search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அழகுகுறிப்புகள்"

    • ஒவ்வாமையினாலும் கழுத்து கருப்பாகிவிடுகிறது.
    • நாள்பட்ட கருமையாக இருந்தால் கூட கொஞ்சம் கொஞ்சமாக முயற்சி செய்தால் நிவாரணம் கிடைக்கும்.

    பொதுவாக இந்த கழுத்து பகுதிகளில் கருமை நிறம் படிவதற்கு என்ன காரணம் என்றால் நல்ல சூரிய வெளிச்சம் படுறது இல்லை. ஆண்களாக இருந்தால் காலர் துணி கழுத்தை மறைத்துக்கொள்வதாலும், பெண்களுக்கு அவர்களி அணியக்கூடிய அணிகலன்களில் ஏற்படக்கூடிய பிரச்சினைகள். பெண்களுக்கு கழுத்தில் அணியக்கூடிய ஜெயின் எப்போதும் அணிந்து கொண்டே இருப்பதால் அது கழுத்தில் பதிந்து பதிந்து கருப்பாகிவிடும்.

    அப்படி இல்லையென்றால் சில பெண்களுக்கு ஏற்படக்கூடிய ஒவ்வாமையினாலும் கழுத்து கருப்பாகிவிடுகிறது. அதாவது சிலர் கவரிங் ஜெயின்களை பயன்படுத்துவதாலும் கழுத்து கருப்பாகிவிடுவதுண்டு. இப்படி நிறைய காரணங்கள் இருக்கிறது கழுத்தில் கருமை நிறம் ஏற்படுவதற்கு அதனால் ஆரம்பத்திலேயே நாம் அதை கவனித்தால் எளிதில் அதில் இருந்து நிவாரணம் கிடைக்கும். அல்லது நாள்பட்ட கருமையாக இருந்தால் கூட கொஞ்சம் கொஞ்சமாக முயற்சி செய்தால் நிவாரணம் கிடைக்கும்.

    நம் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே இந்த தீர்வினை பெறலாம். அதற்கு காய்ச்சாத பசும்பால் அல்லது பாக்கெட் பாலை ஒரு பஞ்சில் தொட்டு கழுத்தில் உள்ள கருமையான இடங்களில் தடவி மசாஜ் செய்தால் நாள்பட நாள்பட கருமை நிறம் மறைந்துவிடும். இதில் வேண்டுமென்றால் ரோஸ்வாட்டரும் சேர்த்துக்கொள்ளலாம்.

    முகத்திற்கு ஃபேசியல் போடுகிற மாதிரி கழுத்தில் உள்ள கருமை நிறம் மாறுவதற்கு ஒரு முறை இருக்கிறது. அதற்கு ஒரு பாத்திரத்தில் சுடுதண்ணீர் எடுத்து அதில் ஒரு டவள் கொண்டு கழுத்தை முதலில் நன்றாக துடைத்து எடுக்க வேண்டும். அதன்பிற ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி ஒருபகுதியில் வெள்ளை சர்க்கரையை தொட்டு கழுத்துப்பகுதியில் உள்ள கருப்பு பகுதியில் 10 நிமிடம் நன்றாக ஸ்க்ரப் செய்ய வேண்டும். அதன்பிறகு டவள் கொண்டு சுடு தண்ணீரில் முக்கி நன்றாக துடைத்து எடுக்க வேண்டும்.

    கடலை மாவு அல்லது முல்தானிமெட்டி இவை இரண்டில் எது உங்களுக்கு கிடைக்கிறதோ அதனை கொண்டு ரோஸ்வாட்டரில் கலந்து பேக் மாதிரி கழுத்தும் பகுதியில் அப்ளை செய்ய வேண்டும். 10-ல் இருந்து 15 நிமிடத்திற்கு பிறகு ஈரமான டவள் கொண்டு நன்றாக துடைத்து எடுக்க வேண்டும். இதை தொடர்ந்து வாரத்திற்கு 2 அல்லது மூன்று முறை செய்து வந்தால் ரொம்ப சீக்கிரமாகவே கழுத்து பகுதியில் உள்ள கருமை நிறம் மறைந்துபோகும்.

    இதன்பிறகு தேன், எலுமிச்சை சாறு, சர்க்கரை இது மூன்றையும் சேர்த்து ஒரு பேக்காக செய்து கூட நாம் இந்த கருமை நிறத்தை போக்க முடியும். இரவு தூங்க செல்வதற்கு முன்பு இந்த கற்றாலை ஜெல்லை தடவி வரலாம். அதேபோல் ரோஜா இதழ் அதுடன் பால் சேர்த்து பேஸ்ட் மாதிரி அரைத்து அதையும் தடவி ஒருமணிநேரம் கழித்து கழுவி வந்தாலும் நல்ல மாற்றத்தை பார்க்க முடியும்.

    அதேபோல் தயிர் மற்றும் மஞ்சள் சேர்த்தும் அதில் எலுமிச்சை பழத்தை கொண்டும் கழுத்தில் உள்ள கருமை நிறம் மறைய ஸ்க்ரப் செய்து வந்தாலும் கழுத்தில் உள்ள கருமை நிறம் மாறும். இந்த கருமை நிறம் மாறுவதுமட்டுமில்லாமல் வெள்ளையாக மாறுவதற்கு கோதுமைமாவு, ஓட்ஸ் இதனுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கி அதை ஒரு பேக் செய்து போட்டு வந்தாலும் கழுத்தில் உள்ள கருமை நிறம் மறைந்து வெண்மை ஆவதற்கு நல்ல பலன் கொடுக்கும்.

    • பெண்களின் கண்களை பற்றி பேசாத அறிஞர்களே இருக்கமாட்டார்கள்.
    • கண்களுக்கு தேவையான ஓய்வை நாம் அளிக்கும் போது கண்கள் பொலிவுடன் இருக்கும்.

    பொதுவாக ஒரு பெண்ணை பற்றி பேசும்போது அவளின் கண்களை பற்றி பேசாத அறிஞர்களே இருக்கமாட்டார்கள். ஒருவருடைய பார்வை என்பது மிகவும் முக்கியமானது. ஆனால் இன்றைக்கு பலபேருடைய கண்களை பார்த்தால் கண்களில் சோர்வு தான் இருக்கிறது. எப்போதும் தூங்காததுபோல் கண்ணுக்கு கீழ் கருவளையம் ஏற்படுகிறது. கண்கள் மிகவும் ஆரோக்கியம் இழந்து காணப்படுகிறது.

