என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "protection"
- சாப்பிட்ட பின்னர் கைகளை கழுவும்போது நகங்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.
- சருமத்திற்கு பயன்படுத்தும் எண்ணெய்யை நகங்களிலும் தடவலாம்.
நகங்களை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். குழி பறிப்பது, பழங்களின் தோல் உரிப்பது, கண்டவற்றையும் சுரண்டிக் கொண்டிருப்பது போன்ற விஷயங்களுக்கு நகங்களைப் பயன்படுத்தக் கூடாது. இது நகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, கிருமிகள் தொற்றிநோய் ஏற்படவும் காரணமாகிறது.
* இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அதிகப்படியாக வளர்ந்திருக்கும் நகங்களை நறுக்கிவிடலாம்.
* நகங்களின் நுனிப்பகுதிகளை முழுவதுமாக வெட்டக் கூடாது. அவ்வாறு வெட்டினால் நகத்தை மூடி சதை வளர்ந்து அதிக வலியினை ஏற்படுத்தும். நகத்தினை பற்களால் கடிக்கக்கூடாது. இதனால் நகங்கள் உடைந்துபோக வாய்ப்பு அதிகம். நகம்வெட்டும் கருவியினால் மட்டுமே வெட்டவேண்டும்.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/05/28/2366927-6a.webp)
* சாப்பிட்ட பின்னர் கைகளை கழுவும்போது நகங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். நகங்களின் இடுக்குகளில் தங்கும் நுண்ணுயிரிகளால் வயிற்றுத்தொல்லை, வலி, வாந்தி, வயிற்றுப் போக்கு ஆகியவை உண்டாகும்.
* நகங்கள் அழகுடன் திகழ, காய், கனிகள் நிறைய உட்கொள்ள வே ண்டும். இரவில் குளிர்ந்த நீரினால் கை மற்றும் கால் நகங்களை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
* சருமத்திற்கு பயன்படுத்தும் எண்ணெய்யை நகங்களிலும் தடவலாம். இது நகங்களின் மேற்புற செல்கள் பாதிக்கப்படுவதை தடுத்து நகங்களை மிருதுவாக வைத்திருக்கும்.
* சமையலறை, தோட்டங்கள், கழிவறைகளில் பிளீச் சிங் பவுடர், அம்மோனியா மற்றும் ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படும்போது கண்டிப்பாக கைகளில் உறைகள் அணிந்திருந்தால் நகங்களைப் பாதுகாக்கலாம்.
- இரவில் தலைகுளியல் மேற்கொண்டால் படுக்கை செல்லுவதற்கு மூன்று மணி நேரம் முன்பே தலைக்குளியல் செய்துவிடுங்கள்.
- சூரியனின் புற ஊதாக்கதிர்களில் இருந்து இழைகளை பாதுகாத்து கொள்வது அவசியம்.
சூரியனிலிருந்து வரும் வெப்பம் கூந்தலுக்கு அதிக ஆக்ஸிஜனேற்ற சேதத்தை உண்டாக்குகிறது. இது உலர்ந்த உடையக்கூடிய மற்றும் கடினமான கூந்தலை உண்டாக்குகிறது. ஏற்கனவே பளபளப்பாக இருக்கும் கூந்தலே சூரியனின் வெப்பத்தால் பல விளைவுகளை சந்திக்கும் போது வறட்சியான கடினமான கூந்தலின் நிலை இன்னும் மோசமானதாக ஆகிவிடுகிறது. ஹேர் கலர் செய்த கூந்தல் மங்கலான தோற்றத்தில் மாறிவிடுகிறது. வெளுத்து வெண்மையாகிவிடுகிறது. இந்த காலத்தில் முடியை பாதுகாக்கும் முறைகள் குறித்து பார்க்கலாம்.
சூரியனின் புற ஊதாக்கதிர்கள் முடியை உலர்த்தி விட செய்யும். இது கூந்தல் இழையின் மென்மையான அல்லது வெளிப்புற அடுக்கை கடினமாக்குகிறது. இது ஃப்ரீஸ் முடியை கொண்டிருப்பவர்களுக்கு இன்னும் சிக்கலான பிரச்சனை வர செய்கிறது. இது முடி உதிர்தலை அதிகமாக்குகிறது.
