search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "angaragan"

    • அங்காரகர் சிறந்த விநாயகர் பக்தர்.
    • செவ்வாய் தோஷமுள்ளவர்கள் செவ்வாயில் சதுர்த்தி விரதம் அனுஷ்டித்தால் தோஷம் நீங்கி திருமண பாக்கியம் உண்டாகும்.

    பரத்துவாச முனிவர் யாத்திரை' சென்றபோது நர்மதை நதியில் நீராடினார்.

    அங்கே ஒரு மங்கையைக் கண்டார். அவள் மேல் அன்பு கொண்டு வாழ்ந்தார்.

    இவ்விருவருக்கும் சிவந்த நிறத்தில் குழந்தை பிறந்தது. `அங்காகரன்' என்று குழந்தைக்கு பெயர் சூட்டப்பட்டது.

    அங்காரகர் சிறந்த விநாயகர் பக்தர்.

    அவருடைய பக்தித்திறத்தை மெச்சிய விநாயகர் அங்காரகன் வேண்டிக் கொண்டபடி தேவர்களைப் போல் வாழவும், நவக்கிரகங்களில் ஒருவராகத் திகழும் பெரும்பேற்றினையும் வழங்கினார்.

    அதனுடன் அங்காரகனுக்குரிய செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி திதியில் விநாயகரின் திருவடிகளைப் பணிவோரின் பிணிகளைத் தீர்க்க வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார்.

    இதன் காரணமாகச் செவ்வாய்க்கிழமை சதுர்த்தி விரதம் இருந்து விநாயகப் பெருமானின் திருவருளைப் பெறுவோர் உடல் பிணிகள் யாவும் நீங்கப் பெறுவர்.

    செவ்வாய் தோஷமுள்ளவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் சதுர்த்தி விரதம் அனுஷ்டித்தால் தோஷம் நீங்கி திருமண பாக்கியம் உண்டாகும்.

    1. கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தம் கதிர்மதியும்

    உள்ளார்ந்த சடைமுடியெம் பெருமானார் உறையும் இடம்

    தள்ளாய சம்பாதி சடாயுயென்பார் தாம் இருவர்

    புள்ளானார்க்கு அரையன் இடம் புள்ளிருக்கு வேளூரே.

    2. தையலார் ஒருபாகம் சடை மேலாள் அவளோடும்

    ஐயந்தேர்ந்து உழல்வாரோர் அந்தணனார் உறையுமிடம்

    மெய்சொல்லா ராவணனை மேலோடி ஈடழித்துப்

    பொய் சொல்லாது உயர்போனான் புள்ளிருக்கு வேளூரே.

    3. வாசநலம் செய்திமையோர் நாள்தோறும் மலர்தூவ

    ஈசன்எம் பெருமானார் இனிதாக உறையும் இடம்

    யோசனை போய்ப் பூக்கொணர்ந்து அங்கு ஒரு நாளும் ஒழியாமே

    பூசனை செய்து இனிதிருந்தான் புள்ளிருக்கு வேளூரே.

    4. மாகாயம் பெரியதொரு மானுரிதோல் உடையாடை

    ஏகாய மிட்டு கந்த எரியாடி உறையுமிடம்

    ஆகாயம் தேரோடும் ராவணனை அமரின்கண்

    போகாமே பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே.

    5. கீதத்தை மிகப்பாடு அடியார்கள் குடியாகப்

    பாதத்தைத் தொழநின்ற பரஞ்சோதி பயிலுமிடம்

    வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப்

    போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளூரே.

    6. திறங்கொண்ட அடியார்மேல் தீவினை நோய் வாராமே

    அறங்கொண்டு சிவதன்மம் உரைத்தபிரான் அமருமிடம்

    மறங்கொண்டங்கு ராவணன் தன் வலிகருதி வந்தானைப்

    புறங்கண்ட சடாயு என்பான் புள்ளிருக்கு வேளூரே.

    7. அத்தியின் ஈருரிமூடி அழகாக அனலேந்திப்

    பித்தரைப் போல் பலிதிரியும் பெருமானார் பேணுமிடம்

    பத்தியினால் வழிபட்டு பலகாலம் தவம் செய்து

    புத்தியன்றை வைத்துகந்தான் புள்ளிருக்கு வேளூரே.

