search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "allergy"

    • ஒருவகை வைரஸ் கிருமிகளினால் தான் பெரும்பாலும் ஏற்படுகிறது.
    • காற்றுவழியாகவும் வைரஸ் கிருமிகள் நம் உடலுக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தும்.

    குளிர் காலத்தில் சளி பிரச்சனையை எதிர்கொள்வது அனைவருக்கும் ஏற்படக்கூடியது. ஆனால் வெயில் காலத்திலும் சளி பிடிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?. கோடை காலத்தில் அதிக அளவில் ஏசியை பயன்படுத்துவது, குளிர் பானம் மற்றும் ஐஸ்கிரீம் சாப்பிடுவது, வைரஸ் தொற்று போன்ற காரணங்களால் சளி பிடிக்கிறது. கோடை காலத்தில் ஏற்படும் சளி தொந்தரவு குளிர் காலத்தில் ஏற்படுவது போலவே தான் இருக்கும் மற்றும் தொற்று ஏற்பட்ட 5-7 நாட்களுக்குப் பிறகு படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

    சளி, ஒவ்வாமை, தும்மல், மூக்கு ஒழுகுதல், தொண்டை அரிப்பு, இருமல், வியர்வை மற்றும் காய்ச்சல் போன்றவை கோடை கால ஜலதோஷத்தின் போது ஏற்படும் பல்வேறு அறிகுறிகளாகும்.

    குளிர்காலத்தைப் போலல்லாமல் கோடைக்காலத்தில் மக்கள் அதிகமாக வெளியில் இருப்பதாலும், வறண்ட காற்று வைரசுக்கு சரியான இனப்பெருக்க தளத்தை வழங்குவதாலும் கோடைக்காலத்தில் ஜலதோஷ பிரச்சனைகள் ஏற்படலாம்.

    வெயில் காலங்களில் ஏற்படும் ஜலதோஷம், தும்மல், இருமல், சளி போன்றவை பருவகாலங்களின் தட்பவெப்ப மாற்றங்களினால் மட்டும் அதிகம் ஏற்படுவதில்லை. ஒருவகை வைரஸ் கிருமிகளினால் தான் பெரும்பாலும் ஏற்படுகிறது.

    வெயிலோ, மழையோ நீங்கள் தினமும் அதிகம் அலைய வேண்டி இருப்பதால் உடலில் இருந்து வியர்வை கூடுதலாக வெளியேற வாய்ப்பு அதிகம். இதனால் உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்துவிடும். அப்போது தண்ணீர் தாகம் எடுக்கும் போது குளிர்ச்சியான பானங்களைக் குடித்துவிடுவோம். இது தான் வைரஸ் கிருமி உடலுக்குள் புகுந்து ஜலதோஷம், தும்மல், இருமல், சளியை உண்டாக்கிவிடுகிறது.

    இதுபோக, காற்றுவழியாகவும் வைரஸ் கிருமிகள் நம் உடலுக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தும். வெயில் காலத்தில் ஜலதோஷத்தை ஏற்படுத்தி சளியை உண்டாக்கும் வைரஸ் கிருமிகள் வேறு குளிர்காலத்தில் ஜலதோஷத்தை ஏற்படுத்தும் வைரஸ் கிருமிகள் வேறு.

    வெயிலில் அதிகம் அலைபவர்கள் காய்ச்சி வடிகட்டிய குடிநீரை கையோடு எடுத்துச் செல்லுங்கள். முடிந்தவரை வெளியில் தண்ணீர் குடிக்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள். மற்ற நாட்களை விட வெயில் காலங்களில் அதிகமாக தண்ணீர் குடியுங்கள். வெயிலில் அதிகம் அலையாதீர்கள், ஜலதோஷம், தும்மல், இருமல் உள்ளவர்கள் அருகில் நிற்காதள். நீங்கள் அணிந்து செல்லும் உடைகளை வீட்டுக்கு வந்தவுடன் துவைக்கப் போட்டுவிட்டு நன்றாக குளித்து விடுங்கள்.

    தேவையான அளவு நன்றாக ஓய்வு எடுங்கள். வெளியில் சுற்றும்போது கைகளால் முகத்தைத் தொடாதீர்கள், துடைக்காதீர்கள். கிருமிகள் கையில் இருந்து முகத்துக்கு மிகச் சுலபமாக போய்விடும். உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துங்கள். நீர்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். சளி அதிகமாக வெளிவர வில்லையென்றால் நன்றாக தினமும் ஆவி பிடியுங்கள். ஃபிரிட்ஜில் உள்ள உணவுப்பொருட்களை அதிகம் உபயோகிக்காதீர்கள்.

    • தற்போது பலபெண்கள் ஒப்பனையில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
    • அழகாகத்தெரிவது பெண்களின் தன்னம்பிக்கையை கூட்டும்.

    இன்று நடிகைகளுக்கு இணையாக பல பெண்களும் ஒப்பனையில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். தங்கள் அழகை மெருகேற்றுவதில் தணியாத விருப்பம் கொண்டுள்ளனர். குடும்ப நிகழ்வானாலும் சரி, பொது நிகழ்வானாலும் சரி, தேவதை போல தோன்ற வேண்டும் என்று எண்ணுகின்றனர். தாம் அழகாக காட்சியளிக்கிறோம் என்ற உணர்வு, பெண்களின் தன்னம்பிக்கையை கூட்டும். எனவே ஒப்பனை நாட்டத்தில் தவறில்லை.

     ஆனால் பெண்கள் சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, கண்களுக்கு பயன்படுத்தக்கூடிய திரவங்கள். சஸ்பென்சன்ஸ், பைன் பவுடர், கிளிட்டர் போன்ற கண் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதில் எச்சரிக்கை தேவை. இவற்றை தவறான முறையில் பயன்படுத்தினால் கண்ணுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும். உதாரணத்துக்கு, ஐ லைனர், காஜல் போன்றவற்றை தவறாக பயன்படுத்துகையில் கண் இமை சுரப்பிகளில் பிரச்சனை ஏற்படலாம்.

     கண் இமை அழற்சிக்கும் வழிவகுக்கக்கூடும். மஸ்காரா, ஐ ஷேடோ போன்றவற்றை பயன்படுத்தும் போது விழி வெண்படல சிராய்ப்பு, விழிப்பாவை, கண் நிறமி பாதிப்பு போன்றவை நேரலாம். கண் தொற்று நோய்கள் உண்டாகக்கூடும். 'ஐ லாஷ்' எனப்படும் செயற்கை கண்ணிமை முடிகள், வேதிப் பசைகளை பயன்படுத்தி இமையுடன் இணைக்கப்படுவதால் சருமத்துக்கு எரிச்சலை தரக்கூடும். ஒவ்வாமை போன்ற பிரச்சினைகளையும் உருவாக்கக் கூடும்.

