search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இன்று புனித வெள்ளி: வேளாங்கண்ணியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
    X

    வேளாங்கண்ணி கடற்கரையில் பக்தர்கள் புனித நீராடினர்.

    இன்று புனித வெள்ளி: வேளாங்கண்ணியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

    • இறைவழிபாடு, பொது மன்றாட்டு, சிலுவை ஆராதனை நடைபெற உள்ளது.
    • போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    உலக புகழ்பெற்ற நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா தேவால யத்தில், இயேசு கிறிஸ்து, சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளி தினத்தையொட்டி சிறப்பு திவ்ய நற்கருணை ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    அதிகாலை 5 தொடங்கிய திவ்ய நற்கருணை ஆராத னைகள் பல்வேறு தரப்பினரால் மாலை 5 மணி வரை தொடர்ந்து நடத்தப்படுகிறது.

    அடைக்கல அன்னை அருட்சகோதரிகள், இருதயம் மரியாயின் சேனை, அன்னை தெரசா சபை, ஆங்கில திருப்பயணிகள், நிர்மல் இல்லத்தினர், டி.எம்.ஐ., சகோதரிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து 12 மணி நேரம் திவ்ய நற்கருணை ஆராதனையை நடத்துகின்றனர்.

    தொடர்ந்து இன்று மாலை தேவாலய கலையரங்கில் பேராலய அதிபர் இருதயராஜ் மற்றும் 10 க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் தலைமையில் இறைவழிபாடு, பொது மன்றாட்டு, சிலுவை ஆராதனை நடைபெற உள்ளது.

    சிறப்பு திருப்பலியில் பங்கேற்க பாதயாத்திரையா கவும், வாகனம் மூலமும் தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனர்.

    மேலும் வெளிநாட்டினரும் வருகை தந்துள்ளனர்.

    இதனால் வேளாங்கண்ணி கடைவீதி, கடற்கரை உள்ளிட்ட இடங்கள் பக்தர்களும் சுற்றுலாப் பயணிகள் கூட்டமும் நிரம்பி உள்ளது.

    பக்தர்கள் குவிந்து உள்ளதை அடுத்து போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×