என் மலர்
நீங்கள் தேடியது "Hansika Motwani"
- சமீபத்தில் மும்பையிலும் சொந்தமாக வீடு வாங்கி உள்ளார் சமந்தா.
- சினிமாவை தாண்டி ரியல் எஸ்டேட்டின் ‘பேபி குயின்’ என்று அழைக்கப்படுகிறார்.
திரை உலகில் 'ஹிட்' படங்கள் கொடுத்து வருமானத்தை பெருக்கி கொண்டு ரியல் எஸ்டேட் துறையில் பல நடிகைகள் முதலீடு செய்து சூப்பர் ஹிட் கொடுத்து வருகின்றனர். தமிழ் சினிமாவிலும் முன்னணி கதாநாயகிகள் பலர் ரியல் எஸ்டேட் தொழிலில் தடம் பதித்து சாதித்து வருகின்றனர்.
நயன்தாரா: தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருபவர் நயன்தாரா. சினிமா மட்டுமின்றி ரியல் எஸ்டேட் தொழிலிலும் முதலீடு செய்து சென்னையில் அபார்ட்மென்ட், ஐதராபாத், கொச்சியில் வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
சமந்தா: சினிமா உலகில் உச்சத்தை தொட்டுள்ள சமந்தா ஐதராபாத்தில் பலகோடி மதிப்புள்ள வீடுகளை வாங்கி 'பிராபர்டி குயின்' என்று பெயர் பெற்றுள்ளார். சமீபத்தில் மும்பையிலும் சொந்தமாக வீடு வாங்கி உள்ளார் சமந்தா.
காஜல் அகர்வால்: தமிழ், தெலுங்கு, இந்தி திரை உலகில் பிரபலமான நடிகையான காஜல் அகர்வால் ரியல் எஸ்டேட்டிலும் பேரரசியாக இருக்கிறார். மும்பை, சென்னை ஆகிய நகரங்களில் வணிக வளாகங்களில் பங்குகள் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