    இதற்கு பல காரணங்களை சொல்லலாம். கண்ணுக்கு அழகை தருவது எப்போது என்றால் அதற்கு தேவையான ஓய்வை நாம் அளிக்கும் போது கண்கள் பொலிவுடன் இருக்கும். நன்றாக தூங்கவில்லை என்றாலும் கண்ணுக்கு அது ஆரோக்கிய குறைவுதான். அதனால் முடிந்தவரை நன்றாக தூங்க வேண்டும்.

    ஆனால் நாங்கள் நன்றாக தூங்குகிறோம், ஆனால் எப்போது கண்களில் ஒருவித எரிச்சல் இருக்கிறது. கண்களில் குளுமை இல்லை. கண் வறட்சியாக இருக்கிறது என்றால் முதலில் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். உடல் சூட்டை தணித்து கண்களையும் குளுமைப்படுத்தும்.

    இரண்டாவதாக முக்கியமான பொருள் உருளைக்கிழங்கு, வெள்ளரிக்காய். இப்போது வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு ஆகியவற்றை தனித்தனியே துருவி எடுத்து பிழிந்தால் நன்றாக சாறு நமக்கு கிடைக்கும். இப்போது வெள்ளரிக்கா சாறு ஒரு ஸ்பூன் என்றால், உருளைக்கிழங்கு சாறும் ஒரு ஸ்பூன் எடுக்க வேண்டும். அதன்பிறகு அதனுடன் பன்னீர் அல்லது ரோஸ் வாட்டர் இதையும் ஒரு ஸ்பூன் எடுக்க வேண்டும். இந்த மூன்றையும் சம அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு நல்ல பஞ்சில் இந்த சாற்றில் ஊறவிட்டு அந்த நனைந்த பஞ்சினை எடுத்து இரவு படுக்க செல்வதற்கு முன்னர் கண்களில் 20 நிமிடம் ஒற்றிக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு செய்யும் போது நமது கண்கள் மிகவும் குளிர்ச்சியடைந்து காணப்படும். எவ்வளவு உடல் சூடு இருந்தாலும் இதை வைத்த எடுத்த உடனேயே உங்களது கண்கள் குளிர்ச்சியாக இருக்கும். கண்கள் குளிர்ச்சியாக இருந்தால் காட்சியும் குளிர்ச்சியாக இருக்கும். நாமும் எல்லோரையும் கனிவுடன் பார்க்கலாம். இதனை குழந்தைகளுக்கும் தாராளமாக பயன்படுத்தலாம். தொடர்ந்து நாம் இதனை 2 நாட்களுக்கு ஒருமுறை பயன்படுத்தி வந்தால் கண்டிப்பாக கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையங்களையும் இது நமக்கு போக்கி கொடுக்கும்.

    • முகம் பளீச்சென்று இருந்தாலே அதுவும் ஒரு அழகுதான்.
    • கடலைமாவை பயன்படுத்தி முகத்திற்கு பயன்படக்கூடிய ஃபேஸ் பேக் தயாரிக்கலாம்.

    முகம் பளீச்சென்று இருந்தாலே அதுவும் ஒரு அழகுதான். வெள்ளையாக இருந்தால் தான் அழகு என்பது தவறான கருத்து. முகம் எப்போதும் பொலிவாக இருக்கவும், பார்த்தவுடனேயே பளீச்சென்று இருப்பதற்கு நிறைய கிரீம், பவுடர் போன்றவற்றை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.

    நம்ம வீடுகளில், இருக்கின்ற சில பொருட்களை கொண்டு எளிமையான முறையில் நம்மை நாம் பராமரிக்கலாம். முந்தைய காலங்களில் எல்லாம் இப்படி தெருவுக்கு தெரு பார்லர்கள் இல்லையே. அனைவரும் வீடுகளில் கிடைக்கக்கூடிய பொருட்களை கொண்டே பெண்கள் தங்களை அழகுபடுத்தி வந்தனர்.

    கடலைமாவை பயன்படுத்தி முகத்திற்கு பயன்படக்கூடிய ஃபேஸ் பேக் தயாரிக்கலாம். ஒவ்வொரு சருமத்திற்கும் ஏற்ற வகையில் கடலைமாவை பயன்படுத்தி ஃபேஸ் பேக் தயார் செய்யலாம்.

    வறண்ட சருமத்திற்கு கடலைமாவுடன் வாழைப்பழம், கற்றாலை ஜெல் பயன்படுத்தலாம். அல்லது சென்சிட்டிவ் ஸ்கின் என்றால் கடலைமாவுடன் பன்னீர் ரோஜா இதழ் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்துகொள்ளலாம். ஆயில் சருமம் என்றால் கடலை மாவுடன் டீ டிக்காசன் சேர்த்து ஃபேஸ் பேக் போடலாம். சாதாரண சருமத்திற்கு பாதாம் ஆயில், முல்தானிமெட்டி ஆகியவற்றை கடலை மாவுடன் சேர்த்து ஃபேஸ் பேக் தயார் செய்யலாம்.

    வயதுக்கு வந்த பெண்குழந்தைகளுக்கும் பெரிய பிரச்சினையே முகத்தில் உள்ள முகப்பருக்கள் தான். முகப்பருக்கள் நிறைய இருப்பவர்கள் கடலைமாவினை கிரீன் டீயில் கரைத்து அதை முகத்தில் பேக்காக போட்டு வந்தால் நாளடைவில் முகப்பருவில் இருந்தும், அதனால் ஏற்படக்கூடிய தழும்புகளில் இருந்தும் விடுபடலாம். இந்த பேக்கை போட்டு வெதுவெதுப்பான நீரில் ஸ்க்ரப் செய்து கழுவ வேண்டும். அவ்வாறு செய்தால் முகத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்கள் எல்லாம் நீங்கி முகம் பளீச்சென்று இருக்கும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டுமுறை பயன்படுத்தி வந்தால் நல்ல தீர்வினை கொடுக்கும்.

    • குறைந்தபட்சம் 15-30 நிமிடங்கள் வரை இந்த பெடிக்யூர் முறையை மேற்கொள்ளலாம்.
    • உடலில் மகிழ்ச்சி ஹார்மோன்களை வெளியிடவும் தூண்டும்.

