search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தயிர்"

    • யோகர்ட் என்பது புளிப்பாக்கப்பட்ட பாலாகும்.
    • தயிரை விட யோகர்ட் அதிக ஊட்டச்சத்து கொண்டது.

    தயிர் போலவே கெட்டியாக இருக்கும் யோகர்ட் சுவைத்திருக்கிறீர்களா...? அது மிகவும் சுவையானது, சத்தானது. அதுபற்றி தெரிந்து கொள்வோமா..!

    யோகர்ட் என்பது புளிப்பாக்கப்பட்ட பாலாகும். பதப்படுத்தப்பட்ட பாலில் பல மணி நேரத்திற்கு உயிருள்ள பாக்டீரியாக்களை சேர்த்து வைப்பதன் மூலம் யோகர்ட் தயாரிக்கப்படுகிறது. தயிரை விட யோகர்ட் அதிக ஊட்டச்சத்து கொண்டது. இது புரதங்கள் மற்றும் கால்சியத்தின் அற்புதமான மூலமாகும். இதில் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. வயிற்றுக்கு திருப்தியான உணர்வை வழங்குகிறது.

    சிறுவர் முதல் பெரியோர் வரை வயது வேறுபாடின்றி விரும்பிச் சாப்பிடும் உணவுப்பொருளாக யோகர்ட் காணப்படுகின்றது. ஆகையால், சிறிய பெட்டிக்கடைகள் முதல் நட்சத்திர ஹோட்டல்கள் வரை இந்த யோகர்ட் காணப்படுகின்றது.

     யோகர்ட்டில் கால்சியம், புரதம், பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின்-டி உள்ளிட்ட எலும்புகளின் அடர்த்தியை பராமரிக்க இன்றியமையாத பல ஊட்டச்சத்துகள் உள்ளன.

    யோகர்ட்டை தொடர்ந்து உட்கொள்வது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, பல்வேறு நோய் தொற்றுகளில் இருந்து நம் உடலைப் பாதுகாக்கிறது. இரைப்பை குடல் நோய்த்தொற்றுகள், சளி, காய்ச்சல் மற்றும் புற்றுநோய், சுவாசப் பிரச்சினைகளுக்கு எதிராக யோகர்ட் திறம்பட போராடுகிறது. யோகர்ட்டில் உள்ள மெக்னீசியம், செலினியம் மற்றும் துத்தநாகமும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றன.

    நமது உடலை பெருங்குடல், சிறுநீரக மற்றும் மார்பக புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் தன்மையை யோகர்ட் கொண்டுள்ளது. யோகர்ட் கால்சியத்தின் வளமான மூலமாகும். இதனால் எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும். யோகர்ட் உட்கொள்வது, எலும்பு முறிவு மற்றும் எலும்புப்புரை (ஆஸ்டியோபோரோசிஸ்) அபாயத்தை குறைக்கும்.

    யோகர்ட்டில் உள்ள அதிகப் புரதச்சத்து நம்மை நிறைவாக உணரவைத்து பசியை குறைக்கிறது. இதனால் நமது கலோரி நுகர்வு குறைகிறது. இது எடை இழப்புக்கு ஊக்குவிக்கிறது.

     தயிருக்கும் யோகர்ட்டுக்குமுள்ள வித்தியாசம்

    பாலில் சிறிது மோர் ஊற்றி வைப்பதன் மூலம், அது இயற்கையாகப் புளித்துப் போய் தயிராகிறது. அதனால் வீடுகளிலேயே எளிதாக தயிரைத் தயார் செய்யலாம். ஆனால், யோகர்ட் தயாரிப்பதற்கு உயிருள்ள பாக்டீரியாக்கள் தேவை. எனவே, அதனை உணவு தொழிற்சாலைகளில் தான் தயார் செய்ய முடியும். கால்சியம் உள்ளிட்ட பல சத்துக்களை உள்ளடக்கிய தயிரானது இலங்கை, இந்திய உணவுமுறையில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது.

    • உணவு உண்ட நிறைவைக் கொடுப்பது தயிர்தான்.
    • செரிமான மண்டலம் குளிர்ச்சி அடையும்.

