என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
    X

    சிறப்பு அலங்காரத்தில காளியம்மன்.

    காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

    • ஆடி மாதம் திருஆடிப்பூரத்தை முன்னிட்டு உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • காளியம்மனுக்கு கஞ்சி வார்த்தல், பால், சந்தனம், திருநீறு உள்பட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சந்தன காப்பு சாத்தப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி வெள்ளத்திடலில் மகா காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடி மாதம் திருவாடி பூரத்தை முன்னிட்டு உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக காளியம்மனுக்கு கஞ்சி வார்த்தல், பால், பன்னீர், இளநீர், சந்தனம், திருநீறு, தேன், திரவியம், மாப்பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சந்தன காப்பு சாத்தப்பட்டது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×