டும்.

    ஸ்ரீவீரபத்திரரை உபாசிப்போர் எக்காரணம் கொண்டும் தங்களது தனிப்பட்ட பணிகளுக்காகவோ வேண்டுதல்களுக்காகவோ மேற்படி சந்தன உருண்டைகளைப் பயன்படுத்துதல் கூடாது.

    சந்தன உருண்டைகளை அரைக்கும் பொழுதோ பூஜிக்கும் பொழுதோ எத்தகைய தனிப்பட்ட வேண்டுதல்களோ, சுயநல எண்ணங்களோ, விருப்பு வெறுப்புகளோ இல்லாமல் தூய்மையான மனதுடன் பக்தியுடன் செயல்படுதல் வேண்டும்.

    இப்படி மூன்று லட்சம் சந்தன உருண்டைகளால் பூஜை செய்தவர் தன் வலக்கர மணிக்கட்டில் கறுப்புக் கயிற்றினை அணிய வேண்டும்.

    இதுவே "வீரபத்திரர் உபாசகர்" என்ற தனித் தகுதியைக் காட்டும் அடையாளமாகும்.

    இப்படி பூஜை செய்தோர் மட்டுமே வீரபத்திரருக்குத் திருமஞ்சனம், அலங்காரம், அர்ச்சனை, ஆரத்தி எடுக்கத் தகுதியானவர்கள்.

    பிறர் இவற்றைச் செய்தல் கூடாது.

    இந்த தகவல்களை வீரபத்திரர் மகிமை என்ற நூலில் அருணாசல சத்குரு ஸ்ரீவேங்கடராம சுவாமிகள் குறிப் பிட்டுள்ளார்.

    • இளநீர் அபிஷேகம் மக்களுக்கு குளிர்ச்சியை தருகிறது.
    • ஆவணிமாதம் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுகிறது.

    மணக்குள விநாயகர் கோவிலில் எண்ணை, தயிர், பால், திரவப்பொடி, அரிசி மாவு, ம.ஞ்சள் பொடி, தேன், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், தங்க நகைகள், விபூதி, கலசம், போன்றவைகளால் அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த அபிஷேகப் பொருள்களால் ஏற்படும் நன்மைகள் வருமாறு:-

    நல்லெண்ணை:-

    இது சாமிக்கு குளிர்ச்சியை தருகிறது. இதனால் உலக மக்களுக்கும் குளிர்ச்சி ஏற்படுகிறது.

    மஞ்சள் தூள்:-

    மங்களகரமான வாழ்க்கை தருகிறது.

    அரிசி மாவு:-

    நெற்பயிர்கள் அதிகமாக விளையவும் மக்கள் சுகமாக வாழவும் பயன்படுகிறது.

    பஞ்சாமிர்தம்:-

    இது உடல் நலம் தருகிறது.

    தயிர்:-

    மக்கள் சுகமாக வாழவும் பால பாக்கியம் கிடைக்கவும்செய்கிறது.

    பழ வகைகள்

    முக்கனி அபிஷேகம் சிறப்பினை தருகிறது.

    இளநீர்:-

    மக்களுக்கு குளிர்ச்சியை தருகிறது.

    விபூதியும் சந்தனமும்:-

    மக்களுக்கு அருள் தருகிறது.

    கலசாபிஷேகம்:-

    அனைவருக்கும் நன்மைகள் கிடைக்கிறது.

    மணக்குள விநாயகருக்கு அருகம் புல் மாலை, துளசி, தாமரை பூ போன்றவைகளும் பூஜைக்கு பயன்படுத்தப்படுகின்றன.

    திருவிழாக்கள்

    மணக்குள விநாயகர் கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெறுகின்றன. சித்திரை மாதம் தமிழ் புத்தாண்டையட்டி விநாயகருக்கு காலையில் அபிஷேகம் செய்யப்படுகிறது.