     தற்போது சில பெண்கள் 'கான்டாக்ட் லென்சு'களையும் அழகுக்காக பயன்படுத்தி வருகின்றனர். இது தூய்மையாக இல்லாவிட்டால், கண் தொற்று போன்ற தீவிர பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, குறிப்பிட்ட கால இடைவெளியில் 'கான்டாக்ட் லென்சை மாற்றி பயன்படுத்த வேண்டும். தினமும் அதற்கான கரைசலை மாற்றி சுத்தம் செய்ய வேண்டும். கான்டாக்ட் லென்சுடன் தூங்கக்கூடாது. ஒப்பனையை கலைக்கும் முன் லென்சை அகற்றிவிட வேண்டும். இந்த விஷயங்களை எல்லாம் எப்போதும் மனதில் இருத்திக்கொள்ளுங்கள்.

    • சைனஸ் என்பது மூக்கின் பின்புறத்தில் இருக்கும் ஒரு சுரப்பியாகும்.
    • அலர்ஜி பிரச்சினை உண்டானால் பல தொந்தரவுகளை ஏற்படுத்தும்.

    சைனஸ் என்பது நம் மூக்கின் பின்புறத்தில் இருக்கும் ஒரு சுரப்பியாகும். இதில் அலர்ஜி பிரச்சினை உண்டானால் பல தொந்தரவுகளை ஏற்படுத்தும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும் நோயாக சைனஸ் இருக்கிறது. இது பெரும்பாலும் காற்று மாசுபாடு காரணமாக ஏற்படும் ஒன்றாகும்.

     மேலும் அதிகப்படியான குளிர்பானங்கள், குளிர்ந்த பொருட்களை சாப்பிடுவதால் உண்டாகிறது. முகத்தில் வலி, அதிகப்படியான சளி, சுவாசப் பிரச்சினை போன்றவை சைனஸ் பாதிப்பின் அறிகுறிகள்.

    நீங்களும் சைனஸ் பிரச்சினையால் அவதிப்படும் நபராக இருந்தால், எளிதான வீட்டு வைத்திய முறையிலேயே அதை சரி செய்ய முடியும். அதற்கு உங்களுக்கு வேண்டியதெல்லாம் ஆடாதோடை, அதிமதுரம், திப்பிலி. இந்த மூன்றையும் பயன்படுத்தி கசாயம் செய்து சாப்பிட்டால் விரைவில் சைனஸ் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.

    செய்முறை:

    முதலில் ஆடாதோடை, அதிமதுரம், திப்பிலி ஆகிய மூன்றையும் சம அளவில் எடுத்து, நன்கு காய வைத்து, பொடியாக்கி ஒரு டப்பாவில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் ஒரு கிளாஸ் அளவுக்கு தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும். அடுத்ததாக அரைத்து வைத்துள்ள பொடியை ஒரு ஸ்பூன் அளவுக்கு போட்டு நன்றாக கொதிக்க விடுங்கள்.

    பின்னர் அடுப்பை அனைத்துவிட்டு வேறு ஒரு கிளாசில் வடிகட்டினால், சைனஸ் பாதிப்பை குணமாக்கும் அற்புத பானம் தயார்.

     இந்த கசாயத்தை ஒரு வாரத்திற்கு தொடர்ந்து குடிக்க வேண்டும். நிச்சயமாக சைனஸ் பாதிப்பில் இருந்து விடுதலை கிடைக்கும்.

    அதேநேரம் மூலிகைப் பொடியை அதிகமாக கலந்து கஷாயம் தயாரிக்க வேண்டாம். ஒரு ஸ்பூன் மூலிகைப் பொடி பயன்படுத்துவது நல்லது. அதிகமாகக் குடித்தால் வேறு ஏதேனும் பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது என்பதால், இந்த மருத்துவ முறையைப் பின்பற்றுவதற்கு முன் தகுந்த மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.

    • வீட்டில் சிலருக்கு சுவாசப் பிரச்சினை ஏற்படுகிறது.
    • தீங்கு விளைவிக்கக்கூடிய ரசாயனப் பொருட்கள் அடங்கியதாகும்.

    கொசுவத்திச் சுருள் ஏற்றினால் வீட்டில் சிலருக்கு சுவாசப் பிரச்சினை ஏற்படுகிறது. கொசுவத்திச் சுருள் எரியும் போது வரும் புகையானது, உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய ரசாயனப் பொருட்கள் அடங்கியதாகும். மூச்சுத் திணறல், மற்றும் சுவாசக் கோளாறு முதலியவைகளை இந்த புகை உண்டாக்கக்கூடியது.

    தினமும் கொசுவத்திச் சுருள் கொளுத்தி வைத்துக் கொண்டு தூங்கும் போது, அந்த புகையை சுவாசிக்க நேரிடும். இது பல நாட்கள் தொடரும் போது நுரையீரல் அடைப்பு நோயை ஏற்படுத்தி சுவாச மண்டலத்தையே பாதிக்கச் செய்யலாம். அத்துடன் சரும எரிச்சல், கண் எரிச்சல், அலர்ஜி, ஆஸ்துமா, மூச்சுத்திணறல், நரம்பு பாதிப்பு, மூளை பாதிப்பு, சில சமயங்களில் புற்றுநோயைக் கூட உண்டாக்கும் ஆபத்து உள்ளது.

    சிகரெட் புகையின் பாதிப்பு எப்படியோ அதே போன்றது தான் கொசுவத்திச்சுருள் புகையின் பாதிப்பும். நீங்கள் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்குக்கூட (குறிப்பாக பூனை) கொசுவத்திச் சுருளின் புகை ஒத்துக்கொள்ளாது.

     கொசுவத்திச் சுருள் புகை மட்டுமல்ல திரவ வடிவிலான கொசு விரட்டி, களிம்பு, தெளிப்பான், ஆவி பிடிக்கும் கருவி இவைகளும் கூட பாதுகாப்பானதல்ல.

    கதவு - ஜன்னல்களெல்லாம் மூடப்பட்ட அறையில் நீங்கள் கொசுவத்திச் சுருளை கொளுத்தி வைத்துக் கொள்ளும்போது, அதில் இருந்து வரும் புகையைத் தான் படுக்கப் போனதில் இருந்து மறுநாள் காலை வரை சுவாசிக்க வேண்டும். காற்றையும், உடலையும் மாசுபடுத்தும் ரசாயனப் பொருட்களை நாம் அதிக நாட்கள், அதிக நேரங்கள் சுவாசிக்க சுவாசிக்க அது நுரையீரல் கோளாறை உண்டு பண்ணிவிடும்.

    கொசுத்தொல்லையில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள தரமான கொசுவலைகளை உபயோகிக்கலாம்.

