search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பக்தி"

    • உரோமேச்சுரம்- உரோமச தீர்த்தம், மார்க்கண்ட தீர்த்தம்.
    • பிரமேசுரம் (தென்கரை) - பிரம,அக்னி, லட்சுமி,தேவ,சங்க,தாரா,வேத,வாயு,வன்னி,நரசிங்க தீர்த்தங்கள்.

    1. பொதியமலை - ஸ்ரீதர தீர்த்தம் முதல் துர்கா தீர்த்தம் வரை 18 தீர்த்தங்கள்.

    2. பாபநாசம் - முக்கூடல் தீர்த்தம்.

    3. திருமூல நகரம் (அம்பை, மேலப்பாளையம் வட்டாரம், திருமூலநாதர் கோவில்) - சாலா தீர்த்தம்.

    4. காசிபேசுரம் (அம்மைஎரிச்சாவுடையார் கோயில்) - காசிப தீர்த்தம், தீப தீர்த்தம்.

    5. திருக்கோட்டீச்சுரம் - முக்கூடல், கண்ணுவேசர், விசுவ, பிரம, சர்வ, தட்சிண தீர்த்தங்கள்.

    6. கரிகாத்தபுரி (அத்தாளநல்லூர்) - சித்த, மாண்டவ்ய, பிரமதண்ட தீர்த்தங்கள்.

    7. திருப்புடைமருதூர் -துர்கா தீர்த்தம், ரிஷி தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம்.

    8. பொருநையாற்றின் தென்கரையில் -சோம தீர்த்தம்.

    9. உரோமேச்சுரம்- உரோமச தீர்த்தம், மார்க்கண்ட தீர்த்தம்.

    10. துருவாச நகரம் (அரியநாயகிபுரம்) -துருவாச , காந்தர்வ தீர்த்தங்கள், பச்சையாறு, முக்கூடல்.

    11. மந்திரேசுரம் (ஓமனுவர்) - தேவதீர்த்தம், ருத்ர தீர்த்தம்.

    12. திரு அக்கினீச்சுரம் (தருவை)- அக்கினீச்சுர தீர்த்தம்.

    13. துர்கேசுரம் -துர்கா தீர்த்தம்.

    14. சிந்துபூந்துறைத் தீர்த்தம்.

    15. சிந்துபூந்துறைக்கு வடபால் -சப்தரிஷி தீர்த்தம்.

    16. சிந்துபூந்துறைக்கு கீழ்பால் -குட்டத் துறைத் தீர்த்தம்.

    17. ராமேசநல்லுவர் -ஜடாயு தீர்த்தம்.

    18. மணலுவர் (அ) மணவாள நல்லுவர்- மங்கள தீர்த்தம்.

    19. அழகர் கோயில் (சீவலப்பேரி)- முக்கூடல், பிதிர், கோதண்ட, தட்சிண, வியாக்ரம, வியாச தீர்த்தங்கள்.

    20. ஸ்ரீவைகுண்டம்- வைகுந்தத் தீர்த்தம்.

    21. காந்தீசுரம் -காந்தீசுரத் தீர்த்தம்.

    22. ஆழ்வார் திருநகரியாகிய திருக்குருகூர் -சக்கர, சங்க, பஞ்சகேத்ர தீர்த்தங்கள்.

    23. நவலிங்கபுரம் (பொருநை தென்கரை) - நவதீர்த்தம்.

    24. பிரமேசுரம் (தென்கரை) - பிரம, அக்னி, லட்சுமி, தேவ, சங்க, தாரா, வேத, வாயு, வன்னி, நரசிங்க தீர்த்தங்கள்.

    25. சோமேசுரம் (தென்கரை) - சோம தீர்த்தம்.

    26. திருச்செந்துவர் -சங்கமுகம்.

    27. சங்கமத் துறை -பொருநையாறு கடலில் கலக்குமிடம்.

    • தன்னலம் கருதாது பலனைக் தரும் தன்மை பெற்றது காமதேனு.
    • வாகனங்களுக்குரிய இந்த சிறப்புகள் அனைத்தும் திருவண்ணாமலையில் இருந்தே தோன்றியதாக கூறுகிறார்கள்.

