search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hansika Motwani"

    யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் ‘மஹா’ படத்தின் படப்பிடிப்பில் ஹன்சிகாவுடன் சிம்பு இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மஹா’. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையாக உருவாகி வரும் இந்த படத்தில் சிம்பு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    இந்த படத்தின் படப்பிடிப்பில் இயக்குனர் ஜமீல் மற்றும் ஹன்சிகாவுடன் சிம்பு இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிம்பு - ஹன்சிகா இந்த படத்தில் கணவன் - மனைவியாக நடிப்பதாக கூறப்படுகிறது. ஹன்சிகாவின் 50-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.



    வாலு படத்தில் நடித்த போது சிம்பு, ஹன்சிகா இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மனகசப்பு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டதாக தகவல் வெளியானது. அதன்பின்னர் இருவருமே தங்களது படங்களில் கவனம் செலுத்தத் துவங்கினர்.

    சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்திலும், மஃப்டி படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடிக்க இருக்கிறார். இதில் மாநாடு படத்திற்காக வெளிநாடு சென்று தனது உடல் எடையை குறைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தமிழில் முன்னணி நடிகையாகவும் தற்போது மஹா படத்தில் நடித்து வரும் ஹன்சிகா, இந்த புத்தாண்டுக்கான சபதம் பற்றி கூறியிருக்கிறார். #Hansika
    ஹன்சிகா முன்னணி நடிகையாக விளங்குவது மட்டும் அல்லாமல் நல்ல மனதுக்கும் சொந்தக்காரர். இதுவரை 34 குழந்தைகளுக்கு மேல் தத்தெடுத்து தனது சொந்த செலவில் பராமரித்து வருகிறார்.

    அவர்களை என் குழந்தைகள் என்று தான் கூறுவார். அடுத்து மும்பையில் பெரிய முதியோர் இல்லம் ஒன்றை கட்டும் முயற்சியில் இருக்கிறார். அவர் புத்தாண்டு பற்றி கேட்டபோது ‘என் குழந்தைகளில் ஒருவர் இந்த ஆண்டு 10 -ம் வகுப்பு தேர்வு எழுத இருக்கிறார். அவரை நல்ல மதிப்பெண் எடுக்க வைத்து மாநிலத்திலேயே முதல் மாணவனாக கொண்டு வருவதையே என் புத்தாண்டு சபதமாக எடுத்துள்ளேன். மஹா படம் ஒரு திரில்லர் படம். அந்த படத்தை பற்றி ஏன் தவறான செய்திகளை பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை.



    இன்னும் 3 படங்களில் ஒப்பந்தமாகி உள்ளேன். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும். தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக வருகின்றன. அது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்று கூறினார்.
    யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் ‘மஹா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அடுத்த போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. #Maha #Maha2ndLook #Hansika50
    ஹன்சிகா தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ‘மஹா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். யு.ஆர்.ஜமீல் இயக்கும் இந்த படத்தின் இரு போஸ்டர்களை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.

    அதில் ஒரு போஸ்டரில் ஹன்சிகா புகைப்பிடிக்கும் தோற்றம் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. சில சாமியார்களுடன் அமர்ந்து ருத்ராட்ச மாலை காவி உடையில் ஹன்சிகா கஞ்சா புகைக்கிறார். பின்னணியில் காசி கோவில் உள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகியது. 

    இதையடுத்து ஹன்சிகா மற்றும் படத்தின் இயக்குநர் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

    அந்த போஸ்டரின் பின்னணியில் மசூதி இருக்கும்படியும், ஹன்சிகா தொழுவது போலவும், பின்னால் நிழல் உருவத்தில் துப்பாக்கியுடன் இருப்பது போன்றும் காட்சி உள்ளது. இந்த புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. #Maha #Maha2ndLook #Hansika50 #Hansika

    ‘மஹா’ படத்தில் நடித்து வரும் நடிகை ஹன்சிகா மற்றும் படத்தின் இயக்குநர் ஜமீல் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Maha #Hansika
    தமிழ் திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா இயக்குநர் யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் ‘மஹா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. 