     பூண்டு எண்ணெய்யை அறையில் தெளித்தால் கொசு வராது. எலுமிச்சைச் சாறு, துளசி எண்ணெய், வேப்பெண்ணெய், யூகலிப்டஸ் எண்ணெய் போன்றவைகளையும் தூங்கும் அறைகளில் பயன்படுத்தலாம். வீடுகளில் சமையலுக்கு தினமும் பயன்படுத்தும் பூண்டு உரித்த தோலை சேகரித்து வைத்து அதை அறைகளில் எரித்தால் வரும் புகை  கொசுவை விரட்ட பயன்படும். இம்மாதிரி காய்ந்த வேப்பிலை, காய்ந்த துளசி இலை, காய்ந்த யூகலிப்டஸ் இலைகளையும் எரித்து புகை உண்டு பண்ணி பயன்படுத்தலாம். இவைகள் பாதுகாப்பானதும்கூட.

    • சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படக்கூடிய உணர்வாகும்.
    • ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது.

    நீர் கடுப்பு என்பது சிறுநீர் கழிக்கும் போது வலி, அசவுகரியம், எரிச்சல் ஏற்படக்கூடிய ஒரு உணர்வாகும். இது ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது. சிறுநீர் கடுப்புக்கு முக்கிய காரணமாக கீழ்கண்டவை கருதப்படுகிறது.

    சிறுநீர் பாதை, சிறுநீர்ப்பை, சிறுநீர் குழாய், புரோஸ்டேட் சுரப்பி போன்றவற்றில் தொற்று, இன்டர்ஸ்டீடியல் சிஸ்டைடிட்ஸ், சிறுநீரக, சிறு நீர்ப்பை கற்கள், சில மருந்துகளின் பக்க விளைவு, புற்றுநோய்க்கு அளிக்கப்படும் கீமோ தெரபி சிகிச்சை, சிறுநீர்ப்பை புற்றுநோய், சோப்பு மற்றும் லோஷனில் உள்ள ரசாயனங்களால் ஏற்படும் ஒவ்வாமை. இதற்கு தீர்வாக தினசரி குறைந்தபட்சம் 3 அல்லது 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

    நோய் எதிர்ப்பு திறனை அதிகப்படுத்தும் இஞ்சி, ஏலக்காய் மற்றும் வைட்டமின் சி அதிகமுள்ள ஆரஞ்சு, பச்சை பூ கோஸ் ஆகியவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதிக காரமான உணவு, அமிலம் அதிகமுள்ள உணவு, காபி, செயற்கை குளிர்பானங்கள், மதுபானங்களை தவிர்க்க வேண்டும்.

    சிறுநீர் பாதை தொற்றுக்கு பாக்டீரியா ஒரு காரணமாக இருந்தால் மருத்துவர் உங்களுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை பரிந்துரைக்கலாம். சிறுநீரக கற்கள் காரணமாக நீர்கடுப்பு இருந்தால், கற்களின் அளவை பொறுத்து சிகிச்சை மாறுபடும். ஆகையால் உங்களுக்கு நீர் கடுப்பு பிரச்சினை ஏற்படும் போது மருத்துவரை கலந்து ஆலோசித்து உரிய பரிசோதனைகளை செய்து மருத்துவம் செய்து கொள்ள வேண்டும்.

    • இருமலும், சளியும் ஜலதோஷத்தின் ஆரம்பகட்ட அறிகுறிகளே.
    • நுரையீரலில் உள்ள காற்றுப்பைகள் பாதிப்படையலாம்.

    பொதுவாக அடிக்கடி ஏற்படும் தும்மலும், இருமலும், சளியும், ஒவ்வாமை மற்றும் ஜலதோஷத்தின் ஆரம்பகட்ட அறிகுறிகளே.

    அலர்ஜியை உண்டாக்கக்கூடிய பொருட்கள் மற்றும் சில வைரஸ் கிருமிகள், உங்களுடைய மூக்கின் உள்பகுதியிலோ அல்லது தொண்டையின் உள்பகுதியிலோ வந்து உட்கார்ந்து கொண்டு கொடுக்கும் தாங்கமுடியாத குடைச்சலினால் ஏற்படுவதே தும்மல், இருமல் மற்றும் சளி ஆகும்.

     தும்மல் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. முதற்காரணம் அலர்ஜி. ஒத்துக்கொள்ளாத, பிடிக்காத வாசனைகள், செல்லப்பிராணிகளின் வளர்ப்பினால் வரும் ஒவ்வாமை, பிடிக்காத ரசாயனப் பொருட்களின் வாசனைகள், பிடிக்காத பொருட்களின் நெடிகள், சமையலறை நெடி, புகை, வாசனைத் திரவியங்களின் நெடிகள், காற்றில் மாசு ஏற்படுத்தக்கூடிய பொருட்கள், கண்ணுக்குத் தெரியாத தூசித்துகள்கள், தட்பவெப்ப நிலை, காற்றின் ஈரப்பதம் மாற்றம் போன்றவைகள் உடனடியாக தும்மலை ஏற்படுத்திவிடும்.

    அதிக வேகத்தில் தும்மினால் காது சவ்வு, மிகச்சிறிய ரத்தக் குழாய்கள் பாதிக்கும் ஆபத்து உள்ளது. நுரையீரலில் உள்ள காற்றுப்பைகள் பாதிப்படையலாம். வேகமாகத் தும்மும்போது மூக்குக்கும், வாய்க்கும் நேராக கர்சீப் அல்லது துண்டை வைத்துக் கொண்டு தும்முங்கள். ஏனெனில் தும்மல், சுமார் 27 அடி தூரம் வரை பரவக் கூடும்.

     அதிக தடவை தும்மினாலோ, தொண்டையில் பிரச்சினை இருந்தாலோ, காய்ச்சல் இருந்தாலோ, மூக்கில் நீர் தொடர்ச்சியாக வடிந்து கொண்டிருந்தாலோ, நீங்கள் உங்கள் குடும்ப டாக்டரைச் சந்தியுங்கள். நான்கைந்து தும்மலுக்கெல்லாம் சிகிச்சை தேவையில்லை. விட்டு விடுங்கள். தானாகவே சரியாகிவிடும்.

    அடிக்கடி கையைக் கழுவுங்கள். வீட்டில் இருப்பவர்களுடன் நெருக்கமாக சேர்ந்து இருக்காதீர்கள். அலர்ஜியை உண்டாக்கக் கூடிய பொருட்களை உபயோகப்படுத்தாதீர்கள். அதன் அருகிலும் செல்லாதீர்கள். முகக்கவசம் அணிந்துகொள்ளுங்கள். புகை, நெடி, தூசி, மாசு அதிகமுள்ள இடங்களைத் தவிருங்கள்.

