search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kedhu"

    • தாத்தா - பாட்டியின் செயல்களே, பேரன் பேத்தி அனுபவிப்பார்கள்.
    • மாயைகளுக்கு ராகு மற்றும் கேதுக்களின் பங்களிப்பு அதிகம் எனச் சொல்லலாம்.

    ராகு-கேது

    ராகு - கேது என்றாலே மக்களுக்கு ஏற்படக்கூடியது ஒரு பயமும் பதற்றமும் தான்.

    ஆனால், ராகு - கேதுக்கள், இரு துருவங்களாக செயல்பட்டு பூர்வ புண்ணியத்தின் கர்ம வினைகளை, இடத்திற்கு அல்லது வயதிற்கு தகுந்தாற்போல் அதனுடைய பாவபலன்களை அப்படியே கொடுக்கும்.

    தாத்தா - பாட்டியின் பிரதிபலிப்பே ஒரு மனிதனுடைய பூர்வ புண்ணியமாக கருதப்படுகிறது.

    தாத்தா - பாட்டியின் செயல்களே, பேரன் பேத்தி அனுபவிப்பார்கள்.

    தெரிந்தாலும், தெரியாவிட்டாலும், கர்ம வினைகள் குறிப்பிட்ட காலத்தில் நல்லவைகளையும், குறிப்பிட்ட காலத்தில் தீயவைகளையும், உணர்த்துவதிலும் உணர வைப்பதிலும் ராகு - கேதுக்களே முதன்மையானது.

    ஒருவருடைய மன நிலையில் அகம் - புறம் சார்ந்த செயல்பாடுகளிலும் கூட ராகு - கேதுக்களின் பங்கு அதிகமுண்டு.

    வெளிப்புற பொருட்கள் வாங்குவதில், ஏற்படக்கூடிய, எதிர்ப்புகள், எதிர்பார்ப்புகள், பேராசைகள் காரணத்தால், உடலின் புறப்பொருட்கள் மூலமாக தண்டனை அனுபவிப்பார். இதுவே ராகுவின் தன்மை, இது ஒரு மாயை.

    உதாரணமாக, பேனா வாங்க வேண்டும் என்று மாணவனுக்கு ஆசை. ஆனால், பணம் அப்பாவிடம் கேட்டால் திட்டுவார் என்ற மனநிலை.

    இந்த நிலைகளையும், ஒரே நேரத்தில், ஸ்தம்பித்து, ஒருவருடைய ஆசையையும், ஆசையினால் ஏற்படக்கூடிய நிகழ்வுகளையும், ஒப்பீடு செய்து, ஒரு குழப்ப நிலையை, ஏற்படுத்துவதில் இந்த ராகு - கேதுக்களின் பங்கு அதிகமுண்டு.

    அகப்பொருளில், ஆத்ம நிலையை அடைய முயற்சிப்பதும், அதனால் ஏற்படக்கூடிய மன அழுத்தம், சித்தப் பிரமை நிலையை ஏற்படுத்தி, ஒரு மயக்க நிலையை கொண்டு வரும். இவை அனைத்தும் கேதுவின் தன்மையே.

    இதுவும் கூட ஒரு மாயையின் வெளிப்பாடுதான்.

    ஆக, புறத்தன்மை மற்றம் அகத்தன்மையிலும் ஏற்படக்கூடிய மாயைகளுக்கு ராகு மற்றும் கேதுக்களின் பங்களிப்பு அதிகம் எனச் சொல்லலாம்.

    ராகு – கேது தோஷம் பற்றி

    இன்றைய நவீன உலகத்தில், பல திருமண வாழ்க்கையில், ஜாதக குறிப்பில் ராகு கேது தோஷம் என குறிப்பிடப்படுள்ளது.

    ராகு - கேது தோஷம் என்பது பொதுவாக, எதிர்பார்ப்புகள், இல்லாத ஒன்றை கற்பனையாக இருப்பதுபோல் எண்ணுதல், அதீத ஆசைப்படுதல் ஆகிய ஒரு மாய பிம்பம் போன்ற குணங்களை குறிப்பது ராகுவின் தன்மையாகவும்,

    கேது என்பது எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத, மற்றவர்கள் அனுபவிப்பதை பார்த்து தன் மனதிற்குள் பொங்குதல், இருப்பதை உணராதது, தன்னிடம் உள்ள குறைகளை மட்டுமே காண்பது, மற்றவர்களுடன் ஒப்பிடுதல், இவை எதுவும் வெளியில் தெரியாமல் இருத்தல், தனக்குத் தானே சூன்யம் வைத்து கொள்ளுதல் போன்ற தன்மைகள் என குறிப்பிடலாம்.