    முக அழகுக்கு முக்கியத்துவம் தருவது போலவே பாதங்களின் பராமரிப்பும் முக்கியமானது. பாதங்களை அழகுபடுத்திக்கொள்ளவும், பராமரிக்கவும், பெண்களின் முதல் சாய்ஸ் எப்போதுமே பெடிக்யூர் தான். பார்லர்களில் உபகரணங்களை பயன்படுத்தி செய்வது போலவே தற்போது, இந்த முறையை கொண்டும் செய்கின்றனர். அது தான் மீன் ஸ்பா!

    பெரிய மால்கள், பார்லர்கள் என ஆண்-பெண் வேறுபாடு இயலாமல் இந்த மீன் ஸ்பா பிரபலமாகி வருகிறது. அது குறித்த சில விஷயங்களை இங்கு பார்க்கலாம்.

    மீன் ஸ்பா என்றால் என்ன? மீன் ஸ்பா என்பதை மீன் பெடிக்யூர் என்றும் சொல்லலாம். ஒருவர் தனது கால்களை மீன்கள் நிரப்பப்பட்ட தண்ணீர் தொட்டியில் வைக்கும் போது கால்களை, மீன்கள் சுத்தம் செய்யத் தொடங்கும். இதற்கு, காரா ரூபா என்ற மீன்களைப் பயன்படுத்துகின்றனர். இவை கால்களை சுத்தப்படுத்துவதற்காகவே பிரத்யேகமாக வளர்க்கப்படுகின்றன.

    குறைந்தபட்சம் 15-30 நிமிடங்கள் வரை இந்த பெடிக்யூர் முறையை மேற்கொள்ளலாம், இதற்கு ரூ.500 முதல் ரூ.800 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. முதன்முதலில், துருக்கியில் தான் இந்த மீன் ஸ்பா முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர், சிரியா, ஜோர்டன், இஸ்ரேல், ஈராக் உள்பட பல்வேறு நாடுகளில் பிரபலமானது. இது தற்போது, இந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது. மீன்களை தவிர இதில் வேறு எந்த உபகரணங்களோ, கிரீம் போன்றவையோ பயன்படுத்தப்படுவதில்லை.

    மீன் ஸ்பாவின் நன்மைகள்:

    முறையாக சுத்தம் செய்யப்படாத பாதத்தில் பாத வெடிப்பு, அலர்ஜி உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். அதில் பல இறந்த செல்கள் தேங்கும். நம் கால்களில் உள்ள இறந்த செல்கள் நாள் மீன்களின் பிரதான உணவு என்பதால் அவற்றை முழுமையாக நீக்க மீன் ஸ்பா சிறந்தது.

    காரா ரூபா மீனுக்கு, 'டாக்டர் பிஷ்' என்ற பெயரும் உண்டு, ஏனெனில், இது நம் காலில் உள்ள வறண்ட சருமத்தை சரி செய்து, புத்துயிர் அளிக்கிறது. எக்சிமா, சொரியாசிஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளை குணப்படுத்தும் ஆற்றலும் இதற்கு உண்டு. மீன்கள் நம் கால்களில் சிறந்த அழுத்தத்தை கொடுத்து, நுணுக்கமாக மசாஜ் செய்கிறது.

    இதனால் நம் கால்களில் ரத்த ஓட்டம் அதிகரித்து, காலின் வறண்ட பகுதி மேம்படுகிறது. தண்ணீர் தொட்டியில் கால்களை வைக்கும்போது பல மீன்கள் நம் கால்களை கடிக்கும். இது நமக்கு வலிக்காமல் கிளர்ச்சியூட்டும் விதமாக இருக்கும். உடலில் மகிழ்ச்சி ஹார்மோன்களை வெளியிடவும் தூண்டும். இதன்மூலம் மன அழுத்தம் குறைந்து, மன ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு பல்வேறு காரணங்களால் கால் கரடுமுரடாக இருக்கும். அவர்கள் மீன் ஸ்பா மேற்கொள்ளும்போது காலில் உள்ள இறந்த செல்கள் மட்டுமின்றி. சரும வறட்சியும் நீங்கும்.

    இதனால், கால்களுக்கு புத்துணர்ச்சி ஏற்பட்டு கடுமையான தோல் மென்மையாக மாறும். பாத எரிச்சலும் நீங்கும். நன்மைகள் பல இருந்தாலும் கவனிக்க வேண்டிய சில விஷயங்களும் இதில் உண்டு. கடுமையான தோல் நோய்த் தொற்று உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், இதய நோய் பாதிப்பு கொண்டவர்கள் மீன் ஸ்பா மேற்கொள்வதைத் தவிப்பது சிறந்தது.

    அதேபோல், மீன் ஸ்பாவுக்குப் பயன்படுத்தப்படும் நீர். அடிக்கடி மாற்றப்படுகிறதா என்பதையும், தண்ணீர் தொட்டிகளின் சுத்தத்தையும் உறுதி செய்ய வேண்டும். நீரில் உள்ள அழுக்குகள், சுகாதாரமற்ற பொருட்கள் நம் ஆரோக்கியத்தையும் பாதிக்கவும் வாய்ப்புள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    • முடிஉதிர்வு பிரச்சினை மன உளைச்சலை ஏற்படுத்திவிடும்.
    • வழுக்கை விழுந்த தலையில் கூட முடிவளரும்.

    பொதுவாக தலைமுடி உதிர்வதை ஒரு வயதிற்கு மேல் நம்மால் நிறுத்தமுடியாது. குழந்தைப்பேறு, வயோதிகம், உடல்நலப்பிரச்சினை, சத்துக்கள் குறைவது போன்ற காரணங்களால் முடி உதிர்வை தடுக்க முடியாது. பலபேருக்கு அதுவே மன உளைச்சலை ஏற்படுத்திவிடும். இப்படி முடி அதிகமாக கொட்டுகிறதே என்ன செய்வது என்று புரியாமல் யோசித்துக்கொண்டு இருப்பார்கள்.