    • நுரையீரல் சம்மந்தமான நோய்கள் பொதுவாக வரக்கூடியது ஆஸ்துமா
    • அலர்ஜி குளிர்காலம் மற்றும் மழைக்காலங்களில் அதிகமாக உள்ளது.

    இன்று அதிக அளவில் நுரையீரல் பாதிப்புக்கு மக்கள் ஆளாகி வருகின்றனர். நுரையீரல் தொற்றில் இருந்தும் புற்று நோயில் இருந்தும் எப்படி தற்காத்துக்கொள்வது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

    அறிகுறிகள்

    நுரையீரல் சம்மந்தமான நோய்கள் பொதுவாக வரக்கூடியது ஆஸ்துமா தான். நெஞ்சில் சளி கட்டி இருமலாக மாறும், இரவிலும் அதிகாலையிலும் இருமல் அதிகமாக இருக்கும். கட்டி கட்டியாக சளி வெளியேறுதல், மூச்சுத் திணறல், சுவாசிக்கும் போதுபூனை கத்துவது போன்ற சப்தம் கேட்பது போன்றன பொதுவாக இந்த நோயிற்கான அறிகுறிகள்.

    ஆஸ்துமா, அலர்ஜி எதனால் ஏற்படுகிறது?

    இவ்வகை அலர்ஜி குளிர்காலம் மற்றும் மழைக்காலங்களில் அதிகமாக உள்ளது. இந்த அலர்ஜி தூசியால், செல்லப்பிராணிகளின் ரோமங்களை சுவாசித்தாலோ அல்லது பூஞ்சை காளான்கள் அல்லது மகரந்த துகள்களை சுவாசித்தாலோ கூட இது போன்ற சளி, தும்மல், இருமல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது போன்ற மாசுபடுத்திகளால் நுரையீரலில் உள்ள ம்யூக்கஸ் சுரப்பிகள் வீங்கி அதிகப்படியான சளியை உண்டு பண்ணுகின்றன. மூச்சுக்குழாயின் சுருங்கும் தன்மை அதிகமாவதால் வீசிங் வருகிறது.

    இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு நடக்கும் போது மாடிப்படி ஏறும் போது வீசிங் அதிகமாகும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மூச்சு விடும்போது சப்தம் அதிகமாகிறது. இவற்றை ஆஸ்துமா அல்லது அலர்ஜி என்று சொல்வார்கள்.

    அலர்ஜி, ஆஸ்துமா வந்தால் எடுக்க வேண்டிய சிகிச்சை

    அலர்ஜி மற்றும் ஆஸ்துமா உள்ளவர்கள் அவர்களுக்கான மருந்து மாத்திரைகள் மற்றும் இன்ஹெல்லர்-ஐ தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். நம் மக்கள் பலருக்கு இன்ஹெல்லர் எடுப்பதில் இன்னும் குழப்பம் நிலவுகிறது. ஆனால், இன்ஹெல்லர் ஸ்டீராய்டு இருக்கும் என அச்சப்பட தேவையில்லை. மைக்ரோ மில்லிகிராம் அளவே அது இருக்கும் என்பதோடு இது மாத்திரை போல உணவுக் குழாயில் இருந்து ரத்தத்தில் கலக்கும் தன்மை கிடையாது என்பதால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பில்லை. இன்ஹேல்லரை பயன்படுத்திய பிறகு வாய்க்கொப்பளிப்பது அவசியம்.

    அதேபோல ஆஸ்துமா வந்தால் மருந்து இன்ஹேல்லர் எடுப்பது மட்டுமல்ல, வீட்டில் தூசி சேராமல் சுத்தமாக வைத்துக்கொள்வது, செல்லப்பிராணிகள், பறவைகளை தவிர்ப்பது, மழை அல்லது குளிர்காலங்களில் விடியற்காலை நடைப்பயிற்சி செய்வதை தவிர்ப்பது போன்றவற்றால் அலர்ஜி பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம். நுரையீரல் பிரச்சினை உள்ளவர்கள் நுரையீரல் செயல்பாடு சோதனை செய்வது போன்றவை இன்றியமையாதது.

    செல்லப்பிராணிகள் வளர்ப்பதால் நுரையீரலில் பாதிப்பு ஏற்படுமா?

    புறாக்களின் கழிவுகளை நீண்ட நாட்களாக சுவாசிப்பதால் நுரையீரல் பாதிக்க வாய்ப்புண்டு. அலர்ஜி உள்ளவர்களுக்கு அதிக பாதிப்பை இது ஏற்படுத்தும். நீண்ட நாட்களாக இந்த கழிவை சுவாசிப்பவர்களுக்கு Hypersensitivity Pneumonitis என்ற ஒரு வகை மிகைப்படுத்தப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி வரலாம். ஒன்று இரண்டு புறாக்களால் எந்த பிரச்சனையும் வராது. இவ்வகையான அலர்ஜி தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் மிக அதிகம்.

    ஃப்ளூ காய்ச்சலின் அறிகுறிகள் என்னென்ன?

    தற்போது வரக்கூடிய ஃப்ளூ காய்ச்சல் ஆரம்பத்தில் ஓரிரு நாட்கள் தொண்டை வலியாக தொடங்கி, காய்ச்சல், தலை பாரம் வந்து பிறகு இருமலாக மாறும். இந்த வகை காய்ச்சலால் வரும் இருமலை கட்டுப்படுத்துவது சிரமமாக உள்ளது. இவ்வகை அறிகுறிகளை Post Viral Bronchitis என்று அழைப்போம். அதாவது வைரஸ் காய்ச்சலின் பின் விளைவுகள். அதோடு சைனஸிட்டிஸ், வீசிங்க் பிரச்சினை போன்ற அலர்ஜி இருக்கும் நபர்களுக்கு இந்த அறிகுறிகளின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

    சாதாரணமாக ஒருவருக்கு சளி அல்லது காய்ச்சல் வந்தால் இரண்டு மூன்று நாட்களில் குணமாகிவிடும் ஆனால் இந்த வகை ஃப்ளூ காய்ச்சல் குணமாக இரண்டு மூன்று வாரங்கள் ஆகிறது என்பது குறிப்பிடத்தகுந்தது.

    வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?

    இது போன்ற வைரல் இன்ஃபெக்ஷன் வைரஸால் ஏற்படும் தொற்று. இவை பொதுவாக காற்றுவழியாக மற்றவர்களுக்கு பரவும். குறிப்பாக பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இது எளிதில் பரவ வாய்ப்புள்ளது. அந்த குழந்தைகள் மூலம் பெற்றோருக்கும் வீட்டில் உள்ள தாத்தா பாட்டிக்கும் எளிதில் பரவ வாய்ப்புள்ளது. குறிப்பாக வயது முதிர்ந்தவர்களுக்கு இவ்வகை தொற்று சுலபமாக வர வாய்ப்பு உள்ளது அதனை தொடர்ந்து நிமோனியா வர அதிக வாய்ப்பு உள்ளது. இவ்வயதினர்களுக்கு ஆண்டு தோறும் ஃப்ளூ வைரசிற்கான Influenza shot என்ற தடுப்பூசி போடுவதால் ஃப்ளூ காய்ச்சலை தவிர்க்கலாம்.

