search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coffee Scrub"

    • வெயில் காலத்தில் கை, கால் உடல் முழுவதும் கருப்பாக மாறிவிடும்.
    • பப்பாளி சருமத்தை ஆழமாக சுத்தம் செய்ய உதவும்.

    பொதுவாகவே வெயில் காலத்தில் வெளியே சென்றால் முகம், கை, கால் உடல் முழுவதும் கருப்பாக மாறிவிடும். இது போன்ற சூழ்நிலையில் நாம் முகத்திற்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே அளவு கைகளுக்கும் கொடுப்பதில்லை. கைகளை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

     எலுமிச்சை ஸ்க்ரப்:

    முதலில் ஒரு டீஸ்பூன் தயிர், அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு டீஸ்பூன் அரிசி மாவு சேர்த்து பேக் தயார் செய்துகொள்ள வேண்டும். இதனை கைகளில் தடவி, சிறிது நேரம் கைகளை மசாஜ் செய்ய வேண்டும். அதன் பிறகு சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும். இதில் உள்ள எலுமிச்சை சாறு ப்ளீச்சிங் பண்புகளைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் அரிசி சருமத்தில் அழுக்குகளை வெளியேற்றுகிறது. எனவே கைகளில் இருக்கும் கருமை நிறம் மாறி கைகள் பளிச்சென்று இருக்கும்.

      பப்பாளி ஸ்க்ரப்:

    கைகளில் உள்ள கருமை நீங்க பப்பாளி அதிக அளவில் உதவும். இந்த பேக் தயாரிப்பதற்கு 1 டீஸ்பூன் பப்பாளி மற்றும் ஒரு டீஸ்பூன் பப்பாளி விதைகள் தேவைப்படும். முதலில் பப்பாளியை துண்டுகளாக நறுக்கி அதன் சதைப்பகுதியை பிசைந்து கொள்ள வேண்டும். இப்போது அதனுடன் பப்பாளி விதைகளை சேர்த்து 5 நிமிடம் உங்கள் கைகளை மசாஜ் செய்ய வேண்டும். இதைச் செய்த பிறகு, சருமத்தை சுத்தம் செய்யுங்கள். இது சருமத்தை ஆழமாக சுத்தம் செய்ய உதவும்.

     காபி ஸ்க்ரப்:

    இந்த ஸ்க்ரப் செய்ய காபி, அரை தேக்கரண்டி, தேன் மற்றும் அரை தேக்கரண்டி பால் தேவைப்படும். இவை அனைத்தையும் கலந்து ஒரு ஸ்க்ரப் தயார் செய்துகொள்ள வேண்டும். இப்போது ஸ்க்ரப்பை கைகளை தடவி சிறிது நேரம் கழித்து நன்றாக மசாஜ் செய்து, அதன் பிறகு வெதுவெதுப்பான நீரில் கைகளை கழுவ வேண்டும்.

    தயிர் மற்றும் மஞ்சள் பேக்:

    இதற்கு அரை கப் தயிர் அதனுடன் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து இவை இரண்டையும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இதனை கைகளில் தடவி 15 நிமிடம் அப்படியே வைக்கவும். அதன் பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இது போன்று ஏதாவது ஒரு முறையில் தொடர்ந்து செய்து வர உங்கள் கைகளில் உள்ள கருமை மறைந்து நிறம் மெருகேறும்.

    • கருமை நீக்குவதற்கு ஸ்க்ரப் ஒன்றே போதும்.
    • பப்பாளி உடலில் உள்ள நீரேற்றத்தை தக்கவைத்துக்கொள்ள உதவுகிறது.

    பொதுவாகவே வெயில் காலத்தில் வெளியே சென்றால் முகம், கை, கால் உடல் முழுவதும் கருமை நிறமாக மாறிவிடும். வெயில் காலத்தில் நாம் வெளியே சென்று வந்தாலே போதும் நிறம் கருமையாகிவிடும். கருமை நீக்குவதற்கு ஸ்க்ரப் ஒன்றே போதும். தினமும் வெளியே வெயிலில் சென்று திரும்பும் அனைவருக்கும் இது ஏற்றது. இது போன்ற சூழ்நிலையில் முகத்திற்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே அளவு கைகளுக்கும் கொடுக்க வேண்டும். கைகளை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

     பப்பாளி:

    உங்கள் முகத்தை தங்கம் போல் ஜொலிக்க வைக்க வேண்டுமா? இதற்கு பப்பாளி ஒன்றே போதும். முகத்தில் உள்ள அழுக்குகள், கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவை நீங்கும். முகம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பார்லர் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே அழகாக பராமரிக்க முடியும்.