கோடையின் வெப்பத்தை தணிக்க நீச்சலில் ஈடுபடும் போது அது மேலும் கூந்தலின் எண்ணெய்ப்பசையை நீக்க செய்கிறது. மேலும் இதில் உள்ள குளோரின் கூந்தலில் இருக்கும் ஈரப்பசையை வெளியேற்ற செய்கிறது. அதிகமான வெப்பத்தால் பாதிக்கப்படும் முடியை எப்படி பராமரிப்பது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/05/05/2156440-11a.webp)
கோடைக்காலத்தில் முதலில் முடி பிளவை கட்டுப்படுத்துங்கள். அவை வராமல் தடுக்க முன்கூட்டியே கூந்தலை வெட்டி விடுவது பாதுகாப்பானது. அதே நேரம் குளிர்காலத்தை காட்டிலும் கோடைக்காலத்தில் முடியின் வளர்ச்சி வேகமாக இருக்கும்.
அதனால் பெண்கள் தங்கள் கூந்தலின் நுனியில் சிறிதளவு வெட்டி விடுவது நல்லது. ஆண்களும் கழுத்துவரையிலும் காது வரையிலும் ஒட்டியிருக்கும் முடியை மேலும் வளரவிடாமல் வெட்டிவிடுவது நல்லது.
சூரியனின் புற ஊதாக்கதிர்களில் இருந்து இழைகளை பாதுகாத்து கொள்வது அவசியம். அதனால் கூந்தலுக்கு முடி பராமரிப்பு பொருளை பயன்படுத்துவதை தினசரி வழக்கமாக்கி கொள்ளுங்கள். இது உங்களின் தன்மைக்கேற்ப ஜெல் அல்லது க்ரீம் வகைகளாக இருக்கலாம்.
இது சூரியனின் புற ஊதாக்கதிர்களிலிருந்து சேதத்தை தவிர்க்கலாம். இது கலரிங் செய்த முடிக்கும் பாதுகாப்பு அளிக்கிறது. உங்கள் பணி அதிகம் வெயில் என்றால் நீங்கள் கூந்தலின் உச்சந்தலையை முழுமையாக மறைக்கும் தொப்பியை அணிவது அவசியம். இது உச்சந்தலையை பாதுகாப்பதோடு சரும புற்றுநோயையும் தடுக்க செய்யும்.
தலை குளியலுக்கு முன்பு கூந்தலை ஈரப்பதமாக வைத்திருக்க செய்யுங்கள். குறிப்பாக கண்டிஷனர் பயன்படுத்திய பிறகு என்றால் அது நீங்கள் உப்புநீரில் குளித்தாலும் ரசாயனங்களை உறிஞ்சாது. குறிப்பாக நீங்கள் நீச்சல் குளங்களில் குளிப்பதாக இருந்தால் இது பாதுகாப்பானது. இயற்கை பொருள்களையும் பயன்படுத்தலாம்.
உங்கள் கூந்தலின் தன்மைக்கேற்ப நீங்கள் ஷாம்பு மற்றும் கண்டிஷனரை பயன்படுத்தி இருக்கலாம். ஆனால் கோடையில் வெளியேறும் வியர்வை பிரச்சனைக்கு நீங்கள் கண்டிப்பாக ஈரப்பதம் அளிக்கும் ஷாம்பு மற்றும் கண்டிஷரை பயன்படுத்த வேண்டும். வியர்வை பிரச்சனையில் கோடையில் வாரம் இரண்டு நாள் வரை நீங்கள் தலைகுளியலை மேற்கொள்வீர்கள்.
அதனால் இரசாயனம் இல்லாத ஷாம்பு மற்றும் கண்டிஷனரை பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் கூந்தலின் அடி அடுக்குவரை கண்டிஷனிங் செய்வதை உறுதி செய்யலாம்.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/05/05/2156441-11b.webp)
சூடான கருவிகள் பொறுத்தவரை வாரம் ஒருமுறை அல்லது இரண்டு முறை தலைமுடிக்கு சூடான கருவிகள் பயன்படுத்துவதன் மூலம் முடியின் ஈரப்பதம் மேலும் குறைகிறது.