    8. பண்ணொன்ற இசைபாடும் அடியார்கள் குடியாக

    மண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்டன் மருவுமிடம்

    எண்ணின்றி முக்கோடி வாணாள் அது உடையானைப்

    புண்ணொன்றைப் பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே.

    9. வேதித்தார் புரமூன்றும் வெங்கணையால் வெந்தவியச்

    சாதித்த வில்லாளி கண்ணாளன் சாருமிடம்

    ஆதித்தன் மகன் என்ன அகல் ஞாலத் தவரோடும்

    போதித்த சடாயு என்பான் புள்ளிருக்கு வேளூரே.

    10. கடுத்துவரும் கங்கைதனைக் கமழ்சடையன்றாடாமே

    தடுத்தவர் எம் பெருமானார் தாம் இனிதாய் உறையுமிடம்

    விடைத்துவரும் இலங்கைக் கோன் மலங்கச் சென்று ராமற்காய்ப்

    புடைத்தவனை பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே.

    11. செடியாய உடல் தீர்ப்பான் தீவினைக்கோர் மருந்தாவான்

    பொடியாடிக்கு அடிமை செய்த புள்ளிருக்கு வேளூரைக்

    கடியார்ந்த பொழிற்காழிக் கவுணியன் சம்பந்தன் சொல்

    மடியாது சொல்லவல்லார்க்கு இல்லையாம் மறுபிறப்பே.

    • கைலாசநாதர் திருக்கோவில், கோடகநல்லூர், திருநெல்வேலி.
    • ஆறுமுக நயினார் திருக்கோவில், கோடாங்கிபட்டி தீர்த்த தொட்டி, தேனி.

    செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கீழ்க்கண்ட ஆலயங்களில் ஏதாவது ஒரு ஆலயத்துக்கு சென்று வழிபட்டு பரிகாரம் செய்யலாம்.

    1. கைலாசநாதர் திருக்கோவில், கோடகநல்லூர், திருநெல்வேலி.

    2. வைத்த மாநிதி பெருமாள் (நவதிருப்பதி-3), திருக்கோவில், திருக்கோளூர், தூத்துக்குடி.

    3. தண்டாயுதபாணி திருக்கோவில், திண்டுக்கல்.

    4. சதுர்முக முருகன் திருக்கோவில், சின்னாளப்பட்டி, திண்டுக்கல்.

    5. நரசிங்கப்பெருமாள் திருக்கோவில், மன்னாடி மங்கலம், மதுரை.

    6. பிரளயநாதர் திருக்கோவில், சோழவந்தான், மதுரை.

    7. ஆறுமுக நயினார் திருக்கோவில், கோடாங்கிபட்டி தீர்த்த தொட்டி, தேனி.

    8. நாகம்மாள் திருக்கோவில், பாலமேடு, கெங்கமுத்தூர், மதுரை.

    9. திருவாப்புடையார் திருக்கோவில், செல்லூர், மதுரை.

    10. விருத்தபுரீஸ்வரர் திருக்கோவில், திருப்புனவாசல், புதுக்கோட்டை.

    11. வீரபத்திரர் திருக்கோவில், அனுமந்தபுரம், காஞ்சீபுரம்.

    12. சுப்பிரமணியசுவாமி திருக்கோவில், காங்கேயநல்லூர், வேலூர்.

    13. சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோவில், குருசாமி பாளையம், நாமக்கல்.

    14. சங்கமேஸ்வரர் திருக்கோவில், பவானி, ஈரோடு.

    15. முத்துகுமார சுவாமி திருக்கோவில், பவளமலை, ஈரோடு.

    16. சுப்ரமணியசுவாமி திருக்கோவில், சென்னிமலை, ஈரோடு.

    17. பாலதண்டாயுதபாணி திருக்கோவில், கோட்டுப்புள்ளாம் பாளையம், கோயம்புத்தூர்.

    18. மலையாள தேவி துர்காபகவதி திருக்கோவில், நவகரை, கோயம்புத்தூர்.

    19. தேனுபுரீஸ்வரர் திருக்கோவில், பட்டீஸ்வரம், தஞ்சாவூர்.

    20. அருணஜடேசுவரர் திருக்கோவில், திருப்பணந்தாள், தஞ்சாவூர்.