    அதில் இந்துக்கள் புண்ணிய பூமியாக கருதப்படும் காசியின் பின்னணியில், காவி உடை அணிந்தபடி, புகை பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது. இதற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு ராணிப்பேட்டை கோர்ட்டில் ஹன்சிகா மீது வழக்கு போடப்பட்டது.

    இந்த நிலையில் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் ஹன்சிகா மீது இந்து மக்கள் முன்னணி அமைப்பின் சார்பில் இன்று புகார் செய்யப்பட்டது. அந்த அமைப்பின் நிறுவன அமைப்பாளர் நாராயணன் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    சினிமா துறையில் இந்து மதக் கடவுள்கள், இந்து மத துறவிகளை விமர்சிப்பது, அவர்களை குற்றவாளி போல் சித்தரிப்பது வாடிக்கையாக உள்ளது.



    இதற்கு உதாரணமாக சமீபத்தில் சென்னை முழுவதும் மஹா திரைப்படத்தின் முன்னோட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அந்த சுவரொட்டியில் நடிகை ஹன்சிகா துறவி உடை அணிந்து புகை பிடிப்பது போன்ற காட்சி இந்து மதத்தில் உள்ள பெண் துறவிகளை அவமானப்படுத்தும் வகையில் உள்ளது.

    இந்து மதத்தின் மீது நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் காட்சி அமைத்த இயக்குனர் ஜமீல் மீதும், போஸ் கொடுத்த ஹன்சிகா மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Maha #Hansika

    மற்ற மொழிகளில் நடிப்பதை விட தமிழில் நடிக்கவே விரும்புவதாக கூறிய ஹன்சிகா, தான் ஒரு தமிழ் பட நடிகை என்று சொல்வதில் பெருமைப்படுவதாக கூறினார். #Hansika #Maha
    துப்பாக்கி முனை படத்தை தொடர்ந்து ஹன்சிகா அடுத்ததாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள மஹா என்ற படத்தில் நடித்து வருகிறார். யு.ஆர்.ஜமீல் என்ற புதுமுக இயக்கும் இந்த படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகின.

    இந்த நிலையில், ஹன்சிகா அளித்த பேட்டியில் இருந்து, 

    “நான் அடிப்படையில் புத்தர் கொள்கைகளைப் பின்பற்றுகிறேன். அமைதி, அன்பு, காதல் மட்டுமே உலகத்துல இருக்கணும்னு ஆசைப்படுகிறேன். நிறைய பயணம் செய்கிறேன். வாழ்க்கைப் பாடங்களை அதுதான் அதிகமாக கற்றுக்கொடுக்கிறது. மும்பையில் முதியோர் இல்லம் கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டு இருக்கிறேன். இப்போது ஹன்சிகாவை ஒரு நல்ல நிலைமையில பார்க்கறீங்கன்னா அதுக்கு தமிழ் சினிமாதான் காரணம். 



    குறைவான படங்கள்ல நடிக்கிறதுக்குக் காரணம், நடுவுல நான் கொஞ்சம் பிரேக் எடுத்துக்கிட்டதுதான். மற்ற மொழிகள்ல நடிக்கிறதைவிட தமிழ்ல அதிகம் நடிக்க விரும்புகிறவள் நான். ‘தமிழ் நடிகை’ன்னு சொல்லிக்கிறதுல அவ்வளவு பெருமைப்படுகிறேன்’ என்று கூறியுள்ளார். #Hansika #Maha

    யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகாவின் 50-வது படமாக உருவாகும் மஹா படத்தின் போஸ்டர் சர்ச்சையை கிளப்பியிருக்கும் நிலையில், இதுகுறித்து இயக்குநர் ஜமீல் விளக்கம் அளித்துள்ளார். #Maha #Hansika #Hansika50
    தமிழ் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் ஹன்சிகா நாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும் ‘மஹா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். யு.ஆர்.ஜமீல் இயக்கும் இந்த படத்தின் இரு போஸ்டர்களை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.

