search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fish spa"

    • குறைந்தபட்சம் 15-30 நிமிடங்கள் வரை இந்த பெடிக்யூர் முறையை மேற்கொள்ளலாம்.
    • உடலில் மகிழ்ச்சி ஹார்மோன்களை வெளியிடவும் தூண்டும்.

    முக அழகுக்கு முக்கியத்துவம் தருவது போலவே பாதங்களின் பராமரிப்பும் முக்கியமானது. பாதங்களை அழகுபடுத்திக்கொள்ளவும், பராமரிக்கவும், பெண்களின் முதல் சாய்ஸ் எப்போதுமே பெடிக்யூர் தான். பார்லர்களில் உபகரணங்களை பயன்படுத்தி செய்வது போலவே தற்போது, இந்த முறையை கொண்டும் செய்கின்றனர். அது தான் மீன் ஸ்பா!

    பெரிய மால்கள், பார்லர்கள் என ஆண்-பெண் வேறுபாடு இயலாமல் இந்த மீன் ஸ்பா பிரபலமாகி வருகிறது. அது குறித்த சில விஷயங்களை இங்கு பார்க்கலாம்.

    மீன் ஸ்பா என்றால் என்ன? மீன் ஸ்பா என்பதை மீன் பெடிக்யூர் என்றும் சொல்லலாம். ஒருவர் தனது கால்களை மீன்கள் நிரப்பப்பட்ட தண்ணீர் தொட்டியில் வைக்கும் போது கால்களை, மீன்கள் சுத்தம் செய்யத் தொடங்கும். இதற்கு, காரா ரூபா என்ற மீன்களைப் பயன்படுத்துகின்றனர். இவை கால்களை சுத்தப்படுத்துவதற்காகவே பிரத்யேகமாக வளர்க்கப்படுகின்றன.

    குறைந்தபட்சம் 15-30 நிமிடங்கள் வரை இந்த பெடிக்யூர் முறையை மேற்கொள்ளலாம், இதற்கு ரூ.500 முதல் ரூ.800 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. முதன்முதலில், துருக்கியில் தான் இந்த மீன் ஸ்பா முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர், சிரியா, ஜோர்டன், இஸ்ரேல், ஈராக் உள்பட பல்வேறு நாடுகளில் பிரபலமானது. இது தற்போது, இந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது. மீன்களை தவிர இதில் வேறு எந்த உபகரணங்களோ, கிரீம் போன்றவையோ பயன்படுத்தப்படுவதில்லை.

    மீன் ஸ்பாவின் நன்மைகள்:

    முறையாக சுத்தம் செய்யப்படாத பாதத்தில் பாத வெடிப்பு, அலர்ஜி உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். அதில் பல இறந்த செல்கள் தேங்கும். நம் கால்களில் உள்ள இறந்த செல்கள் நாள் மீன்களின் பிரதான உணவு என்பதால் அவற்றை முழுமையாக நீக்க மீன் ஸ்பா சிறந்தது.

    காரா ரூபா மீனுக்கு, 'டாக்டர் பிஷ்' என்ற பெயரும் உண்டு, ஏனெனில், இது நம் காலில் உள்ள வறண்ட சருமத்தை சரி செய்து, புத்துயிர் அளிக்கிறது. எக்சிமா, சொரியாசிஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளை குணப்படுத்தும் ஆற்றலும் இதற்கு உண்டு. மீன்கள் நம் கால்களில் சிறந்த அழுத்தத்தை கொடுத்து, நுணுக்கமாக மசாஜ் செய்கிறது.

    இதனால் நம் கால்களில் ரத்த ஓட்டம் அதிகரித்து, காலின் வறண்ட பகுதி மேம்படுகிறது. தண்ணீர் தொட்டியில் கால்களை வைக்கும்போது பல மீன்கள் நம் கால்களை கடிக்கும். இது நமக்கு வலிக்காமல் கிளர்ச்சியூட்டும் விதமாக இருக்கும். உடலில் மகிழ்ச்சி ஹார்மோன்களை வெளியிடவும் தூண்டும். இதன்மூலம் மன அழுத்தம் குறைந்து, மன ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு பல்வேறு காரணங்களால் கால் கரடுமுரடாக இருக்கும். அவர்கள் மீன் ஸ்பா மேற்கொள்ளும்போது காலில் உள்ள இறந்த செல்கள் மட்டுமின்றி. சரும வறட்சியும் நீங்கும்.