    21. அகோர வீரபத்திரர் திருக்கோவில், வீராவாடி, திருவாரூர்.

    22. வைத்தியநாதர் திருக்கோவில், வைத்தீஸ்வரன் கோவில், நாகப்பட்டினம்.

    23. அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில், மேலக்கடம்பூர், கடலூர்.

    24. நல்லிணக்கீஸ்வரர் திருக்கோவில், எழுச்சூர், சென்னை.

    25. கல்யாண கந்தசுவாமி திருக்கோவில், மடிப்பாக்கம், சென்னை.

    26. அகஸ்தீஸ்வரர் திருக்கோவில், வில்லிவாக்கம், சென்னை.

    • உறுதியான உள்ளம், பகைவரை கண்டு அஞ்சாத வீரம் ஆகியவற்றை தருபவர் அங்காரகன்.
    • மற்ற கிரகங்களின் நிலையை ஆராய்ந்தே இதை தீர்மானிக்க வேண்டும்.

    அங்காரக பகவானுக்குச் செவ்வாய்க்கிழமையில் அபிஷேகம் செய்வித்துச் சிவப்பு வஸ்திரம், பவழம், சிவப்பு அலரி

    என்பவற்றால் அலங்காரம் செய்து அங்காரக மந்திரங்களை ஓதி கருங்காலிச் சமித்தினால் யாகத்தீயை எழுப்பித்

    துவரம் பருப்புப் பொடி அன்னத்தை ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து, தூப தீப

    நைவேத்தியம் கொடுத்து, சுருட்டி ராகத்தில் அங்காரக கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும்.

    இப்படிச் செய்தால் அங்காரக கிரகதோஷம் நீங்கும்.

    உறுதியான உள்ளம், பகைவரை கண்டு அஞ்சாத வீரம் ஆகியவற்றை தருபவர் அங்காரகன்.

    பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 2,4,7,8,12-ம் இடங்களில் செவ்வாய் அமைந்திருந்தால் செவ்வாய் தோஷம் என்பர்.

    ஆனால் இதை மட்டுமே வைத்து தோஷம் என்று கூறுவது தவறாகும்.

    மற்ற கிரகங்களின் நிலையை ஆராய்ந்தே இதை தீர்மானிக்க வேண்டும்.

    செவ்வாய் தோசம் சிலருக்கு 60 வயதுக்கு மேல்தான் பாதிப்பை ஏற்படுத்தும்.

    அதனால் தீர ஆராய்ந்தே செவ்வாய் தோஷத்தை தீர்மானிக்க வேண்டும்.

    செவ்வாய் கிழமை உபவாசம் இருந்து, ஏதாவது கோவிலில் தீபம் ஏற்றுதல் எளிய பரிகாரமாகும்.

    செவ்வாய் அரசியலில் புகழ்பெற

    சிறுப்புறு மணியே செவ்வாய்த் தேவே

    குறைவிலாது அருள்வாய் குணமுடன் வாழ

    மங்கலச் செவ்வாய் மலரடி போற்றி

    அங்கா ரகனே அவதிகள் நீக்கு

    • அங்காரகனுக்கு பிடித்தமான தானியம் துவரை
    • அங்காரகனுக்கு பிடித்தமான மலர் செண்பகம், செவ்வரலி

    சொல்லுக்கு வலிமை நல்கி

    தைரியம் ஆண்மை வீரம்

    நல்லவை அனைத்தும் நல்கி

    நலிவெலாம் போக்கி வைக்கும்

    வல்லதோர் சக்தி கையில்

    வைத்தமே அருள் வழங்கும்

    அல்லல்கள் தமை அகற்றும்

    அங்காரக போற்றி போற்றி!

    அங்காரகனுக்கு பிடித்தமானவை

    தானியம்: துவரை

    மலர்: செண்பகம், செவ்வரலி

    வஸ்திரம்: சிவப்பு ஆடை

    ரத்தினம்: பவழம்

    நிவேதனம்: துவரம் பருப்புப்பொடி அன்னம்

    சமித்து: கருங்காலி

    உலோகம்: செம்பு

    • சரித்திரத்தில் புகழ்பெற்ற மாமன்னர்கள், சர்வாதிகாரிகள், செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் தான்.
    • மேஷம், விருச்சிகம் ஆகிய இரு லக்கனங்கள் அல்லது ராசிகளில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் தோஷம் கிடையாது.