    கைமேல் பலன் தரக்கூடிய மிக அருமையான தீர்வை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். வழுக்கை விழுந்த தலையில் கூட முடிவளரும் அளவுக்கு இந்த தீர்வு இருக்கும். நமது வீட்டு அடுப்படியில் இருக்கும் சின்ன வெங்காயம் தான் இந்த தீர்வை தருகிறது. இதில் இருக்கக்கூடிய சல்பர் தான் முடிவளச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

    சல்பர் நம் தலையில் ஏற்படக்கூடிய புண், பொடுகு மற்றும் முடிகொட்டுவதற்கு காரணமான தொற்றுகளை அழிப்பதற்கு இந்த சல்பர் உதவுகிறது. இந்த சின்னவெங்காயத்தை எவ்வாறு பயன்படுத்வேண்டும் என்றால் இதனை நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். சின்ன வெங்காயத்தில் தண்ணீர் சேர்க்காமல் நன்றாக பசைபோல் அரைத்து எடுக்க வேண்டும்.

    இதில் உள்ள சாறினை பிழிந்து எடுத்து அதனை தலையில் உள்ள முடிகள் மற்றும் அதன் வேர்களில் படுமாறு நன்றாக தேய்த்துக்கொள்ள வேண்டும். முடிந்தால் ஒரு 10 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். அதன்பிறகு ஒரு மணிநேரம் ஊற வைக்க வேண்டும். புண். பொடுகுத்தொல்லை இருப்பவர்கள் கொஞ்சம் அரிப்பு காணப்படும். அதை பொறுத்துக்கொண்டு ஒருமணிநேரம் ஊறவைக்க வேண்டும். கண் எரிச்சல் இருக்கும் அதனால் எந்த பிரச்சினையும் ஏற்படாது. அதன்பிறகு ஒரு மைல்டான ஷாம்பு போட்டு தலைமுடியை அலச வேண்டும்.

    சிலர் எனக்கு சளித்தொல்லை, சைனஸ் பிரச்சினை இருக்கிறது. நாங்கள் எப்படி ஊறவைத்து குளிப்பது என்று கேட்கலாம். அவர்களை இந்த சின்ன வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து தடவுவதற்கு பதிலாக அவர்கள் சின்ன வெங்காயத்தை சிறிதளவு ஒன்றிரண்டாக தட்டி அதனை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி அதனை தடவி வரலாம்.

    இதனுடன் சேர்த்து எலுமிச்சை சாறு அல்லது புதினா சாறு ஆகியவற்றையும் தலையில் தடவி வரலாம். இதனை சாறு எடுத்து தடவி வந்தால் மட்டுமே முடியில் எந்த வெங்காய சக்கைகளும் படியாமல் இருக்கும். இதனை தொடர்ந்து ஒரு 6 மாதத்திற்கு பயன்படுத்தி வந்தால் முடி உதிர்வது குறைந்து முடிவளர ஆரம்பிக்கும். முடி இல்லாமல் வழுக்கை விழுந்தவர்கள் கூட தொடர்ந்து இந்த மாதிரி பயன்படுத்தி வந்தால் நல்ல பலனை பெறலாம்.

    • கொரிய பெண்களின் வயதை சட்டென்று கணித்து கூறிவிட முடியாது.
    • முதுமை பருவ பெண்களின் முகமும் ஒருசேரவே காட்சி அளிக்கும்.

    கொரிய பெண்களின் வயதை சட்டென்று கணித்து கூறிவிட முடியாது. இளம் வயது பெண்களின் தோற்றமும், முதுமை பருவத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் பெண்களின் முகமும் ஒருசேரவே காட்சி அளிக்கும். அந்த அளவுக்கு அவர்களின் முகத்தோற்றம் பிரகாசத்தில் ஜொலிக்கும். முகப்பருக்கள், சுருக்கங்கள் எதுவும் தெரியாத அளவிற்கு நேர்த்தியாக சருமத்தை பராமரிப்பார்கள். செயற்கை அழகுசாதன பொருட்களை நாடாமல் இயற்கை பொருட்களை நாடுவதுதான் அவர்களது அழகின் ரகசியத்திற்கு காரணம்.

    பொதுவாகவே வயது அதிகரிக்கும்போது சரும சுருக்க பிரச்சினை எட்டிப்பார்க்கும். சருமத்திற்கு போதிய கவனம் செலுத்தாதது, ரசாயனங்கள் அதிகம் கலந்த கிரீம்களை பயன்படுத்துவது, போதிய நீர்ச்சத்து, ஊட்டச்சத்து இல்லாதது போன்ற காரணங்களால் இளம் பருவத்திலேயே பலருக்கும் சரும சுருக்கம் எட்டிப்பார்க்க தொடங்கிவிடும்.

    கொரிய பெண்கள் இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொள்வதில்லை. அதற்கு முறையான சரும பராமரிப்பும், இயற்கை அழகு சாதன பொருட்களும்தான் காரணம். சருமத்திற்கு அவர்கள் அதிகம் பயன்படுத்தும் பொருட்கள் என்ன தெரியுமா? முட்டையும், காபி தூளும், தக்காளியும்தான். ஆம்! அவற்றை கொண்டே தங்கள் சருமத்தை பொலிவாக்குகிறார்கள்.

    நன்மைகள்:

    இந்த ஃபேஸ் மாஸ்கை பயன்படுத்தி வந்தால் சருமத்தில் படர்ந்திருக்கும் இறந்த செல்கள் நீங்கிவிடும். சரும சுருக்கத்தையும், ஆரம்ப நிலையில் சருமத்தில் தென்படும் நுண்ணிய கோடுகளையும் குறைக்கும். சருமத்தை இளமை பொலிவுடன் தக்கவைக்க துணைபுரியும். சருமத்தில் ஆரம்ப நிலையில் ஏற்படும் சுருக்கங்களை சரி செய்யும் தன்மை முட்டையின் வெள்ளைக்கருவுக்கு உண்டு. அது சரும துளைக்குள் ஆழமாக சென்று அதில் படிந்திருக்கும் அழுக்குகளை வெளியேற்றி, சருமத்தை சுத்தம் செய்துவிடும். அந்த ஃபேஸ் மாஸ்கை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்:

    முட்டை -1 (வெள்ளைக்கரு மட்டும்)

    காபி தூள் - 1 டீஸ்பூன்

    தக்காளி ஜூஸ் - 2 டீஸ்பூன்

    செய்முறை:

    * முட்டையின் வெள்ளைக்கருவை நுரை வருவது போல் நன்றாக அடித்து கலக்கிக்கொள்ளுங்கள்.

    * அதனுடன் தக்காளி ஜூஸ் மற்றும் காபி தூளை சேர்த்து கிளறுங்கள். முகத்தில் தடவும் பதத்துக்கு தயார்படுத்திக்கொள்ளுங்கள்.

