என் மலர்
நீங்கள் தேடியது "உபாசனா"
- பெண்களின் மிகப்பெரிய காப்பீடு என்பது உங்கள் கருமுட்டைகளை சேமிப்பதுதான்.
- பெண்கள் Career மீது அதிக கவனம் செலுத்துவது, புதிய இந்தியா பிறந்துள்ளதை காட்டுகிறது
தடுப்பூசிகளால் ஆட்டிசம் குறைபாடு ஏற்படுவதாகக்கூறி சர்ச்சையில் சிக்கிய Zoho இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு அடுத்ததாக இளைஞர்கள் தங்களது 20 வயதுக்குள்ளாகவே திருமணம் முடித்து குழந்தை பெற்றுக்கொள்வது அவசியம் தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீதர் வேம்புவின் கருத்து இணைய தளத்தில் பேசும்பொருளாகியுள்ளது. இந்நிலையில், ஸ்ரீதர் வேம்புவின் கருத்துக்கு நேர்மாறாக பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வதை விட Career மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று ராம்சரண் மனைவி உபசனா தெரிவித்துள்ளார்.
ஐஐடி ஹைதராபாத்தில் தான் உரையாற்றிய உபசனா, "அண்மையில் பங்கேற்ற ஐஐடி ஹைதராபாத் நிகழ்வில் எத்தனை பேருக்கு திருமணம் வேண்டும் என கேட்டேன். மாணவிகளை விட மாணவர்களே அதிகம் கை உயர்த்தினர். ஆண்களை காட்டிலும் பெண்களே Career மீது அதிக கவனம் செலுத்துவது, புதிய இந்தியா பிறந்துள்ளதை காட்டுகிறது
பெண்களின் மிகப்பெரிய காப்பீடு என்பது உங்கள் கருமுட்டைகளை சேமிப்பதுதான். ஏனென்றால், நீங்கள் எப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டும், எப்போது குழந்தைகளைப் பெற விரும்புகிறீர்கள், எப்போது நிதி ரீதியாக சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதை நீங்கள் தேர்வு செய்யலாம். அதனால் தான் இன்று, நான் என் சொந்தக் காலில் நிற்கிறேன், நான் எனக்காகவே சம்பாதிக்கிறேன்" என்று தெரிவித்தார்.
இந்த வீடியோவை உபசனா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலரும் அவரது கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த விமர்சனங்களுக்கு உபசனா விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஒரு ஆரோக்கியமான விவாதத்தைத் தூண்டியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் & உங்கள் மரியாதைக்குரிய பதில்களுக்கு நன்றி.
ஒரு பெண் சமூக அழுத்தத்திற்கு அடிபணிவதற்குப் பதிலாக காதலுக்காக திருமணம் செய்து கொள்வது தவறா?
சரியான துணையைக் கண்டுபிடிக்கும் வரை அவள் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது தவறா?
ஒரு பெண் தனது சொந்த சூழ்நிலைகளின் அடிப்படையில் எப்போது குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று தேர்வு செய்வது தவறா?
திருமணத்தைப் பற்றி அல்லது சீக்கிரம் குழந்தைகளைப் பெறுவதை மட்டும் யோசிப்பதை விட, ஒரு பெண் தனது இலக்குகளை நிர்ணயித்து, தனது வாழ்க்கையில் கவனம் செலுத்துவது தவறா?
நான் 27 வயதில் காதலித்து திருமணம் செய்து கொண்டேன், அதை நான் என் சொந்த விருப்பத்தில் முடிவு எடுத்தேன். 29 வயதில், தனிப்பட்ட மற்றும் உடல்நலக் காரணங்களுக்காக என் கருமுட்டைகளை சேமித்து வைக்க முடிவு செய்தேன். 36 வயதில் எனது முதல் குழந்தையை பெற்றெடுத்தேன். இப்போது 39 வயதில் இரட்டை குழந்தைகளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
எனக்கு, திருமணம் மற்றும் Career ஆகிய இரண்டும் எனக்கு முதன்மையானவை. அவை நிறைவான வாழ்க்கையின் அர்த்தமுள்ள பகுதிகள். ஆனால் நான் அதற்கான காலக்கெடுவை தீர்மானிக்கிறேன்! அது privilege அல்ல, அது என் உரிமை!" என்று தெரிவித்துள்ளார்.