    நாம் தினசரி சாப்பிடும் உணவில் தவறாமல் இடம் பிடிக்கவேண்டியது தயிர். மதிய உணவு மெனுவில் குழம்பு, கூட்டு, பொரியல் என பலவகைகள் இருந்தாலும், உணவு உண்ட நிறைவைக் கொடுப்பது தயிர்தான். பாலில் இருந்து ஏராளமான உணவுப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால். ஆரோக்கியத்தை பொறுத்தவரையில் தயிருக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

    குடலுக்கு நன்மை செய்யும் நுண்ணுயிரிகளும், வைட்டமின் ஏ. ஈ. சி. பி2, பி12 மற்றும் கரேடினாய்டு போன்ற அத்தியாவசிய சத்துக்களும் தயிரில் நிறைந்திருக்கின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் தயிருடன் சர்க்கரை கலந்து சாப்பிடுவதை விரும்புவார்கள். இவ்வாறு சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு நன்மை ஏற்படுமா? என்பது பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

    ஆயுர்வேத மருத்துவத்தின்படி தயிருடன் சர்க்கரையை கலந்து சாப்பிடும்போது. மூளையின் செயல்பாட்டுக்குத் தேவையான குளுக்கோஸ் போதுமாள அளவு கிடைக்கும். தயிர் மற்றும் சர்க்கரை கலவை உடலின் ஆற்றலை அதிகரித்து தான் முழுவதும் உடலை நிரேற்றத்துடன் வைத்திருக்க உதவும், சருமம் வறட்சியடையாமல் ஈரப்பதத்துடன் இருக்கச் செய்யும்.

    தயிருடன் சர்க்கரை கலந்து சாப்பிடுவதால் செரிமான மண்டலம் குளிர்ச்சி அடையும். வயிற்றில் உருவாகும் அதிக அளவிலான அமிலச் சுரப்பும், அதனால் உண்டாகும் நெஞ்செரிச்சலும் கட்டுப்படும். மதிய உணவு சாப்பிட்டு முடித்ததும் தயிருடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டால், மசாலா மற்றும் காரம் காரணமாக ஏற்படும் அதிகப்படியான பித்தம் குறையும். மலச்சிக்கல். வயிற்றுப்பொருமல் போன்ற பிரச்சினைகளும் தீரும்.

    காலையில் எழுந்தவுடன். உணவு சாப்பிடுவதற்கு முன்பு ஒரு கப் தயிருடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் தொற்றினால் ஏற்படும் எரிச்சல் குணமாகும். மேலும் இது சிறு நீர் குழாயை சுத்தப்படுத்தி குளிர்ச்சியுடன் வைத்திருக்க உதவும்.

    உடல் பருமன் பிரச்சினையால் சிரமப்படுபவர்கள், தயிருடன் சர்க்கரை கலந்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது உடலில் அதிகப்படியான கலோரிகள் சேர்வதற்கு வழிவகுத்து உடல் எடையை அதிகரிக்கும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரிக்கும் என்பதால். சர்க்கரை நோயாளிகள் இதனை தவிர்ப்பது நல்லது. சளி. ஆஸ்துமா மற்றும் சுவாசக் கோளாறுகளால் அவதிப் படுபவர்களும், தயிருடன் சர்க்கரை கலந்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

    • இரவில் தயிர் சாப்பிடக் கூடாது.
    • குளிர்ச்சியான தயிரை இரவில் சாப்பிட்டால் மூச்சிரைப்பு ஏற்படும்.

    * சூடான சாதத்தில் தயிர் கலந்து கடுகு தாளித்து உப்பு கலந்து சாப்பிடுவது நல்லதல்ல.

    * உடலை பலப்படுத்த விரும்புவோர் வேக வைத்த பச்சைப்பயிறு, நெல்லிக்காய் துவையலுடன் தயிர் சாப்பிடலாம்.

    * உறை ஊற்றிய பின் தயிர் உறையாமல் இருந்தால் சாப்பிடக் கூடாது. இந்த தயிர் வயிற்றில் வேகமாக புளிக்கத் தொடங்கி பசியை குறைக்கும்.

    * நன்கு புளித்த தயிர் ரத்தக் கொதிப்பு, பித்த வாயு, வயிறு கோளாறு உள்ளவர்களுக்கு ஏற்றதல்ல.