    பாரம்பரிய ஜோதிடத்தில் லக்னத்திலோ, இரண்டிலேயோ, ஏழிலேயோ, அல்லது 8-ல் இருந்தால், மேலே குறிப்பிட்டுள்ள, எதிர்பார்ப்பு இருக்க வேண்டாத இடத்தில் அதீத எதிர்பார்ப்பும்,

    எதிர்பார்ப்பு இருக்க வேண்டிய இடத்தில் எதிர்பார்ப்பே இல்லாமலும், இந்த ராகு கேதுக்கள் திருமணத்தில் பங்களிப்பு அதிகமாக எடுத்துக் கொண்டு, தோஷமாக கருதப்படுகிறது.

    ஆனால், எதிர்பார்ப்பு இருக்க வேண்டாத இடத்தில் எதிர்பார்ப்பு இல்லாமலும், எதிர்ப்பார்ப்பு இருக்க வேண்டிய இடத்தில் தேவையான அளவுக்கு எதிர்பார்ப்புடனும் இருந்தால், திருமண வாழ்வு சிறக்கும்.

    உதாரணமாக, ஒரு ஆண் வரதட்சணையாக 100 சவரன் தங்க நகை வேண்டும் என பேராசைப்படுகிறான்.

    அப்போது அந்த திருமணம் தடையாகிறது. ஒரு ஜாதகர், எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல், நல்ல வரன் அமைந்தால் போதும் என்பதால், எதிர்பாலினர் ஆணிடமோ பெண்ணிடமோ ஏதோ குறை உள்ளது என்ற சந்தேகத்திற்கு ஆளகிறார்கள்.

    அதுவே மிகப் பெரிய தடையாகிறது. ஆக, பேராசையும், சந்தேகமும் ராகு கேதுக்களுடைய தன்மையாக மிகப் பெரிய தடையை ஏற்படுத்துகிறது.

    ஆனால், இன்றைய வளர்ச்சியின் காரணத்தால், திருமண பொருத்தத்தில் ராகு கேதுக்களின் பங்களிப்பு அதிகமாக இருப்பதால், பல ஆண்கள் மற்றும் பெண்களின் திருமண வாழ்க்கை ஒரு கேள்வி குறியாகவே உள்ளது.

    ஒருவர் கேட்ட கேள்வி, "ஜென்ம லக்னத்தில் ராகு கேது இருப்பதால், தோஷம் என்று சொன்னார்கள், ஆனால், திருமணம் தகுந்த காலத்தில் நடந்து, திருமண வாழக்கை நன்றாகவே இருக்கிறார்களே,

    மேலும் வேறு ஒருவருடைய, ஜாதகத்தில் ராகு கேது தோஷமே இல்லை, ஆனால் திருமண வாழ்க்கை எதிர்பார்த்த மாதிரி நல்லவிதமாகவும் இல்லை, அது எப்படி, எதனால்" என்று கேட்டார்.

    அப்படி, திருமணமாகி பிரச்சினையான ஜாதகமும் இருக்கிறது. அதற்கு ராகு கேதுவின் தாக்கம் தான் காரணம், என்றே தவறான புரிதலில் இருக்கிறார்கள். இந்த பிரச்சினைக்கான காரணத்தை ஆராய்ந்து பார்த்து, சரியான புரிதலுடன் இருக்க வேண்டியது மிக அவசியம்.

    ஜென்ம லக்னத்தில், ராகுவோ, கேதுவோ லக்னத்தில் இருந்தால், ராகு கேது தோஷத்தால், திருமணம் பாதிக்கும் என்ற கூற்று நிலவி வருகிறது. ஆனால் அது உண்மையல்ல.

    கிரகங்கள் கொடுத்து கொண்டேதான் இருக்கும். அதை வாங்குவதற்கான, நம்பிக்கை இல்லாமையும், பொறுமை இல்லாமையும், இயலாமையும்தான் ஒரு காரணிகளாக ஒரு மனிதனுடைய வாழ்க்கையை பாதிப்புக்குள்ளாக்குகிறது எனலாம்.

    உதாரணமாக, நன்றாக படிக்கக் கூடிய மாணவனை, உனக்கு புரியாது மற்றும் உனக்கு முடியாது, நீ அடி முட்டாள் என்று திரும்ப திரும்ப சொல்லும்போது,

    அந்த மாணவன் மன அளவிலும் உடல் அளவிலும், சோர்வு தன்மையும், மறதியும், தன்னை ஒரு தாழ்வு மனப்பான்மை உருவாக்கிக்கொண்டு விளங்குவதையும்,

    அதே வகுப்பில் ஒரு சராசரி குழந்தையை உன்னால் முடியும், நீ முயற்சி செய், கண்டிப்பாக உன்னால் வெற்றி பெற முடியும் என்று சொல்லும் போது, மிகப் பெரிய புத்திசாலியாவதையும் பார்க்கலாம்.

    இந்த நிகழ்வில், ராகு - கேது பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதை பார்ப்போம்.