    தன்னலம் கருதாது பலனைக் தரும் தன்மை பெற்றது காமதேனு.

    இறைவியும் தன்னலமின்றிப் பக்தர்களுக்கு அருளும் தன்மை பெற்றுள்ளதால் காமதேனு வாகனம் பயன்படுத்தப்படுகின்றது.

    தீபத் திருவிழாவின் மூன்றாம் நாள் ஸ்ரீ அண்ணாமலையார் சிம்ம வாகனத்தில் வருவதன் உட்பொருள் தற்பெருமையும்,

    சினத்தையும், அகங்காரத்தையும் அடக்கி தன்னடக்கம், சாந்தம், பணிவு, அன்பு, பக்தி முதலிய

    நற்குணங்களைக் கொள்வோர் அருள்மிகு ஸ்ரீ அருணாசலேசுவரர் திருவருளுக்குப் பாத்திரமாவார்கள் என்பதே ஆகும்.

    ஸ்ரீ பராசக்தி அம்பிகை அன்ன வாகனத்தில் வருவது, அன்னபட்சி பாலுடன் கலந்த நீரை நீக்கிப் பாலை மட்டும்

    பருகுவது போல் தீய செயல்களை நீக்கி நற்செயல்களைப் புரிந்து நல்லவற்றையே சிந்தித்து வரும்

    புண்ணிய சீலர்களுக்கு எங்கும் நிறைந்திருக்கும் பராபரியின் (ஸ்ரீ அன்னை பராசக்தி) திருவருள்

    உடனிருந்து துணைபுரியும் என்பதனை உணர்த்த ஸ்ரீஅம்மன் (ஸ்ரீ உண்ணாமலை அம்மன்) அன்ன வாகனத்தின்

    மேல் எழுந்தருளிப் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றாள்.

    வாகனங்களுக்குரிய இந்த சிறப்புகள் அனைத்தும் திருவண்ணாமலை தலத்தில் இருந்தே தோன்றியதாக சொல்கிறார்கள்.

    அது போல நவராத்திரி உருவான சிறப்பும் திருவண்ணாமலை தலத்துக்கே உண்டு.

    • ராவணன் இறைவனை வணங்கித்தன் குற்றங்களை உணர்ந்து செருக்கடங்கினான்.
    • அந்த நிலையினை உணர்த்துவதாக திருக்கயிலாய வாகனம் அமைகின்றது.

    ராவணன் இறைவனை வணங்கித்தன் குற்றங்களை உணர்ந்து செருக்கடங்கினான்.

    அந்த நிலையினை உணர்த்துவதாக திருக்கயிலாய வாகனம் அமைகின்றது.

    நான் எனது என்னும் செருக்குகளை அகற்றி இறைவனை அடையும் உயரிய சிந்தனையை

    ராவணனுடன் கூடிய திருக்கயிலாய வாகனம் விளக்குகின்றது.

    • அதிகார நந்தியார் மீது எழுந்தருளும் அண்ணாமலையார் மூர்த்தி விருத்தக்கிரம சங்கரமூர்த்திகளாகும்.
    • ஐந்தாவது மூர்த்தியான சண்டிகேஸ்வரர் புலி வாகனத்தில் அமர்ந்து வந்து துணை நிற்கின்றார்.

    இறைவன் அழிக்கும் தொழிலை மேற்கொள்ளும் சங்கார மூர்த்தியாய் இருக்கின்ற நிலையினையும்,

    செய்த பாவங்களுக்கு ஏற்ப மரணத்தை வழங்கும் நிலையினையும் குறிப்பாய் உணர்த்தும் தன்மை உடையதாக

    அதிகார நந்தியும் பூதவாகனமும் விளங்குகின்றன.

    அதிகார நந்தியார் மீது எழுந்தருளும் அண்ணாமலையார் மூர்த்தி விருத்தக்கிரம சங்கரமூர்த்திகளாகும்.