    * முகம் துடைக்க பயன்படுத்தும் டவலை வெந்நீரில் முக்கி அதனை நன்றாக பிழிந்து கொள்ளுங்கள்.

    * அந்த டவல் முகத்தில் ஒற்றி எடுக்கும் அளவுக்கு வெதுவெதுப்பாக இருக்க வேண்டும். அந்த பதத்தில் முகத்தின் அனைத்து பகுதிகளிலும் அழுத்தி எடுங்கள்.

    * பின்பு முட்டை, காபி தூள் பேஸ்டை முகம் முழுவதும் தடவிக்கொள்ள வேண்டும்.

    * 20 நிமிடங்கள் கழித்த பிறகு நன்கு உலர்ந்திருக்கும். அதனை எடுத்தால் அப்படியே பிரிந்து வந்துவிடும். அதனை மெதுவாக பிரித்தெடுத்துவிட்டு சாதாரண நீரில் முகத்தை கழுவினால் போதுமானது.

    * வாரத்திற்கு இரண்டு முறை இந்த ஃபேஸ் மாஸ்க்கை பயன்படுத்தலாம். அதன் மூலம் சருமத்தில் படர்ந்திருக்கும் அழுக்குகள், மாசுக்களை எளிதாக அப்புறப்படுத்திவிடலாம்.

    • அழகிற்கு அழகு சேர்ப்பதில் சிகை அலங்காரமும் முக்கிய பங்கு வகிக்கிறது.
    • கொண்டை அலங்காரங்களுக்கு இன்றும் மவுசு அதிகம்.

    ஆடை அணிகலன்களோடு பெண்களின் அழகிற்கு அழகு சேர்ப்பதில் சிகை அலங்காரமும் முக்கிய பங்கு வகிக்கிறது. எத்தனையோ வகையான சிகை அலங்காரங்கள் இருந்த போதும் சில தலைமுறைகளுக்கு முன்னாள் பிரபலமாக இருந்த கொண்டை அலங்காரங்களுக்கு இன்றும் மவுசு அதிகம்.

    நவீன இந்திய கொண்டை

    குட்டையான மற்றும் அடர்த்தியான முடி உள்ள பெண்களுக்கு இந்த வகையான கொண்டை பொருத்தமாக இருக்கும். பண்டிகைகள் மற்றும் பொதுவான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது அலங்கரித்துக்கொள்ள இது சரியான தேர்வாகும். கவுன்கள் மற்றும் முழங்கால் வரையிலான ஆடைகள் அணியும்போது இந்த வகையான சிகை அலங்காரம் கூடுதல் அழகு சேர்க்கும். ஓவல், வட்டம் மற்றும் வைரவடிவ முகத்தோற்றம் கொண்ட பெண்கள் நவீன இந்திய கொண்டை அலங்காரத்தை தேர்வு செய்யலாம்.

    பன் கொண்டை

    எல்லா வயது பெண்களுக்கும் பொருத்தக்கூடிய எளிமையான கொண்டை வகை இது. பார்ட்டிகளுக்கும், பயணங்களுக்கும், அலுவலக நிகழ்ச்சிகளுக்கும் இந்த வகை கொண்டை அலங்காரம் ஏற்றதாக இருக்கும். திருமண நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் போது பன் கொண்டையில் பூக்கம் மற்றும் அணிகலன்கள் கொண்டு அலங்கரித்தால் பார்ப்பவர்களின் கண்களைக் கவரும்.

    டாப் பன் கொண்டை

    டாப் பன் கொண்டை அலங்காரம் பார்ட்டிகள். திருமண வரவேற்புகள் மற்றும் மேற்கத்திய பின்னணி கொண்ட நிகழ்வுகளில் கலந்துகொள்ளும்போது அலங்கரித்துக்கொள்ள சரியான தேர்வாகும். நீளமான முடி கொண்ட பெண்களுக்கு இந்த வகை கொண்டை அழகுக்கு அழகு சேர்க்கும்.

    ஆஃப் பன் கொண்டை

    ஆஃப் பன் கொண்டை எனப்படும் இந்த கொண்டை இன்றைய இளம் பெண்களிடம் பிரபலமாக உள்ளது. விருந்துகளில் கலந்து கொள்பவர்களுக்கும், பயணம் செய்பவர்களுக்கும் இது சிறந்த தேர்வாகும். குட்டையான அல்லது நடுத்தரமான நீளம் கொண்ட கூந்தல் உள்ள பெண்களுக்கு இந்த வகை கொண்டை மிகவும் பொருத்தமாக இருக்கும்.

    சைடு பன் கொண்டை

    பக்கவாட்டு கொண்டை எனப்படும் இந்த கொண்டை அலங்காரம் நேர்த்தியான மற்றும் அழகான தோற்றம் அளிக்கும். இந்த வகை சிகை அலங்காரம் விருந்துகள், திருமணங்கள், குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது அலங்கரித்துக்கொள்ள ஏற்றது.

    லோ பன் கொண்டை

    கனமான அலங்கார பொருட்கள் இல்லாமல் எளிமையாக செய்யப்படும் இந்த வகை கொண்டை அலங்காரம் திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் அல்லது சாதாரண பண்டிகை நாட்களில் கலந்துகொள்வதற்கு ஏற்றது.

    மெஸ்ஸி டாப் பன் கொண்டை

    நேரமில்லாமல் அவசரமாக கிளம்பக்கூடிய நிகழ்வுகளுக்கு ஏற்ற கொண்டை அலங்காரம் இது. சில நொடிகளில் செய்யக் கூடிய இந்த வகை சிகை அலங்காரம் எளிமையாக இருந்தாலும் உங்களுக்கு வசீகரமான தோற்றத்தை கொடுக்க கூடியது.

    • மழைக்காலத்தில் ஏற்படும் சரும வறட்சியை தடுக்கிறது.
    • இறந்த செல்களை அகற்ற உதவுகிறது.

    ஓட்சில் உள்ள சபோனின் எனும் மூலக்கூறு சருமத்தில் ஆழமாக ஊடுருவி சுத்தம் செய்யும் தன்மை கொண்டது. இது சருமத்தை மென்மையாகவும், நீரேற்றத்துடனும் வைக்க உதவுவதோடு மழைக்காலத்தில் ஏற்படும் சரும வறட்சியை தடுக்கிறது.