    அதில் ஒரு போஸ்டரில் ஹன்சிகா புகைப்பிடிக்கும் தோற்றம் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சில சாமியார்களுடன் அமர்ந்து ருத்ராட்ச மாலை காவி உடையில் ஹன்சிகா கஞ்சா புகைக்கிறார். பின்னணியில் காசி கோவில் உள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.


    இதை எதிர்த்து ஹன்சிகா மற்றும் இயக்குநர் மீது பா.ம.க பிரமுகர் வழக்கு தொடர்ந்துள்ளார். மஹா படத்தின் போஸ்டர் இந்துக்களின் மத நம்பிக்கைகளை புண்படுத்துவதாகவும், இளம்பெண்களை திசைதிருப்பும் விதமாகவும் உள்ளது என்று மனுவில் அவர் கூறியுள்ளார். இந்த வழக்கு குறித்து இயக்குநர் ஜமீலிடம் கேட்டபோது அவர் கூறியதாவது,

    “ஒரு இயக்குனராக புதிதாக ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். சாதி அல்லது மதம் தொடர்பாக யார் மனதையும் புண்படுத்த நினைக்கவில்லை. நான் இந்து, முஸ்லிம் என்பதை விட மனிதம் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். புகைப்பிடிக்கும் படத்தை ஒரு கதாபாத்திரமாகவே பார்க்க வேண்டும். தயவு செய்து சாதி, மத கோணத்தில் அணுக வேண்டாம். கோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கை சந்திப்போம். இதுகுறித்து வக்கீல்களுடன் ஆலோசித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.



    நடிகை ஹன்சிகா கூறும்போது “மஹா எனது 50-வது படம். அந்த படம் பெரிய அளவில் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்கு ஏற்ப படத்தின் போஸ்டர் பற்றி பேசுகிறார்கள். இது ஒரு சாம்பிள்தான். இன்னும் நிறைய விஷயங்கள் படத்தில் உள்ளன” என்றார். #Maha #Hansika #Hansika50

    விக்ரம் பிரபு நடிப்பில் துப்பாக்கி முனை படம் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், இப்போ எல்லாப் படங்களுக்கும் யாராவது ஏதாவது ஒரு பிரச்னையை கிளப்பி விடுவதாக விக்ரம் பிரபு கூறினார். #ThuppakkiMunai #VikramPrabhu
    துப்பாக்கி முனை படம் வெற்றி அடைந்த உற்சாகத்தில் விக்ரம் பிரபு அளித்த பேட்டி:

    இளம் வயதிலேயே வயதான தோற்றத்தில் நடித்தது எப்படி?

    இந்தப் படத்துக்காக 45 வயது போலீஸ் அதிகாரியா நடிக்கணும்னு இயக்குநர் தினேஷ் சொன்னபோது, கொஞ்சம் யோசித்தேன்.

    பிறகு, சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்தில்ல ஒரு போட்டோஷூட் பண்ணிமோம். அது பக்காவாக செட் ஆனது. ஏற்கெனவே போலீசாக `சிகரம் தொடு’ படத்துல நடிச்சிருக்கேன்.

    அதுல இளமையான போலீஸ். இந்தப் படத்துல வயதான போலீஸ் அதிகாரி. 33 என்கவுன்டர் பண்ணின போலீஸ் எப்படி இருப்பார், அவரோட மனநிலை எப்படி இருக்கும்னு புரிஞ்சுக்கிட்டு நடித்தேன். அதுக்குப் பின்னாடி காவல் துறையைப் பற்றி பல ஆராய்ச்சிகள் இருக்கு. ஆரம்பத்துல சில தயக்கங்கள் இருந்தாலும், படத்தின் கதை அதை உடைச்சு என்னை பாசிட்டிவ் மனநிலைக்குக் கொண்டு வந்திருச்சு.