    சரித்திரத்தில் அழியாப் புகழ்பெற்ற பல மாமன்னர்கள், சர்வாதிகாரிகள், மாவீரர்கள் ஆகியோர் செவ்வாயின் தீவிர ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் தான்.

    மாமன்னன் அலெக்சாண்டர், ரஷிய சர்வாதிகாரி ஸ்டாலின், ஜெர்மன் சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர், பிரிட்டிஷ் பிரதம மந்திரியாக விளங்கிய வின்ஸ்டன் சர்ச்சில் ஆகியோர் செவ்வாயின் சுப பலம் பெற்றவர்களே.

    இவர்கள் அனைவரும், இறுதிக் காலம் வரையில் தங்கள் கொள்கைகளை சிறிதளவும் மாற்றிக் கொள்ளாமல் மூர்க்கத் தனமான துணிவுடன் போராடியதற்கு, அவர்களுக்கு செவ்வாய் அளித்த அதிக பலமே காரணமாகும்.

    மேஷம், விருச்சிகம் ஆகிய இரு லக்கனங்கள் அல்லது இவ்விரு ராசிகளிலும் பிறந்தவர்களுக்கு செவ்வாய் தோஷம் கிடையாது அல்லது செவ்வாய் தோஷம் பாதிக்காது என ஜ்யோதிஷ்கிரந்த் என்ற மிகப் புராதனமான, ஜோதிட நூல் அறுதியிட்டுக் கூறுகிறது.

    • ஜோதிட சாஸ்திரங்கள் செவ்வாயை முருகனின் அம்சமாக கருதுகிறது.
    • அதனால் முருகனை வழிபட தோஷம் அகலும்.

    ஜோதிட சாஸ்திரங்கள் செவ்வாயை முருகனின் அம்சமாக கருதுகிறது. அதனால் முருகனை வழிபட தோஷம் அகலும்.

    பழனி, வைத்தீஸ்வரன் கோயில், திருச்சிறுகுடி ஆகிய முருகன் தலங்கள் செவ்வாய் கிரகத்துடன் தொடர்பு கொண்டதாகும்.

    சென்னையில் புராண பெருமையுடன் கூடிய குன்றத்தூர் குமரன் கோவில், பாரிமுனை கந்தகோட்டம்,

    கபாலி கோவிலில் உள்ள முருகன் சன்னதி, வடபழனி முருகன் கோவில், பூந்தமல்லியில் உள்ள வைத்தீஸ்வரன்

    கோவில் மற்றும் பெசன்ட் நகரில் கட்டப்பட்டுள்ள அறுபடைவீடு ஆலயம், வில்லிவாக்கத்தில் உள்ள

    அகத்தீஸ்வரர் ஆலயம் அனைத்தும் செவ்வாய் கிரகம் சம்பந்தமான அனைத்து தோஷங்களுக்கும் பரிகாரமும்,

    தரிசனமும் செய்ய ஏற்ற ஆலயங்கள் ஆகும்.

    1. ஜாதகத்தில் செவ்வாய் நல்ல இடத்தில் அமைந்திருந்தால், அங்காரகன் கடன் தொல்லையின்றி, பூமியையும், செல்வத்தையும், வாகன யோகம் மற்றும் புகழையும் அள்ளிக்கொடுப்பார்.

    2. 9, 18, 27ந் தேதிகளில் பிறந்தவர்களுக்கு அங்காரகன் உரிய கிரகமாகும்.

    3. ஜாதகத்தில் ஒருவரை சிறந்த தலைவனாக்கக்கூடிய ஆற்றல் உடையவர் அங்காரக பகவான். இவர் அருள் இருப்பவரை யாரும் எளிதில் வெல்ல முடியாது.

    4. அவரவர்கள் தங்கள் ஜாதகப்படி செவ்வாய் எந்நிலையில் உள்ளது என்பதை அறிந்து பரிகாரம் செய்துகொள்வது நல்லது.

    • சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து, பூமியில் விழுந்த ஒரு துளியே செவ்வாய் ஆகும்.
    • பலமும், வீர்யமும் பெற்று, ஒளி வீசிப் பிரகாசிக்கும் இவன் அங்காரகன் என்று புகழ் பெற்றான்.

    சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து, பூமியில் விழுந்த ஒரு துளியே செவ்வாய் ஆகும்.

    பூமாதேவியினால் வளர்க்கப்பட்டவன் செவ்வாய் (தரணீ கர்ப்ப சம் பூதம்) என விளக்குகிறார் ஸ்ரீ வியாச பகவான்.

    பரத்வாஜ முனிவரின் கருணையினால், அவரது மகனாக வளர்ந்து, நவக்கிரகங்களில், அக்கினிக்குச் சமமான ஒளியும், பலமும், வீர்யமும் பெற்று, ஒளி வீசிப் பிரகாசிக்கும் இவன் அங்காரகன் என்று புகழ் பெற்றான்.

    செந்நிறத்தில், கொழுத்து விட்டுப் பிரகாசிக்கும் நெருப்பைப் போல் ஜொலிப்பதால், "செவ்வாய்" என்று பெயரை அடைந்தான்.

    கிரேக்க பாசையில் "மாஸ்" எனப் போற்றப்பட்ட இக்கிரகம், பூமி, நிலம், செம்பு, உத்தம சகோதரர்கள், சேனைகளுக்குத் தலைமை, பிடிவாதம், நினைத்ததைச் சாதித்தே தீரும் வல்லமை.

    முன்கோபம் ஆகியவற்றிற்கு காரகத்துவம் பெற்றவர் ஆவார்.

    • உடைக்காமல் இருக்கும் முழுத்துவரையை சிகப்புத்துணியில் பொட்டலம் கட்டிக் கொள்ள வேண்டும்.
    • இவற்றுடன் வெற்றிலைப் பாக்கு, மஞ்சள், வாழை பழம் ஆகியவற்றையும் சேர்த்து கண் சிவந்த வேதியரிடம் தானம் கொடுக்க வேண்டும்.

    வாழைப்பூத் தானம்:

    ஒரு மரத்தில் இருக்கும் முழு வாழைப்பூவும் அதே மரத்தில் காய்த்த பழமும், அதே மரத்தில் கிழக்கு நோக்கிய நுனி இலையையும் வெற்றிலை பாக்கும் மஞ்சள் துணியும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    இவைகளை இலையில் வைத்து தானம் வாங்குபரை நடுவீட்டில் உட்காரவைத்து தந்து விட வேண்டும்.

    துவரை தானம்:

    உடைக்காமல் இருக்கும் முழுத்துவரையை சிகப்புத்துணியில் பொட்டலம் கட்டிக் கொள்ள வேண்டும்.

    இவற்றுடன் வெற்றிலைப் பாக்கு, மஞ்சள், வாழை பழம் ஆகியவற்றையும் சேர்த்து கண் சிவந்த வேதியரிடம் தானம் கொடுக்க வேண்டும்.

    • குருவின் வீடுகளிலோ, குருவுடன் இணைந்தோ, குருவின் பார்வையைப் பெற்றிருந்தாலோ தோஷம் இல்லை.
    • செவ்வாய் சனியுடன் இணைந்தால் தோஷம் இல்லை

    1.மேற்சொன்ன இரண்டு, நான்கு, ஏழு, எட்டு, பனிரெண்டாம் வீடுகளில் செவ்வாய் ஆட்சியாகவோ, உச்சமாகவோ, நீசமாகவோ இருந்தால் தோஷம் இல்லை.

    2.குருவின் வீடுகளிலோ, குருவுடன் இணைந்தோ, குருவின் பார்வையைப் பெற்றிருந்தாலோ தோஷம் இல்லை.

    3.சுக்கிரனின் வீடுகளான ரிஷபம், துலாமில் இருந்தாலும் தோஷம் இல்லை.

    4. சுக்கிரனுக்கு நான்கு, ஏழு, பத்து ஆகிய கேந்திரங்களில் செவ்வாய் இருந்தாலும் தோஷம் இல்லை.

    5.மேற்கண்ட வீடுகளில் செவ்வாய் சந்திரனுடனோ, புதனுடனோ அல்லது இருவரும் சேர்ந்து இணைந்திருந்தாலோ தோஷம் இல்லை.

    6.ராகு, கேதுக்களுடன் செவ்வாய் நெருக்கமாக இணைந்து பலவீனம் பெற்றிருந்தால் தோஷம் இல்லை.

