என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சினிமா பாணி"

    • ஒரு படத்தையே ‘ஏ.ஐ.’ தொழில்நுட்பத்தில் எடுப்பது வரை சினிமா வளர்ச்சி கண்டிருக்கிறது.
    • ஒரு புதிய முயற்சியாகத்தான் ‘மெட்டா: தி டேஸ்லிங் கேர்ள்’ திரைப்படம் உருவாகியிருக்கிறது.

    உலக சினிமா பல்வேறு வளர்ச்சி நிலைகளை அடைந்து வந்திருக்கிறது. ஆரம்ப காலத்தில் ஒலி இல்லாத படமாக வெளிவந்து, தொழில்நுட்ப வளர்ச்சியடைந்து பேசும் படம் உருவானது. கருப்பு-வெள்ளை படத்தில் இருந்து ஈஸ்மெண்ட் கலர், பின்னர் கலர் திரைப்படங்கள் உருவாகின. சினிமாவை எடுக்கும் தொழில்நுட்பங்களிலும் பல்வேறு வளர்ச்சியை திரைத்துறை கண்டிருக்கிறது. கிராபிக்ஸ் காட்சிகளிலும் பல்வேறு படிநிலைகளை கடந்து வந்து விட்டோம். ஒரு படத்தையே 'ஏ.ஐ.' தொழில்நுட்பத்தில் எடுப்பது வரை சினிமா வளர்ச்சி கண்டிருக்கிறது.

    இந்த காலகட்டத்திலும் விருதுக்காகவும், பாராட்டுக்காகவும் மெனக்கெடும் திரை கலைஞர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். தங்கள் படத்தில் ஏதாவது ஒரு புதுமையை புகுத்தி, அதன் மூலம் சினிமா ரசிகர்களை தன் பக்கம் திரும்ப வைக்கலாம் என்று எண்ணுகிறார்கள். அப்படி ஒரு புதிய முயற்சியாகத்தான் 'மெட்டா: தி டேஸ்லிங் கேர்ள்' திரைப்படம் உருவாகியிருக்கிறது.


    மெட்டா: தி டேஸ்லிங் கேர்ள்:

    ஊமைப்படம், பேசும்படம் தொடங்கி, ஏ.ஐ. தொழில்நுட்ப சினிமா வரை வந்திருந்தாலும், இதுவரை எவரும் முகம் மறைத்து திரைப்படங்களை எடுத்ததில்லை. அந்தப் புதுமையை 'மெட்டா' திரைப்படம் செய்திருக்கிறது.

    இது ஒரு இந்திய திரைப்படம், அவ்வளவுதான். இந்தப் படத்திற்கு தனி மொழி கிடையாது. ஆனால் திகில், மர்மம், சென்டிமெண்ட், திரில்லர், கற்பனை ஆகிய ஜானர்களை உள்ளடக்கியதாக இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

    இந்தப் படத்தில் ஒற்றை கதாபாத்திரம்தான். அந்தப் பெண் கதாபாத்திரமும் முகம் காட்டாதபடி வந்துபோகிறது. படத்தில் எந்த வசனமும் கிடையாது. இப்படி ஒரு திரைப்படம் உலக அரங்கில் இதுவரை வந்ததில்லை என்கிறார்கள். இதுதான் முதல் முறையாம். அதைப் பெருமையாக படத்தின் தொடக்கத்திலேயே 'கார்டு' போட்டு சொல்லவும் செய்திருக்கிறார்கள். 'இந்தப் படம் உலகின் முதல் முகமற்ற, மொழியற்ற, வார்த்தைகள் அற்ற, ஒற்றை கதாபாத்திரம் உயிர்வாழும் படம், உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்காக உருவாக்கப்பட்டது' என்பதை பதிவு செய்கிறார்கள்.


    இந்தப் படத்தின் கதைப்படி, மெட்டா என்ற இளம்பெண், தொல்பொருள் ஆய்வாளராக இருக்கிறார். அவர் தனது அகழ்வாராய்ச்சிக்காக மலைப்பகுதி ஒன்றில், பழைய இடிபாடுகளைக் கொண்ட கட்டிடத்தைக் காண்கிறாள். அங்கே தங்கி தன்னுடைய ஆராய்ச்சியை மேற்கொள்கிறாள். அப்போது அவளை அறியாமலேயே ஒரு சாபத்தில் சிக்கிக்கொள்கிறாள். அந்த சாபம் அவள் தலையை, ஒரு மாயப் பானையில் சிக்க வைக்கிறது. அந்தப் பெண், தன்னை அறியாமல் செய்த கர்ம விணை இயற்கை அளித்த பதிலடியாக இது அமைகிறது. ஒரு சாதாரண நாளில் அவளுக்கு ஏற்படும் இந்த எதிர்பாராத அச்சுறுத்தலில் இருந்து தப்பிக்க, மெட்டா எடுக்கும் அறிவு சார்ந்த மற்றும் சாகச முயற்சிதான், இந்தப் படத்தின் கதை.