    இதனால், கால்களுக்கு புத்துணர்ச்சி ஏற்பட்டு கடுமையான தோல் மென்மையாக மாறும். பாத எரிச்சலும் நீங்கும். நன்மைகள் பல இருந்தாலும் கவனிக்க வேண்டிய சில விஷயங்களும் இதில் உண்டு. கடுமையான தோல் நோய்த் தொற்று உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், இதய நோய் பாதிப்பு கொண்டவர்கள் மீன் ஸ்பா மேற்கொள்வதைத் தவிப்பது சிறந்தது.

    அதேபோல், மீன் ஸ்பாவுக்குப் பயன்படுத்தப்படும் நீர். அடிக்கடி மாற்றப்படுகிறதா என்பதையும், தண்ணீர் தொட்டிகளின் சுத்தத்தையும் உறுதி செய்ய வேண்டும். நீரில் உள்ள அழுக்குகள், சுகாதாரமற்ற பொருட்கள் நம் ஆரோக்கியத்தையும் பாதிக்கவும் வாய்ப்புள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    ஸ்பா சென்டரில் தொட்டிக்குள் வளர்க்கப்படும் ஒரு வகையான மீனைக் கொண்டு உடலின் சில பாகங்களைக் கடிக்க விடுவதுதான் ஃபிஷ் ஸ்பா.
    ஸ்பா சென்டரில் தொட்டிக்குள் வளர்க்கப்படும் ஒரு வகையான மீனைக் கொண்டு உடலின் சில பாகங்களைக் கடிக்க விடுவதுதான் ஃபிஷ் ஸ்பா. ஃபிஷ் ஸ்பா ஒன்றும் புதிய கண்டுபிடிப்பல்ல. துருக்கியில் 100 ஆண்டுகளுக்கு முன்பே சொரியாஸிஸ், எக்சீமா போன்ற தோல் நோய்களுக்கு மீன்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்திருக்கிறது. அதுதான் பின்னர் ஃபிஷ் ஸ்பா என அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை முறையானது.

    எல்லா வகையான மீன்களையும் இச்சிகிச்சைக்குப் பயன்படுத்த முடியாது. காரா ரூஃபா வகை மீன்களைத்தான் இதற்கு பயன்படுத்துகிறோம். சுத்தமான, வெதுவெதுப்பான தண்ணீர் நிரப்பப்பட்ட தொட்டிகளில் டஜன் கணக்கான காரா ரூஃபா மீன்கள் இருக்கும். அந்த நீருக்குள் காலை வைத்ததுமே, இம்மீன்கள் காலில் இருக்கும் அழுக்கு மற்றும் இறந்த செல்களை சாப்பிட ஆரம்பித்துவிடும். இதனால் இறந்த செல்கள், அழுக்குகள் எல்லாம் நீங்கி பாதம் புதுப்பொலிவு பெறும்.



    ஃபிஷ் ஸ்பாவிலும் சில வகைகள் உண்டு. பாதங்களுக்கு மட்டும் மேற்கொள்ளப்படுவது ஃபிஷ் பெடிக்யூர் என்று சொல்வோம். முகத்துக்கும் ஃபிஷ் ஸ்பா மேற்கொள்ளலாம். அதனை ஃபிஷ் ஃபேஷியல் என்போம். ஃபிஷ் ஃபேஷியல் செய்யும்போது முகப்பருக்களில் உள்ள பாக்டீரியாக்களை அவை தின்றுவிடுவதால் பருக்கள், பருக்களினால் வரும் அடையாளங்களை போக்க முடியும். மேலும், வயதான தோற்றத்தைத் தரும் முகச்சுருக்கங்கள் இதனால் நீங்குகிறது. முகத்துக்கு பொலிவான தோற்றத்தை ஃபிஷ் ஃபேஷியல் தருகிறது.

    இந்த ஃபிஷ் ஸ்பா முறை மசாஜ் செய்வது போல் இருப்பதால் கால்களில் ஏற்படும் சோர்வு, அசதிகளையும் போக்கும். ஃபிஷ் ஸ்பாவினால் உடலளவிலும், மனதளவிலும் புத்துணர்ச்சியை உணர முடியும். ஃபிஷ் ஸ்பா குறித்த விழிப்புணர்வு தற்போது அதிகரித்து வருகிறது.

    ×