search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Beauty note"

    • இளமையான தோற்றத்தை தருகிறது.
    • முகத்தின் துளைகளில் உள்ள அதிக எண்ணெய்யை நீக்கும்.

    பீட்ரூட்டில் உள்ள லிகோபேன் மற்றும் ஸ்காலீன் தோல் தொங்கிப்போவதை தடுத்து, இளமையான தோற்றத்தை தருகிறது. மேலும், முகப்பருவை சுற்றி ஏற்பட்டுள்ள புண்களையும், நோய்த்தொற்றையும் குணப்படுத்துகிறது. முகத்தின் துளைகளில் உள்ள அதிக எண்ணெய்யை நீக்கும். பீட்ரூட்டில் உள்ள வைட்டமின் `சி'யானது சருமத்திற்கு நல்ல நிறத்தைக் கொடுக்கும். இந்த பீட்ருட் நைட் கிரீம் முகத்தில் உள்ள இறந்த செல்களை புதுப்பித்து முகத்திற்கு பொலிவூட்டுகிறது.

    தேவையான பொருட்கள்

    பீட்ரூட்

    கற்றாழை ஜெல்

    தேன்

    கிளிசரின்

    தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்

    செய்முறை:

    பீட்ரூட்டை தோல் சீவி, மிக்சியில் தண்ணீர் மற்றும் பீட்ரூட்டை சேர்த்து அரைத்து சாறை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் சிறிதளவு தேன், கிளிசரின், கற்றாழை ஜெல், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவேண்டும். கலக்கும் போதே கொஞ்சம் கெட்டியாகி வரும். இதை சின்ன டப்பாவில் ஊற்றி வைத்து தினமும் இரவு தூங்குவதற்கு முகத்திற்கு தடவி வந்தால் முகம் வெள்ளையாக மாறும்.

    • கற்றாழையில் இருக்கும் சத்துக்கள் சருமத்தை ஃபிரஸ்சாக வைத்திருக்க உதவுகிறது.
    • பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.

    மஞ்சளில் இருக்கக்கூடிய ஆண்ட்டிசெப்டிக் துகள்கள் சருமத்தில் ஏற்படக்கூடிய அலர்ஜிகளில் இருந்து நம்மை காத்திடும். வெள்ளரியை பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள் அத்துடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து நன்றாக கலக்கி முகத்தில் ஃபேஸ் மாஸ்க்காக போட வேண்டும். நன்றாக காய்ந்ததும் கழுவி விடலாம்.

    கற்றாழையில் இருக்கும் சத்துக்கள் சருமத்தை ஃபிரஸ்சாக வைத்திருக்க உதவுகிறது. வெள்ளரிச்சாறுடன் கற்றாழை ஜெல் கலந்து தினமும் இரவு படுப்பதற்கு முன்னால் தடவிக் கொள்ளுங்கள். அரை மணி நேரம் கழித்து கழுவி விடலாம். இது சருமத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மட்டுமல்ல சரும சுருக்கங்கள் ஏற்படாமலும் தடுத்திடும்.

    உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும். பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.

    வேப்பிலையும், வெள்ளரியும் முதலில் ஒன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். ஓட்ஸ் தனியாக அரைத்துக் கொள்ளுங்கள். பின்னரத்துடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் இரண்டு ஸ்பூன் ஓட்ஸ் பவுடர் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். அதனை முகத்தில் தடவி ஸ்க்ரப் செய்து வந்தால், உங்கள் முகம் பளிச் பளிச்தான்.

    ×