    இந்தப் படத்தை பிரசாந்த் மாம்புல்லி இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் ஒற்றை நபராக, எந்த காட்சியிலும் முகத்தை பதிவு செய்யாத கதாபாத்திரத்தில் பிரணிதா வாக்சவுரே என்பவர் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சியில் கூட, இந்தப் பெண்ணின் தலையில் பானையை கவிழ்த்தி, அவர் முகம் தெரியாத வகையில்தான் அறிமுகம் செய்தனர். அதனால் அந்தப் படத்தில் நடித்த பெண் யார் என்பதில் கூட இன்றும் ஒரு தெளிவு இல்லாத நிலை இருக்கிறது. வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட உள்ள இந்தத் திரைப்படம், முன்னதாக உலக திரைப்பட விழாக்களில் காட்சிப்படுத்தப்பட்டு, விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்றிருக்கிறது.


    'மெட்டா: திடேஸ்லிங் கேர்ள்' திரைப்படத்தை இயக்கியவர், பிரசாந்த் மாம்புல்லி. இவர் கேரள மாநிலம் குருவாயூரை பூர்வீகமாகக் கொண்டவர். 2009-ம் ஆண்டு மோகன்லாலை கதாநாயகனாக வைத்து, 'பகவான்' என்ற படத்தை இயக்கி, திரைத்துறைக்கு அறிமுகமானார். இந்தப் படத்தை அவர் 19 மணி நேரத்தில் இயக்கி சாதனை படைத்திருந்தார்.

    அடுத்ததாக கன்னடத்தில் அறிமுகமான இவர், அங்கு சிவராஜ்குமாரை நாயகனாக வைத்து 'சுக்ரீவா' என்ற படத்தை இயக்கினார். அந்தப் படத்தை 18 மணி நேரத்தில் எடுத்து முடித்தார். இதன் மூலம் தன்னுடைய முந்தைய சாதனையை அவரே முறியடித்தார். இந்த சாதனையானது, லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

    இப்படி இதுவரை பிரசாந்த் மாம்புல்லி இயக்கிய 7 படங்களும் ஏதோ ஒரு வகையில் சாதனைக்குரிய படமாகவே அமைந்திருக்கிறது. அந்த வரிசையில்தான் இப்போது 'மெட்டா' திரைப்படம் முகமற்ற, மொழியற்ற, வார்த்தைகள் அற்ற திரைப்படமாக உருவாகி இருக்கிறது.

    • சசிகுமார் தனது குடும்பத்துடன் நெய்வேலியில் வீடு வாடகை எடுத்து வசித்து வருகிறார்.
    • கடலூர் சிறையில் இருந்து கொள்ளை நடந்த நாளில் தான் வெளியில் வந்தனர் என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த ஒரையூர் கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 29). இவர் நெய்வேலியில் உள்ள தனியார் வங்கியில் கேஷியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் நெய்வேலியில் வீடு வாடகை எடுத்து வசித்து வருகிறார்.இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் கடந்த 22-ந்தேதி இரவு இவரது பூட்டிய வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கிருந்த பீரோவை உடைத்து, அதிலிருந்த 18 பவுன் நகை, ரூ.1 லட்சம் பணத்தை திருடினர். மேலும், வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த காரையும் திருடிச் சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் அதே நாளில் பண்ருட்டி பகுதியில் மேலும், 2 இடங்களில் கொள்ளை நடந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, 3 இடங்களில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனித்தனியே தனிப்படைகளை அமைத்தார்.


    அதன்படி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவுபடி புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் ஒரையூர் கிராமத்தில் கொள்ளையடித்த நபர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதில் தனிப்படை போலீசார் சம்பவத்தன்று அந்த பகுதியில் பயன்படுத்தப்பட்ட செல்போன் நெம்பர்கள், அந்த செல்போனில் இருந்த சிம் கார்டை எடுத்துவிட்டு புதிய சிம் கார்டு போட்டு பயன்படுத்துகின்றனரா, காணாமல் போன கார் எந்தெந்த டோல்கேட்டை கடந்து சென்றது என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