இரவில் தலைகுளியல் மேற்கொண்டால் படுக்கை செல்லுவதற்கு மூன்று மணி நேரம் முன்பே தலைக்குளியல் செய்துவிடுங்கள். பிறகு தூங்குவதற்கு முன்பு தலையை பின்னலிட்டு தூங்குங்கள். இது கூந்தல் இழைகள் ஒன்றோடொன்று உரசி பாதிப்பில்லாமல் செய்வதை தடுக்கும்.
அழகான கூந்தல் அலங்காரத்தின் மீது உங்களுக்கு ஆர்வம் இருக்கலாம். ஆனால் கோடைக்காலத்தில் இதை அதிகமாக செய்ய வேண்டாம். கூந்தலை சிக்கில்லாமல் வைக்க போனிடெயில் அல்லது எளிதான பின்னல் மூலம் அலங்காரத்தை முடிவு செய்யுங்கள்.
முடி ஃப்ரீஸ் ஆவதற்கு எதிரான பாதுகாப்பை நீங்கள் செய்து கொள்வதன் மூலம் கூந்தலின் ஈரப்பதத்தை காக்கலாம். இந்த காலத்தில் கூந்தல் நிபுணரின் ஆலோசனையின் பெயரில் கூந்தலை மென்மையாக்கும் எண்ணெய், சீரம் போன்றவற்றை பயன்படுத்தலாம். ஆனால் எதுவாக இருந்தாலும் கூந்தல் பராமரிப்புக்கு பயன்படுத்தும் பொருள்கள் கண்டிப்பாக தரமானதாக பயன்படுத்துங்கள்.
- தொழிலாளர் நலன் குறித்து விசாரணை
- தீ விபத்து ஏற்பட்ட தொழிற்சாலையில் தொழிலாளர் துறையின் தொழிலக ஆய்வக பிரிவு அதிகாரி முரளி தலை மையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை காலாப்பட்டில் உள்ள தனியார் மருந்து கம்பெனியில் பாய்லர்கள் வெடித்து பெரும் விபத்து ஏற்பட்டது.
இதில் 14 தொழிலாளர்கள் உடல் கருகி படுகாயமடைந்தனர். இவர்களில் 11 பேர் சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் உயர்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த சம்பவம் காரணமாக காலாப்பட்டு பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டு ள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட தொழிற்சாலையில் தொழிலாளர் துறையின் தொழிலக ஆய்வக பிரிவு அதிகாரி முரளி தலை மையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தீ விபத்து நடந்த ரெக்கவரி யூனிட், டிரை யூனிட் பகுதிகளில் தடயங்களை சேகரித்து ஆய்வகத்துக்கு கொண்டு சென்றனர். இதன்பின்னர் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்த அதிகாரிகள், விபத்து குறித்து விளக்கி ஆய்வறி க்கையை ஒப்படைத்தனர்.
இதையடுத்து அந்த தொழிற்சாலையில் மருந்து உற்பத்திக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையாணை நோட்டீஸ் கம்பெனியின் நுழைவு வாயிலில் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் விபத்து ஏற்படாமல் இருப்பதற்கான வழிமுறைகள் குறித்து நிபுணர்களை கொண்டு ஆராயவும் புதுவை அரசு உத்தரவிட்டுள்ளது.
தீ விபத்து தொடர் பாகவும், தொழிலாளர் பாதுகாப்பு குறித்து கவர்னர், முதல்-அமைச்சர் ஆகியோர் உயர்மட்ட விசாரணைக்கும் உத்தர விட்டுள்ளனர். தொழிற்சாலை பாதுகாப்பு தொடர்பாக விரைவில் விசாரணை நடத்தப்பட உள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் தொழிற்சாலையை நடத்த அனுமதியளிப்பது குறித்து அரசு முடிவு செய்யும். இதனிடையே காலாபட்டில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.இதனால் தொழிற்சாலை முன்பும், சுற்றுப்புற கிராமங்களிலும் போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர்.
- திருத்துறைப்பூண்டியில் நீர்நிலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
- ஆறு, ஏரி, குளங்கள் ஆகியவை உயிரினங்களுக்கும் தேவையான நீராதாரங்களை கொடுக்கக்கூடியது.