ஹன்சிகா: தமிழ் சினிமா ரசிகர்களால் 'சின்ன குஷ்பு' என்று வர்ணிக்கப்படுபவர் ஹன்சிகா. சினிமாவில் சம்பாதித்த பணத்தை நிலம், வீடு, அபார்ட்மெண்ட்களில் முதலீடு செய்துள்ளார். இதைத் தொடர்ந்து சினிமாவை தாண்டி ரியல் எஸ்டேட்டின் 'பேபி குயின்' என்று அழைக்கப்படுகிறார்.
ராஷ்மிகா: ராஷ்மிகா ஐதராபாத், பெங்களூரு, மும்பையில் அபார்ட்மென்ட்கள், வீடுகள் வாங்கி இருக்கிறார். 'நேஷனல் கிரஷ்' என்று அழைக்கப்படும் 'பிராபர்டி கிரஷ்' ராஷ்மிகா மந்தனா.
ஷில்பாஷெட்டி: ஷில்பா ஷெட்டி மும்பையில் பலகோடி ரூபாய் மதிப்புள்ள அபார்ட்மெண்ட்கள், பங்களாக்கள் மட்டுமின்றி துபாயிலும் சொத்துக்களில் முதலீடு செய்துள்ளார். கணவர் ராஜ்குந்த்ராவுடன் இணைந்து வணிக வளாகங்களிலும் பங்கு வைத்துள்ளார்.
கியாரா அத்வானி: நடிகை கியாரா அத்வானி மும்பையில் அபார்ட்மெண்ட்களில் முதலீடு செய்து வருகிறார்.
தமன்னா: தமன்னா மும்பை ஐதராபாத்தில் வீடுகள் மட்டுமின்றி சில தொழில் அதிபர்களுடன் இணைந்து பிசினஸ் செய்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
வித்யாபாலன்: நடிகை வித்யாபாலன் மும்பையில் பல அபார்ட்மெண்ட்கள் வாங்கி 'ஸ்மார்ட் இன்வெஸ்டர்' என புகழ் பெற்று வருகிறார்.
- ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் 2021-ல் நான்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
- இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்த ஹன்சிகா மோத்வானி, கடந்த 2022-ம் ஆண்டு சோஹைல் கதுரியா என்ற தொழில் அதிபரை காதல் திருமணம் செய்து கொண்டார். தற்போது கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்திருக்கும் ஹன்சிகா, விரைவில் அவரை விவாகரத்து செய்யப்போவதாகவும் பேச்சு அடிபடுகிறது.
ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் 2021-ல் நான்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஒரே வருடத்தில் அவர்கள் பிரிந்துவிட்டனர். இந்தநிலையில் தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக மாமியார் மோனா மற்றும் ஹன்சிகா மீது நான்சி புகார் தெரிவித்தார்.
இதன்பேரில் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தனக்கு எதிரான வழக்குப்பதிவை ரத்து செய்யக்கோரி, மும்பை ஐகோர்ட்டில் ஹன்சிகா மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நேற்று தள்ளுபடியானது.
இதையடுத்து ஹன்சிகா மீது விசாரணை நடத்த போலீசாருக்கு அனுமதி கிடைத்து இருக்கிறது. விரைவில் ஹன்சிகா விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- கணவர் வீட்டில் இருந்து வெளியேறி தற்போது மும்பையில் உள்ள தனது அம்மாவுடன் ஹன்சிகா வசித்து வருகிறார்.
- விவாகரத்து என்று பேசப்படும் நிலையில் அதற்கெல்லாம் தூபம் போடுவது போல ஹன்சிகாவின் இந்த நிகழ்வு அமைந்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்த ஹன்சிகா மோத்வானி கடந்த 2022-ம் ஆண்டு சோஹைல் கட்டாரியா என்ற தொழில் அதிபரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் ஜெய்ப்பூரில் கோலாகலமாக நடந்தது.
இதற்கிடையில் கடந்த சில நாட்களாகவே ஹன்சிகா தனது கணவரை பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. கணவர் வீட்டில் இருந்து வெளியேறி தற்போது மும்பையில் உள்ள தனது அம்மாவுடன் ஹன்சிகா வசித்து வருகிறார். கணவர் வீட்டாருடன் ஏற்பட்ட பிரச்சனைதான் இதற்கு காரணம் என்று பேசப்படுகிறது.
ஹன்சிகா விரைவில் விவாகரத்து முடிவை நாட இருப்பதாக பேசப்படுகிறது. ஆனாலும் இதனை சோஹைல் கட்டாரியா மறுத்துள்ளார். அவர் மறுத்தாலும் இந்த விவகாரத்தில் ஹன்சிகா மவுனமாக இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது.
இதற்கிடையில் தனது சமூக வலைதள பக்கங்களில் உள்ள கணவரின் புகைப்படங்களை ஹன்சிகா அதிரடியாக நீக்கி இருக்கிறார். விவாகரத்து என்று பேசப்படும் நிலையில் அதற்கெல்லாம் தூபம் போடுவது போல ஹன்சிகாவின் இந்த நிகழ்வு அமைந்துள்ளது.
இதனால் ஹன்சிகா தனது கணவரை விவாகரத்து செய்ய முடிவு எடுத்து விட்டதாகவே பேச்சு அடிபடுகிறது. இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
- 2011 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாப்பிள்ளை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.
- ஹன்சிகா தற்பொழுது காந்தாரி என்ற படத்தில் நடித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா. 2011 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாப்பிள்ளை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.
'சின்ன குஷ்பு' என்று அன்போடு அழைக்கப்பட்ட ஹன்சிகா பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதும், தற்காலிகமாக சினிமாவுக்கு சிறிது காலம் ஓய்வு கொடுத்தார்.
சிறிய இடைவெளிக்குப் பிறகு 'மஹா' என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கலவையான விமர்சனம் பெற்ற இப்படத்தில் சிம்பு கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து பார்ட்னர், மை நேம் இஸ் ஷ்ருதி, 105 மினிட்ஸ் போன்ற படங்களில் நடித்தார்.
சில மாதங்களுக்கு முன் ஹன்சிகா நடிப்பில் வெளியான கார்டியன் திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. அதை தொடர்ந்து ஹன்சிகா தற்பொழுது காந்தாரி என்ற படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தை ஆர் கண்ணன் தயாரித்து இயக்கியுள்ளார். மெட்ரோ சிரிஷ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் இசையை முத்து கணேஷ் மேற்கொள்கிறார். படத்தின் மேகிங் வீடியோவை நேற்று படக்குழுவினர் வெளியிட்டனர். ஹாரர் கதைக்களத்தில் அமைந்திருக்கும் இத்திரைப்படம் வரும் ஜூலை மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


Team #Maha wishes you all a Merry Christmas.#Maha2ndLook@ihansika@dir_URJameel@GhibranOfficial@MathiyalaganV9@EtceteraEntert1pic.twitter.com/lgWs9ZI3Ns
— Done Channel (@DoneChannel1) December 24, 2018


👋🏻 guys,Saw all ur coments,as a director of the film my intension was 2 just create sumthing unique n not to knowingly hurt anybody's sentiments related 2 caste or religion,I believe in humanity n not in Hindu-muslim,so pls dont create caste and religion angle 🙏 @ihansika#Maha
— U.R.Jameel (@dir_URJameel) December 16, 2018