    * இரவில் தயிர் சாப்பிடக் கூடாது. குளிர்ச்சியான தயிரை இரவில் சாப்பிட்டால் மூச்சிரைப்பு ஏற்படும்.

    * இரவில் தொடர்ந்து தயிர் சாப்பிட்டால் ரத்த சோகை, ரத்தக் கொதிப்பு, காமாலை, தோல் நோய் ஏற்படும்.

    * மண்சட்டியில் உள்ள தயிர் உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்தது. புதிதாக வாங்கிய மண் சட்டியில் பலமுறை தண்ணீர் ஊற்றி ஊற வைத்த பிறகே தயிரை ஊற்றி வைக்க வேண்டும்.

    * தயிரை உப்பு மிளகிட்டு சாப்பிடலாம். சர்க்கரை, தேன், எசன்ஸ் வகைகளில் ஏதேனும் ஒன்றை கலந்தும் சாப்பிடலாம்.

    * தயிரை உபயோகித்து தலை முடியை சீர்செய்யலாம். முடி மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

    * கடலைமாவுடன் தயிரை குழைத்து பூசிவர பருக்கள் மறையும். முகம் பொலிவடையும்.

    • வீட்டிலேயே எளிமையான முறையில் செய்யக்கூடிய ஃபேஸ்பேக்குகள்.
    • தேன் மற்றும் ஓட்ஸ் இரண்டுமே சருமத்திற்கு நன்மை அளிக்கின்றன.

    தேன் ஆன்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்தது. இது சருமத்திற்கு ஊட்டம் அளித்து ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. ரசாயனமில்லாத மேக்கப்புக்கு நீங்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய இயற்கையான ஃபேஸ் பேக் இங்கே உள்ளது. இந்த ஃபேஸ் பேக் வறண்ட மற்றும் டி ஹைட்ரேட்டிங் சருமம் உள்ளவர்களுக்கு சிறப்பாக வேலை செய்யும். வீட்டிலேயே எளிமையான முறையில் செய்யக்கூடிய சருமத்தை பாதுகாக்கும் ஃபேஸ்பேக்குகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

    தயிர், தேன் தலா ஒரு தேக்கரண்டி எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு நன்றாக கலந்து சுத்தமான முகத்தில் தடவும். பதினைந்து நிமிடங்கள் அப்படியே விட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். தயிர் சருமத்தின் வறட்சியை போக்குவது மட்டுமின்றி அதில் உள்ள லாக்டிக் அமிலம் மற்றும் புரோ பயாடிக்குகள் வறண்ட சருமத்தை மென்மையாக்கி வீக்கத்தை தடுக்கும், தேன் முகம் மிருதுவாக இருப்பதற்கும் மற்றும் ஈரப்பதத்தை அளிப்பதற்கும் வழங்குகிறது.

    சமையல் அறையில் இருக்கும் சில பொருட்களை பயன்படுத்தி வீட்டிலேயே சுலபமாக ஸ்க்ரப் ஒன்றை தயார் செய்யலாம். வீட்டில் உள்ள ஓட்ஸ் மற்றும் தேன் பயன்படுத்தி ஸ்க்ரப் செய்ய கற்றுக்கொள்ளுங்கள். இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி புதுப்பொலிவைத்தரும். ஒரு டீஸ்பூன் ஓட்சை மிக்சியில் அரைத்து அதில் இரண்டு டீஸ்பூன் தேன் சேர்த்து கலக்கவும். இதை முகத்தில் தடவி கைகளால் மென்மையாக தேய்க்கவும் 10 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும் இப்படி வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் போதுமானது.

    தேன் மற்றும் ஓட்ஸ் இரண்டுமே சருமத்திற்கு நன்மை அளிக்கின்றன. முகத்தில் உள்ள அழுக்கு மற்றும் அதிகப்படியான எண்ணெய்யை சுத்தம் செய்து புதிய பொலிவைத்தரும். அதேசமயம் தேன் நம் முகத்திற்கு தேவையான ஈரப்பதத்தை வழங்குகிறது.