திருத்துறைப்பூண்டி:
உலக ஆறுகள் தினத்தையொட்டி நீர்நிலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார் தலைமையில் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் கலந்து கொண்டு விழிப்புணர்வு துண்டு பிரசுத்தை வெளியிட்டு பேசுகையில்:-
ஆறு, ஏரி, குளங்கள் போன்றவை அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான நீராதாரங்களை கொடுக்கக்கூடியது.
இவைகளை நாம் மாசுபடாமல் பாதுகாத்து எதிர்கால சந்ததிகளுக்கு விட்டுச்செல்வதே இந்த தினத்தின் நோக்கமாகும்.
நாட்டின் வளத்திற்கு ஆறுகளே பெரும் பங்கு வகிக்கிறது என்றார்.
நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர் கோமதி செந்தில்குமார், கணக்காளர் முத்து மீனாட்சி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- வட்டார அளவிலான பெண் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
- குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
வெள்ளகோவில்
வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று வட்டார அளவிலான பெண் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர், சுகாதார ஆய்வாளர் கதிரவன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு, இளம்வயதில் திருமணம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- 2.50 லட்சம் கலப்பின கறவை மாடுகள் பால் உற்பத்திக்காக வளர்க்கப்படுகின்றன
- மடிநோயால் பாதிக்கப்பட்ட மாடுகளின் பாலை, மனிதர்கள் கன்றுகளுக்கு கொடுக்கக்கூடாது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் 2.50 லட்சம் கலப்பின கறவை மாடுகள் பால் உற்பத்திக்காக வளர்க்கப்படுகின்றன. மடிவீக்க நோயால் கறவை மாடுகள் பாதிக்கின்றன என பால் உற்பத்தியாளர்கள் கூறி வரும் நிலையில் பொங்கலூர் கே.வி.கே., திட்ட ஒருங்கிணைப்பாளர் இளையராஜன் மேற்பார்வையில், கால்நடை மருத்துவ அறிவியல் துறை இணை பேராசிரியர் சித்ரா விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மடிவீக்க நோயில் இருந்து கால்நடைகளை பாதுகாப்பது குறித்த வழிமுறைகளை விளக்கினார். மாட்டுத்தொழுவம், அதன் சுற்றுப்புறத்தை சுத்தமாகவும், உலர்ந்த நிலையிலும் வைக்க வேண்டும். சாணம், சிறுநீர் தேங்காமல் உடனுக்குடன் சுத்தம் செய்ய வேண்டும்.
கறவைக்கு முன், கறவை மாடுகளின் மடியை பொட்டாசியம் பெர்மாங்கனேட் கிருமிநாசினி மருந்தை தண்ணீரில் கலந்து நன்கு கழுவி உலர்ந்த சுத்தமான துணியால் துடைக்க வேண்டும். பால் கறப்பவரின் கைகள் சுத்தமாக இருக்க வேண்டும். பால் கறந்தவுடன் மாடுகள் உடனடியாக படுத்தால் மடி நோய் ஏற்படும். எனவே அவை படுக்காமல் இருக்க பசுந்தீவனம் அல்லது உலர் தீவனம் ஏதாவது ஒன்றை மாடுகளுக்கு கொடுக்க வேண்டும். மடிநோயால் பாதிக்கப்பட்ட மாடுகளின் பாலை, மனிதர்கள் கன்றுகளுக்கு கொடுக்கக்கூடாது. அந்த பாலை கன்றுகள் குடிக்கும் போது தீவிர இதய தசை அலர்ஜியால் பாதிக்கப்பட்டு இறக்க நேரிடும்.
சோற்று கற்றாழையை 250 கிராம் அளவுக்கு சிறு, சிறு துண்டுகளாக வெட்டி அதனுடன் 50 கிராம் விரலி மஞ்சள், 5 கிராம் சுண்ணாம்பு ஆகியவற்றை சேர்த்து, நன்கு அரைத்து இந்த கலவையை 100 மி., தண்ணீரில் கலந்து பாதிக்கப்பட்ட மாடுகளின் மடிப்பகுதி முழுக்க, நோய் தாக்குதல் குறையும் வரை தினமும் 8 முதல் 10 முறை பூச வேண்டும்.