    ஓட்சில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்தை புத்துணர்ச்சி அடையச் செய்து அதில் படித்திருக்கும் இறந்த செல்களை அகற்ற உதவுகிறது. ஓட்சுடன் தயிர், வாழைப்பழம், பால், தேன், எலுமிச்சம் பழச்சாறு, ரோஸ் வாட்டர் ஆகியவற்றை ஃபேஸ் மாஸ்க் தயாரித்து பயன்படுத்துவது குறித்து தெரிந்துகொள்வோம்.

    ஓட்ஸ் மற்றும் தயிர் ஃபேஸ் மாஸ்க்

    பொடியாக அரைத்த ஒருகப் ஓட்ஸ் ஒரு கப் தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும். பின்பு அதில் ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய், ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து பசை போல தயாரிக்கவும். இந்த கலவையை முகத்தில் பூசி ௧௦ நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவவும், இந்த ஃபேஸ்பேக்கினை வார்த்திற்கு இரண்டு முறை பயன்படுத்தி வரலாம்.

    ஓட்ஸ் மற்றும் வாழைப்பழ ஃபேஸ் மாஸ்க்

    பொடியாக அரைத்த ஓட்ஸ் ஒரு கப், நன்றாக பழுத்த வாழைப்பழம் இவை இரண்டையும் மிக்சியில் போட்டு அரைக்கவும். அதனுடன் வெதுவெதுப்பான பால் சிறிதளவு சோர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை முகத்தில் பூசி, 20 நிமிடங்கள் கழித்து கழுவவும். வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் சருமத்தில் ஏற்படும் தழும்புகளை குணப்படுத்தும். 'விட்டமின் சி' முகத்தில் சுருக்கங்களை ஏற்படுத்தும் பிரீ ரேடிக்கல்களை அழிக்கும்.

    ஓட்ஸ் மற்றும் தேன் ஃபேஸ் மாஸ்க்

    2 கப் ஓட்சுடன், ஒரு கப் பால் மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பசை போல தயாரிக்கவும். அதை, முகத்தில் பூசி ௧௫ நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இந்த ஃபேஸ்பேக்கை வாரத்திற்கு 5 முறை பயன்படுத்தலாம்.

    ஓட்ஸ் மற்றும் எலுமிச்சை ஃபேஸ் மாஸ்க்

    2 டேபிள் ஸ்பூன் ஓட்சில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். அது ஆறிய பிறகு 2 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் ௨ டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த ஃபேஸ்பேக்கை முகம், கை மற்றும் கழுத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழிந்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

    ஓட்ஸ் மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் மாஸ்க்

    ஒரு டீஸ்பூன் பொடியாக அரைத்த ஓட்ஸ், ஒரு டீஸ்பூன் கடலை மாவு, ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் அதில் தேவையான அளவு ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பூசவேண்டும். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

    • 40 வயதை கடந்தது முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது இயற்கையான விசயம் தான்.
    • முகம் நன்றாக இருக்கனும் என்றால் மனதை இளமையாக வைத்துக்கொள்ள வேண்டும்.

    இளமையை விரும்பாதவர்கள் யார் தான் இருக்கிறார்கள் இந்த உலகில். 40 வயதை கடந்ததும் முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது என்பது இயற்கையான விசயம் தான். ஆனால் இப்போது 30 வயது, 20 வயதிலேயும் பலருக்கு முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுகின்றன. ஆனால் சிலர் அறுபது வயதில் கூட முகத்தை இளமையாக சின்ன குழந்தை மாதிரி வைத்திருப்பார்கள். இதற்கு என்ன காரணம் நாம் என்னவெல்லாம் செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.

    முகம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் மனதை இளமையாக வைத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அகத்தின் அழகு முகத்தில் தெரியும். அதனால் முகத்தை நல்லா வைத்திருக்க நினைப்பவர்கள் மனதை இளமையாக வைத்துக்கொள்ள வேண்டும். நல்ல ஆரோக்கியத்தை நாம் கடைபிடிக்க வேண்டும். அதற்கு நிறைய தண்ணீர் கொடுக்க வேண்டும். நன்றாக உறங்க வேண்டும்.

    அதேபோல் நம் முகத்தில் ஒரு இருக்கம், பரபரப்பு, டென்ஷன் எது இருந்தாலும் முகத்தில் சுருக்கங்கள் ஏற்படும். அதேபோல் தசைகள் தளர்வுறும்போதும் சுருக்கங்கள் ஏற்படும். அதற்கு அடிக்கடி சிரித்துக்கொண்டு இருந்தாலே முகத்திற்கு நல்ல பயிற்சி. ஆனால் நாம் சிரிப்பை மறந்து திரிகிறோம்.

    அடுத்ததாக நாம் முகத்திற்கு போடும் மேக்கப். இந்த மேக்கப்பில் உள்ள கெமிக்கல்ஸ். இதனால் நம் முகத்தில் சுருக்கங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டும். மேக்கப் ரிமூவரை பயன்படுத்தும் போது அதில் உள்ள கெமிக்கல் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

    அந்த காலத்தில் மேக்கப்பை அழிப்பதற்கு தேங்காய் எண்ணெய், அல்லது ஆலிவ் ஆயில் தான் தேய்ப்பார்கள். அதற்கு தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் கொடுத்து முகத்தில் உள்ள தசைகளை இறுகச்செய்து இன்னும் முகத்திற்கு பொலிவை கொடுக்கிறது. அதன்பிறகு காய்கறிகளான கேரட், உருளைக்கிழங்கு மற்றும் பழங்களான பப்பாளி, தக்காளி, வாழைப்பழம் இவற்றை பேஸ்ட் செய்தும் பயன்படுத்தலாம். மற்றும் பழவகைகளையும் முகத்திற்கு ஃபேஷியலாக பயன்படுத்தலாம். அல்லது கடலைமாவு, பால் சேர்த்து கலந்து அந்த பேஸ்டையும் வாரத்திற்கு இரண்டுமுறை முகத்திற்கு தடவி வர முகத்தில் உள்ள தசைகள் இறுக்கமாகி சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கும்.