    அந்த நேரத்தில் திருட்டு போன கார் உளுந்தூர்பேட்டை டோல்கேட்டை கடந்து சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு செல்லும் வழியில், உளுந்தூர் பேட்டை, திருவண்ணாமலை சாலையில் கார் செல்வதாக போலீசாருக்கு மற்றொரு தகவல் கிடைத்தது. இதனையடுத்து திருவண்ணாமலைக்கு விரைந்த போலீசார் செல்போன் டவர் மூலம் திருட்டில் ஈடுபட்டவர்களின் இருப்பிடத்தை கண்டறிய முயற்சித்தனர். அவர்கள் சிம் கார்டை மாற்றியதை கண்டறிந்து, புதிய நெம்பரின் டவர் எங்குள்ளது என்பதை கண்டறிந்தனர்.உடனடியாக திருவண்ணாமலை கிரிவல பாதைக்கு சென்றபோது, திருடு போன காரின் பதிவு எண்ணை திருடர்கள் மாற்றிக் கொண்டிருந்தனர். போலீசாரை கண்ட கொள்ளையர்கள் காரை எடுத்துக் கொண்டு தப்பினர். அவர்களை பின்தொடர்ந்து விரட்டிய போலீசார் கிரிவல பாதையில் இருந்து ஒரு கிராமத்திற்கு செல்ல முயன்ற போது அவர்களின் காரை முந்தி போலீஸ் ஜிப்பை நிறுத்தி சுற்றி வளைத்தனர்.

    காரில் இருந்து இறங்கிய 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் சென்னையை சேர்ந்த பாலாஜி (வயது 26), யுவராஜ் (22) என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும், இவர்கள் கடலூர் சிறையில் இருந்து கொள்ளை நடந்த நாளில் தான் வெளியில் வந்தனர் என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. இந்த சம்பவத்தில் இவர்களு டன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டவர்கள் யார்? யார்?, கொள்ளையடித்த நகை, பணத்தை எங்கு வைத்துள்ள னர். வேறு எங்கெங்கு கொள்ளை யடித்தனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்ற னர். திருவண்ணாமலை கிரிவல பாதையில் கொள்ளையர்கள் சென்ற காரை போலீசாரின் ஜிப் பின் தொடர்ந்து சென்று அவர்களை மடக்கி பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • லாரியில் இருந்து பொருட்கள் அடங்கிய சரக்கு மூட்டைகளை தூக்கி ரோட்டில் எறிந்தனர்.
    • காணொளியின் உண்மைத் தன்மை தெரிந்தவுடன் விசாரணை மேற்கொள்ளப்படும் என தகவல்.

    மத்திய பிரதேசத்தில் ஓடும் சரக்கு லாரியில் இருந்து மூன்று பேர் பொருட்களை திருடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ஆக்ரா- மும்பை நெடுஞ்சாலையில் தேவாஸ்- ஷாஜாப்பூர் வழித்தடத்திற்கு இடையே சரக்கு லாரியில் இருந்து சிறிது தூரத்தில் கார் ஓட்டிச் சென்ற ஒருவர் இந்த சம்பவத்தை படம் பிடித்துள்ளார்.

    அந்த வீடியோவில், சரக்குகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று ஆக்ரா- மும்பை நெடுஞ்சாலையில் வேகமாக சென்றுக் கொண்டிருக்கிறது.

    அப்போது, பின்னாள் பைக்கில் வந்த நபர் அவரது இரண்டு கூட்டாளியின் உதவியுடன் ஓடும் நிலையிலேயே பைக்கில் இருந்து லாரியில் ஏறுகிறார். இதேபோல், மற்றொரு நபரும் லாரியில் ஏறி இருவரும் சரக்குகளை மூடியிருந்த தார்பாயை கிழிக்கின்றனர்.

    பின்னர், லாரியில் இருந்து பொருட்கள் அடங்கிய சரக்கு மூட்டைகளை தூக்கி ரோட்டில் எறிந்தனர்.

    அதன்பிறகு, இருவரும் லாரியில் இருந்து இறங்கி, அந்த நபர் ஓட்டி வந்த பைக்கின் பின் இருக்கையில் கவனமாக இறங்கி அங்கிருந்து தப்பினர்.

    லாரி நகர்ந்ததும், சாலையில் கிடந்த சரக்கு மூட்டைகளை எடுக்க பைக்கை திருப்பினர். சினிமா பாணியில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக தங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை என்றும், காணொளியின் உண்மைத் தன்மை தெரிந்தவுடன் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று மத்தியப் பிரதேசத்தின் ஷாஜாபூர் மாவட்டத்தின் மக்சி காவல் நிலையத்தின் போலீஸ் அதிகாரி பீம் சிங் படேல் தெரிவித்துள்ளார்.

    ×