    நுரையீரல் புற்றுநோய்க்கு புகைபிடிப்பது மட்டுமே காரணமா?

    நிச்சயமாக இல்லை, புகைபிடிப்பது நுரையீரல் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கி்ல்லை என்றாலும், மரபணு சார்ந்த காரணங்கள், காற்று மாசுபாடு போன்ற மற்ற காரணங்களால் கூட நுரையீரல் புற்றுநோய் வரலாம். பொதுவாக சரியான நேரத்திற்கு உணவு உண்பது, துரித உணவுகளை தவிர்த்து சத்தாண உணவுகளை உண்பது, நல்ல தூக்கம், தொடர்ச்சியான உடற்பயிற்சி, புகைப் பிடிப்பது அல்லது மது அருந்துவதை தவிர்த்தல் போன்றவற்றை சரியாக பின்பற்றினால் பெரும்பாலும் புற்றுநோய் வருவதில் இருந்து தப்பலாம்.

    நுரையீரல் புற்றுநோய்க்கான அறிகுறிகள்

    நுரையீரல் புற்றுநோயை பொறுத்தவரை சிறிய அளவிலான கேன்சர் கட்டி ஒருவரின் உடலில் பெரிய அளவில் எந்த ஒரு பாதிப்போ அறிகுறிகளோ ஏற்படுத்தாது. இவை பெரிய அளவில் வந்த பிறகே அவர்களுக்கு அறிகுறிகள் வெளிப்படும். நெஞ்சு வலி, மூச்சுத் திணறல், ரத்த வாந்தி, இருமல் போன்ற அறிகுறிகள் வெளிப்படும் போது கேன்சரின் மூன்றாவது அல்லது நான்காவது நிலையிலே தான் சிகிச்சைக்கு வருகிறார்கள்.

    இதனை தவிர்க்க வருடம் தோறும் முழு உடல் பரிசோதனை செய்வது அவசியம். இவ்வாறு செய்யும்போது ஆரம்ப நிலையிலேயே நோயினை கண்டுபிடிக்க வாய்ப்பு உள்ளது, அதனால் ஆரம்ப நிலையிலையே கண்டறிந்து குணப்படுத்திவிடலாம். அதிக பாதிப்பிற்கு உள்ளான பிறகு தெரிய வந்தால் அதனை குணமாக்குவது கடினம்.

    நுரையீரல் வீக்கம் என்றால் என்ன?

    நுரையீரல் வீக்கம் என்பது COPD (Chronic Pulmonary Obstructive Disease) நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் என்று சொல்வார்கள். புகைபிடிப்பது, காற்று மாசுபாடு போன்ற காரணங்களால் மூச்சுக் குழாய் சுருங்கி நுரையீரல் வீங்குவது. இவை பொதுவாக சுற்றுச்சூழல் காரணமாக வரக்கூடியவை. பெரும்பாலும் ஆண்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படுகிறது.

    முற்காலத்தில் விறகு மற்றும் வரட்டிகளை உபயோகித்து அடுப்பு எரித்ததால் பெண்களுக்கும் பாதிப்பு அதிகம் இருந்து வந்தது, இடை பட்ட காலத்தில் சமையல் எரிவாயுவான எல்.பி.ஜி. வந்த பிறகு பெண்களிடையே இந்த COPD குறைவானது. தற்போது passivesmoking (அதாவது அருகில் உள்ளவர்கள் புகைபிடிப்பதை சுவாசிப்பது), அல்லது புகைபிடிப்பது போன்ற காரணங்களால், கொசுவர்த்தி சுருள் அல்லது சுற்றுச்சூழல் காரணிகளான காற்று மாசுபாடு போன்றவற்றால் பெண்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கும் இன்ஹெல்லர் தொடர்ந்து உபயோகப்படுத்த வேண்டும்.

    பொதுவாக மூச்சு வாங்குதல், மூச்சுத் திணறல் போன்றவை ஏற்பட்டால் நுரையீரல் பிரச்சினை என்று சொல்லப்படுகிறது. இவை எதனால் ஏற்படுகிறது, இந்த அறிகுறிகள் ஏற்படலாம் மருத்துவரை அணுகுவது எவ்வளவு முக்கியம்?

    பொதுவாக தூசி, மற்ற சில அலர்ஜிகளால் முதலில் தும்மல், மூக்கடைப்பு ஏற்படுத்தும் அதை சரியாக குணப்படுத்தா விட்டால் அலர்ஜி மற்றும் சைனசிட்டிஸ் ஏற்பட்டு நுரையீரலில் சளி உண்டாகலாம், இதனை தொடர்ந்து இருமல் ஏற்படும், அடிக்கடி இருமல் சளியை வெளியேற்றிக் கொண்டே இருப்பார்கள்.

    பொதுவாக விடியற்காலை நேரங்களில் இருமல், தும்மல், மூக்கடைப்பு ஏற்படும் இவையெல்லாமே அலர்ஜிக்கான அறிகுறிகள், இதனை தொடர்ந்து வீசிங் ஏற்படும். இதற்கு மருத்துவரை அணுகி அலர்ஜி மாத்திரைகள் எடுக்கலாம், அடிக்கடி வரும்பட்சத்தில் இன்ஹெல்லர் சிறந்த தீர்வு.

    என்னென்ன உணவுகளை உட்கொள்ள வேண்டும்?

    ஏசியை அடிக்கடி பராமரித்து உபயோகபடுத்த வேண்டும், சீரற்ற தூக்கம், இவை பிரச்சினைகளை ஏற்படுத்தும். இவற்றை தவிர்க்க மூச்சுப் பயிற்சி தொடர்ச்சியாக செய்ய வேண்டும் உடற்பயிற்சி, ஏதாவது விளையாட்டு வீசிங், அலர்ஜிக்கான வாய்ப்புகளை குறைக்கும். சத்தான உணவை சரியான நேரத்திற்கு உட்கொள்வது, கீரை, காய்கறிகள், பழங்கள் எடுத்துக்கொள்வது நல்லது.

    முகக் கவசம் உபயோகப்படுத்துவது தேவையா?

    தற்போது ஃப்ளூ காய்ச்சல் அதிகம் பரவி வருவதால் நிச்சயமாக பொது இடங்களுக்கு செல்லும் போதும், பேருந்து ரயில் பயணங்கள் போன்றவற்றில் பயணிக்கும் போதும் முகக் கவசம் அணிவதுநல்லது.