    (விருத்தக்கிரம மூர்த்தி என்பது ஐந்தொழில் செய்யும் இறைவன் ஒன்றாக இணைந்து ஓர் உருவில் காட்சி தருவது ஆகும்).

    எங்கும் நிறைந்திருக்கும் ஸ்ரீ அன்னை பராசக்தி திருவருள் உடனிருந்து துணைபுரியும் என்பதனை உணர்த்த

    ஸ்ரீ உண்ணாமலை அம்மன் அன்ன வாகனத்தின் மேல் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

    ஐந்தாவது மூர்த்தியான சண்டிகேஸ்வரர் புலி வாகனத்தில் அமர்ந்து வந்து துணை நிற்கின்றார்.

    அருள்தரும் உண்ணாமுலை உடனாகிய அண்ணாமலையார் குதிரை வாகனத்தில் ஏறி வீதி உலா வருகிறார்.

    அருள்தரும் உண்ணாமுலை உடனாகிய அண்ணாமலையார் (ஸ்ரீ பெரியநாயகம்) குதிரை வாகனத்தில் ஏறி வீதி உலா வருகிறார்.

    அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு கால்களையும் ஞான காண்டம், கரும கண்டம் என்னும் காதுகளையும்,

    பரஞானம், அபரஞானம் என்னும் கண்களையும் விதிவிலக்கு என்ற முகத்தையும் வாலையும்.,

    ஆகமங்கள் என்னும் அணிகளையும், மந்திரங்களாகிய சதங்கை, கிண்கிணி, மாலை சிலம்பு என்பவைகளையும்

    பிரணவமாகிய கடிவாளத்தையும், அறுவகைப் புறச்சமயங்களாகிய போர் செய்யும் சேனைகளை வேருடன்

    அழித்ததற்கேற்ற வெற்றியையும், பிரமனது முகங்களாகிய இலாயத்தையும் அண்ட கோடிகளாகிய

    குதிரையின் மேல் ஏறி சிவபிரான் போர் வீரராகத் தொணடர்களுடைய பாசக் கயிறு இற்று வீழும்படி

    எழுந்தருளி வருகிறார் என்ற உண்மையைக் குதிரை வாகனக் காட்சி நமக்கு உணர்த்துகிறது.

    • யானை வல்லமை பொருந்தியது.
    • அது அனைத்து மனமலங்களை மாயைகளை அறுக்கக்கூடியது.

    யானை வல்லமை பொருந்தியது.

    மதம் கொண்ட யானை கண்ணில் தென்படும் அனைத்தையும் அழித்து ஒழிக்கும் தன்மை பெற்றது.

    இறைவனால் தரப்படும் பரஞானம் யானையைப் போன்றது.

    அது அனைத்து மனமலங்களை மாயைகளை அறுக்கக்கூடியது.

    எனவே, பரஞானம் யானையாக உருவகம் செய்யப்படுகிறது.

    பரஞானத்தை அருள்பவன் இறைவன் என்னும் தத்துவத்தை விளக்கவே விழா நாட்களில் யானை வாகனம் பயன்படுத்தப்படுகின்றது.

    • லிங்கத்தின் வடிவம் அண்டத்தின் வடிவமாகும்.
    • இறைவன் அண்டத்தைப் படைத்ததோடு மட்டுமன்றி எல்லாப் பொருள்களிலும் நீக்கமற நிறைந்துள்ளார்.

    லிங்கத்தின் வடிவம் அண்டத்தின் வடிவமாகும்.

    இறைவன் அண்டத்தைப் படைத்ததோடு மட்டுமன்றி எல்லாப் பொருள்களிலும் நீக்கமற நிறைந்து நிற்கிறார்.

    அந்த மூலாதாரத்தை, மூலமுதற்பொருள் தத்துவத்தை நிலை நிறுத்துவது

    லிங்கார வட்டச் சொரூபப் பிரபை வாகனமாகும்.

    • நாக வாகனம் மனிதனின் மூலாதார சக்தியான குண்டலினி சக்தியைக் குறிப்பதாகும்.
    • குண்டலினி சக்தியின் விரிவு மற்றும் ஒடுக்கங்கள் உலகத் தோற்றத்தையும் ஒடுக்கத்தையும் எடுத்துரைக்கின்றன.