    எந்த மாதிரியான படங்களில் நடிக்க ஆசை?

    பொதுவா நடிகர்களுக்கு எல்லாப் படமும் ஹிட் ஆகாது. சில படங்கள்தான் மக்கள் மனசுல பதியும். அப்பாவுக்கு `சின்னத்தம்பி’, `அக்னி நட்சத்திரம்‘ படங்கள். அப்படி இருந்தது. எனக்கு, `கும்கி’ படம். அந்தப் படத்துக்குக் கிடைச்ச பெயரை தக்க வைத்துக்கொள்ள, வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆசைப்படுகிறேன். ஒரேமாதிரியான வி‌ஷங்களை திரும்பத் திரும்பப் பண்ணுவதில்லைனு உறுதியாக இருக்கேன். அதனால், வெற்றி தோல்வி ரெண்டுமே என் கேரியர்ல இருக்கு. காமெடி, ஆக்‌‌ஷன், ரொமான்ஸ்னு எல்லா வரையிலும் நடிக்க ஆசைப்படுறேன். பத்து வருடத்துக்கு முன்னாடி ஒரு படத்தை ரிலீஸ் பண்றது ஈசியா இருந்துச்சு. இப்போ எல்லாப் படங்களுக்கும் ஏதாவது ஒரு பிரச்னையை சமூகவலைதள ஆள்கள் கிளப்பி விடுறாங்க. இதனால நடிகர்களுக்கு நிறைய கஷ்டங்கள் இருக்கு.

    சினிமா துறையில அப்பா, தாத்தா எடுத்த பெயரை நீங்களும் எடுக்கணும்ங்கிற அழுத்தம் உங்களுக்கு இருக்கா?

    யார் என்ன வேலை செய்கிறோமோ, அதுக்கான பலன் கட்டாயம் கிடைக்கும். நான் சினிமாவுல நல்லா நடிக்கிறதுக்கான அத்தனை முயற்சிகளையும் பண்ணிக்கிட்டு இருக்கேன். ஒரு கதையைத் தேர்ந்தெடுக்கிறதுக்கு முன்னாடி அந்தக் கதை படமாக வந்தால், நான் தியேட்டர்ல போய்ப் பார்ப்பேனானுதான் முதல்ல யோசிப்பேன். இப்படி நானும் நடிப்புல நிறைய மெனக்கெடுறேன். நேரமும் நமக்குக் கைகூடி வரணும்; வரும். #ThuppakkiMunai #VikramPrabhu

    தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு - ஹன்சிகா நடிப்பில் வெளியாகி இருக்கும் துப்பாக்கி முனை படத்தின் விமர்சனம். #ThuppakkiMunaiReview #VikramPrabhu #Hansika
    நாயகன் விக்ரம் பிரபு போலீஸ் அதிகாரியாக இருக்கிறார். இவர் இதுவரைக்கும் 30 பேரை என்கவுண்டர் செய்திருக்கிறார். என்கவுண்டர் என்ற பெயரில் ஒரு உயிரை கொலை செய்வதை விரும்பாத விக்ரம் பிரபுவின் அம்மா, விக்ரம் பிரபுவை விட்டு பிரிந்து விடுகிறார். விக்ரம் பிரபுவோ அம்மா மீது பாசமாக இருந்தாலும், செய்யும் தொழிலை மிகவும் நேசித்து வருகிறார்.

    இந்நிலையில், ஹன்சிகாவை பார்க்கும் விக்ரம் பிரபு அவர் மீது காதல் வயப்படுகிறார். இருவரும் தங்களுடைய காதலை வெளிப்படுத்தி பழகி வரும் நிலையில், போலீஸ் வேலையால் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு பிரிகிறார்கள். அதே சமயம், தன்னுடைய வேலையில் இருந்து விக்ரம் பிரபு சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்.