    பப்பாளி உடலில் உள்ள நீரேற்றத்தை தக்கவைத்துக்கொள்ள உதவுகிறது. இதற்கு ஒரு டீஸ்பூன் பப்பாளியின் சதைப்பகுதி மற்றும் ஒரு டீஸ்பூன் பப்பாளி விதைகள் தேவைப்படும். முதலில் பப்பாளியை துண்டுகளாக நறுக்கி அதன் சதைப்பகுதியை மிக்சியில் அரைத்துக்கொள்ள வேண்டும். இப்போது அதனுடன் பப்பாளி விதைகளை சேர்த்து 5 நிமிடம் உங்கள் கைகளை மசாஜ் செய்யவும். இவ்வாறு செய்த பிறகு, சருமத்தை சுத்தம் செய்யுங்கள். இது சருமத்தை மிகவும் ஆழமாக சுத்தம் செய்ய உதவி செய்கிறது. இவ்வாறு செய்யும்போது இறந்த செல்களை புதுப்பிக்க உதவுகிறது.

     காபி ஸ்க்ரப்:

    பால், தேன், தயிர், எலுமிச்சை, மஞ்சள் அல்லது கற்றாழை போன்ற பொருட்களுடன் காபி பவுடரை ஃபேஸ் பேக் வடிவில் பயன்படுத்தலாம். காபி தூளில் உள்ள காஃபின் நிறமிகளை ஒளிரச் செய்து, உங்கள் சருமத்தை பிரகாசமாக்கும். பல்வேறு தோல் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு காபித் தூளை பயன்படுத்தலாம்.

    இந்த ஸ்க்ரப் செய்ய காபி தூள் அரை தேக்கரண்டி தேன் மற்றும் அரை தேக்கரண்டி பால் தேவைப்படும். இந்த பொருட்கள் அனைத்தையும் கலந்து ஒரு ஸ்க்ரப் தயார் செய்யுங்கள். இப்போது இந்த ஸ்க்ரப் மூலம் கைகளை சிறிது நேரம் மசாஜ் செய்து, அதன் பிறகு வெற்று நீரில் கைகளை கழுவவும்.

     தயிர் மற்றும் மஞ்சள் பேக்:

    இதற்கு அரை கப் தயிர், அதனுடன் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் தேவை. இதை இரண்டையும் சேர்த்து நன்கு கலக்கவும். இதனை கைகளில் தடவி 15 நிமிடம் அப்படியே வைக்கவும். அதன் பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.

    தயிர், எலுமிச்சை மற்றும் சாதம்:

    முதலில் ஒரு டீஸ்பூன் தயிர், அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு டீஸ்பூன் அரிசி தூள் சேர்த்து ஸ்க்ரப் போல் செய்து கைகளில் தடவவும். நன்றாக காய்ந்தவுடன் ஸ்க்ரப் செய்து, மசாஜ் செய்யவும். அதன் பிறகு சுத்தமான தண்ணீரில் கழுவவும்.

    இதிலுள்ள எலுமிச்சை ப்ளீச்சிங் பண்புகளைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் அரிசி சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றுகிறது. இதனால் கைகள் பளிச்சென்று இருக்கும். நீங்கள் ஒவ்வொரு முறை வெளியில் சென்று வீடு திரும்பும் போதும் இது போன்று ஏதாவது ஒரு முறையில் தொடர்ந்து செய்து வர உங்கள் கைகளின் உள்ள கருமை மறைந்து நிறம் மெருகேறும்.

    • சரும பராமரிப்பில் முக்கியமானது பாதங்களுக்கான பராமரிப்பு.
    • மென்மையாக தேய்த்து மசாஜ் செய்யவும்.