    • மூக்கு தொண்டை பிரிவின் சிறப்பு நிபுணர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கு கருத்தரங்கம் நடந்தது.
    • புதுவை அரசு மருத்து வமனையின் மருத்துவர்கள் சிவசங்கர், சண்முகநாதன், ஷைலஜா ஆகியோ ர் உரையாற்றினார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு தலைமை மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை பிரிவு சார்பில் புதுவையில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரியின் காது, மூக்கு தொண்டை பிரிவின் சிறப்பு நிபுணர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கு கருத்தரங்கம் நடந்தது.

    இதில் சுவாச ஒவ்வாமைகள் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் அதன் நோயறிதல் பற்றிய கலந்தாய்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக வெங்கடேஸ்வரா கல்லூரியின் காது. மூக்கு.

    தொண்டை பிரிவு டாக்டர் பிரபு, ஜிப்மர் மருத்து வமனையின் துறை தலைவர் சிவராமன், பேராசிரியர் கலையரசி, மகாத்மா காந்தி கல்லூரியின் பேராசிரியர் விஜய சுந்தரம், ராஜீவ் காந்தி குழந்தைகள் மருத்துவமனையின் குழந்தைகள் சிறப்பு மருத்துவர் ரவி கண்ணன், கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியின் நெஞ்சக மருத்துவ துறை தலைவர் வெங்கடேஸ்வரபாபு, புதுவை அரசு மருத்து வமனையின் மருத்துவர்கள் சிவசங்கர், சண்முகநாதன், ஷைலஜா ஆகியோ ர் உரையாற்றினார்கள்.

    பலருக்கும் வருகிற ஒரு சரும அலர்ஜி Urticaria. இது தமிழில் காணாக்கடி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. கடித்தது என்னவென்று அறிய முடியாத ஒரு நச்சுக்கடி என்பதே இதற்கு அர்த்தம்.
    பலருக்கும் வருகிற ஒரு சரும ஒவ்வாமை இது. தமிழில் காணாக்கடி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. கடித்தது என்னவென்று அறிய முடியாத ஒரு நச்சுக்கடி என்பதே இதற்கு அர்த்தம்.

    தற்போதுள்ள வாழ்க்கை முறையில் நாம் சாப்பிடும் உணவில், நாம் சுவாசிக்கும் காற்றில், நம் சுற்றுப்புறச்சூழலில் ஏற்படும் மாசு காரணமாக இந்த காணாக்கடி இப்பொழுது நிறைய பேரை பாதிக்கிறது.

    உடல் முழுவதும் திடீரென்று பட்டை பட்டையாக சிவந்து தடித்து போகும். அரிப்பு அதிகமாகி, கொஞ்ச நேரத்தில் தானாகவே மறைந்துவிடும். இது தொண்டை, கண் இமை போன்ற இடங்களை பாதித்தால், உடல் முழுவதிலும் தடித்துக்கொண்டு, மூச்சு விடுவதிலும் சிரமம் இருக்கும். இப்படி இருக்குமானால், உடனே மருத்துவரின் உதவியை நாடுவது முக்கியம். சிலருக்கு இந்த அலர்ஜி ஏற்படும்போது வாந்தி, மயக்கம், உடல்வலி, தலைவலி, வயிற்று வலி போன்ற அறிகுறிகளும் சேர்ந்தே காணப்படலாம்.

    மிகச்சிலருக்கு இது எதனால் ஏற்படுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டாலும், பலருக்கு இது எதனால் ஏற்படுகிறது என்பதை கண்டுபிடிப்பதும் சிரமமாக இருக்கிறது.

    உண்ணும் உணவு, மாத்திரைகள், தொற்று நோய்கள், குடலில் கீரி பூச்சிகள் இருப்பது, நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள பொருட்கள், பூச்சிக்கடிகள், மருந்துகள், கண்களில் அல்லது காதுகளில் விடப்படும் சொட்டு மருந்துகள், தடுப்பூசிகள் போன்றவையும் முக்கியப்பங்கு வகிக்கின்றன.

    மீன், பால், வேர்க்கடலை, பீன்ஸ், கேரட், முருங்கைக்காய், இறைச்சி போன்றவையும், உணவுகளில் சேர்க்கப்படும் வண்ணங்களும், மணமூட்டிகளும், இதனை ஏற்படுத்தலாம். பற்களில் உள்ள சொத்தை, தொண்டை, காதுகளில் ஏற்படும் வலி, சீழ் உண்டாதல் போன்றவை இதை ஏற்படுத்தலாம். அது மட்டுமின்றி சுவாசக் குழாயிலும், சிறுநீர் பாதையில் மற்றும் பித்தப்பையில் உள்ள கிருமி தொற்றுகளாலும் கூட இது ஏற்படலாம்.

    குடலில் நாக்குப்பூச்சிகள் என்று அழைக்கப்படும் தொற்றுப் புழுக்கள் இருப்பதும் கூட ஒரு காரணம். பூக்களின் மகரந்தத் தூள்கள், விலங்குகளின் முடிகள் மற்றும் வீட்டில் உள்ள தூசுகளாலும் காணாக்கடி உண்டாகலாம்.

    கொசுக்கள், மூட்டைப்பூச்சிகள் கடித்தால் கூட ஒவ்வாமை ஏற்படலாம். தேனியோ குளவியோ கொட்டுவதால் வரலாம். தடுப்பூசிகள் போட்டால் சிலருக்கு அலர்ஜியினால் இதுபோன்று தடிப்புகள் ஏற்படலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர்.
    குழந்தைகளுக்கு அலர்ஜி வருவது தற்போது அதிகரித்து உள்ளது. உணவுப் பொருட்களால் ஏற்படும் அலர்ஜி, 90 சதவீதம் சுவை, நிறம், மணத்திற்காக சேர்க்கப்படும் பொருட்களாலேயே ஏற்படுகிறது.
    அலர்ஜி என்ற வார்த்தையை நான் சொன்னால், உடனடியாக, தோலில் தடிப்புத் தடிப்பாக வருவது தான், பொதுவாக நம் நினைவிற்கு வரும். வெறும், 5 -10 சதவீதம் மட்டுமே தோலில் தடிப்பாக தோன்றும். அடிக்கடி சளி பிடிப்பது, மூக்கடைப்பு, தும்மல், மூச்சுத் திணறல், ஆஸ்துமா, கண்கள் சிவப்பது, மாத்திரைகள், உணவால் ஏற்படுவது என்று அலர்ஜி பாதிப்புகளை நிறையப் பார்க்கிறோம். குழந்தைகளுக்கு அலர்ஜி வருவது தற்போது அதிகரித்து உள்ளது.

    தாய்ப்பாலில் இருந்து வேறு உணவிற்கு மாற துவங்கும், ஆறு மாதங்களில் இருந்து, உணவு அலர்ஜி வருகிறது. உணவுப் பொருட்களால் ஏற்படும் அலர்ஜி, 90 சதவீதம் சுவை, நிறம், மணத்திற்காக சேர்க்கப்படும் பொருட்களாலேயே ஏற்படுகிறது.

