என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "silambu"

    கலாரசிகனென்றால் காதல் கொண்டிருக்க வேண்டியது கலை மீதா? மாதவி மீதா?

    இளங்கோவடிகளால் இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்தில் இடம்பெற்ற கண்ணகி, கோவலன், மாதவி கதாபாத்திரங்கள் இன்றைய காலக்கட்டத்தில் இருந்திருந்தால் எப்படி இருக்கும்?. கதையமைப்புப்படி அவர்களை நியாயப்படுத்தி காட்டியிருப்பது சரிதானா என ஒரு சிறிய கலந்துரையலாடலை காணலாம்.

    கோவலனுக்கெல்லாம் கண்ணகிதான் கிடைப்பார்களோ?

    மனைவி இருக்கும்போது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் காதல்வயப்படுவது என்பது எவ்வளவு பெரிய துயர். அது கண்ணகி காலத்தில் இருந்தாலும் சரி, தற்போதைய 21ம் நூற்றாண்டாக இருந்தாலும் சரி. நாம் அன்பு கொண்டிருக்கும் ஒருவர், வேறு ஒருவர் மீது அன்பு கொண்டிருக்கிறார் என தெரியவந்தால் நம் மனநிலை எப்படி இருக்கும் என்பதை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. நாம் காதல் செய்யும் ஒருவர், நம்மை காதலித்தாக வேண்டும் என்ற அவசியம் இல்லை எனக் கூறலாம். ஆனால் அவர்கள் வேறு ஒருவர் மீது காதல் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிவது? இந்த உணர்வுதான் கண்ணகிக்கும் இருந்திருக்கும். 

    தான் உயிரினும் மேலாக காதல் கொண்டிருந்த தன் கணவன், நாடக மகள்மீது காதல் கொள்வதை கண்ணகி அறிகிறாள். அது 21ஆம் நூற்றாண்டு இல்லை என்பதால், கண்ணகியால் கோவலனிடம் கேள்வி எழுப்பியிருக்க முடியாது. ஆனால் அவளின் மனநிலை?. தன் காதலன் பிரிந்த நாள்முதல் கால்களில் சிலம்பு அணியவில்லை; காதுகளில் தோடு அணிவதில்லை; கண்களில் மை இடுவதில்லை; ஒளிபொருந்திய நெற்றியில் திலகமும் இடுவதில்லை; நீண்ட கருங்கூந்தல் எண்ணெயையும், பூவினையும் மறந்தது; அவள் கண்கள் உறக்கத்தை மறந்தன. வெறுமைத்தன்மை கண்ணகியை சூழ்ந்தது. யாருக்காக? வேறொரு ஒரு மங்கையிடம் காதல்கொண்ட ஒருவனுக்காக... அதாவது தனது கணவனுக்காக. மனது முழுவதும் பாரம். கணவன் வேறு பெண்ணிடம் காதல் கொண்டாலும், அவனை நினைத்தே இல்லறம் நடத்துகிறாள். அவனுடைய உறவினர்களையும் முகம் சுழிக்காமல் வரவேற்கிறாள். புகுந்த இடத்திலும், பிறந்த இடத்திலும் மனதில் இருக்கும் பாரத்தை வெளிக்காட்டாமல், யாருக்கென்றே தெரியாமல் ஒரு வாழ்க்கையை வாழ்கிறாள். தம் மருமகன் வேறு ஒரு பெண்ணுடன் உறவில் இருப்பதை கண்ணகியின் பெற்றோர் அறிகின்றனர். அறிந்து என் செய்வது?

    அவர்கள் அடிக்கடி வந்து தம்செல்வ மகளைக் கண்டுபோயினர். கணவன் வேறு பெண்ணிடம் சென்றாலும், அதை கேட்காமல், அந்த வருத்தத்தை வெளிக்காட்டாமல் இருந்ததால் அவள் கற்புக்கரசி என போற்றப்பட்டால். மாதவியிடம் மனக்கசப்பு எழ கண்ணகியிடம் வருகிறான் கோவலன். ஆனாலும் மாதவியிடம் வரும் சில கடிதங்களை எண்ணி வருந்துகிறான். கண்ணகி கற்புக்கரசியாக இருந்தாலும், மாதவியைத்தான் பிடிக்கும் என சொல்லாமல் சொல்கிறான். பேதை கண்ணகியும் கணவன் வேறு பெண்ணுடன் வாழ்ந்து வந்தாலும் ஏற்றுக்கொள்கிறாள். ஏனெனில், அது அவள் காதல் கொண்டவன் அல்லவா. மற்றொன்று அது 21ம் நூற்றாண்டு இல்லையே. கணவன் வேறு ஒருவரை வைத்திருந்தால் தூக்கி எறிய. ஆயினும் இப்போதும் அதேபோல பல கண்ணகிகள் வாழ்ந்து வந்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

    காதல் கொண்டிருக்க வேண்டியது கலை மீதா? மாதவி மீதா?