    சில நாட்களில் ராமேஸ்வரம் பகுதியில் எம்.எஸ்.பாஸ்கரின் 14 வயது மகளை கற்பழித்து கொலை செய்த வழக்கில் ஒருவரை என்கவுண்டர் செய்ய சொல்லி விக்ரம் பிரபுவுக்கு உத்தரவு வருகிறது.

    இதை விசாரிப்பதற்காக ராமேஸ்வரம் செல்லும் இவர், எம்.எஸ்.பாஸ்கர் மூலம், என்கவுண்டர் செய்ய இருக்கும் நபரை பற்றி தெரிந்துக் கொள்கிறார். இதில் தான் என்கவுண்டர் செய்ய இருக்கும் நபர் நிரபராதி என்றும், அந்த சிறுமியை கற்பழித்து கொலை செய்தவர்கள் வேறொருவர் என்பதை தெரிந்து கொள்கிறார்.



    இறுதியில் அந்த சிறுமியை கொலை செய்தவரை விக்ரம் பிரபு என்கவுண்டர் செய்தாரா? காதலி ஹன்சிகாவுடன் இணைந்தாரா? தனது என்கவுண்டர் பணியை தொடர்ந்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தின் நாயகனான விக்ரம் பிரபு போலீஸ் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார். முந்தைய படங்களை விட இந்த படத்தில் நடிப்பில் கூடுதல் கவனம் செலுத்தி நடித்திருக்கிறார். அது சிறப்பாக ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது என்றே சொல்லலாம். தான் செய்யும் வேலையை மிகவும் நேசிப்பவராக மனதில் நிற்கிறார். படம் முழுவதும் ஸ்டைலிஷ் உடைகளில் வந்து கவர்கிறார்.



    கதாநாயகி ஹன்சிகா சில காட்சிகளில் மட்டுமே வருகிறார். தேவையில்லாத காட்சிகள் என்று இல்லாமல் சரியான இடத்தில் கதையின் தேவைக்கு ஏற்ப வந்து செல்கிறார். விக்ரம் பிரபுவுக்கு அடுத்தபடியாக நம் மனதில் நிற்பது எம்.எஸ்.பாஸ்கர். அவருக்கே உரிய பாணியில் நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருக்கிறார். தன் பெண்ணை இழந்து வாடும் தந்தையாகவும், குற்றவாளிக்கு தண்டனை வழங்க போராடுவதும் என்று நடிப்பில் மிளிர்கிறார். குறிப்பாக இறுதிக் காட்சியில் கைத்தட்டல் பெற்றிருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

    பெண்ணை கற்பழித்து கொலை செய்தவரை போலீஸ் எப்படி கண்டுபிடித்து தண்டனை வழங்குகிறது என்ற வழக்கமான கதையாக இருந்தாலும், திரைக்கதையில் வித்தியாசம் காண்பித்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் தினேஷ் செல்வராஜ். தவறு செய்பவன் சரியான நேரத்தில் தண்டிக்கப்பட வேண்டும், அதே நேரத்தில் நிரபராதிக்கு தண்டனை கிடைக்கக் கூடாது என்பதை படத்தில் உணர்த்தியிருக்கிறார். மெதுவாக திரைக்கதை தொடங்கினாலும், சிறிது நேரத்திலேயே வேகம் எடுத்து சீட்டிலேயே உட்கார வைத்து விடுகிறார் இயக்குனர். கதாபாத்திரங்னளை சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். இறுதியில் சொல்லும் மெசேஜ் சிறப்பு.



    முத்துகணேஷின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்து கவனிக்க வைத்திருக்கிறார். ராசாமதியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘துப்பாக்கி முனை’ ஷார்ப். #ThuppakkiMunaiReview #VikramPrabhu #Hansika

    தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு - ஹன்சிகா நடிப்பில் உருவாகி இருக்கும் `துப்பாக்கி முனை’ படத்தின் முன்னோட்டம். #ThuppakkiMunai #VikramPrabhu
    வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள படம் `துப்பாக்கி முனை’.