    நல்லவித எண்ணங்களாலும், வார்த்தைகளாலும் ஒருவரை நல்லவராகவும், திட்டும் போது கெட்டவராகவும் எதிரியாகவும் மனம் பாவிக்கும்.

    அதேபோல்தான், இந்த ராகு கேதுக்கள், கொடுக்கமாட்டார், துன்புறத்துவார், கஷ்டங்களை கொடுப்பார் என்று கிரகங்களை சொல்லும் போது, இந்த எதிர்மறையான வார்த்தைகளும், எண்ணங்களும் ஒருவர் மனங்களில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துமோ, அதே போல் கிரகங்கள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

    மக்களின் அதிருப்திக்கு காரணம் அவர்களுடைய எதிர்பார்ப்பின் அளவுகோலே. ஆனால், ராகு கேதுக்கள் அதீத யோகத்தை தரக் கூடியவர்களே.

    • சந்திர கிரகத்துக்கு திங்கள் கிழமைகளில் வெள்ளை அலரி மலர் கொண்டு பூஜை செய்ய வேண்டும்.
    • புதன் கிரகத்துக்கு புதன் கிழமைகளில் துளசி கொண்டு பூஜிக்கலாம்.

    ராகு கால பூஜைக்கான மலர்கள்

    ராகு கால நேரம் என்பது வாரத்தில் அனைத்து நாட்களிலும் உண்டு.

    இதில் செவ்வாய் கிழமை மற்றும் வியாழக் கிழமைகளில் செய்யப்படும் ராகு கால பூஜை மிகவும் சிறப்பானது.

    இதைத்தவிர மற்ற நாட்களிலும் ராகு கால பூஜை செய்யலாம்.

    ஒவ்வொரு கிழமைகளில் ஒவ்வொரு விதமான மலர்களைக் கொண்டு பூஜை செய்வதால் வாழ்வில் நிம்மதியும் வளங்களும் பெருகும்.

    சூரிய கிரகத்துக்கு ஞாயிற்று கிழமைகளில் பாரிஜாதம் மற்றும் வில்வ மலர்களைக் கொண்டு பூஜை செய்ய வேண்டும்.

    சந்திர கிரகத்துக்கு திங்கள் கிழமைகளில் வெள்ளை அலரி மலர் கொண்டு பூஜை செய்ய வேண்டும்.

    செவ்வாய் கிரகத்துக்கு செவ்வாய் கிழமைகளில் செவ்வரளி, செந்தாமரை மற்றும் செம்பருதி மலர் கொண்டு ராகு கால பூஜை செய்வது செவ்வாய் தோஷம் விலகும்.

    புதன் கிரகத்துக்கு புதன் கிழமைகளில் துளசி கொண்டு பூஜிக்கலாம்.

    வியாழக்கிழமைகளில் குரு கிரகத்துக்கு மஞ்சள் நிற மலர்கள் மற்றும் சாமந்தி மலர் கொண்டு பூஜை செய்யவேண்டும்.

    சுக்கிரனுக்கு வெள்ளிக் கிழமைகளில் வெள்ளை அரளி கொண்டு பூஜை செய்யலாம்.

    சனி பகவானுக்கு சனிக் கிழமைகளில் நீல நிற சங்கு மலர் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.

    மேற் கண்ட ஒவ்வொரு தினத்திலும் குறிப்பிட்ட மலர்களைக் கொண்டு பூஜை செய்தால் இல்லத்தில் அமைதி மற்றும் சுபிட்சம் பெருகும்.

    • கற்பூர ஆர்த்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சனிக்கிரஹ தோஷம் நீங்கும்.
    • சண்முக பிரியா ராகத்தில் கேது கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்தால் கேதுக்கிரகதோஷம் நீங்கும்.

    நவக்கிரக தோஷ பரிகாரங்கள்

    1. சூரிய பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் அபிஷேகம் செய்து சிவப்பு வஸ்த்திரம் சிவப்புமணி செந்தாமரையால் அலங்காரம் செய்து, சூரிய மந்திரங்களை ஓதி ,யாகத்தீயை எழுப்பி கோதுமை சர்க்கரைப் பொங்கல் படைத்து தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்து, சவுராட்டிர ராகத்தில் சூரிய கீர்த்தனைகளைப் பாடி பிராத்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சூரியக் கிரகதோஷம் நீங்கும்.

    2. சந்திர பகவானுக்குத் திங்கட்கிழமையில் அபிஷேகம் செய்வித்து வெள்ளை வஸ்த்திரம் முத்துமாலை வெள்ளலரி என்பவற்றால் அலங்காரம் செய்து சந்திர மந்திரங்களை ஓதி எருக்கஞ்சமித்தினால் யாகத் தீயை எழுப்பி பச்சரிசி, பாலண்மை, தயிரன்னம் என்பவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து, அர்ச்சனை செய்து, தூப தீய நைவேத்தியம் கொடுத்து, அசாவேரி ராகத்தில் சந்திர கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சந்திரக் கிரக தோஷம் நீங்கும்.