    7.மேஷம் விருச்சிகம் கடகம் சிம்மம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எங்கிருந்தாலும் தோஷம் இல்லை.

    8.சிம்மத்தில் செவ்வாய் இருந்தால் தோஷம் இல்லை.

    9.செவ்வாய் சனியுடன் இணைந்தால் தோஷம் இல்லை

    10.அஸ்தமன செவ்வாய்க்கு தோஷம் இல்லை.

    11.செவ்வாய் பரிவர்த்தனை பெற்றிருந்தால் தோஷம் இல்லை.

    • கும்ப விவாகம் என்ற ஒரு வகையான திருமணம் இந்த தோஷத்தின் தாக்கங்களை குறைக்க உதவிடும்.
    • இந்த தோஷத்தின் தாக்கம் 28 வயதுக்கு பிறகு குறையும் என்பதால், அதன்பின் திருமணம் செய்யவே அறிவுறுத்தப்படுகிறது.

    1.செவ்வாய் தோஷம் கொண்ட இருவர் திருமணம் செய்து கொண்டால் இந்த கிரகத்தின் தாக்கங்கள் ஒன்றுமில்லாமல் போய் விடும்.

    2.கும்ப விவாகம் என்ற ஒரு வகையான திருமணம் இந்த தோஷத்தின் தாக்கங்களை குறைக்க உதவிடும். இந்த வகை திருமணத்தில், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் ஒரு மரத்தையோ அல்லது தாழியையோ திருமணம் செய்ய வேண்டும். இது செவ்வாய் தோஷத்தை ஒன்றுமில்லாமல் செய்து விடும்.

    3.செவ்வாய்க்கிழமைகளில் உண்ணாவிரதம் இருந்தால் செவ்வாய் தோஷங்களின் எதிர்மறையான தாக்கங்கள் குறையும். விரதத்தின் போது, செவ்வாய் தோஷக்காரர்கள் துவரம் பருப்பை மட்டுமே உண்ணலாம்.

    4.செவ்வாய்க்கிழமைகளில் நவகிரக மந்திரம் மற்றும் ஆஞ்சநேயர் மந்திரங்களை பாடினால், செவ்வாய் தோஷக்காரர்களுக்கு நல்ல பலனை அளிக்கும்.

    5. செவ்வாய்க்கிழமைகளில் பூஜைகள் புரிவதும், ஆஞ்சநேயர் கோவில்களுக்கு செல்வதும் கூட இந்த தோஷத்தை போக்குவதற்கான சிறந்த வழியாகும்.

    6.செவ்வாய் தோஷக்காரர்கள் இரத்தக்கல் பதித்த தங்க மோதிரத்தை தங்கள் வலது கரத்தில் உள்ள மோதிர விரலில் அணிய ஜோசியர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

    7.இந்த தோஷத்தின் தாக்கம் 28 வயதுக்கு பிறகு குறையும் என்பதால், அதற்கு பிறகு திருமணம் செய்யவே அறிவுறுத்தப்படுகிறது.

    தாமத புத்திரம் முதலிய பிரச்சனைகள் செவ்வாய் கிரகத்தினால் ஏற்படலாம்.

    திருமண தடை, திருமண முயற்சி தோல்வி, திருப்தியில்லா மணவாழ்க்கை, வேற்றுமதத்தில்

    மண முடித்து பிரிவினையாதல், பிறருடைய வாழ்க்கை துணைவரின் மேல் காதல் கொள்ளுதல், தகாத உறவு,

    சந்தேக குணம், இடைக்கால பிரிவு, மக்கட்பேரின்மை, மணமுறிவு மணமக்களுக்குள் அன்பின்மை, ஒற்றுமை

    இன்மை, விட்டுகொடுத்தல் இல்லாத தன்மை, முரட்டு பிடிவாதம், சந்ததி இன்மை, சுகமின்மை, ஒழுக்கமின்மை,

    இல்லற வாழ்க்கையின் நன்மை அறியாமை, மாங்கல்ய பலமில்லாமை, ஆயுள் பலமின்மை,புத்திர தடை,

    தத்து புத்திரம், கர்பம் கலைதல், அற்ப ஆயுள் புத்திரம் , புத்திர சோகம், தாமத புத்திரம்

    முதலிய பிரச்சனைகள் செவ்வாய் கிரகத்தினால் ஏற்படலாம்.

    ×