    நாக வாகனம் மனிதனின் மூலாதார சக்தியான குண்டலினி சக்தியைக் குறிப்பதாகும்.

    குண்டலினி சக்தியின் விரிவு மற்றும் ஒடுக்கங்கள் உலகத் தோற்றத்தையும் ஒடுக்கத்தையும் எடுத்துரைக்கின்றன.

    குண்டலினி சக்தியானது புருவ மத்தியான சுழுமுமுனையில் இருந்து ஞானம் பெறத் துணை நிற்கும்

    சுழுமுனையை மறைத்துக் கொண்டிருக்கின்றது.

    எனவே சுழுமுனையிலே நிலை கொண்டிருக்கும் ஞானசக்தியானது இறைவனது

    கருணையாலேயே வாய்க்கப் பெற வேண்டும் என்னும் தத்துவத்தை நாகவாகனம் உணர்த்துகிறது.

    • இறைவன் விழாக் காலங்களில் பல்லக்கில் எழுந்தருளும் காட்சி ‘திரோபவக் கோலம்‘ எனப்படுகிறது.
    • தேர்த் திருவிழா இந்துக்களுக்கு ஒரு முக்கியமான திருவிழா ஆகும்.

    இறைவன் விழாக் காலங்களில் பல்லக்கில் எழுந்தருளும் காட்சி 'திரோபவக் கோலம்' எனப்படுகிறது.

    திரோபவம் என்றால் மறைத்தல் என்று பொருள்.

    உயிர்கள் பூமியில் வாழ்கின்ற காலத்தில் அறிந்தோ அறியாமலோ வினைகளை செய்கின்றன.

    இவ்வாறாகப் பிறவி தோறும் அவை செய்த நன்மை தீமைகளின் அடிப்படையில் இறைவன் அருள்புரிகின்றான்.

    மறைப்பு நிலையாக இருந்து இறைவன் அடைவதற்கு அரியவன் என்னும் தத்துவத்தை பல்லக்கு வாகனம் உணர்த்துகின்றது.

    தேர்த் திருவிழா இந்துக்களுக்கு ஒரு முக்கியமான திருவிழா ஆகும்.

    தேரோட்டம் ஏன் திருவிழாக்களில் நடைபெறுகின்றது என்பதனை அறிந்து கொள்ள வேண்டும்.

    இத் திருவிழாவின்போது தேவர்கள் அனைவரும் ஒன்றுகூடி மக்களுக்கு ஆசீர் வழங்க இறைவனின் திருவருள் எனக் கூறலாம்.

    தேர்த் திருவிழா பார்க்கும் ஒவ்வொருவர் மனத்திலும் ஏழுவகைப் பிறப்பையும் மாய மல குணம்

    ஏழும் நீக்கப் பெறுவதில் உட்கருத்தே ஏழாம் திருவிழாவாகும்.

    மேலும் எந்தத் திருக்கோவிலிலும் இல்லாத பஞ்ச மூர்த்திகளின் திருத்தேரோட்டம் ஒரே நாளில்

    நடைபெறுவது இத்திருத்திலத்திற்கு சிறப்பாகும்.

    முப்புரம் ஆணவம், கன்மம், மாயை மூன்று அசுரர்கள் - தாருதாக்கன், கமலாக்கன், வித்யூன்மா,

    மூவகை ஆன்மாக்கள்- விஞ்ஞானாகலர், பிரனாயகலர், சகலர்.

    பரம்பொருளாகிய சிவபெருமானே ஆன்மாக்கட்கு மும்மல பந்த வாதனைகளை நீக்கி

    பேரானந்தப் பெருவாழ்வளிப்பவர் என்ற உட்பொருளைத் தேர்திருவிழா விளக்குகிறது.

    • இடபம் (காளை) தியாகத்தின் வடிவமாகும்.
    • இக்காட்சி கைலாயத்தில் இறைவனைக் காணும் காட்சியாகும்.

