என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    வீரபத்திரருக்கான வாய்க்கட்டு பூஜை!
    X

    வீரபத்திரருக்கான வாய்க்கட்டு பூஜை!

    • வீரபத்திரர் துடிப்பான தெய்வம்.
    • இப்பூஜை முறை பல தலைமுறைகளாக தொடர்ந்து இன்றும் நடந்து வருகிறது.

    வீரபத்திரருக்கான வாய்க்கட்டு பூஜை

    வீரபத்திரரை வழிபடுவோர் அனைவரும் வழிபாட்டு நாட்களில் கடுமையான கட்டுப்பாடுகளைப்பின்பற்றுகின்றனர்.

    அதில் ஒன்று வாய்க்கட்டுப் பூஜையாகும்.

    முகம், தலைமுடி, மூக்கு வாய்ப்பகுதி என அனைத்தையும் இறுக்கமாக மூடிக்கொண்டு கண்கள் மட்டுமே தெரியும் வகையில் முகமூடி அணிவது போல் வெள்ளை நிறத்துணி கொண்டு கட்டி பூஜை செய்வதே வாய்க்கட்டுப் பூஜை ஆகும்.

    வீரபத்திரருக்கு பூஜை செய்யும்போது மூச்சுக்காற்றோ, எச்சிலோ பட்டுவிடக்கூடாது என்பதே இதற்குக் காரணமாகும்.

    வீரபத்திரர் துடிப்பான தெய்வம். சுத்தமான தெய்வம் வீரமுடைய தெய்வம் என்பதால் எவ்வகையிலும் எச்சில் படகூடாது இதை கருத்தில் கொண்டு இத்தகு வாய்க்கட்டு பூஜை செய்கின்றனர்.

    வாய்க்கட்டிச் செய்யாத பூஜையை வீரபத்திரர் ஏற்றுக் கொள்வதில்லை என்று பலரும் நம்புகின்றனர்.

    மம்சாவரம் ஆகாச கருப்பண்ணசுவாமி கோவிலில் வீரபத்திரருக்கு வாய்க்கட்டுப் பூஜையே செய்யப்படுகிறது.

    இப்பூஜை முறை பல தலைமுறைகளாக தொடர்ந்து இன்றும் நடந்து வருகிறது.

    திருக்குளம்பூர் கருப்பண்ணசுவாமி கோவிலில் உள்ள வீரப்பத்திரருக்கு நாள்தோறும் வாய்க்கட்டுப்பூஜை செய்கின்ற னர்.

    திருக்குளம்பூர் ரணவீரபத்திரர் கோவில் உள்ள வீரபத்திரருக்கு மகாசிவராத்திரியன்று மட்டும் வாய்க் கட்டுப்பூஜை செய்கின்றனர்.

    Next Story
    ×