நோய் தாக்குதல் அதிகமாக இருந்தால் கால்நடை மருத்துவரின் உதவியை நாட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- ஆனி திருவிழா கடந்த 29-ந்தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
- முத்துப்பேட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருவாரூர்:
தில்லைவிளாகம் அடுத்த ஜாம்புவானோடை தெற்கில் நாககாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆனி திருவிழா கடந்த 29-ந்தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி பால்குட ஊர்வலம், காவடி எடுத்தல், மாவிளக்கு போடுதல், கஞ்சிவார்த்தல் ஆகியவை நடந்தது. அதனை தொடர்ந்து சாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவையொட்டி ஊராட்சி மன்றம் சார்பில் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
- உரிமையா ளர்கள் மற்றும் ஓட்டுனர்கள், பணியாளர்க ளுக்கான விழிப்பு ணர்வுக்கூட்டம் நடை பெற்றது.
- பாதுகாப்பு முறையில் மோட்டார் வாகனம் மூலம் மட்டும் கழிவுநீர் அகற்றவேண்டும்.
சீர்காழி:
சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் கழிவுநீர் அகற்றும் லாரி உரிமையா ளர்கள் மற்றும் ஓட்டுனர்கள், பணியாளர்க ளுக்கான விழிப்பு ணர்வுக்கூட்டம் நடை பெற்றது.
கூட்டத்திற்கு நகராட்சி ஆணையர் வாசுதேவன் தலைமை வகித்தார். மோட்டார் வாகன ஆய்வாளர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நகராட்சி ஆணையர் வாசுதேவன் கூறுகையில், நகராட்சியில் உரிய அனுமதி பெறாத வாகனங்கள் ஏதுவும் செப்டிக்டேங்க் எடுப்பதற்கு அனுமதிக்கப்படாது ,கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் உரிய நடைமுறையைப் பின்பற்றா மல் சாலை ஓரங்கள், நீர்நிலைகள்,ஓடைகள் மற்றும் இதர பகுதிகளில் கொட்டு வதை கண்காணிக்கப்பட்டு வருகிறது. கழிவுநீர் அகற்றுவது சம்பந்தமாக தூய்மை பணியாளர்கள் உரிய பாதுகாப்பு உபகர ணங்கள் அணிந்து பாதுகாப்பு முறையில் மோட்டார் வாகனம் மூலம் மட்டும் கழிவுநீர் அகற்றவேண்டும். அவ்வாறு இல்லாமல் ஈடுப்பட்டால் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கூட்டத்தில் சுகாதார ஆய்வாளர் செல்லத்துரை ஆகியோர் பங்கேற்றனர்.
- 63 நாயன்மார்கள் சிலைகள் அருகே உள்ள சிலைகளை சேதப்படுத்தபட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.
- பிரசித்த பெற்ற கோவிலின் பாதுகாப்பை மேலும் அதிகப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கின்றேன்.
அவினாசி:
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் வரலாற்று சிறப்புமிக்க பெருங்கருணை நாயகி- அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 22ந் தேதி இரவு புகுந்த நபர் அங்கிருந்த சிலைகள் மற்றும் உண்டியலை சேதப்படுத்தி கருவறைக்குள் புகுந்து பூஜை பொருட்களை தாறுமாறாக தூக்கி வீசி எரிந்துள்ளார்.
இதுகுறித்து அவினாசி தொகுதி எம்.எல்.ஏ.ப தனபால் கண்டன அறிக்கையில் கூறியதாவது:-
கோவிலுக்குள் ஒரு நபர் புகுந்து சிலைகளை உடைத்து சேதப்படுத்தியும், பூஜை பொருட்களை தூக்கி எறிந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனது தொகுதிக்குட்பட்ட,1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில்,சம்பவத்தன்று இரவு சமூக விரோதிகளால் 63 நாயன்மார்கள் சிலைகள் அருகே உள்ள சிலைகளை சேதப்படுத்தபட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.இதற்கு காரணமானவர்களுக்கு உரிய தண்டனை கொடுக்க வலியுறுத்துகிறேன் .பிரசித்த பெற்ற கோவிலின் பாதுகாப்பை மேலும் அதிகப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கின்றேன்.இவ்வாறு எம்.எல்.ஏ.ப.தனபால் தெரிவித்துள்ளார்.