    மூலவருக்கு செய்யும் போது உற்சவ மூர்த்திக்கும் எண்ணை, பால் போன்றவற்றால் அபிஷேகம் செய்யப்படுகிறது. உற்சவ மூர்த்தி மாலையில் வீதி உலா வருகிறார்.

    ஆவணிமாதம் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுகிறது. அப்போது விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா நடைபெறுகின்றது.

    தீபாவளி மற்றும் பொங்கல் நேரங்களில் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சாமி வீதி உலா நடைபெறுகிறது.

    • அம்மனுக்கு பால், பன்னீர், மஞ்சள், சந்தனம், இளநீர் உள்பட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம்.
    • ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை கூறைநாடு காமாட்சியம்மன் கோயிலில் தை முதல் வெள்ளியை முன்னிட்டு பூச்சொரிதல் எனப்படும் புஷ்பாஞ்சலி விழா நடைபெற்றது.

    விஸ்கர்ம சமுதாய மக்களுக்கு குலதெய்வமாக விளங்கும் இக்கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம் முதல் வெள்ளிக்கிழமையன்று புஷ்பாஞ்சலி விழா நடத்தப்படுவது வழக்கம்.

    அதைப்போல் நேற்று விழாவையொட்டி, அம்மனுக்கு பால், பன்னீர், மஞ்சள், சந்தனம், இளநீர் மற்றும் திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர், அம்மனுக்கு மஞ்சள் காப்பு செய்யப்பட்டு, வண்ண மலர்கள் மற்றும் ஆபரணங்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து, பக்தர்கள் எடுத்துவந்த மலர்களை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தி புஷ்பாஞ்சலி பூஜை நடைபெற்று. பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது.

    இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.

    இந்நிகழ்ச்சியில் தக்கர் கோவிந்தராஜன், சாமிநாதன், தலைவர் ராஜேந்திரன், ரவிச்சந்திரன், ரமேஷ், குருக்கள் இசைசுந்தர் உள்ளிட்ட விழா குழுவினர்கள் கலந்து கொண்டனர்.

    • விழாவில் 150-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் பங்கேற்றனர்.
    • சந்தனம், குங்குமமிட்டு வேப்பங்கொழுந்து காப்பு கட்டி வளையல் அணிவிக்கப்பட்டது.

    பாபநாசம்:

    பாபநாசம் வட்டார ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்ட பணிகள் சார்பாக சூலமங்கலத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தலைமை வகித்தார்.

    மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் முத்து செல்வன், பாபநாசம் தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர், மாவட்ட கவுன்சிலர் தாமரைச்செல்வன், பாபநாசம் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், அய்யம்பேட்டை திமுக பேரூர் செயலாளர் வக்கீல் துளசி அய்யா, அய்யம்பேட்டை பேரூராட்சி தலைவர் புனிதவதி குமார், துணைத் தலைவர் அழகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பாபநாசம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் லதா வரவேற்று பேசினார். இந்த வளைகாப்பு விழாவில் 150-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு சந்தனம், குங்குமம் இட்டு வேப்பங்கொழுந்து காப்பு கட்டி வளையல் அணிவிக்கப்பட்டது.

    அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் மாலை அணிவித்து தட்டில் பழங்கள் இனிப்பு வைத்து சீர் வழங்கப்பட்டது அனைவருக்கும் இனிப்புடன் கூடிய ஐந்து வகை சித்ரானங்கள் உணவு விருந்து வழங்கப்பட்டது.

    விழாவில் அய்யம்பேட்டை பேரூராட்சி அதிகாரி ராஜசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகுமார், ஆனந்தராஜ், ஓய்வு பெற்ற அறநிலையத்துறை அதிகாரி கோவிந்தராஜ் மற்றும் மருத்துவ அலுவலர்கள் செவிலியர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் குழந்தை வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் சித்ரா நன்றி கூறினார்.