2011 இல், உபாசனாவும் ராம் சரணும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர், மேலும் அவர்கள் 2012 இல் திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் முதல் குழந்தை, கிளின் காரா, 2023 இல் பிறந்தார். மேலும் உபாசனா தற்போது இரட்டை குழந்தைகளை எதிர்பார்க்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ராம் சரண் கடந்த 2012 ஆம் ஆண்டு உபாசனா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
- இந்த தம்பதிக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று நாட்டு நாட்டு பாடலுக்காக ஆஸ்கர் விருதையும் தட்டி சென்றது. தற்போது ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ராம் சரண் கடந்த 2012 ஆம் ஆண்டு உபாசனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த வருடம் தனது மனைவி உபாசனா கர்பமாக இருப்பதாக ராம் சரண் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ராம் சரண்-உபாசனா தம்பதிக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் கழித்து பெண் குழந்தை பிறந்துள்ளது. ராம் சரண்-உபாசனா தம்பதிக்கு முதல் குழந்தை பிறந்துள்ளதால் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த தம்பதிக்கு திரையுலகினர், ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
- ராம் சரண்-உபாசனா தம்பதிக்கு இன்று பெண் குழந்தை பிறந்தது.
- இந்த தம்பதிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பிரபல நடிகர் ராம் சரண்-உபாசனா தம்பதிக்கு இன்று காலை பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக ஹைதரபாத் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது. 11 ஆண்டுகள் கழித்து தங்களது முதல் குழந்தை பெற்று கொண்டதால் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ராம் சரண்-உபாசனா தம்பதிக்கு தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் மகேஷ் பாபு வாழ்த்து தெரிவித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்ர். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- ராம் சரண்-உபாசனா தம்பதிக்கு நேற்று காலை பெண் குழந்தை பிறந்தது.
- இவர்களுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வருபவர் ராம் சரண். இவர் நடிகர் சிரஞ்சீவியின் மகன் ஆவார். ராம் சரண் கடந்த 2012-ஆம் ஆண்டு உபாசனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 11 ஆண்டுகள் கடந்த நிலையில், ராம் சரண்-உபாசனா தம்பதிக்கு நேற்று காலை பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக ஹைதரபாத் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது. இவர்களுக்கு திரைப்பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ராம் சரண்-உபாசனா
இந்நிலையில், நடிகையும் ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சருமான ரோஜா, ராம் சரண்-உபாசனா தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "தாத்தாவானதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் சிரஞ்சீவி காரு. இதயத்தில் என்றும் இளமையாகவும் எப்போதும் ஆற்றல் மிக்க இந்த குடும்பத்தில் ஒரு அழகான மெகா இளவரசி ஆசீர்வதிக்கப்படுவது எல்லாம் வல்ல இறைவனின் ஆசீர்வாதம்.
அன்புள்ள ராம்சரண் நீ குழந்தையாக இருந்த போது உன்னை என் கைகளில் கட்டியணைத்த அந்த மறக்கமுடியாத நாட்களை நினைவு கூர்கிறேன், இப்போது உனக்கு ஒரு மகள் பிறந்திருக்கிறாள் என்ற மகிழ்ச்சியான செய்தியை கேட்பது இன்னும் மகிழ்ச்சியளிக்கிறது. சிரஞ்சீவி காரு தாத்தா பட்டம் பெற்றாலும் நீங்கள் எவர்கிரீன் ஹீரோ தான். உபாசனா மற்றும் குட்டி மகாலட்சுமிக்கு என்னுடைய ஆசிர்வாதங்கள்" என்று மகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.