    நூலின் ஆசிரியர் இளங்கோவடிகள் உட்பட பலரும் மாதவி மீதான கோவலனின் காதலை ஆதரிக்கின்றனர். காரணம் கலாரசிகனான கோவலன், கலைகளின் அரசியான மாதவி மீது காதல் கொள்கிறானாம். மற்றொன்று திருமணத்தின்போது கண்ணகிக்கு வயது 12. அதாவது சிறுபிள்ளை. அவளுக்கு ஒன்றும் தெரியாது. கலாரசிகன் என்றால் கலையின் மீதுதானே காதல் கொண்டிருந்திருக்கவேண்டும். கலையை நிகழ்த்தும் பெண்ணின் மீதுதான் காதல் வருமோ?. கண்ணகி ஏதும் அறியாதவள் என விளக்கம் கொடுப்பவர்கள், அந்த ஏதும் தெரியாதவளை கோவலன் ஏன் மணந்தான்? என கூறமாட்டார்கள். அதற்கு கோவலனும் பதில்கூறமாட்டான். கலையால் ஈர்க்கப்பட்டு, காதல் வயப்பட்டிருந்தால், ஏன் அவள் பாடிய பாடலின் அர்த்தத்தை தவறாக கொண்டு மீண்டும் கண்ணகியிடம் வந்து வாசம் செய்யவேண்டும்?. 


    கணவனுக்காக சிலம்பை கையில் கொண்டு மன்னனிடம் முறையிடும் கண்ணகி

    கற்புக்காக போற்றப்பட்டாளா கண்ணகி?

    இங்கு கண்ணகியின் காதலும் போற்றப்படுகிறது. மாதவியின் காதலும் போற்றப்படுகிறது. ஏனெனில் கோவலன் பிரிந்துவந்த பிறகும் வேறு ஆண்களை எண்ணாமல், கோவலனை எண்ணியே வாழ்ந்து வந்தால் மாதவி. அப்போது இருவரின் காதலும் புனிதம் என்றால் கோவலனின் காதல்? கலைமீது காதல் கொண்டு சென்றிருந்தால், அவளது பாடலை தவறாக புரிந்துகொண்டிருந்தாலும், மாதவி யாரை விரும்பியிருந்தாலும், கோவலன் அவளை விரும்பியிருக்கவேண்டும், கண்ணிகியைப்போல. கோவலன் கங்கையை வைத்து பாடிய பாடலை தவறாக புரிந்துதான் மாதவி அதற்கேற்ற பாடலை பாடினாள். கோவலனின் பாடலில் மாதவி புரிந்துகொண்டது என்ன? அவள் வேறு ஒரு பெண்ணிடம் காதல் கொண்டானோ என்று பயம். அப்போது ஒரு பேதையே, அதாவது கண்ணகியை விட்டு, கோவலன் மாதவியிடம் செல்லும்போது? கண்ணகியின் வலி?. ஆனால், கேட்டால் நாம் மாதவியை குறை கூற இயலாது. ஏனெனில் அது அப்போதைய குலவழக்கம். அவளை குற்றம் சொல்ல இயலாது. கடைசியாக கண்ணகிக்கு வருவோம். கண்ணகி கற்புக்காகத்தான் போற்றப்பட்டாளா? இங்கு கற்பு என்பது என்ன? ஏன் இந்த உலகில் கோவலன் மட்டும்தான் அழகனா என்ன? கோவலன் மாதவியிடம் காதல்கொண்டவாறு, கண்ணகி யாரிடமாவது காதல்கொண்டு கலை என்று கூறியிருக்கலாமே?

    அவள் கற்பை காத்து நல்லவள் என்றால், கோவலனின் கற்பு எங்கு சென்றது? அந்தகாலத்தில் ஆண்களுக்கு கற்பு இல்லை. பெண்களுக்கு மட்டும்தான் கற்பு. ஆனால் இப்போது? கற்பு ஒருவரின் காதலை தீர்மானிக்காது. காதல் கொண்டவரிடத்தில் வைத்திருக்கும் நேசம்தான் அதனை தீர்மானிக்கும். தன் காதலன் வேறொரு பெண்ணிடம் காதல் கொண்டானோ என்று அஞ்சி மாதவி பாடிய பாடல்தான் இருவரும் பிரியக் காரணம். இதுவும் ஒருவகை கோபம்தான். எங்கு தன்னைவிட்டு விலகிவிடுவானோ என அஞ்சி மாதவி வெளிப்படுத்தினால். கோவலன், மாதவி காதல்கொண்டாலோ என அவளை பிரிந்தான். ஆனால் தன் கணவன் தனக்கு எவ்வளவு பெரிய துரோகத்தை இழைத்தும், அவன்மீது கடைசிவரை அன்பு வைத்திருந்தால் கண்ணகி. இங்கு போற்றப்பட்டது அவளின் காதல். கற்பு அல்ல. மேலே முதலில் குறிப்பிட்டுள்ளவாறு இக்காலத்திலும் கண்ணகிகள் வாழ்கிறார்கள். கோவலன்போல மாதவியிடம் செல்லத்தெரியாமல் அல்ல. அதீத அன்பினால். முடிவில் இங்கு காதல்தான் கற்பு என்பதை பலரும் புரிந்துகொள்ளவேண்டும். 