    அதுமட்டுமல்லாமல் குளிர்ந்த தண்ணீரில் அடிக்கடி முகத்தை கழுவவேண்டும். இல்லையென்றால் ஐஸ்கியூப்பை கூட முகத்தில் தேய்த்து கழுவலாம். புதினா இலைகளை அரைத்து ஒரு ஐஸ்கியூப் பாக்சில் ஊற்றி எடுத்து தேவைப்படும் போது அதனை பயன்படுத்தலாம். நீங்க எப்போதெல்லாம் பிரஷ்சாக இருக்க நினைக்கிறீர்களோ அப்போதெல்லாம் இந்த கியூப்களை எடுத்து முகம் முழுக்க தடவினால் சுருக்கங்களில் இருந்து விடுபடலாம்.

    இதோட இல்லாம பாசிபயிறு, கோதுமை, கடலைமாவு, ஓட்ஸ் இப்படி நம்ம வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு வாரத்திற்கு ஒருநாள் இந்த பொருளுடன் பன்னீர் அல்லது பாலில் குளைத்து பேக் போட்டு வந்தாலே முகம் இறுக்கமாக மாறும். மனம் தான் இறுக்கமாக இருக்க கூடாது. முகம் இறுக்கமாக இருந்தால் தான் வயதான தோற்றம் அவ்வளவு சீக்கிரமாக நமக்கு வராது.

    • நல்ல பிராண்ட் சன்ஸ்கிரீன்களையே வாங்குங்க. காலாவதி தேதி பார்க்க மறந்துடாதீங்க….
    • சன்ஸ்கிரீனை தடவி 20 நிமிடங்களுக்கு பிறகு தான் நீங்க வெளியில் செல்ல வேண்டும்.

    சூரியனின் புற ஊதா கதிர்களின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளில் இருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்க சன்ஸ்கிரீன் லோஷன்களை பயன்படுத்துவது மிகவும் முக்கியம். எப்போதும் புதிய சன்ஸ்கிரீன் லோஷன்களை உபயோகிப்பதே நல்லது. ஏற்கெனவே வாங்கி, சென்ற ஆண்டு பயன்படுத்தி மிச்சமான சன்ஸ்கிரீன் போடுவதை தவிர்க்கவும். முக்கியமாக, மருத்துவர் ஆலோசனைப்படி, நம் சருமத்துக்கு ஏற்ற சன்ஸ்கிரீனை தேர்ந்தெடுப்பது நல்லது.

    * நல்ல பிராண்ட் சன்ஸ்கிரீன்களையே வாங்குங்க. காலாவதி தேதி பார்க்க மறந்துடாதீங்க….

    * சன்ஸ்கிரீனில் குறிப்பிடப்பட்டிருக்கும் `எஸ்பிஎஃப்' 15, 30, 50 என்ற ரகங்களில் இருக்கும். இந்த எண்தான், அந்த சன்ஸ்கிரீன் எந்த அளவு வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாக்கும் என்பதற்கு அடையாளம். `எஸ்பிஎஃப்' 15 உள்ள சன்ஸ்கிரீன், வெயிலில் இருந்து ஒரு மணி நேரம் பாதுகாப்பு அளிக்கும். நம்ம ஊரு வெயிலுக்கு குறைந்தது 30 எஸ்பிஎஃப் சிறந்தது.

    * முகத்துக்கு மட்டும்மல்ல வெயில்படும் எல்லா இடங்களிலும் (கழுத்து, கை, கால்) சன்ஸ்கிரீன் லோஷன் தடவலாம்.

    * சன்ஸ்கிரீனை தடவி 20 நிமிடங்களுக்கு பிறகு தான் நீங்க வெளியில் செல்ல வேண்டும்.

    * என்னதான் நீங்க சன்ஸ்கிரீன் பயன்படுத்தினாலும், வெயிலில் தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு மேல் செல்வதை தவிர்த்து விடுங்கள். தொடர்ந்து வெயிலில் இருந்தால், மூன்று மணி நேரம் கழித்து முகத்தை கழுவி மீண்டும் சன்ஸ்கிரீன் அப்ளை செய்து கொள்ளுங்கள்.

    தரமான பிராண்டட் சன்ஸ்கிரீன் லோஷன்களை பயன்படுத்தவும். தற்போது, ஆர்கானிக் புராடக்டுகளிலும் சன்ஸ்கிரீன்கள் கிடைக்கின்றன. உங்களுக்கு ஏற்ற சன்ஸ்கிரீன்களை எத்தனை வருடங்கள் பயன்படுத்தலாம் என்று பரிசோதித்து வாங்குங்கள்.

    • டபுள் க்ளென்ஸிங் என்பது கொரியன் பியூட்டி நடைமுறையில் முக்கிய நடைமுறையாக இருக்கிறது.
    • பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான சருமத்திற்கு தினசரி போதுமான இரவு தூக்கம் அவசியம்.

    தெளிவான மற்றும் பளபளப்பான சருமத்தை பெற யாருக்கு தான் விருப்பம் இருக்காது. பாலின வேறுபாடின்றி தற்போது அனைவருமே தங்கள் சரும ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். தெளிவான மற்றும் பளபளப்பான சருமத்தை பெற யாருக்கு தான் விருப்பம் இருக்காது.!! பாலின வேறுபாடின்றி தற்போது அனைவருமே தங்கள் சரும ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.

    கொரியன் பியூட்டி அல்லது கே-பியூட்டி எனப்படும் ட்ரெண்டானது பலரது சரும பராமரிப்பு வழக்கத்தை மாற்றி இருக்கிறது. டிரெண்டாக இருக்கும் கொரியன் பியூட்டி சரும பராமரிப்பு டிப்ஸ்கள் சருமத்திற்கு புத்துணர்ச்சியூட்டும் மற்றும் பயனுள்ள அணுகுமுறையை வழங்குவதால் பிரபலமாக இருக்கின்றன.

    டபுள் க்ளென்ஸ்: டபுள் க்ளென்சிங் என்பது கொரியன் பியூட்டி நடைமுறையில் முக்கிய நடைமுறையாக இருக்கிறது. உங்கள் சருமத்தில் உள்ள அழுக்கு, மேக்கப் மற்றும் சன்ஸ்கிரீன் அனைத்தையும் அகற்ற இரண்டு வெவ்வேறு க்ளென்சர்களை பயன்படுத்துவதே டபுள் க்ளென்சிங் ஆகும். இந்த டிப்சை பின்பற்றும் போது சருமத்தில் இருக்கும் மேக்கப் மற்றும் சன்ஸ்கிரீனை நீக்க எண்ணெய் சார்ந்த க்ளென்சரை முதலில் பயன்படுத்த வேண்டும். சருமத்தில் இருக்கும் மீதமுள்ளவற்றை அகற்ற இரண்டாவதாக நீர் சார்ந்த க்ளென்சரை பயன்படுத்த வேண்டும்.