    எப்படி கண்டுபிடிப்பது?

    ஒரு குழந்தைக்கு, பால் அலர்ஜி என்றால், பால் குடித்த, 24 மணி நேரத்திற்குள் முகம், கை, கால் வீங்கி விடும். எத்தனை முறை பால் குடித்தாலும், குடித்த, 24 மணி நேரத்திற்குள் அலர்ஜிக்கான அறிகுறிகள் வர வேண்டும்.

    அப்போது தான், அந்த குறிப்பிட்ட உணவால் குழந்தைக்கு அலர்ஜி ஏற்படுகிறது என்று சொல்ல முடியும். பால் குடித்தவுடன், இன்று அலர்ஜிக்கான அறிகுறிகள் இருந்தது. ஆனால், அடுத்த நாள் வரவில்லை என்றால், அது பாலால் ஏற்பட்ட பிரச்னை இல்லை. வேறு காரணங்கள் இருக்கலாம். குறிப்பிட்ட உணவால் அலர்ஜி என்றால், எத்தனை முறை அந்தப் பொருளை சாப்பிட்டாலும், ஒவ்வொரு முறையும் அலர்ஜி வர வேண்டும்.

    பால், முட்டை, நட்ஸ் ஆகியவற்றால் குழந்தைகளுக்கு அலர்ஜி வருவது பொதுவான விஷயம். கோதுமை சாப்பிடுவதால், மிக அபூர்வமாக சில குழந்தைகளுக்கு அலர்ஜி வருகிறது. உணவால் ஏற்படும் அலர்ஜி, பல நேரங்களில் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.

    ஒரு சில ஆண்டுகளில் பால், முட்டை அலர்ஜி ஏற்படுத்துவது மாறி விடும். ஆனால், ‘நட்ஸ்’ சாப்பிடுவதை வாழ்க்கை முழுதும் தவிர்க்க வேண்டியிருக்கும்.
    குறிப்பிட்ட உணவால் குழந்தைக்கு பிரச்னை வருகிறது என்ற சந்தேகம் இருந்தால், அதை உறுதி செய்து கொள்ள, நவீன பரிசோதனை வசதிகள் உள்ளன. 20 நிமிடங்களிலேயே, எந்த உணவால் அலர்ஜி என்பதை கண்டுபிடித்து விட முடியும். அலர்ஜி ஏற்படுத்தும் உணவை தெரிந்து, தவிர்ப்பது பாதுகாப்பான வழி. உலகம் முழுவதிலும் இதைத் தான் பின்பற்றகின்றனர்.

    இது தவிர, துாசு மாசினால் ஏற்படும் அலர்ஜியும், குழந்தைகள் மத்தியில் பொதுவானதாக உள்ளது. மூக்கடைப்பு, தும்மல், மூச்சிரைப்பு போன்ற அறிகுறிகள் அடிக்கடி வருகிறது, அலர்ஜியால் ஏற்பட்ட பாதிப்பு என்று தெரியாமலேயே சிகிச்சை எடுப்பர். இது ஏதோ வெளிப்புறத்தில் காற்று மாசு அதிகம்; அதனால், வருகிறது என்று நினைக்கிறோம். ஆனால், வீட்டிற்குள்ளேயே இருக்கும் பிரச்னை இது.

    வீட்டில் பயன்படுத்தும் பொருட்களில், வளர்ப்பு பிராணிகளின் உரோமத்தினால், கரப்பான் பூச்சி யால் வரும் அலர்ஜி. இப்படி இருந்தால், மூக்கின் உட்பகுதியில் உள்ள மெல்லிய சவ்வில், எப்போதும், ரணம் இருந்து கொண்டே இருக்கும். ‘ஏசி’ அறைக்கு வந்தவுடன் அதிகமாக, தும்மல், மூக்கடைப்பு வரும்.

    வெளியில் செல்லும் நேரங்களில், துணியால் முகத்தில் கட்டிக் கொள்வது, வெளியில் இருக்கும் மாசிலிருந்து பாதுகாக்குமே தவிர, வீட்டில் நிரந்தரமாக உள்ள பிரச்னையில் இருந்து காக்க உதவாது. இதை பரிசோதித்துஅறியவும் வசதிகள் உள்ளன.

    உணவால் ஏற்படும் அலர்ஜி, பல நேரங்களில் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.இது தவிர, துாசு மாசினால் ஏற்படும் அலர்ஜியும், குழந்தைகள் மத்தியில் பொதுவானதாக உள்ளது.
    அடிக்கடி சளி பிடிப்பது, மூக்கடைப்பு, தும்மல், மூச்சுத் திணறல், ஆஸ்துமா, கண்கள் சிவப்பது, மாத்திரைகள், உணவால் ஏற்படுவது என்று அலர்ஜி பாதிப்புகளை நிறையப் பார்க்கிறோம். குழந்தைகளுக்கு அலர்ஜி வருவது தற்போது அதிகரித்து உள்ளது. தினமும், 20 குழந்தைகளாவது என்னிடம் வருகின்றனர்.

    தாய்ப்பாலில் இருந்து வேறு உணவிற்கு மாற துவங்கும், ஆறு மாதங்களில் இருந்து, உணவு அலர்ஜி வருகிறது. உணவுப் பொருட்களால் ஏற்படும் அலர்ஜி, 90 சதவீதம் சுவை, நிறம், மணத்திற்காக சேர்க்கப்படும் பொருட்களாலேயே ஏற்படுகிறது.

    ஒரு குழந்தைக்கு, பால் அலர்ஜி என்றால், பால் குடித்த, 24 மணி நேரத்திற்குள் முகம், கை, கால் வீங்கி விடும். எத்தனை முறை பால் குடித்தாலும், குடித்த, 24 மணி நேரத்திற்குள் அலர்ஜிக்கான அறிகுறிகள் வர வேண்டும்.

    அப்போது தான், அந்த குறிப்பிட்ட உணவால் குழந்தைக்கு அலர்ஜி ஏற்படுகிறது என்று சொல்ல முடியும். பால் குடித்தவுடன், இன்று அலர்ஜிக்கான அறிகுறிகள் இருந்தது. ஆனால், அடுத்த நாள் வரவில்லை என்றால், அது பாலால் ஏற்பட்ட பிரச்சனை இல்லை. வேறு காரணங்கள் இருக்கலாம்.

    குறிப்பிட்ட உணவால் அலர்ஜி என்றால், எத்தனை முறை அந்தப் பொருளை சாப்பிட்டாலும், ஒவ்வொரு முறையும் அலர்ஜி வர வேண்டும்.