    இடபம் (காளை) தியாகத்தின் வடிவமாகும்.

    மனிதன் தன்னலமற்றவனாக, பொது நலம் உடையவனாக வாழ வேண்டும்

    என்னும் தத்துவத்தை உணர்த்துவதாக இடப வாகனம் அமைந்திருக்கின்றது.

    ரிஷப வாகனம் பல மெய்ப்பொருள்களைக் கொண்டது.

    ரிஷபத்தின் தத்துவம் மெய்ஞ்ஞானம் உடைய அனைவரும் இறைவனின் திருப்பாதங்களை அடைய வழி வகுக்கும் வாகனமாகும்.

    ரிஷபத்தின் உருவத்தில் அமைந்திருக்கும் ஒவ்வொரு அவயமும் ஒவ்வொரு தத்துவத்தை விளக்குவதாகும்.

    இக்காட்சி கைலாயத்தில் இறைவனைக் காணும் காட்சியாகும்.

    • இவ்வுலகம் கோள்களின் இயக்கத்தால் ஆகியது.
    • உலகம் முழுவதும் சூரிய, சந்திரனால் நிலைத்துள்ளது என்பதாகும்.

        

    இவ்வுலகம் கோள்களின் இயக்கத்தால் ஆகியது.

    சிவபெருமான் சூரிய சந்திரப்பிரபை வாகனங்களில் எழுந்தருளி அருள் வழங்கும் காட்சி திதிக்கோலம் என்று அழைக்கப்படுகிறது.

    தன்னால் படைக்கப்பட்ட அண்டத்தைத் தானே காத்து வரும் தன்மை உடையவன் என்பதை

    எடுத்துக் காட்டும் கோலமே சூரிய சந்திரப் பிரபை வாகனத்தின் தத்துவமாக அமைகின்றது.

    உலகம் முழுவதும் சூரிய, சந்திரனால் நிலைத்துள்ளது என்பதாகும்.

    திதிக் கோலத்தின் பொருள் என்னவெனில், படைக்கப் பெற்ற அனைத்து உயிர்களையும் இறைவனாகிய பரம்பொருள்

    சூரிய சந்திரகோள்களுக்கு இடையே ஞானம் பெறும் தீச்சுடராக விளங்குவதாலேயே

    பகலும் இரவும், தட்ப வெப்பமும் உண்டாகிறது.

    எந்தவொரு தொழிலையும் செய்யவும், எந்தவொரு பொருளையும் பார்க்கவும் முடிகிறது.

    அதனால் இந்த உலகம் நிலைத்து நிற்கிறது என்பதால் அண்ட சராசரங்களையும்காத்து வருகின்றார்

    என்ற உண்மை விளங்கவே இந்தச் சூரிய சந்திர பிரபை வாகனத்தின் உட்பொருளை நினைவில் கொண்டு

    பரம்பொருளைத் தரிசித்து அருள் பெறுவோம்.

    • கற்பகமரம் கேட்டதைக் கொடுக்கும் தன்மை கொண்டது.
    • படைத்தல், காத்தல், அழித்தல், மீண்டும் படைத்தல் என்னும் தத்துவ நிலையை உள்ளடக்கியது.
     

    கற்பகமரம் கேட்டதைக் கொடுக்கும் தன்மை கொண்டது.

    எனவே உயிரினங்கள் அனைத்திலும் இறைவன் உறைந்து விளங்குவான் என்னும்

    தத்துவத்தை நிலை நிறுத்தவே கற்பகத்தரு வாகனம் வீதி உலாவில் பயன்படுத்தப்படுகின்றது.

    இறைவனிலேயே எல்லாம் தொடக்கமாக அமைத்து அங்கேயே ஒடுங்குவதால், மீண்டும் படைப்புகள்

    உண்டாக்கப்படுவதால் படைத்தல், காத்தல், அழித்தல், மீண்டும் படைத்தல் என்னும் தத்துவ நிலையை

    உள்ளடக்கிய கற்பக விருட்சம் வாகனமாகப் பயன்படுத்தப் படுகின்றது.

    ×