    • சந்தன மரங்களை சிறு, சிறு துண்டுகளாக்கி அரைக்கும் பணி தொடங்கியது.
    • பின் சந்தனம் யாத்ரீகர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

    நாகப்பட்டினம்:

    உலக புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் என்றழைக்கப்படும் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் தர்கா, 466- வது ஆண்டு கந்துாரி விழா கடந்த 24- ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்வாக நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் விழா வரும் 3-ம் தேதி அதிகாலை நடைபெற உள்ளது. கந்தூரி விழாவிற்காக தமிழக அரசு சார்பில் 45 கிலோ எடையுள்ள சந்தன மர கட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

    இதனை நாகூர் ஆண்டவர் சன்னதி பின்புறம் பாரம்பரிய முறைப்படி விரதம் இருந்து சந்தன கட்டளை அரைத்து வருகின்றனர்.

    நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்த யாத்திரிகர்கள் 10 நாட்கள் தர்காவில் தங்கி சந்தன மரங்களை சிறு சிறு துண்டுகளாக்கி அரைக்கும் பணி தொடங்கியது.

    சந்தன கட்டைகளை ஜவ்வாது கலந்த பன்னீரில் ஊர வைத்து கருங்கற்களில் அரைத்து எடுக்கப்படும். பின்னர் அரைக்கப்பட்ட சந்தனம், குடங்களில் நிரப்பப்பட்டு, நாகை முஸ்லிம் ஜமாத்தார்களிடம் வரும் 2- ம் தேதி ஒப்படைக்கப்படும்.

    தொடர்ந்து நாகை யாஹூசைன் பள்ளி வாசலில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு, 3 -ம் தேதி அதிகாலை நாகூர் வந்தடையும்.

    பின் தர்கா தலைமாட்டுவாசலில் சந்தனக் குடங்கள் இறக்கப்பட்டு, தர்கா சன்னதிக்குள் கொண்டு செல்லப்பட்டு நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் வைபவம் நடைபெறும். பின் சந்தனம் யாத்ரீகர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

    • அதிகாலை 5 மணிக்கு புனித ரவுலா ஷாரிப்புக்கு சந்தனம் பூசப்பட்டது.
    • மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடையில் உள்ள புகழ் பெற்ற ஹக்கீம் ஷெய்கு தாவூது ஆண்டவர் தர்ஹாவில் 721-ம் ஆண்டு சந்தனக்கூடு விழா சிறப்பாக நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு அதிகாலை இரண்டு முப்பது மணிக்கு புனித அம்மா பள்ளிவாசல் சென்று வலம் வந்து, பின் 40 அடி உயரமுள்ள சந்தனக்கூடு ஜருக கண்ணாடியால் ஜோடிக்கப்பட்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு முதன்மை தர்கா பாரம்பரிய அறங்கா வலர் பாக்கர் அலி தலைமை யில்தர்காவை சுற்றி வலம் வந்தது.

    தொடர்ந்து, இன்று சந்தனக்கூடு தர்காவலம் சுற்றி அதிகாலை 5 மணிக்கு புனித ரவுலா ஷாரிப்புக்கு புனித சந்தனம் பூசப்பட்டது.

    இதில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்டபல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    விழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முத்துப்பேட்டை ஒன்றி யத்துக்கு உட்பட்ட அனைத்து டாஸ்மார்க்களுக்கும் நேற்று அடைக்கப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு பணியில் திருவாரூர் மாவட்ட போலீசார் சிறப்பாக ஈடுபட்டுள்ளனர்.

    விழாவையொட்டி, வருகிற 8-ந் தேதி இரவு மகரிபு தொழுகைக்கு பின் புனித திருக்குர்ஆன் ஷரீஃப் ஓதி துவா செய்து இரவு புனித கொடி இறக்கப்பட்டு அனைவருக்கும் தப்ரூக் (அன்னதானம்) வழங்கப்படும்.