    பால், முட்டை, நட்ஸ் ஆகியவற்றால் குழந்தைகளுக்கு அலர்ஜி வருவது பொதுவான விஷயம். கோதுமை சாப்பிடுவதால், மிக அபூர்வமாக சில குழந்தைகளுக்கு அலர்ஜி வருகிறது. உணவால் ஏற்படும் அலர்ஜி, பல நேரங்களில் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.

    குறிப்பிட்ட உணவால் குழந்தைக்கு பிரச்சனை வருகிறது என்ற சந்தேகம் இருந்தால், அதை உறுதி செய்து கொள்ள, நவீன பரிசோதனை வசதிகள் உள்ளன. 20 நிமிடங்களிலேயே, எந்த உணவால் அலர்ஜி என்பதை கண்டுபிடித்து விட முடியும். அலர்ஜி ஏற்படுத்தும் உணவை தெரிந்து, தவிர்ப்பது பாதுகாப்பான வழி. உலகம் முழுவதிலும் இதைத் தான் பின்பற்றகின்றனர்.

    இது தவிர, துாசு மாசினால் ஏற்படும் அலர்ஜியும், குழந்தைகள் மத்தியில் பொதுவானதாக உள்ளது. மூக்கடைப்பு, தும்மல், மூச்சிரைப்பு போன்ற அறிகுறிகள் அடிக்கடி வருகிறது, அலர்ஜியால் ஏற்பட்ட பாதிப்பு என்று தெரியாமலேயே சிகிச்சை எடுப்பர்.

    இது ஏதோ வெளிப்புறத்தில் காற்று மாசு அதிகம்; அதனால், வருகிறது என்று நினைக்கிறோம். ஆனால், வீட்டிற்குள்ளேயே இருக்கும் பிரச்சனை இது.
    வீட்டில் பயன்படுத்தும் பொருட்களில், வளர்ப்பு பிராணிகளின் உரோமத்தினால், கரப்பான் பூச்சியால் வரும் அலர்ஜி. இப்படி இருந்தால், மூக்கின் உட்பகுதியில் உள்ள மெல்லிய சவ்வில், எப்போதும், ரணம் இருந்து கொண்டே இருக்கும். ‘ஏசி’ அறைக்கு வந்தவுடன் அதிகமாக, தும்மல், மூக்கடைப்பு வரும்.

    வெளியில் செல்லும் நேரங்களில், துணியால் முகத்தில் கட்டிக் கொள்வது, வெளியில் இருக்கும் மாசிலிருந்து பாதுகாக்குமே தவிர, வீட்டில் நிரந்தரமாக உள்ள பிரச்சனையில் இருந்து காக்க உதவாது. இதை பரிசோதித்து அறியவும் வசதிகள் உள்ளன.
    எல்லாக் குழந்தைகளுக்கும் எல்லா உணவுகளும் ஒத்துப்போவதில்லை. சில உணவுகளால் அலர்ஜி ஏற்படுகிறது. இந்த அலர்ஜி பிரச்சனையை எப்படித் தவிர்க்கலாம் என்று பார்க்கலாம்.
    எல்லாக் குழந்தைகளுக்கும் எல்லா உணவுகளும் ஒத்துப்போவதில்லை. சில குழந்தைகளுக்கு சில உணவுகளால் அலர்ஜி ஏற்படுகிறது. இதை ‘ஒவ்வாமை’ என்று சொல்கின்றனர். இந்த ஒவ்வாமையால் பல உபாதைகள் ஏற்படுகின்றன. இந்த அலர்ஜி பிரச்சனையை எப்படித் தவிர்க்கலாம் என்று பார்க்கலாம்.

    பாலில் உள்ள ‘லாக்டோஸ்’ என்ற சத்து சில குழந்தைகளுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். பால் கொடுத்தால், அது குழந்தைக்கு செரிமானமாகாமல் வயிற்றுப்போக்கு ஏற்படும். பாலுக்குப் பதிலாக பால் பவுடர், பிற உணவுகளைத் தரலாம். ஆறு மாதத்துக்குப் பிறகு குழந்தைக்கு திட உணவு தர வேண்டும். சில குழந்தைகளுக்கு சில திட உணவுகள் ஒத்துக்கொள்ளாது. 5% குழந்தைகளுக்கு இப்படி அலர்ஜி ஏற்பட வாய்ப்புண்டு.

    எந்த உணவுகள் அலர்ஜியை ஏற்படுத்தும்?

    நிலக்கடலை
    சோயாபீன்ஸ்
    கடுகு
    சில கொட்டை வகைகள்
    பால்
    மீன்
    முட்டை
    சில தானிய வகைகள் - கோதுமை போன்றவை
    எலுமிச்சை

    மேற்சொன்ன உணவுகளில் உள்ள புரதமோ மற்ற பொருட்களோ அலர்ஜிக்கு காரணமாகலாம்.



    அலர்ஜி வரும் அறிகுறிகள் என்ன?


    வயிற்றுப்போக்கு
    வாந்தி
    வயிற்று வலி
    மூச்சுத்திணறல்
    மயக்கம்
    தொண்டைப் பகுதியில் வீக்கம்
    மூக்கிலிருந்து நீர் வழிதல்
    தோல் சிவந்து போதல், தடிப்பு, அரிப்பு
    நாக்கு, உதடு, தொண்டைப் பகுதியில் எரிச்சல் ஏற்படுதல்
    உடலெங்கும் குத்தும் உணர்வு
    தலைச்சுற்றல்

    தடுக்கும் முறைகள்


    மருத்துவரிடம் குழந்தையைக் காண்பித்து முறையான பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும்.

    மருத்துவர் கூறும் ஆலோசனைகளை சரியாக பின்பற்றுதல் வேண்டும்.

    தடுப்பு மருந்துகள், அலர்ஜி மருந்துகள் ஆகியன மருத்துவர் பரிந்துரைத்தால் அதை அவசியம் சாப்பிட வேண்டும்.

    6 மாதத்துக்கு மேல் திட உணவை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தினால் 3-நாள் விதிமுறையைப் பின்பற்றுதல் நல்லது.

    ஒரு உணவை சிறிதளவு குழந்தைக்கு அறிமுகப்படுத்தி, குழந்தை அதை உண்ட பிறகு 3 நாள் வரை குழந்தையை நன்றாக கவனியுங்கள். அலர்ஜி ஏற்பட்டால் உடனே மருத்துவரிடம் அழைத்து செல்லலாம். அலர்ஜி ஏற்படாமல் இருந்தால், அந்த குழந்தைக்கு அந்த உணவு ஒத்துக்கொள்கிறது என அர்த்தம்.

    அலர்ஜி ஏற்படுத்தும் உணவுகளை எக்காலத்துக்கு எக்காரணத்துக்கும் குழந்தைகளுக்கு திரும்ப தர கூடாது.
    ×