    விக்ரம் பிரபு நாயகனாகவும், ஹன்சிகா நாயகியாகவும் நடித்துள்ள இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி, அபிராமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

    இசை - எல்.வி.முத்துகணேஷ், ஒளிப்பதிவு - ராசாமாதி, கலை - மாயபாண்டி, படத்தொகுப்பு - புவன் ஸ்ரீனிவாஸ், பாடல்கள் - புலவர் புதுமைப்பித்தன், பா. விஜய், சண்டைபயிற்சி - அன்பறிவ், தயாரிப்பாளர் - கலைப்புலி எஸ்.தாணு, தயாரிப்பு - வி கிரியேஷான்ஸ்,  இயக்கம் - தினேஷ் செல்வராஜ்.



    படம் பற்றி இயக்குநர் கூறும் போது,

    படத்தில் விக்ரம் பிரபு கம்பீரமான போலீஸ் அதிகாரியாகவும், என்கவுன்டர் ஸ்பெ‌ஷலிஸ்டாகவும் வருகிறார். போலீஸ் அதிகாரியாக வரும் விக்ரம் பிரபு தன் வாழ்க்கையை மாற்றிய வழக்கு குறித்து விசாரிக்கும் வகையில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

    படம் வருகிற டிசம்பர் 14-ஆம் தேதி திரைக்கு வருகிறது. #ThuppakkiMunaiTeaser #VikramPrabhu #Hansika

    கிரிஷ் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகும் என்.டி.ஆர். வாழ்க்கைப்படத்தில் தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபலமான 9 நாயகிகள் நடிக்கின்றனர். #NTRBiopic #Balakrishna
    ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், பிரபல நடிகருமான என்.டி.ராமாராவ் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகி வருகிறது. பிரமாண்டமாகத் தயாராகும் இந்தப் படத்தில், என்.டி.ஆரின் மகன் நந்தமுரி பாலகிருஷ்ணா, தந்தையின் வேடத்தில் நடிக்கிறார்.

    ‘என்.டி.ஆர். பயோபிக்’ எனத் தற்போது பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், என்.டி.ஆரின் மனைவி பசவதாரகம் வேடத்தில் நடிக்க வித்யா பாலன் நடிக்கிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் ரகுல் பிரீத்திசிங், சாவித்திரி கதாபாத்திரத்தில் நித்யா மேனன், சரோஜா தேவி கதாபாத்திரத்தில் அனுஷ்கா, சவுகார் ஜானகி கதாபாத்திரத்தில் ஷாலினி பாண்டே, ஜெயசுதா வேடத்தில் பாயல் ராஜ்புத், ஜெயப்பிரதா கதாபாத்திரத்தில் ஹன்சிகா, கிருஷ்ண குமாரி வேடத்தில் மாளவிகா நாயர் நடிக்கின்றனர்.

    இதுதவிர, சந்திரபாபு நாயுடு கதாபாத்திரத்தில் ராணாவும், அவருடைய மனைவியாக மஞ்சிமா மோகனும் நடிக்கின்றனர். இப்படி ஒரே படத்தில் 9 முன்னணி நடிகைகள் நடிப்பதால், இப்போதே இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.



    மேலும் இந்தப் படத்தில் முரளி சர்மா, பிரசாத் ரவுல், நாக சைதன்யா, மகேஷ் பாபு, ராணா டகுபதி, மோகன் பாபு மஞ்சு, ராஜசேகர் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

    கிரிஷ் இயக்கும் இந்த படத்தை பாலகிருஷ்ணாவே தயாரிக்கிறார். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகம் ஜனவரி 9-ம் தேதி வெளியாகிறது. #NTRBiopic #Balakrishna 

    கிரிஷ் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகும் என்.டி.ஆர். வாழ்க்கைப் படத்தில் ஜெயப்பிரதா வேடத்தில் நடிகை ஹன்சிகா நடிக்க இருக்கிறார். #NTRBiopic #JayaPrada #Hansika
    இயக்குநர் கிரிஷ் இயக்கத்தில் நடிகரும், முன்னாள் ஆந்திர முதல்வருமான மறைந்த என்.டி.ஆர். வாழ்க்கை திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் என்டிஆராக நடிப்பது என்டிஆரின் மகனும், நடிகருமான பாலகிருஷ்ணா. என்.டி.ஆர். மனைவியாக இந்தி நடிகை வித்யா பாலன் நடித்து வருகிறார்.

