search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arali"

    • சந்திர கிரகத்துக்கு திங்கள் கிழமைகளில் வெள்ளை அலரி மலர் கொண்டு பூஜை செய்ய வேண்டும்.
    • புதன் கிரகத்துக்கு புதன் கிழமைகளில் துளசி கொண்டு பூஜிக்கலாம்.

    ராகு கால பூஜைக்கான மலர்கள்

    ராகு கால நேரம் என்பது வாரத்தில் அனைத்து நாட்களிலும் உண்டு.

    இதில் செவ்வாய் கிழமை மற்றும் வியாழக் கிழமைகளில் செய்யப்படும் ராகு கால பூஜை மிகவும் சிறப்பானது.

    இதைத்தவிர மற்ற நாட்களிலும் ராகு கால பூஜை செய்யலாம்.

    ஒவ்வொரு கிழமைகளில் ஒவ்வொரு விதமான மலர்களைக் கொண்டு பூஜை செய்வதால் வாழ்வில் நிம்மதியும் வளங்களும் பெருகும்.

    சூரிய கிரகத்துக்கு ஞாயிற்று கிழமைகளில் பாரிஜாதம் மற்றும் வில்வ மலர்களைக் கொண்டு பூஜை செய்ய வேண்டும்.

    சந்திர கிரகத்துக்கு திங்கள் கிழமைகளில் வெள்ளை அலரி மலர் கொண்டு பூஜை செய்ய வேண்டும்.

    செவ்வாய் கிரகத்துக்கு செவ்வாய் கிழமைகளில் செவ்வரளி, செந்தாமரை மற்றும் செம்பருதி மலர் கொண்டு ராகு கால பூஜை செய்வது செவ்வாய் தோஷம் விலகும்.

    புதன் கிரகத்துக்கு புதன் கிழமைகளில் துளசி கொண்டு பூஜிக்கலாம்.

    வியாழக்கிழமைகளில் குரு கிரகத்துக்கு மஞ்சள் நிற மலர்கள் மற்றும் சாமந்தி மலர் கொண்டு பூஜை செய்யவேண்டும்.

    சுக்கிரனுக்கு வெள்ளிக் கிழமைகளில் வெள்ளை அரளி கொண்டு பூஜை செய்யலாம்.

    சனி பகவானுக்கு சனிக் கிழமைகளில் நீல நிற சங்கு மலர் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.

    மேற் கண்ட ஒவ்வொரு தினத்திலும் குறிப்பிட்ட மலர்களைக் கொண்டு பூஜை செய்தால் இல்லத்தில் அமைதி மற்றும் சுபிட்சம் பெருகும்.

    • மாலை 6 மணிக்கு தீபாராதனை முடிந்ததும், 6.30 மணிக்கு புஷ்பாஞ்சலி நடைபெறும்.
    • மஞ்சள் மலர்களுக்கு மகிழ்ச்சியை அள்ளித்தரும் அபார சக்தி உண்டு.

    இறைவன் காலடியில் மலர் போடுங்கள்!

    ஒரு கூடை அரளியைச் சேகரித்துக்கொண்டு, ஒவ்வொரு நாமமாகச் சொல்லி நிதானமாக இறைவனுக்கு அர்ப்பணம் செய்து பாருங்கள்.

    அதுவும் மலர்களை சுவாமியின் மீது தூக்கி வீசாமல், அழகாக ஒவ்வொரு மலராக அலங்காரம் செய்வது போல் சுவாமி காலடியில் வைத்துப்பாருங்கள்.

    உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளும், இனம் புரியாத ஆனந்தம் உள்ளுக்குள் வந்து உட்கார்ந்து கொள்ளும்.

    நாள் முழுவதும் சந்தோஷமாகக் கழியும்.

    மஞ்சள் மலர்களுக்கு மகிழ்ச்சியை அள்ளித்தரும் அபார சக்தி உண்டு.

    அய்யப்பனுக்கு புஷ்பாஞ்சலி

    மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டதும் முதலில் அய்யப்பனுக்கு புஷ்பாஞ்சலி நடத்தப்படும்.

    மாலை 6 மணிக்கு தீபாராதனை முடிந்ததும், 6.30 மணிக்கு புஷ்பாஞ்சலி நடைபெறும்.

    தாமரை, செண்பகம், முல்லை, பிச்சி, அரளி, துளசி உள்பட பல்வேறு மலர்கள் புஷ்பாஞ்சலிக்கு பயன்படுத்தப்படும்.

    புஷ்பாஞ்சலி செய்ய விரும்பும் பக்தர்கள் ரூ.8,500 செலுத்தி ரசீது பெற்று சென்றால் அவர்கள் பெயரில் அய்யப்பனுக்கு புஷ்பாஞ்சலி செய்யப்படும்.

    புஷ்பாஞ்சலிக்கு தேவையான மலர்களை பக்தர்கள் கொண்டு செல்ல வேண்டியதில்லை.