    சரும பராமரிப்பில் முக்கியமானது பாதங்களுக்கான பராமரிப்பு. பாதங்களில் ஏற்படும் வறட்சி, வெடிப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகளால் பலரும் பாதிக்கப்படுகிறார்கள். பாதங்களில் படியும் அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை அவ்வப்போது நீக்குவதன் மூலம் அவற்றை சுகாதாரமாகவும், அழகாகவும் பராமரிக்கலாம். இதற்கு உதவும் ஸ்கிரப்களை இயற்கையான பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே தயாரிக்க முடியும். அதைப்பற்றிய சில குறிப்புகள்:

     எலுமிச்சை ஸ்கிரப்:

    2 டீஸ்பூன் சர்க்கரை, 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 5 துளிகள் எலுமிச்சை எண்ணெய் சேர்த்து கலக்கவும், இந்த ஸ்கிரப்பை பாதங்களில் பூசி 5 நிமிடங்கள் கழித்து வட்ட இயக்கத்தில் மென்மையாக தேய்த்து மசாஜ் செய்யவும். இந்த ஸ்கிரப் வறண்ட சருமத்தை மென்மையாக்கி பாதங்களுக்கு ஈரப்பதத்தை வழங்கும்.

     எப்சம் சால்ட் ஸ்கிரப்:

    2 டீஸ்பூன் எப்சம் உப்பு, 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், 4 துளிகள் பெப்பர்மிண்ட் எண்ணெய் சேர்த்து கலக்கவும். இதை பாதத்தில் பூசி மசாஜ் செய்யவும். 10 நிமிடங்கள் கழித்து பாதங்களை தண்ணீரில் கழுவவும். பின்பு பாதங்களில் மாய்ஸ்சரைசர் பூசவும். பெப்பர்மிண்ட் எண்ணெய் பாத வலியை நீக்கும். தேங்காய் எண்ணெய் பாதங்களை மென்மையாக்கி ஈரப்பதம் அளிக்கும். அனைத்து வகையான சருமத்துக்கும் இது ஏற்றது.

     ஆலிவ் எண்ணெய் ஸ்கிரப்:

    1 டீஸ்பூன் பழுப்பு சர்க்கரை, 1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய், 2 துளிகள் கெமோமில் அல்லது பெப்பர்மிண்ட் எண்ணெய், 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து, நன்றாகக் கலக்கவும். இந்த கலவையை பாதங்களில் பூசி 20 நிமிடங்களுக்கு அப்படியே வைக்கவும். பின்பு பாதங்களை கழுவி மாய்ஸ்சரைசர் பூசவும்.

     காபி ஸ்கிரப்:

    2 டீஸ்பூன் காபி தூள், 2 டீஸ்பூன் சர்க்கரை, 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து, கெட்டியான பசையாக தயார் செய்யவும். அதை பாதம் முழுவதும் பூசி 15 முதல் 20 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும். அதன் பிறகு பாதங்களை கழுவவும். இந்த ஸ்கிரப், பாதங்களில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கும்.

     ஓட்ஸ் ஸ்கிரப்:

    2 டீஸ்பூன் உப்பு, 2 டீஸ்பூன் ஓட்ஸ், 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா, 3 டீஸ்பூன் தண்ணீர் சேர்த்து, பசை போல தயாரிக்கவும். இதை பாதங்களில் பூசி 10 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும். பிறகு அதை சுத்தம் செய்து விட்டு மாய்ஸ்சரைசர் பூசவும். இந்த ஸ்கிரப், சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை முழுமையாக நீக்கும்.

    பால் ஸ்கிரப்:

    அகலமான டப்பில் 2 கப் பாலுடன் 1 கப் வெதுவெதுப்பான தண்ணீரை கலக்கவும். அதில் பாதங்கள் மூழ்குமாறு வைக்கவும். 15 நிமிடங்களுக்கு பின்னர் பாதங்களை தண்ணீரில் கழுவவும். பின்பு 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், 3 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதை பாதங்களில் பூசி மென்மையாக மசாஜ் செய்யவும். பின்னர் பாதங்களை தண்ணீரில் கழுவவும். பாலில் உள்ள லாக்டிக் அமிலம் இறந்த சரும செல்களை அகற்றும்.

    ×