    முட்டையின் வெள்ளைக்கரு ஒரு டேபிள் ஸ்பூன், தேன் ஒரு டீஸ்பூன், கற்றாழை ஒரு ஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து மிக்சியில் அடித்துக்கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறியதும் வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இந்த மாஸ்கை முகத்தில் பூசுவதால் வறண்ட தன்மை நீங்கி முகத்துக்கு பொலிவு கிடைக்கும். இது சருமத்தில் காணப்படும் அதிகப்படியான வறட்சி தன்மையை உறிஞ்சுவதோடு அழுக்கையும் அகற்றும்.

    ஒரு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு டேபிள் ஸ்பூன் தேன், ஒரு பெரிய பழுத்த தக்காளி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவலாம் முகம் பளிச்சென மாறும். சருமத்தில் உள்ள அழுக்குகளை அகற்றும். எண்ணெய் பசையை நீக்கும் சிறந்த டோனராகவும் செயல்படும். இயற்கையாகவே பளபளப்பான சருமம் பெற இந்த பேக் உதவி செய்யும்.

    • இளநீர் அபிஷேகம் மக்களுக்கு குளிர்ச்சியை தருகிறது.
    • ஆவணிமாதம் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுகிறது.

    மணக்குள விநாயகர் கோவிலில் எண்ணை, தயிர், பால், திரவப்பொடி, அரிசி மாவு, ம.ஞ்சள் பொடி, தேன், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், தங்க நகைகள், விபூதி, கலசம், போன்றவைகளால் அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த அபிஷேகப் பொருள்களால் ஏற்படும் நன்மைகள் வருமாறு:-

    நல்லெண்ணை:-

    இது சாமிக்கு குளிர்ச்சியை தருகிறது. இதனால் உலக மக்களுக்கும் குளிர்ச்சி ஏற்படுகிறது.

    மஞ்சள் தூள்:-

    மங்களகரமான வாழ்க்கை தருகிறது.

    அரிசி மாவு:-

    நெற்பயிர்கள் அதிகமாக விளையவும் மக்கள் சுகமாக வாழவும் பயன்படுகிறது.

    பஞ்சாமிர்தம்:-

    இது உடல் நலம் தருகிறது.

    தயிர்:-

    மக்கள் சுகமாக வாழவும் பால பாக்கியம் கிடைக்கவும்செய்கிறது.

    பழ வகைகள்

    முக்கனி அபிஷேகம் சிறப்பினை தருகிறது.

    இளநீர்:-

    மக்களுக்கு குளிர்ச்சியை தருகிறது.

    விபூதியும் சந்தனமும்:-

    மக்களுக்கு அருள் தருகிறது.

    கலசாபிஷேகம்:-

    அனைவருக்கும் நன்மைகள் கிடைக்கிறது.

    மணக்குள விநாயகருக்கு அருகம் புல் மாலை, துளசி, தாமரை பூ போன்றவைகளும் பூஜைக்கு பயன்படுத்தப்படுகின்றன.

    திருவிழாக்கள்

    மணக்குள விநாயகர் கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெறுகின்றன. சித்திரை மாதம் தமிழ் புத்தாண்டையட்டி விநாயகருக்கு காலையில் அபிஷேகம் செய்யப்படுகிறது.

    மூலவருக்கு செய்யும் போது உற்சவ மூர்த்திக்கும் எண்ணை, பால் போன்றவற்றால் அபிஷேகம் செய்யப்படுகிறது. உற்சவ மூர்த்தி மாலையில் வீதி உலா வருகிறார்.

    ஆவணிமாதம் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுகிறது. அப்போது விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா நடைபெறுகின்றது.

    தீபாவளி மற்றும் பொங்கல் நேரங்களில் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சாமி வீதி உலா நடைபெறுகிறது.

    • தயிர், நெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலையை குறைக்க வேண்டும் என்று த.மா.கா. விவசாய அணி சார்பில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது
    • மின் கட்டண வைப்பு தொகை 4 மடங்கு உயர்வு போன்றவை தமிழக ஏழை, நடுத்தர மற்றும் விவசாயிகள் வெகுவாக பாதித்து மேலும் வறுமையிலும், துன்பத்திற்கும் ஆளாகியுள்ளனர்

    திருச்சி:

    த.மா.கா. விவசாய அணி சார்பாக மின் கட்டணம், தயிர், நெய் விலை போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து திருச்சி மாவட்ட விவசாய அணி தலைவர் புங்கனூர் செல்வம் திருச்சி மாவட்ட கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

    தமிழக அரசு பதவியேற்று ஓர் ஆண்டு நிறைவடையும் சூழ்நிலையில் தமிழக மக்கள் ஏற்கனவே பால் விலை, மளிகை பொருட்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக தமிழகத்தில் 70 சதவீத பாமர ஏழை மற்றும் நடுதர மக்கள் அல்லல்படுகின்றனர்.

    கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக வேலை வாய்ப்பு இழந்து வருவாய் இழந்து பெரும் நிறுவனங்கள் ஆட்குறைப்பு போன்ற காரணங்களால் வருவாய் இன்றியும் உள்ளனர்.

    தற்போது மாநில அரசு மின் கட்டண உயர்வு, பால் பொருட்கள் விலை உயர்வு போன்றவை மக்களை மேலும் கஷ்டத்திலும், வறுமையிலும் தள்ளும் ஓர் நிகழ்வாக மாறும் சூழல் உள்ளது.

    பழைய மின் கட்டணம் 200 யூனிட்டுக்கு ரூ.170, புதிய மின் கட்டணம் ரூ.225, 300 யூனிட்டுக்கு ரூ.530, புதிய கட்டணம் ரூ.675, 400 யூனிட்டுக்கு ரூ.830, புதிய கட்டணம் ரூ.1,125.

    இப்படி விலையேற்றம் ஒரு பக்கம் என்றால் விவசாயிகளுக்கான உரங்கள் விலையேற்றம் விவசாயப் பயன்பாடு அரசு வாடகை எந்திரங்கள் வாடகை உயர்வு, மின் கட்டண வைப்பு தொகை 4 மடங்கு உயர்வு போன்றவை தமிழக ஏழை, நடுத்தர மற்றும் விவசாயிகள் வெகுவாக பாதித்து மேலும் வறுமையிலும், துன்பத்திற்கும் ஆளாகியுள்ளனர்.

    ஆகையால் மாவட்ட கலெக்டர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கடைபிடிக்கப்பட்ட ஆட்சியியல் முறையை மீண்டும் அமுல்படுத்த தமிழக அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    • தினமும் தயிர் சாப்பிடுவது உடலில் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும்.
    • உடற்பயிற்சிக்கு முன்பு சாப்பிடுவதற்கு சிறந்த உணவாக தயிர் கருதப்படுகிறது.

    இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் தயிர் தினமும் புழக்கத்தில் இருக்கிறது. தயிர் சாதமாக மட்டுமின்றி இனிப்பு லஸ்ஸி, குளிர்ச்சியான சாஸ், ரைத்தா, தாகி வடை என பல வகைகளில் ருசிக்கப்படுகிறது. லக்டோபேசிலஸ் டெல்புருக்லி எனப்படும் பாக்டீரியாக்களால் பால் நொதிக்கப்பட்டு தயிர் தயாராகிறது. இந்த பாக்டீரியா நொதித்தல் செயல்முறையின்போது லாக்டிக் அமிலம் உருவாக்கப்படுகிறது. இது தயிர் அடர்த்தியாக இருப்பதற்கு காரணமாகிறது. இந்தியா மட்டுமின்றி உலகளவில் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாக தயிர் கருதப்படுகிறது. தினமும் உணவுடன் சிறிதளவு தயிர் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் 10 நன்மைகள் பற்றி பார்ப்போம்.

    பற்கள் - எலும்புகளை வலிமையாக்கும்

    தயிரில் கலந்திருக்கும் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் பற்கள் மற்றும் எலும்புகளை வலிமையாக்க உதவும். கீல்வாதத்தை தடுக்கும். எலும்புகள் மற்றும் பற்கள் வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு தினசரி உணவில் ஒருமுறையேனும் தயிர் சாப்பிட முயற்சி செய்யுங்கள்.

    நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்

    தயிர் சிறந்த புரோபயாடிக் உணவுகளில் ஒன்றாகும். இது உடலுக்கு நன்மை பயக்கும் நேரடி நுண்ணுயிரிகளைக் கொண்டுள்ளது. புரோபயாடிக்குகள் பல நோய்த்தொற்றுகளை தடுக்கும் தன்மை கொண்டவை. ஒட்டுமொத்தமாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தக்கூடியவை. சந்தையில் கிடைக்கும் அனைத்து தயிர்களும் புரோபயாடிக் தன்மை கொண்டவை அல்ல. அதன் லேபிளில் 'லைவ் ஆக்டிவ் கல்சர்' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்பதை கவனித்து வாங்க வேண்டும். யோனிக்கு நலம் சேர்க்கும்

    தயிரில் உள்ள நல்ல பாக்டீரியா, யோனியின் ஆரோக்கியம் காக்கக்கூடியது. பி.எச். சம நிலையை சீராக பராமரித்து யோனியின் நலனை மேம்படுத்தும். அதனால் பெண்கள் எந்த வகையான தயிரையும் உட்கொள்ளலாம்.

    இதயத்திற்கு நல்லது

    தினமும் தயிர் சாப்பிடுவது உடலில் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும். இதனால் ரத்த அழுத்தம் ஏற்படும் அபாயம் குறையும். கொலஸ்ட்ரால் அளவை சீராக வைத்து இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க வழிவகுக்கும்.

    ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்

    தயிரில் உள்ள எளிதில் ஜீரணிக்கக்கூடிய புரதம், ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. 'கிரீக் யோகர்ட்' எனப்படும் தயிர் இதய நோய் அபாயத்தை குறைப்பதாகவும், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இனிப்பு கலந்த தயிர் மற்றும் பழங்கள், பிற உணவு பொருட்கள் கலந்து தயாரிக்கப்படும் தயிர் வகைகளை தவிர்ப்பது நல்லது.

    பளபளப்பான சருமம்- கூந்தலை பெற உதவும்

    தயிர் அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. தயிர், எலுமிச்சை சாறு, கடலை மாவு இந்த மூன்றையும் ஒன்றாக கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி விடலாம். தயிர் சிறந்த பிளீச்சிங்காக செயல்பட்டு சரும அழகை மெருகேற்றும். ஆரோக்கியமான, பளபளப்பான கூந்தலை பெறவும் தயிரை உபயோகப்படுத்தலாம்.

    உடல் எடையை குறைக்கும்

    கார்டிசோல் ஹார்மோனின் ஏற்றத்தாழ்வு மற்றும் தவறான வாழ்க்கை முறை காரணமாக இடுப்பைச் சுற்றி அதிக கொழுப்பு சேரும். தயிரில் கால்சியம் நிறைந்துள்ளது. இது கார்டிசோலின் உற்பத்தியை குறைக்க உதவும். உடல் எடையை குறைக்கவும் துணை புரியும். தயிர் சாப்பிட்டால் நீண்ட நேரம் குடலுக்கு இதமாக இருக்கும். மேலும் கலோரி உட்கொள்ளலைக் குறைப்பதன் மூலம் தொப்பையை கட்டுப்படுத்தவும் உதவும்.

    பொடுகை நீக்கும்

    பொடுகை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த வீட்டு வைத்தியங்களில் ஒன்றாக தயிர் அமைந் திருக்கிறது. தயிரில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், பொடுகை நீக்க சிறந்த தீர்வாக அமைகிறது. மருதாணி இலைகளை நன்றாக அரைத்து அதனுடன் தயிர் கலந்து தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவி வரலாம். இது பொடுகைப் போக்குவதோடு மட்டுமல்லாமல், தலைமுடியை பளபளப்பாகவும் மென்மையாகவும் மாற்றும்.

    செரிமானத்திற்கு துணைபுரியும்

    தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் செரிமான மண்டலத்தின் சீரான செயல்பாட்டிற்கு உதவுகின்றன. தயிர் எளிதாக ஜீரணமாகக்கூடியது. மேலும் நொதித்தல் செயல்பாட்டின் போது லாக்டோஸ் உடைக்கப்படுவதால் குடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது.

    ஆற்றல் அளிக்கும்

    உடலுக்கு போதுமான அளவு ஆற்றலை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், தயிரை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த தயிர் உடலுக்கு ஊக்க சக்தியை அதிகரிக்கும். இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாக வேலை செய்கிறது. உடற்பயிற்சிக்கு முன்பு சாப்பிடுவதற்கு சிறந்த உணவாக தயிர் கருதப்படுகிறது.

    ×