- மேட்டூர் அடுத்த மேச்சேரியில் அமைந்துள்ள பத்ரகாளி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
- சேலம், ஈரோடு, தர்மபுரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்வார்கள்.
மேச்சேரி:
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த மேச்சேரியில் அமைந்துள்ள பத்ரகாளி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
இங்கு அமாவாசை, பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் சேலம், ஈரோடு, தர்மபுரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்வார்கள்.
இந்த நிலையில், வைகாசி மாத அமாவாசை தினமான இன்று, அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர்.
அமாவாசையை முன்னிட்டு பத்ரகாளி அம்மனுக்கு சந்தன காப்பு மற்றும் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்ட ப்பட்டது.
திரளான பக்தர்கள் வந்திருந்து, சாமியை தரிசனம் செய்து அருள் பெற்றனர். கோவில் நிர்வாகம் சார்பில் பக்த ர்களுக்கு அடிப்படை வசதிகள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
- இறைவழிபாடு, பொது மன்றாட்டு, சிலுவை ஆராதனை நடைபெற உள்ளது.
- போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நாகப்பட்டினம்:
உலக புகழ்பெற்ற நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா தேவால யத்தில், இயேசு கிறிஸ்து, சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளி தினத்தையொட்டி சிறப்பு திவ்ய நற்கருணை ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
அதிகாலை 5 தொடங்கிய திவ்ய நற்கருணை ஆராத னைகள் பல்வேறு தரப்பினரால் மாலை 5 மணி வரை தொடர்ந்து நடத்தப்படுகிறது.
அடைக்கல அன்னை அருட்சகோதரிகள், இருதயம் மரியாயின் சேனை, அன்னை தெரசா சபை, ஆங்கில திருப்பயணிகள், நிர்மல் இல்லத்தினர், டி.எம்.ஐ., சகோதரிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து 12 மணி நேரம் திவ்ய நற்கருணை ஆராதனையை நடத்துகின்றனர்.
தொடர்ந்து இன்று மாலை தேவாலய கலையரங்கில் பேராலய அதிபர் இருதயராஜ் மற்றும் 10 க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் தலைமையில் இறைவழிபாடு, பொது மன்றாட்டு, சிலுவை ஆராதனை நடைபெற உள்ளது.
சிறப்பு திருப்பலியில் பங்கேற்க பாதயாத்திரையா கவும், வாகனம் மூலமும் தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனர்.
மேலும் வெளிநாட்டினரும் வருகை தந்துள்ளனர்.
இதனால் வேளாங்கண்ணி கடைவீதி, கடற்கரை உள்ளிட்ட இடங்கள் பக்தர்களும் சுற்றுலாப் பயணிகள் கூட்டமும் நிரம்பி உள்ளது.
பக்தர்கள் குவிந்து உள்ளதை அடுத்து போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.
- பெண் வீட்டில் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள மானாசிபாளையத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது மகன் சிவராமகிருஷ்ணன். இவர் திருப்பூர், ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த தெய்வசிகாமணி என்பவரது மகள் ரம்யாவை கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். பெண் வீட்டில் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை வீட்டை விட்டு ரம்யா வெளியேறினார். பின்னர் கோவை மாவட்டம், சூலூர் வட்டம், செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவிலில் சிவராம கிருஷ்ணனும், ரம்யாவும் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த நிலையில் பாதுகாப்பு கேட்டு அவர்கள் இருவரும் காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
அப்போது தனது பெற்றோர் எங்களை பிரிக்க முயற்சிப்பதாகவும், எனவே தங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறும் ரம்யா போலீசாரிடம் புகார் அளித்தார். இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் ரம்யாவின் வயது சான்றிதழை ஆய்வு செய்த போது அவர் மேஜர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரது விருப்பப்படி கணவர் சிவராமன் வீட்டிற்கு செல்லலாம் என்று தெரிவித்தனர் .இதையடுத்து புதுமண தம்பதிகள் இருவரும் மானாசிபாளையத்தில் உள்ள சிவராமகிருஷ்ணன் வீட்டிற்கு சென்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)