    • அஸ்வின் ஒற்றை கொம்பு மற்றும் தொடு முறை போட்டியில் கலந்து கொண்டு தேசிய அளவில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
    • தெற்கு ஆசியாவில் நடக்கும் சர்வதேச போட்டியில் கலந்து கொள்ளவும் தேர்வாகியுள்ளார்.

    சர்வதேச சிலம்பு பெடரேஷன் ஆப் இந்தியா குழுமம் 3-வது ஏசியன் சாம்பியன் ஷிப் -2025 சிலம்பு போட்டியில் ஓசூரில் நடத்தியது.

    இதில் மணலி மாத்தூர் எவர்வின் வித்யாஷ்ரம் பள்ளியில் படிக்கும் சென்னையை சேர்ந்த 8 வயது மாணவன் எம்.அஸ்வின் ஒற்றை கொம்பு மற்றும் தொடு முறை போட்டியில் கலந்து கொண்டு தேசிய அளவில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

    மேலும் தெற்கு ஆசியாவில் நடக்கும் சர்வதேச போட்டியில் கலந்து கொள்ளவும் தேர்வாகியுள்ளார். தமிழர்களின் பாரம்பரிய சிலம்பு விளையாட்டு போட்டியில் தேசிய அளவில் வெற்றி பெற்றுள்ள மாணவன் அஸ்வினை சிலம்ப பயிற்சியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    புதிய ரெயில்வே கால அட்டவணைப்படி சில ரெயில்களின் வேகம் கூட்டப்பட்டு இருக்கிறது. அதன்படி பயண நேரத்துக்கு முன்பாகவே இந்த ரெயில்கள் இலக்கை சென்றடைந்து விடும்.
    சென்னை:

    புதிய ரெயில்வே கால அட்டவணைப்படி சில ரெயில்களின் வேகம் கூட்டப்பட்டு இருக்கிறது. அதன்படி பயண நேரத்துக்கு முன்பாகவே இந்த ரெயில்கள் இலக்கை சென்றடைந்து விடும்.

    அந்தவகையில் நாகர்கோவில்-மும்பை சி.எஸ்.எம்.டி. வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16352) மற்றும் தாம்பரம்-நெல்லை அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் (16191) ரெயில்கள் பயண நேரத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே சென்றுவிடும்.

    மும்பை சி.எஸ்.எம்.டி.- நாகர்கோவில் வாராந்திர எக்ஸ் பிரஸ் (16351) 45 நிமிடங்களும், நாகர்கோவில்-மும்பை சி.எஸ்.எம்.டி. வாரம் 4 முறை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் (16340) 30 நிமிடங்களும், நிஜாமுதீன்-கன்னியாகுமரி வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் (12642) 25 நிமிடங்களும்,

    சென்னை எழும்பூர்-நாகர்கோவில் வாராந்திர எக்ஸ்பிரஸ் (12667), நாகர்கோவில்-காச்சிக்குடா வாராந்திர எக்ஸ்பிரஸ் (16354), கோவை-சென்னை சென்டிரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் (12244) ஆகியவை 15 நிமிடங்களும்,

    கன்னியாகுமரி-அவுரா வாராந்திர எக்ஸ்பிரஸ் (12666), சென்னை சென்டிரல்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் (22639), சென்னை எழும்பூர்-மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் (12637), மும்பை சி.எஸ்.எம்.டி.-சென்னை சென்டிரல் எக்ஸ்பிரஸ் (11041), கொல்லம்-விசாகப்பட்டினம் வாராந்திர எக்ஸ்பிரஸ் (18568) ஆகியவை 10 நிமிடங்களும்,

    மதுரை-சென்னை எழும்பூர் பாண்டியன் எக்ஸ்பிரஸ் (12638), சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டை நோக்கி புறப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் (16182), திருச்செந்தூர் செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் (16105), கோவை செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் (12631) மற்றும் நெல்லை எக்ஸ்பிரஸ் (12243) ஆகியவை 5 நிமிடங்களும் முன்னதாகவே செல்லும்.

    இந்த நடவடிக்கை நாளை (புதன்கிழமை) அமலுக்கு வருகிறது. 
    ×