    கோவில் சார்பில் மலர்கள் பயன்படுத்தப்படும்.

    தரமற்ற பூக்கள் பூஜைக்கு பயன்படுத்துவதை தடுக்கவே இந்த ஏற்பாட்டை திருவாங்கூர் தேவசம் போர்டு செய்துள்ளது.

    • ஒவ்வொரு மலரின் மகத்துவ குணம் என்ன என்பதை புதுவை அன்னை வெளியிட்டுள்ளார்.
    • ஆரஞ்சு ரோஜா-ஆர்வமுள்ள பக்தி

    மலர்களின் மகத்துவம்

    ஒருவரது மனதை நிலைப்படுத்தும் சக்தி மலருக்கு உண்டு. 'கொடிரோஸ்' மலரை அன்னை, 'சுமுகமான மலர்' என்றழைத்தார். இம்மலர் வீட்டில் இருந்தால் சண்டை சச்சரவுகள் நீங்கிவிடும். சுமுகமாக வாழ்க்கை கிடைக்கும் என்கிறார். 

    ஒவ்வொரு மலரின் மகத்துவ குணம் என்ன என்பதை புதுவை அன்னை வெளியிட்டுள்ளார்


    அசோக மலர்   - கவலையின்மை

    அரளி (வெள்ளை) - தெய்வ சிந்தனை

    அல்லி (சிவப்பு)  - திருமகளின் அருள்

    அலரி (வெண்மை)  - இறைநினைவு

    ஆவாரம்பூ - கூர்த்தமதி

    இரங்கூன் மல்லி - விசுவாசம்

    ஊமத்தை  - தவம்

    எள்ளுப்பூ - சமரசம்

    எருக்கம்பூ- தைரியம்

    எலுமிச்சைப்பூ- கற்புத்திறன்

    கத்திரிப்பூ- பயமின்மை

    கருவேலம்பூ- ஞானம்

    காகிதப்பூ- பாதுகாப்பு

    சண்பகம்- உள்ளம் பக்குவப்படுதல்

    சம்பங்கி- படைப்புத்திறன்

    சாமந்தி- வீரியசக்தி

    சாமந்தி  - முழு அமைதி

    செம்பருத்தி- விரைந்து செயல்பாடு

    சிவப்பு செம்பருத்தி- நிறைந்த சக்தி

    செங்காந்தள்- சச்சரவின்மை

    சூரியகாந்தி- கலை நுண்ணறிவு

    கொத்தமல்லிப்பூ- மென்மை

    கொடிரோஸ்- சுமுகம்

    கொய்யாப்பூ- நிதானம்

    டிசம்பர்பூ- விழிப்புணர்வு

    (வெண்) தாமரை- இறையருள்

    தாழம்பூ- ஆன்மீகமனம்

    தும்பைப்பூ- உண்மைவழிபாடு

    தூங்குமூஞ்சிப்பூ- விவேகம்

    நந்தியாவட்டை- தூயமனம்

    நாகலிங்கப்பூ (சிவப்பு)- செல்வவளம்

    நித்யகல்யாணி (சிவப்பு)- சுயநலமின்மை

    நித்யகல்யாணி (வெண்மை)- நல்ல முன்னேற்றம்

    பருத்தி ரோஜா- தெய்வீக அருள்

    பன்னீர்ப்பூ- சாந்தமான உணர்வு

    பவளமல்லி- தெய்வீக ஆர்வம்

    பாதாம்பூ- ஆன்மீக உணர்வு

    பாரிஜாதம்- தூய ஆர்வம்

    பாகல்பூ- இனிமை

    பாக்குமரப்பூ- தெம்பு

    பீர்க்கம்பூ- அன்புமனம்

    புன்னைப்பூ- உடலில் அமைதி

    புகையிலைப்பூ- பகுத்தறிவு

    பூசணிப்பூ- தாராளம்

    பூவரசம்பூ- ஆரோக்கியம்

    பெருக்கொன்றை- சேவைமனப்பான்மை

    பெட்டுனியா- உற்சாகம்

    மகிழம்பூ- பொறுமை

    மனோரஞ்சிதம்- தெளிவான சிந்தனை

    மல்லிகை- தூய்மை

    மரமல்லிகை- உருவமாற்றம்

    (பவழ) மல்லிகை- இறைவேட்கை

    மாதுளம்பூ- தெய்வபக்தி

    விருட்சிப்பூ- மன அமைதி

    வேப்பம்பூ- ஆன்மீக இன்பம்

    வாடாமல்லி- மரணமிலா வாழ்வு

    வேலம்பூ- தெய்வீக ஞானம்

    ஆரஞ்சு ரோஜா- ஆர்வமுள்ள பக்தி

    சிவப்பு ரோஜா- ஆழ்ந்த உணர்வு

    வெள்ளை ரோஜா- பூர்ண தெய்வபக்தி

    இளஞ்சிவப்பு ரோஜா- சரணாகதி

    ×