    எக்ஸ்ஃபோலியேட்: எக்ஸ்ஃபோலியேட் செய்வதன் மூலம் சருமத்தில் இருந்து இறந்த செல்களை நீங்கி நமக்குபளபளப்பான மற்றும் மிருதுவான சருமம் கிடைக்கிறது. இருப்பினும், அதிகமாக எக்ஸ்ஃபோலியேட் செய்வது சருமத்தை சேதப்படுத்த கூடும் ஜென்ட்டிலாக எக்ஸ்ஃபோலியேட் செய்ய வேண்டும், அதே சமயம் அடிக்கடி செய்ய கூடாது. வாரத்திற்கு அதிகபட்சம் 2-3 முறை எக்ஸ்ஃபோலியேட் செய்வது நல்ல பழக்கமாக இருக்கும்.

    தினமும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துங்கள்: வெயில் காலமோ, மழை காலமோ அல்லது பனி காலமோ கிளைமேட்டை பொருட்படுத்தாமல் சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களிலிருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்க, தினசரி சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். 30 அல்லது அதற்கு மேற்பட்ட எஸ்.பி.எப். கொண்ட சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதை உறுதி செய்யவும்.

    போதுமான தூக்கம்: பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான சருமத்திற்கு தினசரி போதுமான இரவு தூக்கம் அவசியம். போதுமான அளவு தூங்காத போது, உங்கள் உடல் அதிக கார்டிசோலை உற்பத்தி செய்கிறது. கார்டிசோல்என்பது நம் சருமத்தில் உள்ள கொலாஜன் மற்றும் எலாஸ்டின் ஆகியவற்றை உடைக்க கூடிய மன அழுத்த ஹார்மோன் ஆகும். எனவே தினசரி இரவு முதல் காலை வரை 7-8 மணிநேரம் நிம்மதியாக தூங்குவதை இலக்காக கொள்ளுங்கள்.

    • பேசியல் செய்வதற்கு முதலில் பேஸ் டீம் செய்ய வேண்டும்.
    • அடுத்ததாக செய்யக் கூடியதுதான் பேஸ் ஸ்க்ரப்.

    நமது சருமம் தான், நமது சிறந்த நண்பன், கருப்போ, சிவப்போ இல்லை மாநிறமோ, நம் சருமத்தை முதலில் நாம் நேசிக்க வேண்டும். தோல் நிறம் எதுவாக இருந்தாலும், அதன் அமைப்புதான் முக்கியம். தெளிவான, பளபளப்பான மற்றும் கருமை இல்லாத சருமத்தை யார்தான் விரும்பவில்லை?

    வேப்பிலை ஃபேஷியல் முகத்திற்கு அழகு கூட்டுவது மட்டுமல்லாமல் முகத்தில் உள்ள கிருமிகளையும், கரும்புள்ளிகளையும், முகப்பருக்களையும் நீக்குவதற்கு பயன்படுகிறது. அதை எவ்வாறு செய்யலாம் என்பதை இப்போது பார்க்கலாம். பேசியல் செய்வதற்கு முதலில் பேஸ் டீம் செய்வார்கள். இதற்கு நாம் உபயோகிக்கக்கூடிய பொருள்தான்

    எலுமிச்சம் பழத்தோலை கேரட் உரசுவது போல் உரசி ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அதை ஒரு

    அகலமான பாத்திரத்தில் போட்டு அதில் 300 மில்லி அளவு சூடான தண்ணீரை ஊற்ற வேண்டும். பிறகு அதை நன்றாக கலக்கி, அதில் வரும் ஆவியில் நம்முடைய முகத்தை ஐந்து நிமிடம் காட்ட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் எலுமிச்சை பல தோளில் இருக்கக்கூடிய கிருமி நாசினி ஆனது நம் முகத்தில் இருக்கக்கூடிய துவாரங்களை திறந்து அதில் இருக்கும் கிருமிகளையும், அழுக்குகளையும் நீக்க உதவுகிறது.

    அடுத்ததாக செய்யக் கூடியதுதான் பேஸ் ஸ்க்ரப். இதற்கு நாம் முதலில் ஒரு சோற்றுக்கற்றாழையை எடுத்து சுத்தம் செய்து அதில் இருக்கும் சதைப்பகுதியை மிக்சியில் தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அரைத்து ஒரு பவுலில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    இப்பொழுது ஒரு பவுலை எடுத்து அதில் 2 ஸ்பூன் அளவு அரிசி மாவை சேர்க்க வேண்டும். மேலும் அதனுடன் அரை எலுமிச்சம் பழச்சாறை சேர்க்க வேண்டும். பிறகு தேவையான அளவு சோற்றுக்கற்றாழை ஜூசை ஊற்றி பேஸ்ட் போல தயார் செய்து கொள்ள வேண்டும்.

    இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி, முகத்தை ஐந்து நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு முகத்தை கழுவி விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நம் முகத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான இறந்த செல்களும் நீக்கப்படும். கடைசியாக நாம் செய்யப்போவது தான் ஃபேஸ் பேக்.

    இந்த ஃபேஸ் பேக்கிற்கு நமக்கு வேப்பிலை பொடி தேவைப்படும். ஒரு பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு ஸ்பூன் வேப்பிலை பொடியை போட்டு, அதனுடன் நாம் அரைத்து வைத்திருக்கும் கற்றாழை ஜூசை ஊற்றி பேஸ்ட் போல தயார் செய்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை முகத்தில் நன்றாக தடவி விட வேண்டும். இந்த ஃபேஸ் பேக் நன்றாக காய்ந்த பிறகு, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடலாம்.

    இவ்வாறு செய்வதன் மூலம் நம் முகத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கிருமிகளும் நீங்குவதோடு, கரும்புள்ளிகளும் அகன்று, முகம் பொலிவுடன் காணப்படும். எளிதாக கிடைக்கக்கூடிய இந்த இயற்கையான பொருட்களை வைத்து எந்தவித செலவு செய்யாமல் வீட்டிலேயே பேஷியல் செய்து பயனடைவோம்.

    ×