    மேலும் இந்தப் படத்தில் முரளி சர்மா, பிரசாத் ரவுல், நாக சைதன்யா, மகேஷ் பாபு, ராணா டகுபதி, மோகன் பாபு மஞ்சு, ராஜசேகர் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

    படத்தில் என்டிஆருடன் நடித்த நடிகைகளின் கதாபாத்திரங்களும் இந்தப் படத்தில் இடம்பெறுகிறது. ஸ்ரீதேவி வேடத்தில் ரகுல் பிரீத்தி சிங் நடிக்க, சாவித்திரி வேடத்தில் நித்யா மேனன் நடிக்கிறார்.



    மேலும், ஜெயசுதா வேடத்தில் பாயல் ராஜ்புத் நடிக்க, ஜெயப்பிரதா வேடத்தில் தமன்னா நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், இப்போது ஜெயப்பிரதா வேடத்தில் நடிக்க ஹன்சிகா ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்தப் படத்தின் முதல் பாகம் ஜனவரி 9-ம் தேதி வெளியாகிறது.

    பிரபுதேவாவின் குலேபகாவலி படத்துக்குப் பிறகு நடிகை ஹன்சிகா கைவசம் விக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை, அதர்வாவின் 100, மகா என மூன்று படங்கள் தமிழில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #NTRBiopic #JayaPrada #Hansika

    சிறிய வயதில் 50 படங்கள் வரை நடித்து முன்னணி நடிகையாக வலம் வரும் ஹன்சிகா, தற்போது திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார். #Hansika
    ஹன்சிகாவுக்கு புதிய நடிகைகள் வரவால் படங்கள் குறைந்து விட்டது என்று பேசப்படுகிறது. இதுகுறித்து அவரிடமே கேட்ட போது ஹன்சிகா அளித்த பதில் வருமாறு:-

    ‘‘சினிமா வாய்ப்புகள் குறைந்ததாக சொல்வதை நான் ஏற்க மாட்டேன். இவ்வளவு சின்ன வயதில் 50 படங்களில் நடித்து விட்டேன். இத்தனை படங்களில் நடித்து இருப்பது ரொம்ப பெரிய வி‌ஷயம்.

    கடந்த ஒரு ஆண்டில் 18 புதிய படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்புகள் வந்தன. 18 கதைகள் கேட்டேன். ஆனால் அதில் 4 படங்களில் மட்டுமே நடித்தேன். எனவே எனக்கு வாய்ப்புகள் வராமல் இல்லை. இதுவரை கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்தேன். 

    இனிமேல் அதுமாதிரி நடிக்காமல் வித்தியாசமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க முடிவு செய்துள்ளேன். வெறும் கவர்ச்சியை மட்டுமே நம்பாமல் நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். இதனால்தான் நிறைய கதைகளை தவிர்த்து விட்டேன்.



    குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறேன். புதிதாக இனிமேல் யாரையும் தத்தெடுக்கும் திட்டம் இல்லை. ஏற்கனவே தத்தெடுத்தவர்களுக்கு நல்ல வாழ்க்கையை கொடுத்தால் போதும் என்று நினைக்கிறேன். குழந்தைகளுக்காகவும் முதியோர், ஆதரவற்றோருக்காகவும் ஒரு ஆசிரமம் கட்டுகிறேன். இனி முன்பு போல ஒரு கவர்ச்சி பொம்மையாக என்னை பார்க்க முடியாது. வித்தியாசமான கதைகளுக்காக காத்து இருக்கிறேன்.’’

    இவ்வாறு ஹன்சிகா கூறினார்.
    ×