    • குப்பைகளை அகற்றி நகரை தூய்மையாக வைத்திருக்க முக்கிய பங்கு வகித்தனர்.
    • தூய்மை பணியாளர்களுக்கு சந்தனம் கொடுத்து வரவேற்று அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தீபாவளியை யொட்டி தஞ்சை மாநகரில் சேர்ந்த குப்பைகளை அதிகாலை முதலே தூய்மை பணியாளர்கள் போர்க்கால அடிப்ப டையில் செயல்பட்டு குப்பை களை அகற்றி நகரை தூய்மை யாக வைத்திருக்க முக்கிய பங்கு வகித்தனர்.

    இதனை யொட்டி தூய்மை பணியாளர்களின் பணியை பாராட்டி கவுரவித்து ஊக்கப்படுத்தும் வகையில் தஞ்சை ஜோதி அறக்கட்டளை மற்றும் தஞ்சை மாவட்ட காவல்துறை இணைந்து தஞ்சை மாநகராட்சி 12-வது பிரிவை சேர்ந்த காமராஜர் நகர், ராஜராஜன் நகர், மாதவ்ராவ் நகர், உழவர் சந்தை, முனியாண்டவர் காலனி, அண்ணா நகர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய தூய்மை பணியாளர்களுக்கு சந்தனம் கொடுத்து வரவேற்று அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சி மாதவ்ராவ் நகரில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா சரவணன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி ஆகியோர் கலந்துகொண்டு தூய்மை பணியாளர்களுக்கு அறுசுவை உணவு பரிமாறி கவுரவித்தனர்.

    பின்னர், இன்ஸ்பெக்டர் சந்திரா சரவணன் பேசுகையில், தெருக்களை சுத்தமாக வைத்துக்கொண்டு நோய் தொற்றிலிருந்து காப்பாற்று வதால் பொதுமக்களில் ஒருவராக நாங்கள் உங்களுக்கு என்றென்றும் கடன்பட்டிருப்பதாகவும் அதுவும் விழா காலங்களில் சேரும் அதிகப்படியான குப்பைகளை விரைந்து அகற்றி நகரை அழகாக்குவதில் தூய்மை பணியாளர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது என்றார்.

    சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி பேசுகையில், பண்டிகை காலத்தில் டன் கணக்கில் சேர்ந்த குப்பைகளை அதிகாரிகள் முதல் பணியாளர்கள் வரை ஒற்றுமையுடன் செயல்பட்டு விரைந்து அகற்றி நகரை தூய்மையாக்கியதை வெகுவாக பாராட்டினார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • ஆடி மாதம் திருஆடிப்பூரத்தை முன்னிட்டு உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • காளியம்மனுக்கு கஞ்சி வார்த்தல், பால், சந்தனம், திருநீறு உள்பட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சந்தன காப்பு சாத்தப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி வெள்ளத்திடலில் மகா காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடி மாதம் திருவாடி பூரத்தை முன்னிட்டு உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக காளியம்மனுக்கு கஞ்சி வார்த்தல், பால், பன்னீர், இளநீர், சந்தனம், திருநீறு, தேன், திரவியம், மாப்பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சந்தன காப்பு சாத்தப்பட்டது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • 10 ஆயிரத்து 8 வளையல்கள் மாலையாக கோர்க்கப்பட்டு அம்மனுக்கு அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
    • பால், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட 11 வகையான திரவிய பொருட்கள் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்துள்ள தேவூரில் பிரசித்தி பெற்ற தேவ துர்க்கை அம்மன் கோவிலில் ஆடிபூரம் தினத்தை முன்னிட்டு ஏராளமானோர் தங்களது வேண்டுதல் நிறைவேற வளையல்களை கோவில் காணிக்கையாக வழங்கினர்.

    அதில் 10ஆயிரத்து 8 வளையல்கள் மாலையாக கோர்க்கப்பட்டு அம்மனுக்கு அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. முன்னதாக பால், பன்னீர் ,சந்தனம், பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட 11 வகையான திரவிய பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது .

    அதனை தொடர்ந்து யாகசாலை பூஜையில் பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீவிஜேந்திரசுவாமிகள் செய்திருந்தார்.

    ×