    3. அங்காரக பகவானுக்கு செவ்வாய்கிழமைகளில் அபிஷேகம் செய்துவித்து சிவப்பு வஸ்திரம் பவழம் சிவப்பு அலரி என்பவற்றால் அலங்காரம் செய்து அங்காரக மந்திரங்களை ஓதி கருங்காலி சமித்தினால் யாகத்தீயை எழுப்பித்த வரம் பருப்புப் பொடி அன்னத்தை ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்து, சுருட்டி ராகத்தில் அங்காரகக் கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் அங்காரக கிரக தோஷம் நீங்கும்.

    4. புதபகவானுக்குப் புதன்கிழமையில் அபிஷேகம் செய்வித்துப் பச்சை வஸ்திரம் மரகமணி வெண்தாமரை என்பவற்றால் அலங்காரம் செய்து, புதன் மந்திரங்களை ஓதி நாயுருதி சமித்தால் யாகத் தீயை எழுப்பிப் பாசிப்பயத்தம் பருப்புப்பொடி அன்னத்தை ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீய நைவேத்தியம் கொடுத்து, நாட்டக்குறிச்சி ராகத்தில் புதன் கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் புதக்கிரகதோஷம் நீங்கும்.

    5. குருபகவானுக்கு வியாழக்கிழமையில் அபிஷேகம் செய்வித்து மஞ்சள் நிற வஸ்திரம் புஷ்பராகமணி, வெண்முல்லை என்பவற்றால் அலங்காரம் செய்து குரு மந்திரங்களை ஓதி அரசஞ்சமித்தினால் யாகத்தீயை எழுப்பி கொத்து கடலைப் பொடி அன்னம் எலுமிச்சை பழ அன்னம் என்பவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீய நைவேத்தியம் கொடுத்து அடாணாராகத்தில் குரு கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் குருக்கிரக தோஷம் நீங்கும்.

    6. சுக்கிர பகவானுக்கு வெள்ளிக்கிழமையில் அபிஷேகம் செய்வித்து, வெள்ளை வஸ்த்திரம் வைரக்கல் வெண்தாமரை மலர் என்பவற்றால் அலங்காரம் செய்து சுக்கிர மந்திரங்களை ஓதி அத்தி சமித்தினால் யாகத்தீயை எழுப்பி மொச்சைப் பொடியன்னம் தயிரன்னம் என்பவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்து, பரசுராகத்தில் சுக்ர கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சுக்கிரக் கிரகதோஷம் நீங்கும்.

    7. சனிபகவானுக்கு சனிக்கிழமையில் அபிஷேகம் செய்வித்து, கருப்பு வஸ்த்திரம், நீலக்கல் நீலோற்பலம் (கருங்குவளை) என்பவற்றால் அலங்காரம் செய்து, சனிபவகானின் மந்திரங்களை ஓதி வன்னி சமித்தினால் யாகத்தீயை எழுப்பி, எள்ளுத்தானியம், எள்ளுப்பொடி அன்னம் என்பனவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து நல்ல எண்ணைத் தீபம் ஏற்றி, அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்து, யதுகுல காம்போதி ராகத்தில் சனிபகவான் கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆர்த்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சனிக்கிரஹ தோஷம் நீங்கும்.

    8. ராகு பகவானுக்கு ஏதாவதொரு கிழமையில் அபிஷேகம் செய்வித்து, கருப்பு வஸ்திரம் கோமேதக மணி நீலமந்தாரை இலுப்பைப்பூ என்பவற்றால் அலங்காரம் செய்து ராகு மந்திரங்களை ஓதி அறுகம் புல்லால் யாகத்தீயை எழுப்பி உளுந்து தானியம் உளுத்தம் பருப்புப்பொடி அன்னம் என்பவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூபதீப நைவேத்தியம் கொடுத்து, ராகப்பிரியா ராகத்தில் கீர்த்தனைகளைப் பாடி பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் ராகுக் கிரகதோஷம் நீங்கும்.

    9. கேது பகவானுக்கு ஏதாவதொரு கிழமையில் செய்வித்து, பலவர்ண ஆடை வைடூர்ய மணி செவ்வல்லிமலர் என்பவற்றால் அலங்காரம் செய்து கேது மந்திரங்களை ஓதித் தருப்பையினால் யாகத்தீயை எழுப்பிப் கொள்ளுதானியய் கொள்ளுப்பொடி அன்னம் என்பவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்துச் சண்முக பிரியா ராகத்தில் கேது கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் கேதுக்கிரகதோஷம் நீங்கும். 

    ×